Archive for the ‘பென்னிகுக் புராணம்’ Category

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

கருணாநிதி மதுரையில் சிலை வைத்தால், ஸ்டாலின் இங்கிலாந்தில் சிலை வைப்பார்: ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்[1]. அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15ஆம் நாளை தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்[2]. தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் தியாகப் பணிகளை நினைவுகூரும் வகையில் அவருடைய பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். மேலும், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்[3]. கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் மதுரை, தல்லாக்குளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அன்னாருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்[4]. தமிழக அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகரப் பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக்கின் பெயரைச் சூட்டியது[5].

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நீதிமன்றத்திற்குச் செல்வோம்: தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துகளைத் தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது[6]. தென் மாவட்ட மக்களின் நீண்டகாலத் தண்ணீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களைக் கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்...

ஆங்கிலேயர் காலத்திலேயே தெரிந்த உண்மைகளை மறைப்பது: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஏனெனில், ஆங்கிலேயர் ஒன்று தங்கள் பணத்தைப் போட்டு, எந்த நன்மையினையும் இங்கு செய்து விடவில்லை. பில்லியன்களில் இந்தியர்களிடம் வரிவசூல் மூலம் கொள்ளையடித்ததில்[7], கொஞ்சம் தங்களது போகுவரத்தி, வசதி போன்றவற்றிற்கு செலவிட்டனர். அணைக் கட்டும் விவகாரங்களிலும், தமது மிஷின்கள், பாகங்கள் முதலியவற்றை விற்பத்தில் கமிஷன் பெறலாம் என்ற நோக்கில் தான் செய்து வந்தனர். முன்னர் பழைய வீடுகளில் சாதாரண ஸ்விட்ச், காக்கடை மூடி / காஸ்ட் அயரன் மூடி முதலியவற்றில் “மேட் இன் இங்கிலாந்து,” என்றிருக்கும். அதனால் தான், அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று பொராட்டம் நடத்தினார். சுவதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார். ஏ.டி.மெகன்ஸி என்ற இஞ்சினியர், தமது நூலில் “பெரியாறு திட்டத்தைப் பற்றிய வரலாறு” பற்றி குறிப்பிட்டுள்ளார்[8].

2016 இக்கட்டுகதை எடுத்துக் காட்டப் பட்டது: ஆகஸ்ட் 2016லேயே, தீபா கந்தசாமி என்பவர், இதெல்லம் கட்டுக்கதை என்று எடுத்துக் காட்டியுள்ளார்[9]. சொத்தை விற்று அணை கட்டியது – அதெல்லாம் கட்டுக்கதை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், பென்னிகுவிக் பேரன் சொன்னதாக, குறிப்பிட்டார். ஆங்கிலேய கருவூல அதிகாரிகளுக்கு இவரது வேலை திருப்தி அளிக்கவில்லை, அதனால், மாவீரர் பட்டம் (knighthood) அந்தஸ்தும் கொடுக்கப் படவில்லை என்றும் பேரன் வருத்தப் பட்டுக் கொண்டார்[10]. ஏ.டி.மெகன்ஸியின் புத்தகத்தில் உள்ள விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜான் பென்னிகுவிக்கின் கல்லறை கல்லில் கூட அவர் கிரிக்கெட் ஆடினார் என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளதேயன்றி, அணைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்ப்டவில்லை. ஆகவே, இந்த அணைக்கும், இவருக்கும் ஏதோ பிரச்சினை உள்ளது என்று தான் தெரிகிறது.

2018 – எஸ்.ராமநாதன் பொறியாளர் எடுத்துக் காட்டியது: எஸ். ராமநாதன் FIE, பென்னிகுவிக்கை நினைவு கொள்வோம் என்ற கட்டுரையில், விவரமாக எழுதியுள்ளார்[11]. ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், “பெரியாறின் நீரை தடுத்து திசைத் திருப்ப வேண்டும் என்பது பழைய திட்டமே. (ஆங்கிலேயர்களால் முன்னர்) பல ஆய்வுகள் மேற்கொண்டு அது தேவையில்லை, நடைமுறையில் ஒத்துவராது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள்,”  என்றும் ராமநாத குறிப்பிட்டுள்ளார்[12]. அதாவது, பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இருப்பினும், வலுக்கட்டாயமாக,இதனைக் கட்டியது, இங்கிலாந்திலிருந்து மிஷின்களை வாங்கி இறக்குமதி செய்தது, முதலியன, வேறெதையோ சுட்டிக் காட்டுகிறது. ஒருவேள நிதி விவகாரங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான், கருவூல அதிகாரிகள் இவரது செயல்களில் திருப்தியடைவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

2022ல் வெண்ணிலா கூறுவது: அ. வெண்ணிலா என்பவர் விகடனுக்குக் கூறியது[13], “முதல்வரின் செய்திக் குறிப்பில்ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னி குக் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினார்என்றுள்ளது. பென்னி குக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது……[14] முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன்[15]. ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது[16]………. பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய ‘History of the periyar project’ நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார். சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம்”. இதை இவர் பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] NEWS18 TAMIL, தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலைமுதல்வர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published by: Karthick S, First published: January 15, 2022, 20:35 IST LAST UPDATED : JANUARY 15, 2022, 20:35 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-corporation-mayor-post-allocated-to-schedule-caste-woman-skd-667755.html

[3] தினகரன், தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, 12:07 pm Jan 15, 2022 | dotcom@dinakaran.com(Editor)

[4] https://m.dinakaran.com/article/news-detail/735010

[5] நக்கீரன், இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிக்குயிக் சிலை” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published on 15/01/2022 (12:30) | Edited on 15/01/2022 (12:33)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-government-will-be-set-penny-kwik-statue-england

[7]  தாதாபாய் நௌரோஜி, அம்பேத்கார் முதலியோர் எடுத்துக் காட்டியுள்ளனர். சமீபத்தில் சசிதரூரும் இதைப் பற்றி பேசி-எழுதியுள்ளார்.

[8] A.T.Mackenzie , Executive Engineer , who later wrote the book “ History of the Periyar Project “..

[9] Th Mint, John Pennycuick: The man who built the Mullaiperiyar dam, 11 min read . Updated: 28 Aug 2016, 12:04 AM IST. Deepa Kandaswamy.

 In the popular narrative, many claim that Pennycuick sold his property and his wife’s jewels to fund the dam’s construction. However, his great-grandson, Stuart Sampson, in an email said, “It is a myth. I have no evidence of this.” 

[10] Another common tale is that Pennycuick was subjected to an inquiry commission by the British government. To this, Sampson said, “I am not aware it. It seems clear that he did not make himself popular with the treasury officers of the Indian government. This is probably the reason why he did not receive a knighthood.” Deepa Kandaswamy is an award-winning freelance writer and author based in India.

https://www.livemint.com/Sundayapp/3PeedgK5bx4Z9uPKEE0KPL/John-Pennycuick-The-man-who-built-the-Mullaiperiyar-dam.html

[11] S. Ramanathan, Let us Remember Colonel John Pennycuick : Birthday Tributes , E-News: 31| January 2018, pp.3-5.

[12] He (Stuart Sampson) boldly uttered “ The idea of thus diverting the waters of the Periyar is probably very ancient. Surveys have been made in a some-what half- hearted manner, to condemn the idea as impracticable”.

http://ieimadurailc.org/images/newsletter/E-News__Jan_2018.pdf?fbclid=IwAR3WM28cWfM3wxS2n83UfehJGA6b5cdQmnP8dPctX5Z7076D_Y-UznIOKbA

[13] விகடன், சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குக்? முதல்வர் ஸ்டாலின் சொல்வது சரியா?, யுவநந்தினி சே, Published: 15th Jan, 2022 at 7:37 PM; Updated: 2 days ago.

[14] https://www.vikatan.com/amp/story/news/tamilnadu/article-about-stalins-announcement-on-john-pennycuick-birthday

[15] தமிழ்.ஏபிபி.லவ்,Writer Vennila on Pennycuick : ‘தன் சொத்தை விற்று முல்லை பெரியாறு அணைக் கட்டினாரா பென்னிகுயிக்?’ இல்லை என்கிறார் எழுத்தாளர் வெண்ணிலா..!, By: இராஜா சண்முகசுந்தரம் | Updated : 17 Jan 2022 12:45 PM (IST)

[16] https://tamil.abplive.com/news/tamil-nadu/did-john-pennycuick-sell-his-property-to-build-mullaperiyar-dam-here-is-writer-vennila-explanation-35663

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

இட்டுக்கதை, கட்டுக்கதை, மாயைகள் முதலியவற்றை உருவாக்குவதில் வல்லவர்கள் திராவிடத்துவ வாதிகள்: கட்டுக்கதைகளை உருவாக்குதில் திராவிடத்துவவாதிகள் கைத் தேர்ந்தவர்கள் ஆவர்.  அவற்றில் அரசியல் ஆதாயம், பணம், கான்ட்ராக்ட் கிடைக்கும் என்றால், பெரிதாக்கி ஊதுவார்கள்! சம்பந்தமே இல்லாத ஆட்கள் எல்லாம் திடீரென்று தோன்றி அதில் அதி-தீவிரமான விருப்பம் கொண்டிருப்பதைப் போலவும், அதற்கு உயிரையே கொடுப்பேன் என்ற ரீதியில் உழைப்பது போலவும் நாடகம் ஆடுவர். விவகாரங்கள் தெரிய வந்தால், சமாளித்துப் பார்ப்பார்கள், மாட்டிக் கொண்டால் அடங்கி விடுவார்கள், வழக்கு என்றெல்லாம் ஆகி விட்டால், எல்லாவற்றையும் அடியோடு மறைக்கப் பார்ப்பர்கள். திராவிடத்துவ சரித்திரம் என்றதே கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப் பட்டதே. எல்லாமே, ஒருதலைப் பட்ட கதைகள், அவர்களே வெளியிட்டுள்ள புத்தகங்கள், முதலியன…. அவற்றை சரிபார்க்க முடியாது, அவர்கள் சொல்லியுள்ளதை, எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தான் எழுது முறை ஆராய்ச்சி நெறிமுறை எல்லாமே நடந்து வருகிறது. சரித்திராசிரியர்கள் என்று பிரகடப் படுத்திக் கொள்பவர்களும், அவ்வாறே ஆதரித்து, விருதுகள், பட்டங்கள், நிதியுதவிகள் பெற்றுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். உண்மையுரைக்க அவர்களுக்கு திராணி இல்லை, மன்னசாட்சியும் கிடையாது. அப்படி செய்தால், தூக்கியெறியப் படுவர்.

திராவிடத்துவ வாதிகளின் பதினெண் புராணங்கள் உருவாக்கும் முறைகள்: பெரியார் புராணம், நாகம்மை புராணம், பெரியம்மை புராணம், பெஸ்கி புராணம், அண்ணா புராணம், கருணாநிதி புராணம், வீரமாமுனிவர் புராணம், தத்துவ போதகர் புராணம், எல்லீஸர் புராணம், ஜி.யு.போப் புராணம், வரிசையில் பென்னி குக் புராணமும் சேர்ந்துள்ளது. “நதிமூலம், ரிஷி மூலம் கேட்கக் கூடாது,” என்றால், இங்கும் மூலங்கள் கேட்கக் கூடாது, காண்பிக்கப் படாது. எழுதி வைத்ததைப் படி, ஒப்புக்கொள், பிரச்சரம் செய், கேள்விகள் கேட்காதே – என்பவை தான் ஆணைகள், ஏற்றுக் கொள்ளப் படவேண்டும். ஒருவர் முதலில் எழுதுவார், இன்னொருவர் விரிவாக்குவார், இன்னொமொருவர் இன்னும் கொஞ்சம் சேர்ப்பார், புத்தகங்கள் வெளிவரும், பிஎச்.டிக்களும் உருவாக்கப் படும், விழா எடுப்பர், விருதுகள்-பட்டகள் கொடுக்கப் படும், அவ்வளவு தான், பொற்றாமரைக் குளத்தில், பூமேடையில் வைத்து, தமிழ் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது போன்ற ரீதியில் அரங்கேற்றப் படும். கலைமாமணி, பெரியார் விருது என்றெல்லாமும் கொடுக்கப் படும்.

2018 – முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் பெயரால் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது:. முல்லைப்பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவப் பணிப் பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தவர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஒருபுறம் தென் மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் வாடுவதையும் மறுபுறம் பெரியாற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் பார்த்து, ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டலாம் என்று ஆங்கில அரசிடம் அனுமதி பெற்றார். பின் பாதி கட்டப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அணை உடைந்து ஆங்கில அரசு திட்டத்தை மூட்டை கட்டினாலும் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார். இன்றளவும் அவர் பெயரைச் சொல்லி பொங்கல் வைக்கும் அளவுக்கு அன்பும் நன்றியும் பாராட்டுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் பென்னி குக்கின் கொள்ளு பேரன் பேத்திகள் என டயானா ஸிப், ஸானி மற்றும் உறவினர்கள் என்று சிலர் தேனிக்கு வந்தனர்.ஆனால், இவர்கள் யாரும் பென்னி குக்கின் நேரடி வாரிசுகள் அல்ல என்பதும் இவர்களில் ஒருவர் மட்டும் பென்னிகுக்கிற்கு தூரத்து சொந்தம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

சந்தன பீர் ஓலி ஈடுபடுள்ளதாக, கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி குற்றம் சாட்டுகிறார்: கம்பம் அருகே உத்தமப்பாளையம் பகுதியைச் நேர்ந்த சந்தன பீர் ஓலி என்பவர், லண்டனைச்சேர்ந்த டயானா ஸிப் உள்ளிட்ட 3 பேரும் பென்னிகுக்கின் கொள்ளு பேத்திகள் என்று கூறி அறிமுகப்படுத்தி அழைத்து வந்ததோடு, லண்டனில் உள்ள பென்னிகுக் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையை சீர்செய்யவும் அங்கு பென்னிகுக்கிற்கு நினைவுச்சிலை எழுப்பவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள் கம்பம் பகுதி மக்கள். இந்நிலையில்  பென்னிகுக்கின் பேத்திகள் என்று நம்பி தாங்கள் உதவி செய்ததாக கூறுகிறார்கள் அந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தவர்கள்.  ஒரு பக்கம் பேரன், இன்னொரு பக்கம் பேத்திகள் என்று வருவதும் விசித்திரமாக இருக்கிறது.

கம்ப – கோவிந்தன் என்பவர் வழக்கு தொடர்வதாகக் கூறியது: இதனைதொடர்ந்து கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி தேனி கம்பம் பகுதியில் பென்னி குக்கின் பெயரில் நிதி வசூல் செய்தநிலையில், கொடைக்கானலில் பென்னிகுக் ட்ரஸ்ட் என்ற பெயரில் இதே சந்தன பீர் ஒலி என்பவர் பென்னிகுக்கின் நிலத்தை அபகரிக்க, முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்[1]. மேலும் 1‌980 வரை பென்னி குக் பெயரில் கொடைக்கானலில் இருந்த 21 ஏக்கருக்கும் அதிக நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார்[2]. இச்சுழலில் கம்பம் பகுதி மக்களின் புகார்கள் குறித்து லண்டனில் வசிக்கும் சந்தன பீர் ஒலியிடம் கேட்டபோது இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்தாலும், பென்னிகுக்கின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார் கோவிந்தன். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

ஜனவரி 2022 – ஸ்டாலின் – பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப் படும்: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தன்னிடம் இருந்த சொத்தை எல்லாம் விற்று அரும்பாடு பட்டு 1895-ம் ஆண்டு இந்த அணையை கட்டியவர் இங்கிலாந்தை சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுயிக். இந்த நிலையில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்[3]. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்[4], “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான இன்று (ஜனவரி 15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்[5].

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகரத்தில் அமைக்கப் படும்: கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்[6]. ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்[7]. அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்ங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன[8].

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] புதிய தலைமுறை, பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி: திடுக்கிடும் புகார் , NewsPT, Published :07,Dec 2018 08:14 AM.

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/39312/Fraud-in-the-name-of-PennyCuick-at-theni

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலை நிறுவப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, By Rayar A, Updated: Saturday, January 15, 2022, 13:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-statue-of-john-pennycuick-will-be-erected-in-england-on-behalf-of-the-government-of-tamil-nadu-say/articlecontent-pf640795-445443.html

[5] தினத்தந்தி, இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலைமுதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: ஜனவரி 15,  2022 12:25 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/15122526/Statue-of-Pennywick-in-the-UK–Announcement-by-Chief.vpf

[7] புதியதலைமுறை, இங்கிலாந்தில் பென்னிகுயிக்கிற்கு சிலை நிறுவப்படும்” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, தமிழ்நாடு,  கலிலுல்லா,  Published :15,Jan 2022 12:33 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/127124/John-Pennycuick-statue-will-be-installed-in-uk