Posts Tagged ‘பலி’

ஸ்டாலினின் ஓணம் வாழ்த்து, செக்யூலரிஸமா, திராவிடத்து-இந்துத்துவமா, அரசியல் சதுரங்கமா?

ஓகஸ்ட் 31, 2020

ஸ்டாலினின் ஓணம் வாழ்த்து, செக்யூலரிஸமா, திராவிடத்து-இந்துத்துவமா, அரசியல் சதுரங்கமா?

 

ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும், ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையேஇது என்ன கொள்கையோ?: கேரள மக்கள் கொண்டாடும் ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே… இது என்ன கொள்கையோ?’ என, சமூக வலைதளங்களில், பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்[1]. மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி[2]: “கேரள பெருமக்களின் பண்பாடு, உணர்வுகளோடு ஒன்றியிருக்கும் திருவிழாக்களில் ஒன்றானது ஓணம் பண்டிகை.இந்த பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும், தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும், தி.மு.., சார்பில் என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்,” இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[3]. வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.  திராவிடத்துவ நாத்திகம், இந்துவிரோதம் என்று தெரிந்த விசயம் தான். 70 ஆண்டுகளாக, இந்துக்கள்முறைப்படி அதனை எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிதர்சனம்.


அவர்களின் பதிவுகள்தினமலர் வெளியிட்டுள்ளது[4]: ஆகஸ்ட் 2020ல், அருமையாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்:

* ‘தி.மு.க.,வில், 90 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர்’ என, ஸ்டாலின் கூறுகிறார். ஹிந்துக்களின் பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், கேரள ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இது என்ன கொள்கையோ?

* தி.மு.க.,வில் உள்ள, 90 சதவீதம் ஹிந்துக்களில், எத்தனை சதவீதம் பேர் ஓணத்தை கொண்டாடுகின்றனர்?

* ஓணம் வாழ்த்து, தி.மு.க.,வின் ஓட்டு அரசியல்; நாடகத்தின் ஒருபகுதி தான்

* உதயநிதி, மண் பிள்ளையார் உருவப்படத்தை, ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட பின், அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டு நாடே சிரித்தது

* கந்த கஷ்டி கவசம் போன்ற பிரச்னை வரும் போது, ஸ்டாலின் வாய்மூடி மவுனம் காப்பார்

* ‘நரகாசுரன், பொய்யன்’ என்பார். ‘நாங்கள் ராவணின் வாரிசுகள்’ என்பார். ஆனால், வாமனன் வந்தது உண்மை; அதுபோல, மகாபலி இருந்தது உண்மை. இதற்கு பெயர் தான் திராவிட பகுத்தறிவு. தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் ஓட்டுக்களை வாங்க உதித்த திடீர் ஓட்டு அறிவு. இவ்வாறு, பலரும் விமர்சித்துள்ளர்.

சமத்துவம், செக்யூலரிஸம் போர்வைகளில் மறைந்து வேலை செய்வது:  கேரளாவில் ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது[5].  பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அரசியல் செய்யப் படுகிறது[6]. திமுக அதனை சாமர்த்தியமாக கையாள்கிறது. ராகுலைப் போல “இருவிதமான திராவிட இந்துத்துவத்தை,” கடைப்பிடிக்கிறது போலும்[7]. யாராவது ஆலோசனைக் கொடுத்தார்களா அல்லது யதேச்சையாக செயல்படுகிறாற்களா[8] என்று பிஜேபி தான் ஆராய வேண்டும். அதாவது, இப்பண்டிகையே செக்யூலரிஸமயமாக்கி, நீர்க்கப் படுகிறது. கிருத்துவர்கள், எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து, தங்கள் கடவுள் தான் அத்தகைய சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துகிறார் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். கம்யூனிஸ முதல்வரும் வாழ்த்துத் தெரிவிக்கிறார், ஆனால், இந்துத்துவ வாதிகள், சமூக ஊடகங்களில் அவரை தூஷிக்கின்றனர். பிஜேபி எல்லா மாநிலங்களிலும் தனது ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்று பாடுபடும் நிலையொல், இத்தகைய விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காவிரிப் பிரச்சினை போல ஆகிவிடக் கூடாது.

திமுகவின் விளம்பர யுக்திகள்: திமுகவின் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் விளம்பர சித்திரங்கள், மிகவும் கவனமாக செய்யப் பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அத்தகைய யுக்தி யார் சொல்லிக் ஒடுத்தது என்று கவனிக்க வேண்டும். அப்பனவன், “என்ன நெற்றியிலே ரத்தமா,” என்று கேட்டு தொண்டனின் குங்குமத்தைக் களைத்தான், தனயனவன், அதேபோல மாரியாத்தா கோவில் வாசலில் வைத்த குங்குமத்தை அழித்தான். மாகாபலியின் வாரிசு என்றாயே, தனயன் இப்பொழுது கோலங்களை அழி, என்று பேச முடியாது விமர்சிக்கமுடியாது. எத்தனை இந்துத்துவ வாதிகள் இருந்து என்ன பயன்? எத்தனை இந்துத்துவ பேராசிரியர்கள், சரித்திராசிரியர்கள், விற்ப்பன்னர்கள்……. இருந்து என்ன நலன்? இந்துவிரோதி தைரியமாக, திராவிடத்துவம் பேசி சொல்வது வாழ்த்து! விதவிதமான வாழ்த்து அமைப்புகள்,  கதகளி உண்டு, கோவில் உண்டு,  ஆனால், அவை செக்யூலரிஸம் போல! அட குடை கூட உண்டு, ஆனால், வாமனன் இல்லை! மலையாளத்தவர் கண்டு கொள்ள வேண்டும். இதையெல்லாம் பிஜேபி மற்ற இந்துத்துவ வாதிகள் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

ஓணம் புராணம் சொல்லும் ஸ்டாலின்: “ஓணம் திருநாள் கொண்டாடப் படுவதையொட்டி, கேரள மக்களுக்கும், மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்[9]. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓணம் பண்டிகையையொட்டி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[10]. “ஓணம் திருநாள்” பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. கேரளாவின் “அறுவடைத் திருநாள்” என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது”. ஆக, ஸ்டாலின் இத்தனை விவரங்களை அறிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. திரவிட-இந்துத்துவம் ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது.


ஓணம் கதையை விளக்கும் ஸ்டாலின்: கலைஞர் செய்திகள் தொடர்கிறது, “தீரமும், ஈரமும் மிகுந்த “மகாபலி” சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வரவேற்கும் நாளாகத் துவங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவுகள் பரிமாறுதல் போன்றவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள மேம்பட்ட உறவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விழா இது. இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியப் படகுப்போட்டியைப் பத்து நாட்கள் நடத்தி – அந்த 10-வது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா இனிதாக நிறைவடைகிறது. “பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் பழக்க வழக்கங்களையும் உணர்வுகளையும் மதிக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக நாகர்கோவில், கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து, 2006-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்”.

மலையாளிகளுக்காக அப்பன் வழி பின்பற்றும் பிள்ளை:  கலைஞர் செய்திகள் தொடர்கிறது, “பிறகு தமிழ்நாடு மலையாளி சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சென்னை மாநகரத்திற்கும் “உள்ளூர் விடுமுறை” என்று 14.8.2007 அன்று அறிவித்து – தமிழகத்தில் வாழும் மலையாள மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்தவர். பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் – திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழகம் வாழ் மலையாள மக்களும் – கேரள மக்கள் அனைவரும் – ஆரோக்கியமான வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என்று “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்”.

ஓணம் வாழ்த்து அரசியலை பிஜேபி ஒழுங்காக எதிர்கொள்ளவேண்டும்: ஓணம் வாழ்த்து அரசியல் திராவிடத்து-இந்துத்துவத்தை  வெளிப்படுத்துகிறது.

  1. இந்துக்கள் என்றால், எல்லோருமே இந்துக்கள் தான்! சான்றிதழின் படி, அரசியல் நிர்ணயச் சட்டடத்தின் படி இந்துக்கள் தாம்!
  2. இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு, இந்து-விரோத வேலைகள் செய்ய முடிகிறது. இதைத்தான் திராவிடத்துவ வாதிகள் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
  3. இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு, அதனை முறையாக எதிர்க்க முடியவில்லை. கடவுளை எதிர்த்தால், திக்ச்-திமுகத்தலைவர்களை எதிர்ப்பதில் லாஜிக்கே, தர்க்க முறையே இல்லை.
  4. 70 வருட திராவிடத்துவம் நாத்திகம், இந்து விரோதம் பேசி, ஆட்சி-அதிகாரம் எல்லாம் பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.
  5. அந்நிலையில், இந்துத்துவம் என்று பேசி, ஒரே நாளில், மாதத்தில், ஆண்டில்  ஆட்சியைப் பிடிக்கக் கனவு காண்பது, இந்துக்களைப் பிரிப்பதில் முடியும்.
  6. மேலும் ஜாதியத்தை வைத்தும் ஆட்சி-அரசியல் நடந்து வருகிறது. அதில், இந்துத்துவ வாதிகள் தாக்கு பிடிக்க முடியாது.
  7. ஓணம் வாழ்த்து அரசியல் அதை வெளிப்படுத்துகிறது.

© வேதபிரகாஷ்

31-08-2020


[1] தினமலர், ஸ்டாலின் ஓணம் வாழ்த்து: விமர்சகர்கள் வறுத்தெடுப்பு, Updated : ஆக 31, 2020 13:12 | Added : ஆக 31, 2020 09:18

[2] தினகரன், ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு..ஸ்டாலின் வாழ்த்து, 2020-08-30@ 11:33:28

[3] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=613307

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2604925&Print=1

[5] புதியதலைமுறை, ஓணம் பண்டிகை சமத்துவத்தின் அடையாளம்மு..ஸ்டாலின் வாழ்த்து, Published :31,Aug 2020 12:16 PM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/79319/Onam-festival-is-a-symbol-of-equality-MK-Stalin-s-greeting

[7] தமிழ்.நியூஸ்.18, சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும்ஓணம் திருநாள்’ – மு. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து.. , LAST UPDATED: AUGUST 30, 2020, 1:23 PM IST

[8] https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-leader-mk-stalin-s-onam-2020-wishes-riz-339775.html

[9] கலைஞர் செய்திகள், பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாள்” : தி.மு. தலைவர் மு..ஸ்டாலின் வாழ்த்து!, Premkumar, Updated on : 30 August 2020, 11:53 AM.

[10] https://www.kalaignarseithigal.com/india/2020/08/30/dmk-chief-mk-stalin-wishes-for-onam-festival-2020

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

மே 6, 2013

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

ஞாயிற்றுக்கிழமைதிருப்பலி நாள்: தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. “யூகேரிஸ்ட்” அந்த பலியில் அப்பம் மற்றும் சாராயம் ஏசுகிருஸ்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாக மாற்றி உண்மை கிருத்துவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும். அத்தகைய பலியில் பங்கு கொண்டிருந்தபொழுது அருள்ராஜின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது கர்த்தருக்கும், ஏசுவிற்கு, பரித்த ஆவிக்கும் தான் தெரியும். அந்த திரியேகத்துவ சர்ச், கால்டுவெல் நினைவிடத்திற்கு முன்னால் தான் இருக்கிறது. ஆராதனை முடிந்ததும், வெளிவந்த அருள்ராஜுக்கு கால்டுவெல்லின் சிலை தெரிகிறது. ஏதோ தீர்மானம் செய்தது போல வேகமாக நடந்தான்.

கால்டுவெல் சிலையைத் தாக்கி சேதப் படுத்தியது: முன்னர் குறிப்பிரடப்பட்டபடி, காலை 11 மணியளவில் நினைவு இல்லத்தின் முன்பகுதியில் உள்ள தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்தது. அப்போது இடையன்குடி சேகரம் இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) என்பவர் நினைவு இல்லத்திற்குள் நுழைந்தார். இந்நிலையில் இடையன்குடி அருகே உள்ள இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) நேற்று காலை சுமார் 10.15 மணிக்கு பிஷப் கால்டுவெல் சிலையின் பின்புற தலைப்பகுதி, இடது தோள்பகுதி, சிலையின் பீடம் ஆகியவற்றை சுத்தியலால் சேதப்படுத்தினார்[1]. திடீரென சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலை யின் பக்கவாட்டு பகுதி மற்றும் தலையின் பின்பகுதியை சேதப்படுத்தினார். பீடத்தில் பதிக்கப்பட்ட கிரானைட்டையும் உடைத்தார்.

கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் சிலையை உடைக்கத் தூண்டியது என்ன?: இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். ஆகவே, கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் மீது, கிறிஸ்தவனான அவனுக்கே ஏன் அத்தகைய கோபம் வந்தது, உணர்ச்சி மேலிட சிலையை சேதப்படுத்த, எது தூண்டியது என்று யோசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஆனால், சாணர்களுக்கு, இவர் மீது நிச்சயம் கோபம் இருக்கிறது. ஏனெனில், தனது புத்தகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியிருக்கிறார் தமிழுக்காக பாடுபட்ட கால்டுவெல்.

தானாகவே சுத்தியுடன் சென்று போலீஸில் சரணடைந்தது: சிலை சேதபடுத்தப்பட்டதற்காக, உவரி இடையன்குடி பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் சி.எஸ்.ஐ. சேகர செயலர், ஜேகர் உவரி போலீசில் புகார் செய்தார்[2]. ஆனால், அருள்ராஜ் தானாகவே உவரி போலீசில் சென்று சுத்தியலுடன் சரணடைந்தார். ஏதோ சாதித்து விட்டது போல, சுத்தியலை வைத்து சரணடைந்தது கண்டு, போலீஸாரே வியஎது போயினர். அவரை உவரி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை விசாரணை நடத்தி கைது செய்தார்[3]. இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

கால்டுவெல் நினைவிடம் வந்த விதம்[4]: இடையன்குடியில் தமிழுக்கு ஓப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் (1814–1891) வாழ்ந்த இல்லம் உள்ளது. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவருமான பிஷப் கால்டுவெல்லின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி, திசையன்விளை அருகே இடையன்குடியில் அவர் வசித்த வீட்டை தமிழக அரசு நினைவிடமாக அறிவித்தது.  இந்த இல்லத்தில் பிஷப் கால்டுவெல்லுக்கு அரை உருவ வெண்கல சிலை மற்றும் 19 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடந்தன. கடந்த 2011ம் ஆண்டு அரசு நினைவில்லமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது[5].

மூத்த, முதிய தமிழ் பண்டிதர்களை ஒதுக்கிய கருணாநிதி: அப்பொழுதே, உண்மையான, நேர்மையான தமிழ் பண்டிதர்களுக்கு மனம் கஷ்டப்பட்டது. ஆனால், 60-90 வயதானவர்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றும் பேசுவதேயில்லை. அவர்களது கருத்துகளையும் யாரும் கேட்பதில்லை. கருணாநிதியைப் புகழ்ந்து, பாராட்டிப் பேசினால் தான் கௌரவம், பாராட்டு, பட்டம், பதவி என்ற நிலை வந்த பிறகு, அவர்கள் மௌனிகளாக ஆகிவிட்டனர். ஆனால், கால்டுவெல் அப்படியொன்றும் தமிழைக் காக்க வரவில்லை, கெடுக்கவே வந்தான்[6].

சாணார்களை இழிவுபடுத்தி எழுதிய புத்தகங்களைப் பற்றி மறைத்தது: சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதர்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதினார்[7]. பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அரிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்த வரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர். கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார். சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப்பட்டது[8]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறு வருடமே, அதாவது 1850 லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப்பட்டது[9].

© வேதபிரகாஷ்

06-05-2013


[4] வேதபிரகாஷ், கால்டுவெல்வாழ்ந்தவீடுநினைவிடமாகமாற்றம், https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[5] வேதபிரகாஷ், சரித்திரத்தைமறைத்தகிருத்துவபாதிரிக்குகருணாநிதி கௌரவம்!, https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[6] வேதபிரகாஷ், கால்டுவெல்புராணம்தொடர்கிறது……………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[7] வேதபிரகாஷ், கால்டுவெல்லைவைத்துக்கொண்டு, தமிழர்களைஇழிவுபடுத்தும்செயல்கள், https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

[8] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[9] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139