முதல்வருக்கு குண்டு மிரட்டல் : நெல்லையில் இருவர் கைது!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=31202
இவருக்கும், புலிகளுக்கும் தொடர்பு இருப்பதால், செம்மொழி மாநாட்டின் போது முதல்வர், துணை முதல்வர், போலீசார் அதிகாரிகளை பழி வாங்கும் விதமாக வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யப் போகிறார் என தமிழில் டைப் செய்து, மாவட்ட எஸ்.பி., மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியிருந்தார்.
செம்மொழி மாநாடு முடிந்த பிறகு போலீசார், நாகூர் மீரானை அழைத்து விசாரித்தனர். மிரட்டல் கடிதத்தில் இக்பால் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இக்பால், அவருக்கு உதவிய மைத்துனர் ரஹ்மத்துல்லா(32) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விமர்சனம்:
தமாஷாவிற்கு கடிதம் அனுப்பினரா, விவகாரம் உள்ளதா, என்பதை விசாரணை சொல்ல வேண்டும்.
முதல்வரின் பெயரை உபயோகிப்பது என்ன விவகாரம்?
ஆனால், கைது செய்யப்பட்டவர் சிரித்த முகத்துடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஏனெனில், முன்பு அல்-உம்மா கைதிகள், தீவிரவாதிகள் கூட இவ்வாறு சிரித்துக் கொண்டுதான் இருந்தனர். அதாவது குற்றத்தைச் செய்தபிறகு, அதற்கு வருத்தம் பட்டால் போலத் தெரியவில்லை, மாறாக ஏதோ சாதனையைப் படைத்து விட்டாற்போல பொன்முறுவலுடன் இருப்பது என்னவென்று தெரியவில்லை.