Posts Tagged ‘சைத்தான்’

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

மே 6, 2013

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

ஞாயிற்றுக்கிழமைதிருப்பலி நாள்: தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. “யூகேரிஸ்ட்” அந்த பலியில் அப்பம் மற்றும் சாராயம் ஏசுகிருஸ்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாக மாற்றி உண்மை கிருத்துவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும். அத்தகைய பலியில் பங்கு கொண்டிருந்தபொழுது அருள்ராஜின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது கர்த்தருக்கும், ஏசுவிற்கு, பரித்த ஆவிக்கும் தான் தெரியும். அந்த திரியேகத்துவ சர்ச், கால்டுவெல் நினைவிடத்திற்கு முன்னால் தான் இருக்கிறது. ஆராதனை முடிந்ததும், வெளிவந்த அருள்ராஜுக்கு கால்டுவெல்லின் சிலை தெரிகிறது. ஏதோ தீர்மானம் செய்தது போல வேகமாக நடந்தான்.

கால்டுவெல் சிலையைத் தாக்கி சேதப் படுத்தியது: முன்னர் குறிப்பிரடப்பட்டபடி, காலை 11 மணியளவில் நினைவு இல்லத்தின் முன்பகுதியில் உள்ள தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்தது. அப்போது இடையன்குடி சேகரம் இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) என்பவர் நினைவு இல்லத்திற்குள் நுழைந்தார். இந்நிலையில் இடையன்குடி அருகே உள்ள இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) நேற்று காலை சுமார் 10.15 மணிக்கு பிஷப் கால்டுவெல் சிலையின் பின்புற தலைப்பகுதி, இடது தோள்பகுதி, சிலையின் பீடம் ஆகியவற்றை சுத்தியலால் சேதப்படுத்தினார்[1]. திடீரென சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலை யின் பக்கவாட்டு பகுதி மற்றும் தலையின் பின்பகுதியை சேதப்படுத்தினார். பீடத்தில் பதிக்கப்பட்ட கிரானைட்டையும் உடைத்தார்.

கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் சிலையை உடைக்கத் தூண்டியது என்ன?: இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். ஆகவே, கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் மீது, கிறிஸ்தவனான அவனுக்கே ஏன் அத்தகைய கோபம் வந்தது, உணர்ச்சி மேலிட சிலையை சேதப்படுத்த, எது தூண்டியது என்று யோசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஆனால், சாணர்களுக்கு, இவர் மீது நிச்சயம் கோபம் இருக்கிறது. ஏனெனில், தனது புத்தகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியிருக்கிறார் தமிழுக்காக பாடுபட்ட கால்டுவெல்.

தானாகவே சுத்தியுடன் சென்று போலீஸில் சரணடைந்தது: சிலை சேதபடுத்தப்பட்டதற்காக, உவரி இடையன்குடி பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் சி.எஸ்.ஐ. சேகர செயலர், ஜேகர் உவரி போலீசில் புகார் செய்தார்[2]. ஆனால், அருள்ராஜ் தானாகவே உவரி போலீசில் சென்று சுத்தியலுடன் சரணடைந்தார். ஏதோ சாதித்து விட்டது போல, சுத்தியலை வைத்து சரணடைந்தது கண்டு, போலீஸாரே வியஎது போயினர். அவரை உவரி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை விசாரணை நடத்தி கைது செய்தார்[3]. இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

கால்டுவெல் நினைவிடம் வந்த விதம்[4]: இடையன்குடியில் தமிழுக்கு ஓப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் (1814–1891) வாழ்ந்த இல்லம் உள்ளது. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவருமான பிஷப் கால்டுவெல்லின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி, திசையன்விளை அருகே இடையன்குடியில் அவர் வசித்த வீட்டை தமிழக அரசு நினைவிடமாக அறிவித்தது.  இந்த இல்லத்தில் பிஷப் கால்டுவெல்லுக்கு அரை உருவ வெண்கல சிலை மற்றும் 19 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடந்தன. கடந்த 2011ம் ஆண்டு அரசு நினைவில்லமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது[5].

மூத்த, முதிய தமிழ் பண்டிதர்களை ஒதுக்கிய கருணாநிதி: அப்பொழுதே, உண்மையான, நேர்மையான தமிழ் பண்டிதர்களுக்கு மனம் கஷ்டப்பட்டது. ஆனால், 60-90 வயதானவர்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றும் பேசுவதேயில்லை. அவர்களது கருத்துகளையும் யாரும் கேட்பதில்லை. கருணாநிதியைப் புகழ்ந்து, பாராட்டிப் பேசினால் தான் கௌரவம், பாராட்டு, பட்டம், பதவி என்ற நிலை வந்த பிறகு, அவர்கள் மௌனிகளாக ஆகிவிட்டனர். ஆனால், கால்டுவெல் அப்படியொன்றும் தமிழைக் காக்க வரவில்லை, கெடுக்கவே வந்தான்[6].

சாணார்களை இழிவுபடுத்தி எழுதிய புத்தகங்களைப் பற்றி மறைத்தது: சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதர்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதினார்[7]. பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அரிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்த வரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர். கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார். சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப்பட்டது[8]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறு வருடமே, அதாவது 1850 லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப்பட்டது[9].

© வேதபிரகாஷ்

06-05-2013


[4] வேதபிரகாஷ், கால்டுவெல்வாழ்ந்தவீடுநினைவிடமாகமாற்றம், https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[5] வேதபிரகாஷ், சரித்திரத்தைமறைத்தகிருத்துவபாதிரிக்குகருணாநிதி கௌரவம்!, https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[6] வேதபிரகாஷ், கால்டுவெல்புராணம்தொடர்கிறது……………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[7] வேதபிரகாஷ், கால்டுவெல்லைவைத்துக்கொண்டு, தமிழர்களைஇழிவுபடுத்தும்செயல்கள், https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

[8] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[9] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139