திராவிட ஆட்சி–ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு– செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (3)
போலீஸார் பிடித்தது, கைது செய்தது முதலியன: பன்றிகளைப் பிடித்த பிறகு, பன்றிகளை தூக்கி வந்த பகுத்தறிவாளிகளும் பிடிக்கப் பட்டனர். வீடியோக்களில் பார்க்கும் போது, இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.
- போலீஸ் அனுமதீல்லாமல், இப்போராட்டத்தை நடத்தியது.
- பார்ப்பனர்களுக்கு எதிராக பேசியது,
- அவர்களது மதநம்பிக்கைகளைப் புண்படுத்தியது, தூஷித்தது.
முதலியவற்றை விடுத்து, அவர்கள் மீது மிருகவதை தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[1]. மிருகவதை தடுப்பு சட்டம் கீழ் கைது செய்யப்பட்டனர்-வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று பொதுவாக எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன[2]. வீடியோக்களுடன் இருந்த ஊடகக்காரர்கள் இந்த கூத்தை படமெடுத்தனர்[3]. சாலையில் செல்வோர், இதை கண்டுகொள்ளாமல் சென்றது வீடியோக்களில் காணப்படுகிறது. ஆக பொது மக்கள் இதை பொறுட்டாகவே கருதவில்லை என்று தெரிகிறது. இந்த உதிரி திக-கூட்டங்கள், –
- ஒன்று விளம்பரத்திற்காக செய்தது,
- யாரோ தூண்டுதல் மூலம் செய்தது,
- திமுக ஆதரவுடன் மறைமுகமாக செய்தது,
- அதிமுகவிற்கு எதிராக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற முறையில் செய்தது.
- அரசியல் ரீதியாக செய்தது.
என்றுதான் தெரிகிறது. ஆகவே, ஏதோ காலை கைது-மாலை விடுதலை என்றில்லாமல், இக்கூட்டத்தினரை தீரவிசாரித்து, உரிய தண்டனை கொடுக்கப் படவேண்டும்.
பன்றிகளைப் பற்றிய கவலை திராவிடர்களுக்கு ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேச்சில், இந்த கவலை வெளிப்பட்டுள்ளது, “சில, சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இது தவறான் விமர்சனம் சேரி மக்கள்தான் பன்றிகளை வளர்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பலரும் வளர்க்கிறார்கள். பண்ணைகள் அமைத்தும் வளர்க்கிறார்கள். ஆகவே எங்களது போராட்டத்தை தவறாக யாரும் நினைக்க மாட்டார்கள்,” என்றது நோக்கத்தக்கது. ‘‘நெல்லை ஒப்பிடும் போது, வெண்பன்றி வளர்ப்பில் அதிக லாபம் கிடைக்கும். பன்றிகளை இளக்காரமாக பார்க்காதீர்கள்… 6,700 ரூபாய் முதலீடு செய்து, 10 பன்றிக் குட்டிகளை வளர்த்தால், அடுத்த ஆறாவது மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். நாங்களே பயிற்சிக் கொடுத்து, கடனும் கொடுத்து, விற்பனை வாய்ப்பும் ஏற்படுத்தித் தருகிறோம். விருப்பமுள்ள விவசாயிகள் என்னை அணுகலாம்’’ -இப்படிச் சொல்பவர் தஞ்சை பகுதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய பயிற்சி மைய இயக்குனர் ஜெகநாதன் (அலைபேசி 94436-18119)[4]. இந்திய ஓவர்சீஸ் வங்கி, கிராமப்புற பெண்களுக்கான பத்து நாள் பயிற்சி முகாம் ஒன்றை பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14-ம் தேதி வரை தஞ்சையில் நடத்தியது. இதில் காளான் வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பல தரப்பட்ட காய்களில் ஊறுகாய் தயாரிப்பு, ஜாம் தயாரிப்பு, பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல தொழில்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது[5]. வெள்ளைப்பன்றி கறி எப்பொழுதுமே டிமான்டாக இருப்பதாக தெரிகிறது. அதன் வறுவல் விற்கும் கடைகளும் காணப்படுகின்றன. பிறகு மலத்தைத் தின்று ஊழலில் வளர்ந்த பன்றிகளின் கறியை எப்படி உண்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆக எத்தனை திராவிடர் பன்றிகளை வைத்து லாபம் பெறுகிறார்கள் என்றறிந்து கொள்ளலாம்.
திராவிடமும், பன்றியும், பன்றி உவமையும் (1927-1961): திராவிடத் தலைவர்களின் உவமானம் – உபமேய பேச்சுகளைப் பற்றி கேட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். காதரைன் மேயோ என்ற அன்னிய நாட்டுப் பெண்மணி[6], இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களுக்கு விடுதலை உணர்வு கிடையாது எனும்நோக்கில் 1927இல் ‘இந்தியத் தாய்’ என்ற நூலை வெளியிட்டார். இதையெதிர்த்து, ‘மேயோ ஒரு பன்றி’ என்ற நூலை பாவேந்தர் எழுதியதாகவும் அது இன்று கிடைக்கவில்லை. ஈவேரா எப்பொழுதுமே, தீபாவளி சாக்கு வைத்து, பன்றியை கிண்டலடித்து எழுதியிருப்பது தெரிந்த விசயமே. 17-02-57 – காங்கிரசுக்கு மானமிருந்தால்– ஈ.வே.ரா காங்கிரசை கழுதை, பன்றி என்று பழித்து பேசியதை எதிர்த்து, மபொசி எழுதியுள்ளதாக தெரிகிறது. 1961ல் அண்ணாதுரை பேசும்போது[7], பன்றியை ஒன்றும் உயர்வாக பேசவில்லை, “கூட்டம் நடந்தால் பத்திரிகைகளில் செய்தி வராது. இங்கு நீங்கள் பல்லாயிரக் கணக்கில் கூடியிருக்கிறீர்கள். கழகத்தைப் பற்றி வரலாற்று ஆதாரத்தோடு மதியழகன் பேசினார். உள்ளக் கிளர்ச்சியோடு கருணாநிதி பேசினார். இவர்களுடைய பேச்சுக்களெல்லாம் நாளை பத்திரிகைகளிலே வராது. ஆற்றல் படைத்தவர்கள்–ஆர்வமிக்கவர்கள் இங்கே லட்சக்கணக்கிலே கூடியிருக்கின்றீர்கள். உங்கள் யாரையும் பற்றிப் பத்திரிகையிலே போட மாட்டார்கள். இங்கே ஒரு பன்றி வந்ததென்றால் அதைப் பற்றி எட்டுப் பத்தித் தலைப்பில் கொட்டை எழுத்தில் போடுவார்கள். ‘அண்ணாதுரை கூட்டத்தில் பன்றி, கூட்டத்தில் பரபரப்பு‘ என்று தலைப்பு கொடுத்துச் செய்தி போட்டுத் தர்மத்தை நிலை நாட்டுவார்கள். மனிதனுக்கும் பன்றிக்கும் அதிக வித்தியாசம் தெரியாதவர்கள் என்ன எழுதினாலும் நான் கவலைப்படுவதில்லை.” ஆக பன்றி பற்றி அறிஞருக்கே இத்தனை கவலையிருந்தது.
திராவிட சித்தாந்திகளின் பேச்சுகள் கவனிக்கப்படவேண்டும்: இவர்களின் எண்ணம் இந்து மதம், இந்துக்களை பழிப்பது, தூஷிப்பது என்பதுதான் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இருப்பினும், இத்தகைய போலி சித்தாந்தம் பேசி, இன்றும் உணர்ச்சி பூர்வமாக, சிலரை உசுப்பி விட பார்க்கின்றனர். ஆனால், கடந்த 60-70 ஆண்டுகளில் இவர்களது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றை தெரிந்து கொண்டாலே, இவர்களது வக்கிரத்தை, அசிங்கத்தை, ஆபாசத்தை, காழ்ப்பை தெரிந்து கொண்டு விடுவார்கள். மேடைகளில் இரவில் பத்து மணிக்கு மேலே பேசியதை இன்றைய கிழவர்கள் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இன்றைய தொழிற்நுட்பம் போல, அக்காலத்தில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. பதிவு செய்து வைத்திருந்தாலும், திராவிட கழகங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனைவற்றையும் கொடுப்பதில்லை. தங்கள் மீது எதிர்மறை கருத்து வராமல் இருக்கும் வறையில் தான் ஆவணங்களைக் காட்டி வருகின்றனர். உண்மை எடுத்துக் காட்ட-காட்ட அவற்றையும் அழித்து விடவும் செய்வார்கள். 60-90 வயதானவர்கள் இறக்க- இறக்க அவர்களுடனே, அவ்வுண்மைகளும் மறைந்து விடும். இந்து திராவிடத் தலைவர்களின் உண்மை முகங்கங்களின் சரித்திரமும் மறைந்து விடும். பெரியார், அறிஞர், கலைஞர், கவிக்கோ, பெருங்கவிக்கோ ரீதியில் தான் விசயங்கள் பேசப்படும், எழுதப்படும். அதற்குள் உள்ள ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆவணப்படுத்தப் பட வேண்டும்.
பெரியாரின் பார்ப்பன உவமானமான பாம்பு, ஏன் பன்றியானது?: பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது[8]. கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தமிழர் வீரமணி பேசும்போது[9], “பெரியார் பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார்[10]. அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி”. “காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் ,” என்றும் பெரியார் கூறியிருக்கிறார். ஆனால் பாண்டே-வீரமணி பேட்டி-விவாதம் பிறகு, அவ்வாறு சொல்லவில்லை என்று மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆக பெரியார் பக்தர்கள் விசுவாசத்துடன், பாம்பிற்கு பூணூல் போட்டிருக்கலாம், ஆனால், பன்றிதான் பிடித்திருக்கிறது போலும்!
© வேதபிரகாஷ்
07-08-2017
[1] http://tamil.oneindia.com/news/tamilnadu/9-periyarist-held-panrikku-poonool-podum-porattum-292052.html
[2] தினகரன், பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய 9 பேர் மீது வழக்குப்பதிவு, 2017-08-07@ 17:17:36.
[3] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=325446
[4] விகடன், பன்றி வளர்ப்பில் பலே லாபம், Posted Date : 06:00 (10/03/2008)
[5] http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=71015
[6] Katherine Mayo, Mother India, 1927.
[7] அண்ணாதுரை, நம்நாடு – 10.4.61
[8] நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா. இந்தியாவில் இருந்து கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, மற்றும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது.
[9] கி. வீரமணி, பெரியாரை உலக மயமாக்குவோம், கீற்று, பிப்ரவரி 2006.