பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!
ஜாதிகளை ஒழிப்போம் என்று சாதிகளைப் பெருக்கிய திராவிடத்துவ ஞானிகள்: ஜாதியில்லை என்று சொல்லிக்கொண்டு சாதிகளைப் பெருக்கிக் காட்டிப் பட்டியல்களை நீட்டிக் கொண்டிருப்பது திராவிடத்துவத்தில் தான்! இதனை திராவிடத்துவவாதிகள் மாபெரும் சாதனையென்றும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறார்கள்[1]. ஜாதிகளை ஒழிக்க அம்பேத்கார் பாடுபட்டார், ஆனால், அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே சாதித்துவத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பெரியார் பெயரை வைத்துக் கொண்டு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை, என்று பற்பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஜாதி-எதிர்ப்பு என்ற பெயரில் அப்பாவி பிராமணர்களைத் தாக்கி வருகின்றனர்.
ஜாதி-எதிர்ப்புப் போர்வையில் பிராமணர்கள் தாக்கப்படுவது: பழைய மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தின் வாசலில் இரு பிராமணர்களைத் தாக்கி, கத்தியால் வெட்டியதை நினைவில் கொள்ள வேண்டும். பூணூலை அறுக்கிறேன் என்று நூற்றுக் கணக்கான பிராமணர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் “தி ஹிந்துவை”ச் சேர்ந்த கணபதி என்பவரும் அடக்கம். சம்பந்தமே இல்லாத ஒரு ராகவேந்திரர் மடத்தில் நுழைந்து விக்கிரங்களை உடைத்து, அசிங்கம் செய்த போது அங்கிருந்த ஒரு பிராமணர் அழுது புலம்பியதை நாளேடுகளில் பார்த்திருக்கலாம். இப்படி பிராமணர்கள் என்றாலே கிண்டல் செய்வது, அவதூறு பேசுவது, கொச்சையாக வார்த்தைகளை…
View original post 1,281 more words