பெரியார் பிறந்த மண்ணில் திராவிட பூசாரிகளின் மந்திர–தந்திர–யந்திர அகோரி ஜாலங்கள் – அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும் என்று இணைய தளம் மூலம் நடக்கும் வியாபாரம் (7)
இணைதளத்தில் மாந்தீரிகம் செய்வது, புத்தகங்கள் விற்பது வியாபாரமாகி விட்டது: பகுத்தறிவு பேசும், பெரியார் மண்ணில் தான், “ஆவிகள் உலகம்” போன்ற பத்திரிக்கைகள் விற்கப்படுகின்றன. போதாகுறைக்கு, தொலைவழி கல்வி, பயிற்சி என்றெல்லாம் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இணைதளத்தில் உள்ளது கொடுக்கப் படுகிறது[1] . “வாழ்வை வளமாக்கவும், நடைமுறை துன்பங்கள் நீங்கவும் தெய்வ பலத்துடன் நாம் சிறப்பாக வாழ்வுமே இந்த மலையாள மாந்திரீக பயிற்சி புத்தகத்தினை வெளியிடுகிறோம், இதனால் பொதுமக்கள் ஜோதிடர்கள், பூசாரிகள், குறி சொல்பவர்கள், ஆன்மிகவாதிகள் எந்த வித முன் அனுபவம் இல்லாதவர்கள் ஆர்வம் சுயவிருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பயிற்சி புத்தகத்தினை வாங்கி பயனடையலாம். இதனால் பல ஆயிரம் பேர்கள் பயனடைந்துள்ளனர். இந்த பயிற்சி புத்தகத்தில் –
1. குலதெய்வ அழைப்பு பூஜை முறை,
2. அஷ்ட கணபதி சித்தி முறை, 3. ஜனவசியம் தான வசியம், 4. கணவன் மனைவி வசியம், 5. நம் எதிரிகள் செயல் இழந்து ஸ்தம்பித்து நிற்க, 6. தோஷம் துஷ்ட சக்தி ஏவல், 7. பில்லி சூன்யம் உடன் நிவாரண முறை, 8. கொடுத்த கடன் வசூலாக்கும் முறை |
9. தீராத நாட்பட்ட வியாதிகள் நீக்கும் அற்புத முறை,
10. குடும்ப ஒற்றுமை உண்டாக்கும் அற்புத சக்கரம், 11. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உடனே வேலைகிடைக்க, 12. மனிதர்கள் மரண கண்டம் நீங்கி ஆயள் விருத்தி முறை, 13. வேறு மந்திரவாதியின் கட்டுகளை தகர்க்கும் முறை, 14. தொழிலை கெடுக்க மாந்திரீகம் செய்த கட்டுகளுடைக்கும் முறை, 15. மாந்திரீக பாதிப்பு உள்ளதா என அறிய, 16. சொர்ண பைரவர் பூஜை முறை, |
மேலும் இன்னும் ஏராளமான விசயங்கள் எளிய வழியில் பிரயோகிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். இந்த பயிற்சி புத்தகம் மொத்தம் 3 பாகங்கள் அடங்கியது, ஒரு புத்தகத்தின் விலை 2000 ரூபாய் மொத்தம் 3 புத்தகங்களின் விலை 6000 மூன்று புத்தகத்தையும் வாங்குவோருக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள குலதெய்வ வசிய அஞ்சனம் ஓன்று இலவசமாக கொடுக்கப்படும்”, இப்படியெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. இன்னொரு இணைதளம் “அனைத்து சுகங்களை கொடுக்கும், துக்கங்களை நீக்கும்” என்ற முறையில் அறிவிப்புகள்[2].
ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி: “இதுவரை அனைவராலும் மறைக்கப்பட்ட அதிரகசிய அபூர்வ தெய்வீக கலை[3]. பயிற்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே நீங்கள் ஆவிகளுடன் பேசலாம். உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும்நொடிப்பொழுதில் ஆவிகளுடன் பேசலாம். நீங்கள் கூப்பிட்ட உடனேயே ஆவிகள் வந்து உங்களிடத்தில் பேசும். இக்கலையினால் எந்த ஒரு ஆவியினாலும், உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும், எந்த ஒரு சூழ்நிலையிலும், வரவே வராது. காலை, பகல், இரவு என எந்த வேளையிலும் நீங்கள் ஆவிகளை அழைத்து பேசி, அவர்களது உதவியையும் பெற முடியும். இக்கலையை கற்றுக்கொல்வதினால், முன்னோர் ஆன்மாக்களுடன் பேசுவது மட்டுமில்லாமல், அவர்களது ஆசியும் பெற்று, அவர்களது வழிக்கட்டுதலும் கிடைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவார்கள். நம்முடன் வாழ்ந்து இறந்த ஆன்மாக்களுடன் பேச நினைப்பவர்கள், நமது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய உறவுகளின் இறப்பால் துயரப்படும் நபர்கள், நிச்சயம் இக்கலையை கற்று, அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களின் வழிக்கட்டுதலும், பாசத்தையும் பெற முடியும். வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும், சரியான தீர்வை நாம் ஆவிகள் மூலம் பெறமுடியும். இக்கலை மிகவும் பாதுகாப்பான, மிகவும் சக்திவாய்ந்த கலையாகும். இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் கவனத்திற்கு. உங்களைப்போன்றே உங்களை சுற்றி உள்ளவர்களும், நிச்சயம் உறவுகளை பிரிந்து வாடுவார்கள், அவர்களுக்கு நிச்சயம் இந்த கலையை என்னிடம் பழக எடுத்துரைக்கவும். பெண்களுக்கு இந்த பயிற்சி கற்பிக்கப்பட மாட்டாது. 100% MONEY BACK GUARANTEE[4]. குறிப்பு: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இங்கிருந்தபடியே பயிற்சி கொடுத்து 1 மணி நேரத்தில் பேச வைக்க முடியும். பயிற்ச்சி தொகை: ரூ: 10,000”, இப்படி இன்னொரு இணைதளம் விளக்குகிறது[5].
மந்திர–தந்திர–யந்திர ஏராளமாக புத்தகங்கள் வெளியாகி வருவது: இந்த மந்திர-தந்திர-யந்திர புத்தகங்கள் என்று பார்த்தால், புத்தகக் கடைகளில் எதையும் விட்டு வைக்காத அளவிற்கு புத்தகங்களை எழுதி, பதிப்பித்துக் குவித்து வைத்துள்ளார்கள்[6]. அவற்றில் 10% கூட பிரயோஜனமில்லாத வகையில், மற்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள், பழைய பதிப்புகளில் உள்ளவை[7] முதலியவற்றை அப்படியே “ஈ அடிச்சான் காப்பி” முறையில், காப்பியடித்து எழுதப் பட்டவைகளாக இருக்கின்றன. ஜோசியத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். சுலபமாகக் கிடைக்கும் சாப்ட்வேர்களையே மாற்றி ஆயிரக்கணக்கு ரூபாய் விலை வைத்து விற்க முயல்கிறார்கள்[8]. “சித்தர்கள்” பெயரில் ஏகப்பட்ட புரட்டு நூல்கள். ஒரு பக்கம் சித்தர்களை வைத்துக் கொண்டு தமிழ்வெறியோடு, சமஸ்கிருதத்தை எதிர்ப்பதை காணலாம். மறு புறம் சமஸ்கிருத மொழியை தூஷித்து, அதே மொழியில் உள்ள தந்திர-யந்திர படங்களை போட்டு புத்தகங்கள் எழுதுகிறார்கள்[9]. பார்ப்பனர்களின் அயோக்கியத் தனம் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இவர்களே எல்லாவற்றையும் கண்டு பிடித்தது போலவும், எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்குடன், இவ்வாறு அரைகுறை அளவில் கூட இல்லாமல், மிகமோசமாக புத்தகங்களை எழுதி, பதிப்பித்து, பரப்பி வருவது, போலித் தனமாக இருக்கிறது. “திருடுவது எப்படி-திருட்டைத் தடுப்பது எப்படி” என்று எதிர்-புதிருமாக புத்தகங்களை வெலியிடுவது, வியாபாரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால், படித்து ஏமாந்தவர்கள் சபித்தால், அது ஏமாற்றியவர்களை பாதிக்குமா-பாதிக்காதா என்று யோசிக்க வேண்டும்.
மந்திர–தந்திர–யந்திர தகடுகள் தயாரிப்பு, வியாபாரம்: பிரம்ம்ப முகூர்த்தத்தில் எழுத்து, நித்திய கர்மாக்களை சிரத்தையாக செய்து, மன-உடல் தூய்மையுடன், ஆராதித்து, பூஜை செய்து, ஒரு மண்டலம், இரண்டு மண்டலங்கள் என்று அவ்வாறு கிரியைகள் செய்து, முறைப்படி தாமிர தகடு தயாரித்து, அதில் சக்கரங்களை-மந்திரங்களை எழுதி, சுருட்டி தாயத்தில் வைத்து, மந்திரித்து, பூஜை செய்து கொடுப்பதற்கு பதிலாக, தொழிற்சாலையில், தகடுகளில் யந்திரங்களில் வெட்டி, எழுத்துகள்-படங்கள் பொரித்து விற்கிறார்கள், சஞ்சிகைகளுடன் இலவசமாகக் கொடுக்கிறார்கள்[10]. ஏன் ரூ 10/- என்று கூட கோவில்களில் விற்கிறார்கள். இதெல்லாம் எந்த வழியில் சரியானது, என்பதை அத்தொழில் செய்பவர்களுக்கேத் தெரியும். போலியாக “படிப்பு சான்றிதழ்கள்”, கள்ள நோட்ட்டுகள் அடிப்பதற்கு சமமான, ஈனத்தனமான, சமூக-விரோத, மனிதத்தன்மையற்ற தொழில் என்றே இவற்றைச் சொல்லலாம். ஆனால், திராவிட அதிகாரம், பாதுகாப்பு, ஆதரவு, முதலியவற்றால், இத்தொழில்கள் அமோகமாக நடக்கிறது. அதனால், கைதான ஒருவன், சசிகலாவைக் காப்பாற்றவே அவ்வாறான “அகோரி” பூஜை செய்தேன் என்று அளக்கிறான்.
கஷ்டப்பட்டு உழைக்காமல், கற்காமல், குறுக்கு வழியில் எதையும் அடைய முடியாது: மனிதன் படிப்படியாக, பள்ளியிலிருந்து, கல்லூரிக்குச் சென்று, பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று சம்பாதித்து, திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நிர்வகிக்க அடையும் நிலையை, இத்தகைய போலி புத்தகங்கள வைத்து அடையலாம் என்று சில சோம்பேறி மனிதர்களை கவர, ஏமாற்றவே செய்யப்படுகின்ற வேலையாக இருக்கிறது. தனக்கே வழியில்லாமல், இப்படி ஏமாற்றி அலையும் இவர்கள், மற்றவர்களின் நலன்களைப் பற்றி எப்படி கவலைப் பட முடியும் என்று யோசிப்பதே இல்லை. கலை என்று சொன்னால், முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும், ஏதோ “பாஸ்ட் புட்” [துரித உணவகம்] போன்று, துரிதமாக, எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்பதெல்லாம் அபத்தமானது[11]. இன்றைக்கு “காப்பி ரைட்” அறிவுஜீவித்தனத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு முதலியவை அதிகமாகவே பேசப்படுகின்றன. ஆனால், இந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் முதலியோர் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லை. நாளைக்கு “நுகர்வோர்” என்ற முறையில், வழக்கு போட்டால், அப்பொழுது தான் புரியும் போலிருக்கிறது.
© வேதபிரகாஷ்
23-03-2017
[1] http://src83.blogspot.in/2016/12/blog-post_17.html
[3] சரித்திரம் மறைக்கப்பட்டுள்ள நிலையில், பொய்கள் பரப்படும் நிலையில், அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், இப்படி அதிரடி ரீதியில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
[4] இது சுத்தமான வியாபாரன் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. அதாவது, பொருள் நன்றாக இல்லை, பிரயோஜனம் இல்லை, பிடிக்கவில்லை என்றால், திருப்பிக் கொடுத்தால், பணம் வாபஸ் என்ற ரீதியில் செய்யப்படும் ரீதியில், இந்த விளம்பரம் உள்ளதை கவனிக்கலாம்.
[5] http://vasiyam.co.in/en/HOME/
[6] இதில் நர்மதா பதிப்பகம், செண்பகா பதிப்பகம் என்று எல்லோருமே அடக்கம்.
[7] 1940களில் வெளிவந்த பெரிய எழுத்து புத்தகங்கள், 1980களில் வெளிவந்த பிரேமா பிரசுரம் முதலியன.
[8] http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89982
[9] திராவிடத்துவ சித்தாந்திகள், திக-திமுகக் கட்சி ஆதரவாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் என்றிருப்பவர்கள், இத்தொழிலி அதிகமாக ஈடுபட்டிருப்பதை கவனிக்கலாம்.
[10] நக்கீரன் போன்ற போலி ஆத்திக, பெரியாரிஸ சித்தாந்த கோஷ்டிகள் செய்து வந்ததை, வருவதை கவனிக்கலாம்.
[11] ஒரு மணி நேரத்தில் ஆவிகளுடன் பேசும் பயிற்சி, http://vasiyam.co.in/en/HOME/