ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம், ரஷ்ய விவரங்கள் அடங்கிய டைரி காணாமல் போனது, பெரியார் ஆராய்ச்சி, மறைப்பு சித்தாந்தத்திலிருந்து மீள வேண்டும்! [3]
நாகம்மை இறந்த போது, ஈவேரா வருந்தியது: நாகம்மையின் மறைவு குறித்து 14.5.1933 ஆம் ஆண்டு குடியரசு நாளிதழில் பெரியார் எழுதியது. ‘‘எனதருமை ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1993ல் காலை 7.45 மணிக்கு இயற்கை எய்தினார். அதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுவரையிலும் என்னால் பதில் காணமுடியாத கேள்வியாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணைவியாக 35 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளுக்கு நான் ஏற்ற வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது கேள்விக்குறிதான். நான் சுயநலமாக மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும்கூட எனக்கு வாழ்க்கைத் துணையாக இருந்திருக்கிறார். பெண்களின் சுதந்திரத்துக்கு நான் எவ்வளவு போரடியிருக்கிறேன் பேசியிருக்கிறேன். ஆனால் என் மனைவிக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறேனா? என்பது எனக்குத் தெரியவில்லை. நாகம்மாள், சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் எவ்வளவு கடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அவற்றை விட பத்துமடங்கு கூடுதலாகவே நடந்து கொண்டேன் என்பதை மிகவும் வெட்கத்துடன் வெளியிடுகிறேன்…… ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? ………………..நாகம்மாளுக்கு நோய் ஏற்படக் காரணம் என் மேல்நாட்டு சுற்றுப் பயணம் தான். ஒருவருடம் அவர் என்னை பிரிந்திருந்தார். அந்தப் பிரிவின் ஆற்றாமை அவரை பாதித்திருக்கக்கூடும். இரண்டாவது என்னுடைய ரஷ்யப்பயணத்தில் எனக்கு ஏதாவது பெரிய ஆபத்து வந்துவிடுமோ என கருதியது….. ”.
நாகம்மை கஷ்டப்பட்டது, நெலிந்து மறைந்தது: இதைப் படித்தால், ஈவேரா எப்படி தன் மனைவியை நடத்தியிருக்கிறார் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.
- நாகம்மாள் நலிந்து மறைந்தது
- நாகம்மாளுக்கு நான் ஏற்ற வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது கேள்விக்குறிதான்.
- நான் சுயநலமாக மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும்கூட எனக்கு வாழ்க்கைத் துணையாக இருந்திருக்கிறார்.
- ஆனால் என் மனைவிக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறேனா? என்பது எனக்குத் தெரியவில்லை.
- நாகம்மாள், சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் எவ்வளவு கடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அவற்றை விட பத்துமடங்கு கூடுதலாகவே நடந்து கொண்டேன் என்பதை மிகவும் வெட்கத்துடன் வெளியிடுகிறேன்……
- ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?
- ………………..நாகம்மாளுக்கு நோய் ஏற்படக் காரணம் என் மேல்நாட்டு சுற்றுப் பயணம் தான்.
- ஒருவருடம் அவர் என்னை பிரிந்திருந்தார். அந்தப் பிரிவின் ஆற்றாமை அவரை பாதித்திருக்கக்கூடும். இரண்டாவது என்னுடைய ரஷ்யப்பயணத்தில் எனக்கு ஏதாவது பெரிய ஆபத்து வந்துவிடுமோ என கருதியது…..
ஈவேரா அயல்நாட்டுக்குச் செல்லும் போது, நிச்சயமாக, ஒழுக்கமாக இருங்கள்……என்று மன்றாடி கேட்டிருப்பார். காந்தியே தாக்குதல்களுக்குட்பட்ட போது, ஈவேரா போன்றோர் தப்பிக்க அதிகமாகவே முயற்சித்திருக்க வேண்டும். உடன் ராமநாதன் மற்றும் ராமு இருந்ததால், தப்பினார் போலும்.
தீவிர–பயங்கர நாத்திகவாத லீக்குடன் [the League of the Militant Godless] ஏன் தொடர்பு வைத்துக் கொண்டு, ஏப்ரல் 1932ல் மாஸ்கோவில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவது[1], “மூன்று மாதங்கள் மாஸ்கோவில் தங்கியிருந்த விவரங்கள் தெரியவில்லை. கம்யூனிஸ்டுகளிடன் தொடர்புகள் இருந்தும், ஏப்ரல் 1932 முதல் மே 17 1932 வரை அவர்கள் ஏன் மாஸ்கோவில் இருக்க அல்லது பிடித்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. சாமி சிதம்பரனாரோ, அவர்கள் அரசின் விருந்தினர்களாகத் தங்கியிருந்தனர், நீண்ட நாள் தங்கியிருந்து, அரசாங்க விருந்தினராக இருந்து, ….அரசாங்க காரியாலங்களையெல்லாம் சென்றனர்……..பல பொறுப்புள்ள அதிகாரிகளை சந்தித்தார்……,” என்கிறார். சரி தீவிர-பயங்கர நாத்திகவாத லீக்குடன் [the League of the Militant Godless] என்ன செய்தன, செய்து கொண்டிருந்தன?
- தீவிர-பயங்கர நாத்திகவாத லீக் வழிபாட்டு ஸ்தலங்களை இடித்தது.
- இடித்துக் கொள்ளையடித்து வளர்ந்தது, பக்தர்களை மிரட்டி பணம் பறித்தது.
- ஊடகங்களைக் கவர, நம்பிக்கையாளர்களை மிரட்ட, சிலைகளை உடைப்பது, வழிபாட்டு ஸ்தலங்களை தாக்குவது என்று லீக் செய்தது.
அதே வேலைகளைத்தான், ஈவேராவும் அவரது பின்பற்றி வரும் கூட்டத்தாரும்செய்து வருகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்றால், இவர்களும் தீவிரவாதிகள் தாம், குறிப்பாக, இந்துக்களைத் தாக்கும் தீவிர-பயங்கரவாத நாத்திகர்கள்.
பிரிட்டனின் இந்திய அரசியல்வாதிகளின் விவரங்கள் கொண்ட கோப்புகளில் / கோப்புகளில், ஈவேராவைப் பற்றி எதுவும் இல்லையாம்: சமீபத்தில் பிரிட்டனின் இந்திய அரசியல்வாதிகளின் விவரங்கள் கொண்ட கோப்புகள் [The British Government’s Indian Political files] கிடைத்தனவாம். ஆனால், அவற்றில் ஈவேராவைப் பற்றி எதுவும் காணப்படவில்லையாம். இது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. ஒரு வேளை, அவர், ஆங்கிலேயர்களின் ஏஜென்ட் என்பதினால், மிக்க கவனமாக, அவரது பெயர் குறிப்பிடப் படவில்லை போலும், ஈவேரா காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டது மட்டுமல்லாது, நீதிகட்சியில் சேர்ந்த பிறகும், 1940ல் ஜின்னா-அம்பேத்கர் இவரை கைவிட்டதும், ஆங்கிலேயருக்கு சாதகமாக பேசியும், எழுதியும், செய்து வந்தார். ஐரோப்பிய பயணத்தின் போதும், முரண்பட்ட தகவல்களைக் கொடுத்ததால் தான், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில் நுழைய தாமதம் ஏற்பட்டது. பிரிட்டனின் ஏஜென்டுகள் என்றும் சந்தேகிக்கப் பட்டனர்.
ஈவேராவின் டைரி காணாமல் போனதா?: ஈவேரா ஒன்றிற்கும் மேற்பட்ட டைரிகள் மற்றும் நோட்டு புத்தகங்களை வைத்டுக் கொண்டு குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் என்று தெரிகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு அவை காண்பிக்கப்படுவதில்லை. 1997ல், ஈவேராவின் டைரியின் பகுதி, கண்டெடுக்க பட்டதாக, வெங்கடாசலபதி குறிப்பிடுகிறார். அதுவரை பெரியார்-டைரி எங்கிருந்தது என்று தெரிவில்லை. இந்த செய்தியும் அப்பொழுது வெளிவராமல் வெங்கடாசலபதி மூலம் இப்பொழுது 2018ல் தான் வெளிவருகிறது. ஈவேராவுக்கு ரஷ்யாவில் நுழைய அனுமதி தாமதப் படுகிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர்கள் ஏதென்சில், தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 02-02-1932 அன்று தான், நுழைவு பாஸ் கிடைக்கிறது, 14-02-1932 அன்று மாஸ்கோ வந்தடைகின்றனர். எனினும் மூன்று மாதங்கள் தங்கியதற்கான குறிப்புகள் டைரிகளில் காணப்படவில்லை அல்லது அந்தப் பக்கங்கள் மறந்துவிட்டன என்று கூறப்படுவது விசித்திரமாக இருக்கிறது. சாமி சிதம்பரனார் இதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.
ஈவேரா–பெரியார் ஆராய்ச்சியில் மறைப்பு சித்தாந்தம் வேலை செய்கிறது: திராவிடத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று தான், ஈவேராவைப் பற்றிய விவரங்களை பதிவு செய்கிறேன். ஈவேராவின் ஐரோப்பியப் பயணம், நிச்சயமாக சுற்றுலா அல்ல. திட்டத்துடன் சென்றதால் தான், அவர்கள் கண்காணிக்கப் பட்டனர். நாத்திகத்தை, கம்யூனிஸத்தை, தொழிலாளர் நிலையை……. ஆராய்கிறேன், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்க வந்ததால், அவகள் மீது சந்தேகங்கள் எழுந்தன. அதனால் தான், ஈவேரா, எஸ்.ராமநாதன் மற்றும் ராமு பல உண்மைகளை மறைத்தனர். அதனால் தான் மறைக்கப் பட்டன. ஆராய்ச்சி என்றால் ஆவணங்கள் காட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல், சிலருக்குக் காட்டுவது, மற்றவர்களுக்கு மறைப்பது என்பது ஆராய்ச்சி நெறிமுறை ஆகாது. அப்படியென்றால், ஆவணங்களைக் காட்டியவருக்கும், பார்த்தவருக்கும், ஏதோ உடன்பாடு இருக்கிறது என்றாகிறது. பிறகு, அந்த ஆராய்ச்சியாளர் எழுதியது பாரபட்சமற்றதாக இருக்குமா, உண்மையை எடுத்துக் காட்டுகிறாரா, திரிக்கிறாரா, மறைக்கிறாரா என்பது அவருக்குத் தான் தெரியும். திராவீடத்துவ, திராவிடத்துவம் பற்றிய ஆராய்ச்சிகள் இப்படித்தான் நடக்கின்றன. சிலர் உண்மையினை மறைக்க முயல்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இதனை 1960களிலிருந்து நான் கவனித்து வருகிறேன்.
© வேதபிரகாஷ்
27-05-2019
[1] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கம்.111.