Archive for the ‘கலாட்டா’ Category

திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (3)

ஓகஸ்ட் 12, 2017

திராவிட ஆட்சிஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்புசெக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (3)

PDௐ gang -Another person with police - caught by police- 07-08-2017

போலீஸார் பிடித்தது, கைது செய்தது முதலியன: பன்றிகளைப் பிடித்த பிறகு, பன்றிகளை தூக்கி வந்த பகுத்தறிவாளிகளும் பிடிக்கப் பட்டனர். வீடியோக்களில் பார்க்கும் போது, இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

  1. போலீஸ் அனுமதீல்லாமல், இப்போராட்டத்தை நடத்தியது.
  2. பார்ப்பனர்களுக்கு எதிராக பேசியது,
  3. அவர்களது மதநம்பிக்கைகளைப் புண்படுத்தியது, தூஷித்தது.

முதலியவற்றை விடுத்து, அவர்கள் மீது மிருகவதை தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[1].  மிருகவதை தடுப்பு சட்டம் கீழ் கைது செய்யப்பட்டனர்-வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று பொதுவாக எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன[2]. வீடியோக்களுடன் இருந்த ஊடகக்காரர்கள் இந்த கூத்தை படமெடுத்தனர்[3]. சாலையில் செல்வோர், இதை கண்டுகொள்ளாமல் சென்றது வீடியோக்களில் காணப்படுகிறது. ஆக பொது மக்கள் இதை பொறுட்டாகவே கருதவில்லை என்று தெரிகிறது. இந்த உதிரி திக-கூட்டங்கள், –

  1. ஒன்று விளம்பரத்திற்காக செய்தது,
  2. யாரோ தூண்டுதல் மூலம் செய்தது,
  3. திமுக ஆதரவுடன் மறைமுகமாக செய்தது,
  4. அதிமுகவிற்கு எதிராக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற முறையில் செய்தது.
  5. அரசியல் ரீதியாக செய்தது.

என்றுதான் தெரிகிறது. ஆகவே, ஏதோ காலை கைது-மாலை விடுதலை என்றில்லாமல், இக்கூட்டத்தினரை தீரவிசாரித்து, உரிய தண்டனை கொடுக்கப் படவேண்டும்.

PDௐ gang - one person with police - caught by police- 07-08-2017

பன்றிகளைப் பற்றிய கவலை திராவிடர்களுக்கு ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேச்சில், இந்த கவலை வெளிப்பட்டுள்ளது, “சில, சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இது தவறான் விமர்சனம் சேரி மக்கள்தான் பன்றிகளை வளர்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பலரும் வளர்க்கிறார்கள். பண்ணைகள் அமைத்தும் வளர்க்கிறார்கள். ஆகவே எங்களது போராட்டத்தை தவறாக யாரும் நினைக்க மாட்டார்கள்,” என்றது நோக்கத்தக்கது. ‘‘நெல்லை ஒப்பிடும் போது, வெண்பன்றி வளர்ப்பில் அதிக லாபம் கிடைக்கும். பன்றிகளை இளக்காரமாக பார்க்காதீர்கள்… 6,700 ரூபாய் முதலீடு செய்து, 10 பன்றிக் குட்டிகளை வளர்த்தால், அடுத்த ஆறாவது மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். நாங்களே பயிற்சிக் கொடுத்து, கடனும் கொடுத்து, விற்பனை வாய்ப்பும் ஏற்படுத்தித் தருகிறோம். விருப்பமுள்ள விவசாயிகள் என்னை அணுகலாம்’’ -இப்படிச் சொல்பவர் தஞ்சை பகுதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய பயிற்சி மைய இயக்குனர் ஜெகநாதன் (அலைபேசி 94436-18119)[4]. இந்திய ஓவர்சீஸ் வங்கி, கிராமப்புற பெண்களுக்கான பத்து நாள் பயிற்சி முகாம் ஒன்றை பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14-ம் தேதி வரை தஞ்சையில் நடத்தியது. இதில் காளான் வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பல தரப்பட்ட காய்களில் ஊறுகாய் தயாரிப்பு, ஜாம் தயாரிப்பு, பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல தொழில்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது[5]. வெள்ளைப்பன்றி கறி எப்பொழுதுமே டிமான்டாக இருப்பதாக தெரிகிறது. அதன் வறுவல் விற்கும் கடைகளும் காணப்படுகின்றன. பிறகு மலத்தைத் தின்று ஊழலில் வளர்ந்த பன்றிகளின் கறியை எப்படி உண்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆக எத்தனை திராவிடர் பன்றிகளை வைத்து லாபம் பெறுகிறார்கள் என்றறிந்து கொள்ளலாம்.

PDk gang with police - a pig was caught- 07-08-2017

திராவிடமும், பன்றியும், பன்றி உவமையும் (1927-1961): திராவிடத் தலைவர்களின் உவமானம் – உபமேய பேச்சுகளைப் பற்றி கேட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். காதரைன் மேயோ என்ற அன்னிய நாட்டுப் பெண்மணி[6], இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களுக்கு விடுதலை உணர்வு கிடையாது எனும்நோக்கில் 1927இல் ‘இந்தியத் தாய்’ என்ற நூலை வெளியிட்டார்.  இதையெதிர்த்து, ‘மேயோ ஒரு பன்றி’ என்ற நூலை பாவேந்தர் எழுதியதாகவும் அது இன்று கிடைக்கவில்லை. ஈவேரா எப்பொழுதுமே, தீபாவளி சாக்கு வைத்து, பன்றியை கிண்டலடித்து எழுதியிருப்பது தெரிந்த விசயமே. 17-02-57 – காங்கிரசுக்கு மானமிருந்தால்– ஈ.வே.ரா காங்கிரசை கழுதை, பன்றி என்று பழித்து பேசியதை எதிர்த்து, மபொசி எழுதியுள்ளதாக தெரிகிறது. 1961ல் அண்ணாதுரை பேசும்போது[7], பன்றியை ஒன்றும் உயர்வாக பேசவில்லை,  “கூட்டம் நடந்தால் பத்திரிகைகளில் செய்தி வராது. இங்கு நீங்கள் பல்லாயிரக் கணக்கில் கூடியிருக்கிறீர்கள். கழகத்தைப் பற்றி வரலாற்று ஆதாரத்தோடு மதியழகன் பேசினார். உள்ளக் கிளர்ச்சியோடு கருணாநிதி பேசினார். இவர்களுடைய பேச்சுக்களெல்லாம் நாளை பத்திரிகைகளிலே வராதுஆற்றல் படைத்தவர்கள்ஆர்வமிக்கவர்கள் இங்கே லட்சக்கணக்கிலே கூடியிருக்கின்றீர்கள். உங்கள் யாரையும் பற்றிப் பத்திரிகையிலே போட மாட்டார்கள்இங்கே ஒரு பன்றி வந்ததென்றால் அதைப் பற்றி எட்டுப் பத்தித் தலைப்பில் கொட்டை எழுத்தில் போடுவார்கள். ‘அண்ணாதுரை கூட்டத்தில் பன்றி, கூட்டத்தில் பரபரப்புஎன்று தலைப்பு கொடுத்துச் செய்தி போட்டுத் தர்மத்தை நிலை நாட்டுவார்கள்மனிதனுக்கும் பன்றிக்கும் அதிக வித்தியாசம் தெரியாதவர்கள் என்ன எழுதினாலும் நான் கவலைப்படுவதில்லை.” ஆக பன்றி பற்றி அறிஞருக்கே இத்தனை கவலையிருந்தது.

Brahmin-snake-periyar-analogy

திராவிட சித்தாந்திகளின் பேச்சுகள் கவனிக்கப்படவேண்டும்: இவர்களின் எண்ணம் இந்து மதம், இந்துக்களை பழிப்பது, தூஷிப்பது என்பதுதான் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இருப்பினும், இத்தகைய போலி சித்தாந்தம் பேசி, இன்றும் உணர்ச்சி பூர்வமாக, சிலரை உசுப்பி விட பார்க்கின்றனர். ஆனால், கடந்த 60-70 ஆண்டுகளில் இவர்களது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றை தெரிந்து கொண்டாலே, இவர்களது வக்கிரத்தை, அசிங்கத்தை, ஆபாசத்தை, காழ்ப்பை தெரிந்து கொண்டு விடுவார்கள். மேடைகளில் இரவில் பத்து மணிக்கு மேலே பேசியதை இன்றைய கிழவர்கள் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இன்றைய தொழிற்நுட்பம் போல, அக்காலத்தில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. பதிவு செய்து வைத்திருந்தாலும், திராவிட கழகங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனைவற்றையும் கொடுப்பதில்லை. தங்கள் மீது எதிர்மறை கருத்து வராமல் இருக்கும் வறையில் தான் ஆவணங்களைக் காட்டி வருகின்றனர். உண்மை எடுத்துக் காட்ட-காட்ட அவற்றையும் அழித்து விடவும் செய்வார்கள். 60-90 வயதானவர்கள் இறக்க- இறக்க அவர்களுடனே, அவ்வுண்மைகளும் மறைந்து விடும். இந்து திராவிடத் தலைவர்களின் உண்மை முகங்கங்களின் சரித்திரமும் மறைந்து விடும். பெரியார், அறிஞர், கலைஞர், கவிக்கோ, பெருங்கவிக்கோ ரீதியில் தான் விசயங்கள் பேசப்படும், எழுதப்படும். அதற்குள் உள்ள ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆவணப்படுத்தப் பட வேண்டும்.

Veeramani spoke abour brahmin-snake 24-12-2004

பெரியாரின் பார்ப்பன உவமானமான பாம்பு, ஏன் பன்றியானது?: பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது[8]. கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தமிழர் வீரமணி பேசும்போது[9], “பெரியார் பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார்[10]. அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்குநல்ல பாம்புஎன்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி”. “காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் ,” என்றும் பெரியார் கூறியிருக்கிறார். ஆனால் பாண்டே-வீரமணி பேட்டி-விவாதம் பிறகு, அவ்வாறு சொல்லவில்லை என்று மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆக பெரியார் பக்தர்கள் விசுவாசத்துடன், பாம்பிற்கு பூணூல் போட்டிருக்கலாம், ஆனால், பன்றிதான் பிடித்திருக்கிறது போலும்!

© வேதபிரகாஷ்

07-08-2017

Parppans should get frightened-Karu-2012

[1] http://tamil.oneindia.com/news/tamilnadu/9-periyarist-held-panrikku-poonool-podum-porattum-292052.html

[2] தினகரன், பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய 9 பேர் மீது வழக்குப்பதிவு, 2017-08-07@ 17:17:36.

[3] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=325446

[4] விகடன், பன்றி வளர்ப்பில் பலே லாபம், Posted Date : 06:00 (10/03/2008)

[5] http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=71015

[6] Katherine Mayo, Mother India, 1927.

[7] அண்ணாதுரை, நம்நாடு – 10.4.61

[8] நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா.  இந்தியாவில் இருந்து கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, மற்றும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது.

[9] கி. வீரமணி, பெரியாரை உலக மயமாக்குவோம், கீற்று, பிப்ரவரி 2006.

[10] http://keetru.com/thaagam/feb06/veeramani.php

திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (2)

ஓகஸ்ட் 12, 2017

திராவிட ஆட்சிஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்புசெக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (2)

Kovai Ramakrishnan on sacred threat to pigs - 19-07-2017

பார்ப்பனர்கள், பூணூல் அணிந்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாகவும், பிற சாதியினரை இழிவானவர்களாகவும் கருதுகிறார்கள்: கேவலமான போராட்டங்கள் நடத்துவதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் திகவினர் அவ்வப்போது தாலி அறுப்பு உள்ளிட்ட நகைப்புக்குரிய போராட்டங்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் 07-08-2017 அன்று நான்கு பன்றிகளுக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தினர்.  கோவை ராமகிருட்டிணன், “பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஏன்?”, என்று பேட்டி கொடுத்ததாக செய்தி உள்ளது. கோவை ராமகிருட்டிணன்[1], “பார்ப்பனர்கள், பூணூல் அணிந்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாகவும், பிற சாதியினரை இழிவானவர்களாகவும் கருதுகிறார்கள். பூணூல் என்பது தங்களை உயர் சாதியாக காட்டும் அடையாளமாக நினைக்கிறார்கள். இது தவறு என்பதை உணர்ந்தவே பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். பன்றியை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் உண்டு. பூணூல் அணிந்து கொண்டு, மற்றவர்களை இழிவானவர்களாக பார்ப்பனர்கள் நினைக்கிறார்கள் அல்லவா….அது போல விலங்குகளில் இழிவானதாக பன்றியை கருதும் வழக்கம் மக்களிடையே உள்ளது. ஆகவேதான் பன்றிக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாம்.

 Sacred thgread to pigs - Priyanka- 07-08-2017

சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது:சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில்சேரி பிஹேவியர் என்று ஒருவர் சொல்லப்போக……..சேரி மக்களை அவமதித்துவிட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. அதுபோல சில, சேரிப்பகுதிகளில்தான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே தங்களது போராட்டம் சேரி மக்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இது தவறான் விமர்சனம் சேரி மக்கள்தான் பன்றிகளை வளர்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பலரும் வளர்க்கிறார்கள். பண்ணைகள்  அமைத்தும் வளர்க்கிறார்கள். ஆகவே எங்களது போராட்டத்தை தவறாக யாரும் நினைக்க மாட்டார்கள், பசுவைத்தான் அவர்கள் ஏற்கெனவே புனிதம் என்கிறார்கள். ஆகவேதான் இழிவாக கருதப்படும் பன்றிக்கு பூணூல் அணிவித்து அவற்றை புனிதமாக்கி உயர்த்துகிறோம் (சிரிக்கிறார்)”. போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வாங்கி விட்டீர்களா என்று கேட்டதற்கு, “நிச்சயமாக அனுமது கிடைக்காது. போராட்டம் நடத்தி கைதாக வேண்டியது தான்,” என்று சொல்லி முடித்தார்[2]. பார்ப்பனர்கள் இன்னும் ஆதிக்கம் செல்லுத்துகிறார்கள்[3], அவர்கள் எழுதிய விளம்பரங்களை அழித்தாலும், கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம், அழித்ததற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் இன்னொரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்[4].

S V Sekar confronts Kovai Ramakrishnan

கோவை ராமகிருட்டிணனுக்கு, எஸ்.வி. சேகர் பதிலடி பேட்டி: எஸ்.வி. சேகர் இதற்கு பதிலாக கொடுத்த ஒரு பேட்டியும் உள்ளது[5].

  1. பிராமணர்கள் தாம் பூணூல் போடுகிறார்கள் என்பதில்லை, செட்டியார், ஆச்சாரி…….போன்றோரும் பூணூல் போட்டுக் கொள்கிறார்கள்,
  2. பூணூல் அணிவது ஒரு தந்தை மகனுக்கு செய்யும் சடங்கு, பன்றிக்கு பூணூல் போட்டால் இவர்களும் பன்றிதான்,
  3. அரசியல் ரீதியாக இதைச் செய்கிறார்கள்,
  4. திமுகவிற்கு ஆதரவாக செய்கிறார்களா என்று தெளிவு படுத்தவேண்டும்.
  5. சுவரில் எழுதியுள்ளதைப் பற்றி ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளேன்,
  6. பிராமணாள் மெஸ் எதிர்த்தவர்கள் செட்டியார் மெஸ், தேவர் மெஸ், ஆச்சி மசாலா…..முதலியவற்றை எதிர்ப்பதில்லை,…
  7. பன்றிக்கு குல்லா போடுகிறேன், சுன்னத் செய்கிறேன் என்று அறிவிக்க முடியுமா,……என்றெல்லாம் கூறினார்[6].

PDk gang with police -to ctch a pig- 07-08-2017

அனுமதியில்லா போராட்டம் இடம் மாறியது: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி அருகே பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்[7]. சமஸ்கிருத கல்லூரியை இவ்வாறு குறி வைப்பதையும் அரசு மற்றவர்கள் கவனிக்க வேண்டும். அதாவது, இக்கூட்டத்திற்கு எளிய இலக்காக இருப்பதும், அதனைக் குறிப்பிட்டு தாக்குவதும் கண்கூடாக இருக்கிறது. இதனையடுத்து சமஸ்கிருத கல்லூரி முன்பு 07-08-2017 காலை முதலே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது[8]. ஆனால், போலீசாரின் கவனத்தை திசை திருப்பி, ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர், என்பதே சரியான செய்தியல்ல. ஏனெனில் இன்னொரு செய்தி, இதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த போலீசார், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்களையும் வரவழைத்திருந்தனர், என்றுள்ளது. பன்றிகளைப் பிடிக்க சென்னை கார்ப்பரேஷனில் ஒரு பிரிவு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலை ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்திற்கு ஐந்து பன்றிக் குட்டிகளுடன் வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். சுமார் பத்து –பன்னிரெண்டு பேர் வந்தனர். பன்றிகளைக் கொண்டு வந்திருந்தால், அவை இவர்களையே ஒரு பதம் பார்த்திருக்கும். அதனால் தான் பன்றிக்குட்டிகளை, இந்த இனமான வீரர்கள், சுயமரியாதை சூரர்கள் தூக்கி வந்துள்ளனர்.

PDk gang with police -to ctch a pig- 07-08-2017

நான்கு பன்றிகளில் ஒரு பன்றி இறந்தது அல்லது கொல்லப்பட்டது: பன்றிகளின் வாயை மூடி, சுற்றி கயிரால் இருக்கி கட்டி, சாலையில் தரதரவென இழுத்து வந்தனர்[9]. பன்றிகள் “கிரீச்-கிரீச்” என்று அசிங்கமாக கத்தும் என்பதனால், அவற்றின் வாய்களை பிளாஸ்டிக் வளையம் போட்டு கட்டப்பட்டிருந்தது[10]. பாவன், பன்றிகளுக்கு கத்தக் கூட உரிமை இல்லாமல் போயிற்று, ஆனால், இவர்கள் கத்திக் கொண்டிருந்தனர். அவற்றுக்கு பட்டையடித்து, பூணூல் அணிவித்ததுடன், அவற்றின் வாய்களை கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்து வந்தனர் என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. “நான்கு பன்றிகளை அழைத்து வந்த திராவிடர் கழகத்தினர் அவைகளுக்கு பூணூல் போட முயற்சி செய்தனர். அப்போது ஒரு பன்றி எதிர்பாராமல் இறந்து போனது மற்ற மூன்று பன்றிகளுக்கும் காயம் ஏற்பட்டது”, என்கிறது இன்னொரு இணைதளம்[12]. இறந்த பன்றிக்கு “சிரார்த்தம்” ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.  மாநகராட்சி ஊழியர் வலையோடு இருந்ததால், பன்றிகளைப் பிடித்து வண்டியில் ஏற்றினர்[13]. மற்றவர்களை போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்தனர்[14]. இருவர் மட்டும் கத்திக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தை சேர்ந்த ஒன்பது பேர்களை கைது செய்யப்பட்டனர்[15].

© வேதபிரகாஷ்

07-08-2017

Sacred thread worn to four pigs- Dinakaran news- 08-08-2017

[1] பத்திரிக்கை.காம், பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேட்டி, Posted on July 18, 2017 at 11:46 am by டி.வி.எஸ். சோமு

[2] https://www.patrikai.com/why-the-struggle-is-the-pig-poonool-kovai-ramakrishnan-interview/

[3] பத்திரிக்கை.காம், பன்றிக்கு பூணூல் போராட்டம் நடந்தே தீரும்!: கோவை.ராமகிருட்டிணன், Posted on July 19, 2017 at 11:14 am by டி.வி.எஸ். சோமு

[4] https://www.patrikai.com/the-pig-poonool-protest-will-be-defenetly-kovai-ramakrishnan/

[5] பத்திரிக்கை.காம், பன்றிகளுக்கு குல்லா போட தைரியம் உண்டா?: எஸ்.வி.சேகர் பேட்டி, Posted on July 18, 2017 at 1:23 pm by டி.வி.எஸ். சோமு

[6] https://www.patrikai.com/can-the-pigs-be-able-to-hat-s-v-shekar-questioned/

[7] புதியதலைமுறை, பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்: மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, ஆகஸ்ட்.8, 2017.

[8] http://www.puthiyathalaimurai.com/news/crime/26383-scramble-for-the-swine-case-under-the-prevention-of-animals-act.html

[9] பத்திரிக்கை.காம், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி: பன்றி பட்ட பாடு, Posted on August 7, 2017 at 2:00 pm by டி.வி.எஸ். சோமு,

[10] https://www.patrikai.com/punool-dressing-show-pigs-harassed/

[11] தமிழ்.ஒன்.இந்தியா, பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது, Posted By: Mayura Akilan, Updated: Monday, August 7, 2017, 20:09 [IST].

[12] தமிழ்.வெப்துனியா, 4 பன்றிகளுக்கு பூணூல் போட்ட தி.கவினர். ஒரு பன்றி இறந்ததால் பரபரப்பு, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (00:30 IST).

[13] பத்திரிக்கை.காம், பன்றிக்கு பூணூல்: பெரியார் திராவிடர் கழகத்தினர்மீதுமிருகவதைவழக்கு பதிவு!, Posted on August 8, 2017 at 4:21 pm by A.T.S Pandian

[14] https://www.patrikai.com/the-pig-poonool-protest-case-filed-animal-prevention-act-over-the-protester/

[15] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/scramble-for-the-swine-case-under-the-prevention-of-animals-act-117080700063_1.html.

திராவிட ஆட்சி-ஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்பு- செக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (1)

ஓகஸ்ட் 12, 2017

 

திராவிட ஆட்சிஆரிய ஆட்சி, கம்யூனல் பாம்புசெக்யூலரிஸ பன்றி, சூத்திர ஐயா- பார்ப்பன அம்மையார் (1)

Kar-Jeya- Aryan-Dravidian rules

திராவிட ஆட்சியும்ஆரிய ஆட்சியும், பார்ப்பன ஆட்சியும்சூத்திர ஆட்சியும்: “திராவிட” சித்தாந்திகள் சோரம் போய் விட்டனர், கருத்துகள் பொய்த்து விட்டன, அரசியல் தோற்று வீழும் நிலையில் உள்ளது. “பாப்பாத்தி” என்று பேசியபோது, “சூத்திரன்” இருந்தான் என்று தானே ஆகிறது. கருணாநிதி, ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்ற போது, தான் “சூத்திரன்” என்றுதானே குறித்துக் கொண்டார்.” உள்ள சூத்திரன் ஆட்சியைக் காப்போம்,” என்று கூட சுவரொட்டிகள் ஒட்டினர். ஆனால், இப்பொழுது அந்த “பாப்பாத்தி” இறந்தவுடன், இந்த “சூத்திரன்” படுத்திருக்கும் நிலையில், திராவிட ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. “ஆரிய அம்மையார்” ஆட்சி போனாலும், “திராவிட ஆட்சி” வராது என்ற நிலையாகி விட்டது. திமுக இப்பொழுது, அதிமுகவை சாடியே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஏதோ யோக்கியமான அரசியல்வாதிகள், ஒழுக்கமானவர்கள், புனிதர்கள் போல அதிமுகவை ஊழல், லாயக்கில்லை என்றெல்லாம் வசைப்பாடி வருகின்றது. வலுவுடன் இருக்கும் கட்சியைப் பிளந்து, ஆட்சியை வீழ்த்தலாம் என்று திட்டம் போடுகிறது.

Save the Sudra rule prevailing- Wall poster

ஜாதி துவேசம், தூஷணம், வெறி முதலியவற்றில் ஈடுபடுவது யார்?: சூத்திரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் பட்டுக் கொண்டவர்கள் குறிப்பிடத் தக்கது. 1973ல் ஆகஸ்ட் 8ம் தேதி, ஹண்டே சபையில் கலைஞரைப் பார்த்து, ‘யு ஆர் எ தேர்டு ரேட் சீஃப் மினிஸ்டர் [You are a third rate chief minister]’னார்[1]. திமுகவினர் கொதிச்சு எழுந்தனர். அப்பொழுது, ‘உட்காருங்க’னு சொன்ன கலைஞர், ‘ஹண்டே அவர்களே, நீங்கள் சொல்வதுபோல் இது மூன்றாம்தர அரசு அல்ல, இது நான்காம் தர ஆட்சி, ஆமாம்… பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று சொல்கிறீர்களே… அந்த நாலாந்தர சூத்திரனின் ஆட்சிதான்’ என்றார்[2]. ஆக ஜாதி ரீதியில், சாதி வெறியில் யார் அடிக்கடி தூஷணங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை கடந்த 60-70 ஆண்டு கால நாளிதழ்களைப் பிரித்துப் பார்த்தாலே உண்மை விளங்கி விடும்[3]. ஆகவே, பிராமண எதிர்ப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு என்றெல்லாம் பேசுவது நாடகமே. தமது சித்தாந்தம் பொய்த்து, முகமூடிகள் கிழிந்து விட்டதால், வேறு உருப்படியான விசயமும் இல்லாததால், இத்தகைய கூத்துகளை நடத்தி வருகிறார்கள்.

punal_2381693f

பூணூல் அறுக்கும் அரசியல், பன்றிக்கு பூணூல் போடும் நிலைக்ககு வந்துள்ளது (1969-2017): 1970லிருந்து நேற்று வரை திமுகவின் நிலை என்ன என்பது, ஏதோ மறந்து விட்டது போல பிதற்றிக் கொண்டிருக்கிறது. பூணூலை அறுக்கும் திராவிட வன்முறையை குற்றமாக, பிராமணர்கள் மீதான வெறி-தாக்குதல் என்ற உண்மையினை மறைத்து, அது ஏதோ வேடிக்கையான விசயமாக செய்திகளாக போடப்பட்டன. உண்மையில் பிராமணர்கள் பயந்ந்து தான் அடங்கி-ஒடுங்கிக் கிடந்தார்கள். சில நாட்கள் கூட வராமல் வீடுகளில் அடைந்து கிடந்தார்கள். இது 1950-70 நிலை. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் என்ற காரணி வந்ததால், விமர்சனம் ஆரம்பித்தது. எம்.ஜி.ஆர் கணக்குக் கேட்டதில் ஓரளவிற்கு, கேட்கும் தைரியம் தமிழகத்தில் வர ஆரம்பித்தது. திராவிட ஊழல் விமர்சிக்கப் பட்டது. மதிமுக தலைவர் வைகோ, “அதிமுக ஊழலின் ஊற்று என்றால், அதன் ஊற்றுக்கண் திமுக” என்றெல்லாம் சொன்னது ஞாபகம் இல்லை போலும். கோதுமை ஊழல் முதல் 2ஜி வரை நினைத்துப் பார்க்க வேண்டும். திஹார் சிறையிலிருந்து வெளிவந்து, உலாவும் உறவுகளை கவனிக்க வேண்டும். உண்மைகளை மறைத்து நாடகமாடி, பிழைப்புத் தேடுவது கடினம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். துலுக்கரை ஆதரித்து அறிக்கை விடும் ஸ்டாலின், பன்றிகளுக்கு பூணூல் என்ற போது, தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால், விளம்பரத்திற்காக, ஸ்வாதியின் வீட்டிற்கு சென்று குசலம் விசாரித்தார். இந்த சூத்திரனும், அங்கு சென்றிருக்க வேண்டாமே?  திராவிட சித்தாந்திகள், அடிப்படைவாதிகள், வெறியர்கள், இனவாதிகள், அரசியல்வாதிகள் பார்ப்பனர்களின் விரோதி என்பது தெரிந்த விசயம் தானே, பிறகு எதற்கு முதலை கண்ணீர் வடிக்க வேண்டும்?

Sacred thread cut- 1969-2017- to pigs

பன்றிக்கு பூணூலும், பன்றி கறி சாப்பிடுகிறவர்களும், சாப்பிடாதவர்களும்[4]: கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியதில் சில கருத்துகள் ஒத்துப் போவதால் அவை அப்படியே தரப்படுகின்றன: “ஃபேஸ்புக்கில் இந்த சுவர் விளம்பரம் கண்ணில் பட்டது. பன்றிக்கு இவிங்க எதுக்கு தனியா பூணூல் போட்டு போராடுறாங்க.. அதான் அவங்களே ஏற்கனவே எல்லா கோவிலிலும் வராகருக்கு (பன்றி) பூணூல் போட்டுதான் கும்பிட்டுட்டு இருக்காங்க.. எவ்வளவோ விலங்குகள் இருக்க பன்றியை ஏன் இவர்கள் பூனூல் போட தேர்வு செய்கிறார்கள்.. அதை இழிவான விலங்காக கருதுவதால்தானே.. அப்படியானால் பன்றிக்கறி சாப்பிடும் மக்களை இழிவாக கருதுகிறார்கள் என்றுதானே அர்த்தம்..பார்ப்பனர்கள் அணியும் பூணூல் மட்டும்தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையா[5].. தமிழகத்தில் சாதிவெறி ஆணவக் கொலைகள் என இடைநிலை சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. அதற்கு எதிராக சும்மா அடையாளப்போராட்டங்கள் நடத்திவிட்டு பார்ப்பனர்களை மட்டும் சாதிவெறியர்கள் போல் காட்டுகிறார்கள். 2009க்குப்பின் எழுந்த தமிழர் என்ற இன அடையாள அரசியலும் இந்திய தேசிய எதிர்ப்பு தமிழ்தேசம்.. போன்ற கண்ணோட்டங்களை பார்ப்பனிய எதிர்ப்பு.. திராவிடம் என்று மடை மாற்றப்பார்க்கிறார்கள். சாவின் கடைசி துடிப்பில் இருக்கும் திராவிட அரசியலுக்கு மீண்டும் பார்ப்பனியர்களை ஒற்றை எதிரிகளாக்கி உயிர் கொடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பானர்கள் பார்ப்பனர் அல்லாதோரை வேசி மக்கள் என்று வெளிப்படையாக கூறியதைவிட இந்த திராவிட இயக்கத்தவர்கள் தான் அதிகம் கூறியிருக்கிறார்கள்”.

Sacred thread to pig- announcement by PDK - 07-08-2017

பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..”:  கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியது, “கழுத.. இவங்க பூணூல் போடுறாய்ங்க.. அவிங்க அறுக்குறாய்ங்க என்னமும் பண்ணித்தொலையட்டும். ஆனால் அந்த சுவர் விளம்பரத்தில் இருக்கும் வாசகத்தில் இருக்கும் அரசியலே நான் இந்த பதிவை எழுத காரணம். அந்த விளம்பரத்தில் பாருங்கள்..“பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..” என்ற வரி இருக்கிறது. அந்த வரியில்தான் ஒரு சூட்சுமம் இருக்கிறது. திராவிடர் கழக கம்பெனியின் தற்போதைய ஓனர் வீரமணி, திராவிடர் தலைவர் என்று சொல்லாமல், `தமிழர் தலைவர்என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார்.. ஆனால் தமிழர் திருநாளை திராவிடர் திருநாள் என்றுதான் வேண்டுமென்றே கொண்டாடுவார். அதேப்போல்தான் இந்த விளம்பர வாசகத்தில் இருக்கும் அரசியலும். அதாவது தமிழனை சூத்திரனாக்குவதும் பூணூலே என்கிறார்கள். இந்த பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திராவிடர்கள் என்பதை வலியுறுத்தி அரசியல் செய்யும் இயக்கம். ஆக இவர்கள் பார்வையில் பூணூல் சூத்திரனாக்குவது திராவிடர்களாகதானே இருக்க வேண்டும்..”

Brahmin Sacred thread cut- 1969-2017- to pigs

பூணூல் போடாத மற்றவர் பிராமணாரா?: கார்ட்டூனிஸ்ட் பாலா எழுதியது, “எதற்கு இந்த இடத்தில் தமிழர்களை இழுக்கிறார்கள். இந்த இடத்தில் மட்டும் எப்படி திராவிடர்கள் தமிழர்கள் ஆனார்கள்.. அப்படியானால் பூணூல் போடாத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள் எல்லாம் பிராமணர்களா.. தமிழன் மட்டும்தான் சூத்திரனா..போராடுவது.. உட்பட இன்னபிற விசயங்களுக்கு தமிழர் என்ற அடையாளத்தையும், அதிகாரத்திற்கு வருவதற்கு திராவிடர் என்ற அடையாளத்தையும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இது திராவிடர்களின் தந்திரமான அரசியல். முதலில் தமிழர்களா.. திராவிடர்களா என்பதுகுறித்து ஒரு தெளிவுக்கு வாங்க. மற்றபடி பூணூல் போடுவதாலோ பார்ப்பனர்கள் சொல்வதாலோ தமிழர்கள் சூத்திரர்களாக வேண்டியதில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு தமிழர் என்ற அடையாளம் இருக்கிறது. வேண்டுமானால் திராவிடர்கள் சூத்திரர்களாக இருந்து கொள்ளுங்கள்”. இப்படி கார்ட்டூனிஸ்ட் பாலா முடித்திருக்கிறார். சித்தாந்த ரீதியில், பன்றிகளுக்கு பூணூல் போடும் போராட்டத்தை ஆதரித்தும் எழுதியிருக்கிறார்கள்[6]. உதாரணத்திற்கு, இது கொடுக்கப்படுகிறது[7].

© வேதபிரகாஷ்

07-08-2017

Annadurai grudge against Brahmins

[1] http://www.murasoli.in/details.php?news_id=458

[2]https://thimuka.wordpress.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/

[3]  குடியரசு, விடுதலை, நாத்திகம் போன்ற நாளிதழ்களை தாராளமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

[4] கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் எழுதியது, நிதர்சன கருத்தாக இருப்பதனால், இங்கு அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது.

[5] லைன்ஸ்.மீடியா, பன்றிக்கு பூணூலும்தமிழர்களின் காதில் பூ கூடை வைக்கும் திராவிடம்!, 18 Jul 2017, கார்ட்டூனிஸ்ட் பாலா 07-08-2017.

https://www.linesmedia.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[6] கீற்று, பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல், செ.கார்கி, வெளியிடப்பட்டது: 20 ஜூலை 2017.

[7] http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33490-2017-07-20-08-59-33

பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1)

ஒக்ரோபர் 24, 2010

பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1)

கபட நாடகம் ஆடும் திராவிட சித்தாந்திகள், மற்றவர்கள்: திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள், சாதியில்லை என்று உரைப்பவர்கள், இரட்டைவேடம், இரட்டைப் பேச்சு, இரட்டை நாடகம் போடுவதால் தான் பிரச்சினையே வருகிறது. கோவிலை இடித்துக் கொண்டு, சிலைகளை திருடிக்கொண்டு, கோவில் நிலங்களை அபகரித்துக் கொண்டு ……………………இத்தகைய ஆத்திக-விரோத, இந்து-விரோத காரியங்களை செய்து வருவதால் தான், அவர்கள் சட்டரீதியாக பல பிரிவுகளை அவமதிக்கிறார்கள், மீறுகிறார்கள். சொல்லப்போனால், பல சட்டங்களை மதிப்பதேயில்லை. மேலும், இந்துக்கள் அல்லாத கிருத்துவர்-முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டும் அத்தகைய காரியங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில்தான், இவர்கள் “அனைவரும் அர்ச்சகராகலாம்” என்ற அரசியலில் இறங்கினர். ஆகம சாத்திர முறைகளைக் கொஞ்சம் கூட மதிக்காமல், அவசர-அவசரமாக மாநில அளவில் சட்டத்தை இயற்றி பிரச்சினையை கிளப்பினார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், சட்டரீதியாக அவர்கள் செய்வது வெறும் அரசியல்தான் என்பது.

கடவுளே இல்லை எனும்போது குல்லா போட்டு கஞ்சி குடிப்பதேன், இந்துக்களை தூஷிப்பதேன்: இதற்கு எந்த பகுத்தறிவுவாதியும் பதில் சொல்ல மாட்டான். குல்லா போடாமல் கஞ்சி குடித்தால் அல்லா ஏற்றுக் கொள்ள மாட்டாரா? “உதயம் முதல் அஸ்தமனம் வரை” என்ற நோன்பை கடைப்பிடிக்காமல், இப்படி போலிகளை, வைத்துக் கொண்டு இஃபதர் விழா கொண்டாடுவதை அல்லா ஏற்றுக் கொள்வாரா?  ஆக இந்த போலித்தனத்தை, ஏமாற்றுவேலையை இவர்கள் முதலில் நிறுத்தவேண்டும். மத சடங்குகள், சம்பிரதாயங்கள், ………உள்ளன என்றால் அதை அந்தந்த நம்பிக்கையாளர் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதை மற்ற நம்பிக்கையாளர் அல்லது நம்பிக்கயில்லாதவர்கள் கேட்க முடியாது. நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட பல சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்துதான் வருகிறார்கள்.

நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி,  பணி,  வழக்குகள்! இதை நான் ஏற்கெனெவே, “நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!” என்ற பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. திருப்பதிதிருமலை தேவஸ்தானம், பல ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி முதலிய எல்லொருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்து பூசாரிகள் ஆக்கி வருகிறது. அங்கு எந்தபிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழகத்தில், தேவையில்லாமல் நாத்திக ஆட்சியாளர்கள் தலையிட்டுக் குழப்பி வருகிறார்கள். போதாகுறைக்கு கிருத்துவர்கள், முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற கடவுள் நம்பிக்கையில்லாத கோஷ்டிகள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்துவிரோத கயவர் பட்டாளங்கள், இதில் நுழைந்து கெடுக்கப் பார்க்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், “சான்றிதழ்பெற்றுவிட்டேன் என்ற போர்வையில், அத்தகைய இந்துவிரோதிகளும் உள்ளே நுழையப் பார்க்கின்றனர். இதனால்தான், மற்றவர்கள் எதிர்க்கின்றனர்.

 

சட்டவிரோதமாக படிக்கும் எந்த படிப்பும் செல்லுபடி ஆவதில்லை: “அர்ச்சகர்” படிப்பு இல்லை, மருத்துவர் படிப்பே, அங்கீகாரம் இல்லையென்றால், படிப்பது இல்லை, அல்லது படித்ததும் வீணாகிறது. அந்நிலை தான் இங்குள்ளது. சட்டவிரோதமாக நாத்திக அரசு அமூல் படுத்தி விளம்பரம் தேடியுள்ளது. இதனால், மற்றது போல 3.5% இட-ஒதுக்கீடு செய்தோம் என்றுதான் பேச நன்றாக இருக்குமே தவிர ஏன் கிருத்துவர்கள் மறுத்தார்கள், முஸ்லீம்கள் எதிர்த்தார்கள் என்றெல்லாம் நினைக்கப்போவதில்லை. எனவே, “அர்ச்சகர்” படிப்பு படித்து வேலையில்லாமல் இருக்கிறோம் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதற்கு பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா?

 

M. B. B. S  படித்தவர்கள் டாக்டராகி விடுகிறார்களா? அதே போல B.E படித்தவர்கள் இஞ்சினியர், B.L படித்தவர்கள் வக்கீல் ஆவதில்லை. இதுதான் நிதர்சனம், உண்மையான நிலைமை. “இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை விட்டுவிட்டு வந்தவர்கள் எனப் பல வகையினர் உண்டு”, என்று வாதிடுவது பெருமையாகவோ அல்லது அவர்களது திறமையினை காட்டுவதாகவோ இல்லை. அந்தபடிப்பில் இல்லாதது “அர்ச்சகர்” படிப்பில் வரும் என்ற நோக்கத்தில் வந்ததாக தெரியவில்லை. இதே ;போலத்தான் “டாஸ்மாக்” வேலைக்கும் வந்துள்ளார்கள். பிறகு, ஒழுக்கத்தில் எல்லோருமே ஒன்றாகி விடுவார்களா? “எங்கள் ஒழுக்கத்தைச் சோதித்து, சைவ, வைணவ பெரியோர்கள் தீட்சை வழங்கி இருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. “டாஸ்மாக்” வேலைக்கும் அவ்வாறு சைவ, வைணவ பெரியோர்கள் இல்லை, மற்றவர்கள் தீட்சை வழங்குவார்களா?

“டாஸ்மாக்” வேலைக்கு என்ன  படிப்பு வேண்டும்? “டாஸ்மாக்” வேலைக்கு இது மாதிரி படிப்பு உள்ளதா, பயிற்சி கொடுத்து “சான்றிதழ்” வழங்குகிறார்களா? “இவன் நன்றாக ஊற்றிக் கொடுக்கிறான், மது, குடி, போதை பற்றியெல்லாம் நன்றாக தெரியும், பற்பல குடிகாரர்களுக்கு ஊற்றிக் கொடுத்த அனுபம் உண்டு…………”, என்றெல்லாம் யாராவது பெருமையாக சொல்ல்லிக் கொள்வார்களா? “டாஸ்மாக்” வேலை ஏன் எல்லோருக்கும் கிடைப்பதில்லை, அதன் மர்மம் அல்லது தீட்டு பற்றி என் யாரும் கேட்பதில்லை? ஆக, இந்த விஷயங்களையெல்லாம் யோசிக்கவேண்டும்.

 

வேதபிரகாஷ்

24-10-2010


[1] வேதபிரகாஷ், நாத்திகஅரசியல்மயமாக்கப்பட்டஅர்ச்சகர்கல்வி, பணி, வழக்குகள்!, http://atheismtemples.wordpress.com/2010/05/13/118/