Posts Tagged ‘மணியம்மை’

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம், ரஷ்ய விவரங்கள் அடங்கிய டைரி காணாமல் போனது, பெரியார் ஆராய்ச்சி, மறைப்பு சித்தாந்தத்திலிருந்து மீள வேண்டும்! [3]

மே 29, 2019

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம், ரஷ்ய விவரங்கள் அடங்கிய டைரி காணாமல் போனது, பெரியார் ஆராய்ச்சி, மறைப்பு சித்தாந்தத்திலிருந்து மீள வேண்டும்! [3]

EVR lamented about Nagammai for his treatment

நாகம்மை இறந்த போது, ஈவேரா வருந்தியது: நாகம்மையின் மறைவு குறித்து 14.5.1933 ஆம் ஆண்டு குடியரசு நாளிதழில் பெரியார் எழுதியது. ‘‘எனதருமை ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1993ல் காலை 7.45 மணிக்கு இயற்கை எய்தினார். அதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுவரையிலும் என்னால் பதில் காணமுடியாத கேள்வியாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணைவியாக 35 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளுக்கு நான் ஏற்ற வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது கேள்விக்குறிதான். நான் சுயநலமாக மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும்கூட எனக்கு வாழ்க்கைத் துணையாக இருந்திருக்கிறார். பெண்களின் சுதந்திரத்துக்கு நான் எவ்வளவு போரடியிருக்கிறேன் பேசியிருக்கிறேன். ஆனால் என் மனைவிக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறேனா? என்பது எனக்குத் தெரியவில்லை. நாகம்மாள், சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் எவ்வளவு கடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அவற்றை விட பத்துமடங்கு கூடுதலாகவே நடந்து கொண்டேன் என்பதை மிகவும் வெட்கத்துடன் வெளியிடுகிறேன்…… ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? ………………..நாகம்மாளுக்கு நோய் ஏற்படக் காரணம் என் மேல்நாட்டு சுற்றுப் பயணம் தான். ஒருவருடம் அவர் என்னை பிரிந்திருந்தார். அந்தப் பிரிவின் ஆற்றாமை அவரை பாதித்திருக்கக்கூடும். இரண்டாவது என்னுடைய ரஷ்யப்பயணத்தில் எனக்கு ஏதாவது பெரிய ஆபத்து வந்துவிடுமோ என கருதியது….. ”.

12 வயதில் தாம் விரும்பிய தந்தை பெரியாரை மணந்த நாகம்மை 48 வயதில் மறைந்தார்.

நாகம்மை கஷ்டப்பட்டது, நெலிந்து மறைந்தது: இதைப் படித்தால், ஈவேரா எப்படி தன் மனைவியை நடத்தியிருக்கிறார் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

  1. நாகம்மாள் நலிந்து மறைந்தது
  2. நாகம்மாளுக்கு நான் ஏற்ற வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது கேள்விக்குறிதான்.
  3. நான் சுயநலமாக மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும்கூட எனக்கு வாழ்க்கைத் துணையாக இருந்திருக்கிறார்.
  4. ஆனால் என் மனைவிக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறேனா? என்பது எனக்குத் தெரியவில்லை.
  5. நாகம்மாள், சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் எவ்வளவு கடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அவற்றை விட பத்துமடங்கு கூடுதலாகவே நடந்து கொண்டேன் என்பதை மிகவும் வெட்கத்துடன் வெளியிடுகிறேன்……
  6. ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?
  7. ………………..நாகம்மாளுக்கு நோய் ஏற்படக் காரணம் என் மேல்நாட்டு சுற்றுப் பயணம் தான்.
  8. ஒருவருடம் அவர் என்னை பிரிந்திருந்தார். அந்தப் பிரிவின் ஆற்றாமை அவரை பாதித்திருக்கக்கூடும். இரண்டாவது என்னுடைய ரஷ்யப்பயணத்தில் எனக்கு ஏதாவது பெரிய ஆபத்து வந்துவிடுமோ என கருதியது…..

ஈவேரா அயல்நாட்டுக்குச் செல்லும் போது, நிச்சயமாக, ஒழுக்கமாக இருங்கள்……என்று மன்றாடி கேட்டிருப்பார். காந்தியே தாக்குதல்களுக்குட்பட்ட போது, ஈவேரா போன்றோர் தப்பிக்க அதிகமாகவே முயற்சித்திருக்க வேண்டும். உடன் ராமநாதன் மற்றும் ராமு இருந்ததால், தப்பினார் போலும்.

Breaking places of worship

தீவிரபயங்கர நாத்திகவாத லீக்குடன் [the League of the Militant Godless] ஏன் தொடர்பு வைத்துக் கொண்டு, ஏப்ரல் 1932ல் மாஸ்கோவில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவது[1], “மூன்று மாதங்கள் மாஸ்கோவில் தங்கியிருந்த விவரங்கள் தெரியவில்லை. கம்யூனிஸ்டுகளிடன் தொடர்புகள் இருந்தும், ஏப்ரல் 1932 முதல் மே 17 1932 வரை அவர்கள் ஏன் மாஸ்கோவில் இருக்க அல்லது பிடித்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. சாமி சிதம்பரனாரோ, அவர்கள் அரசின் விருந்தினர்களாகத் தங்கியிருந்தனர், நீண்ட நாள் தங்கியிருந்து, அரசாங்க விருந்தினராக இருந்து, ….அரசாங்க காரியாலங்களையெல்லாம் சென்றனர்……..பல பொறுப்புள்ள அதிகாரிகளை சந்தித்தார்……,” என்கிறார். சரி தீவிர-பயங்கர நாத்திகவாத லீக்குடன் [the League of the Militant Godless] என்ன செய்தன, செய்து கொண்டிருந்தன?

  1. தீவிர-பயங்கர நாத்திகவாத லீக் வழிபாட்டு ஸ்தலங்களை இடித்தது.
  2. இடித்துக் கொள்ளையடித்து வளர்ந்தது, பக்தர்களை மிரட்டி பணம் பறித்தது.
  3. ஊடகங்களைக் கவர, நம்பிக்கையாளர்களை மிரட்ட, சிலைகளை உடைப்பது, வழிபாட்டு ஸ்தலங்களை தாக்குவது என்று லீக் செய்தது.

அதே வேலைகளைத்தான், ஈவேராவும் அவரது பின்பற்றி வரும் கூட்டத்தாரும்செய்து வருகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்றால், இவர்களும் தீவிரவாதிகள் தாம், குறிப்பாக, இந்துக்களைத் தாக்கும் தீவிர-பயங்கரவாத நாத்திகர்கள்.

Jehovah, God, Allah -Legue.jpg

பிரிட்டனின் இந்திய அரசியல்வாதிகளின் விவரங்கள் கொண்ட கோப்புகளில் / கோப்புகளில், ஈவேராவைப் பற்றி எதுவும் இல்லையாம்: சமீபத்தில் பிரிட்டனின் இந்திய அரசியல்வாதிகளின் விவரங்கள் கொண்ட கோப்புகள் [The British Government’s Indian Political files] கிடைத்தனவாம். ஆனால், அவற்றில் ஈவேராவைப் பற்றி எதுவும் காணப்படவில்லையாம். இது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. ஒரு வேளை, அவர், ஆங்கிலேயர்களின் ஏஜென்ட் என்பதினால், மிக்க கவனமாக, அவரது பெயர் குறிப்பிடப் படவில்லை போலும், ஈவேரா காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டது மட்டுமல்லாது, நீதிகட்சியில் சேர்ந்த பிறகும், 1940ல் ஜின்னா-அம்பேத்கர் இவரை கைவிட்டதும், ஆங்கிலேயருக்கு சாதகமாக பேசியும், எழுதியும், செய்து வந்தார். ஐரோப்பிய பயணத்தின் போதும், முரண்பட்ட தகவல்களைக் கொடுத்ததால் தான், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில் நுழைய தாமதம் ஏற்பட்டது. பிரிட்டனின் ஏஜென்டுகள் என்றும் சந்தேகிக்கப் பட்டனர்.

EVRs anti-Brtish writing 1932, fined and jailed

ஈவேராவின் டைரி காணாமல் போனதா?: ஈவேரா ஒன்றிற்கும் மேற்பட்ட டைரிகள் மற்றும் நோட்டு புத்தகங்களை வைத்டுக் கொண்டு குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் என்று தெரிகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு அவை காண்பிக்கப்படுவதில்லை. 1997ல், ஈவேராவின் டைரியின் பகுதி, கண்டெடுக்க பட்டதாக, வெங்கடாசலபதி குறிப்பிடுகிறார். அதுவரை பெரியார்-டைரி எங்கிருந்தது என்று தெரிவில்லை. இந்த செய்தியும் அப்பொழுது வெளிவராமல் வெங்கடாசலபதி மூலம் இப்பொழுது 2018ல் தான் வெளிவருகிறது. ஈவேராவுக்கு ரஷ்யாவில் நுழைய அனுமதி தாமதப் படுகிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர்கள் ஏதென்சில், தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 02-02-1932 அன்று தான், நுழைவு பாஸ் கிடைக்கிறது, 14-02-1932 அன்று மாஸ்கோ வந்தடைகின்றனர். எனினும் மூன்று மாதங்கள் தங்கியதற்கான குறிப்புகள் டைரிகளில் காணப்படவில்லை அல்லது அந்தப் பக்கங்கள் மறந்துவிட்டன என்று கூறப்படுவது விசித்திரமாக இருக்கிறது. சாமி சிதம்பரனார் இதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

EVRs anti-Brtish writing 1932

ஈவேராபெரியார் ஆராய்ச்சியில் மறைப்பு சித்தாந்தம் வேலை செய்கிறது: திராவிடத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று தான், ஈவேராவைப் பற்றிய விவரங்களை பதிவு செய்கிறேன். ஈவேராவின் ஐரோப்பியப் பயணம், நிச்சயமாக சுற்றுலா அல்ல. திட்டத்துடன் சென்றதால் தான், அவர்கள் கண்காணிக்கப் பட்டனர். நாத்திகத்தை, கம்யூனிஸத்தை, தொழிலாளர் நிலையை……. ஆராய்கிறேன்,  என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்க வந்ததால், அவகள் மீது சந்தேகங்கள் எழுந்தன. அதனால் தான், ஈவேரா, எஸ்.ராமநாதன் மற்றும் ராமு பல உண்மைகளை மறைத்தனர். அதனால் தான் மறைக்கப் பட்டன. ஆராய்ச்சி என்றால் ஆவணங்கள் காட்டப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல், சிலருக்குக் காட்டுவது, மற்றவர்களுக்கு மறைப்பது என்பது ஆராய்ச்சி நெறிமுறை ஆகாது. அப்படியென்றால், ஆவணங்களைக் காட்டியவருக்கும், பார்த்தவருக்கும், ஏதோ உடன்பாடு இருக்கிறது என்றாகிறது. பிறகு, அந்த ஆராய்ச்சியாளர் எழுதியது பாரபட்சமற்றதாக இருக்குமா, உண்மையை எடுத்துக் காட்டுகிறாரா, திரிக்கிறாரா, மறைக்கிறாரா என்பது அவருக்குத் தான் தெரியும். திராவீடத்துவ, திராவிடத்துவம் பற்றிய ஆராய்ச்சிகள் இப்படித்தான் நடக்கின்றன. சிலர் உண்மையினை மறைக்க முயல்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இதனை 1960களிலிருந்து நான் கவனித்து வருகிறேன்.

© வேதபிரகாஷ்

27-05-2019

EVR becomes Periyar

[1] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கம்.111.

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம், ரஷ்ய விவரங்கள் அடங்கிய டைரி காணாமல் போனது, மைனர் வாழ்க்கை! [2]

மே 29, 2019

ஈவேராவின் 1931-32 ஐரோப்பிய விஜயம், ரஷ்ய விவரங்கள் அடங்கிய டைரி காணாமல் போனது, மைனர் வாழ்க்கை! [2]

EVR at Nude society - 3

ஈவேராவின் ஐரோப்பியப் பயணம் ஏன் ரகசியமானது?: ஈவேரா ரஷ்யாவிற்குச் சென்றதாக எழுதி வருகின்றனர், ஆனால், அங்கு மூன்று மாதங்கள் இருந்ததற்கான, விவரங்களைப் பற்றிய ஆதாரங்கள் மறைக்கப் படுகின்றன. ஆராய்ச்சியாளர்களும் முரண்பாடான விசயங்களைக் கொடுக்கிறார்கள். எஸ். ராமநாதனை, பிரான்ஸில் “அம்போ” என்று விட்டு வந்தது[1], சித்தாந்தத்திற்காகவா, பாதுகாப்பு காரணங்களுக்காகவா, வேரெதையாவது மறைக்கவா என்றும் புரியவில்லை. இவர்களது ஐரோப்பியப் பயணம் உண்மையானதல்ல [உள்நோக்கம் கொண்டது] அதனால், இதனை, ரகசியமாக வைத்துக் கொள்ள CID ஆணையிடப்பட்டது. அப்படியென்றால், அவர்கள் அங்கு ஏன் செல்லவேண்டும் என்று தெரியவில்லை. பிறகு, நீதிகட்சியில் இவரது பங்கு, ராமநாதன் பிரிந்து காங்கிரஸில் சேர்ந்து மந்திரியானது, ஆனால், இவர் காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டது, முதலியவற்றைக் கவனிக்க வேண்டும்.

  Location of Potsdam and Moscow

ஈவேராவின் டைரி காணாமல் போன மர்மம் என்ன? பிறகு ஆராய்ச்சியாளர்கள் எப்படி ஆராய்ச்சி செய்கிறார்கள், எழுதுகிறார்கள்? : ஈவேரா ஒன்றிற்கும் மேற்பட்ட டைடரிகள் வைத்திருந்தார் என்று தெரிகிறது. ஆனால், குறிப்பாக,  ரஷ்ய குறிப்புகள் அடங்கிய டைரி காணப்படவில்லை என்கின்றனர்.

  1. 18-01-1932 முதல் 02-02-1932 வரை ரஷ்யா ஏன் ஈவேராவிற்கு அனுமதி கொடுக்கவில்லை? ரஷ்யா இவர்களைப் பற்றி விசாரித்த விவரங்கள் என்ன?
  2. 14-02-1932 முதல் 18-04-1932 வரை இவர்கள் மாஸ்கோவில் என்ன செய்து கொண்டிருந்தனர்?அப்படி ஏன் விவரங்களை மறைக்கவேண்டும்?
  3. துரோஸ்த்ஸ்கி கூட்டத்துடன் இவர்களின் தொடர்புகள் என்ன? அப்பரேட்சிக்குகள் அதனால் ஏன் கோபம் கொள்ளவேண்டும்?
  4. ரஷ்ய அரசு இவர்களை “ஆங்கில ஏஜென்டுகள்” என்றும், ஆங்கில அரசு இவர்களை “கம்யூனிஸ ஏஜென்டுகள்” என்றும் ஏன் கருத வேண்டும்? [9]

போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. “எஸ். ராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஏதோ சந்தேகம் கொண்ட சோவியத் அரசு, 19ம் நாளே இவர்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட வேண்டும் என்று தெரிவித்து விட்டது,” என்று கருணானந்தம் குறிப்பிட்டுள்ளார்[2]. நிச்சயமாக, அது அவரது தனிப்பட்ட செயலாகா இருக்க முடியாது. மூவரும் சேர்ந்து சென்ற போது, நட்புடன், ஒரு பிணைப்புடன், ஒத்த எண்ணத்துடன், குறிக்கோளுடன் தான், ஒப்புக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆகவே, ரஷ்யா விசயத்தில், இவர்களுக்குள் வேறுபாடு ஏற்பட்டது என்றால், அதை விளக்க வேண்டும்.   “ராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஏதோ சந்தேகம்,” என்றால், மற்ற இருவர்களின் நிலை என என்று ஆராய வேண்டும்.

EVR, two wives

மனைவியை வேசி என்று நண்பர்களிடம் சொன்னது: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி விவரிக்கிறார்[3], “நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது .வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்”.

EVR, with women- not critized

ஈவேரா மனைவியை துன்புருத்தினாரா?: ஈவேரா பெரிய பணக்காரர் ஆதலால், அவரது மனைவியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். திருமணம் படோபடமாக நடந்திருக்கும் போது, நாயக்கரின் மனைவியை தெரியாமல் இருக்க முடியாது. எனவே, நண்பர்கள் அவ்வாறு நாகம்மையை தொந்தரவு செய்தனர் என்பது நம்புகின்றதாக இல்லை. இதை “குறும்பு” என்று எளிதாக, தமாஷாவாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், ஒரு கணவனே அவ்வாறு செய்தான் என்பது சரியில்லை. அப்படி செய்திருந்தால், அது கணவனின் வக்கிரத்தை, குரூரத்தை வெளிப்படுத்துவாக உள்ளது. பெண்ணின் உரிமைகளையும் மீறியதாக உள்ளது. உண்மையில் அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார் எனலாம். பிறகு, தாலி கழட்ட வற்புருத்திய நடவடிக்கையும் அதையே காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி ஆராய வேண்டும். பெண்ணிய ரீதியில் நோக்கும் பொழுது, ஈவேரா தன் மனைவியிடம், குறும்பு அல்லது சோதிக்கும் ரீதி என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், அவையெல்லாம், கொடுமைப் படுத்தும் ரீதியிலாக உள்ளது.

EVR, father, mother, sister, wife

பவானிஆற்றங்கரையில் விலைமாதருடன் உல்லாசமாக இருந்தது: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி விவரிப்பதாவது[4], “இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரியமைனராய்விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் .வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு .வே.ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. .வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.  ஈரோடு, சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளில் இருந்த 70-90 வயதிற்கு மேலாக இருந்தவர்கள், இதனை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், திருமா விசயத்தில், ஈ.வே.கி.எஸ். இளங்கோவன், “பெரியார் வாரிசு” விசயத்தில் கிண்டலாக இதைப் பற்றிக் குறிப்பிட்டார்.

Potsdam nude club, bath etc ads

காணாமல் போன மகனை தேடிய தந்தை: சாமி.சிதம்பரனார் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவது[5], “ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது .வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். . வே. கிருஷ்ணசாமியும், .வே.ராவின் நண்பரான . வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர். தந்திகள் கொடுத்தனர். எதுவும் பலனில்லாது போயிற்று………”.  தகப்பனாருக்கு, தனயனின் பழக்க-வழக்கங்கள் தெரிந்ததால் தான், “டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர்,” எனவே, ஈவேராவுக்கு பெண்கள் மீதான சபலம் தெரிகிறது. ஆகவே, இப்பின்னணியில் தான், அவரது, நிர்வாண கிளப்புகள் விஜயத்தைக் கவனிக்க வேண்டும். மஹாவீரர் போன்று சிறக்க வேண்டியிருந்தால், அன்றே “திகம்பரர்” ஆகியிருக்கலாம். உண்மையில் உடலிச்சை வெல்ல ஆசைப்பட்டால், இதெல்லாம் தேவையில்லையே? சில ஆண்டுகளுக்கு முன்னர் திகம்பரர்கள் தமிழகத்தில் நடந்து சென்ற போது, திராவிட கழகத்தவர் தாக்கியுள்ளனர். இதுவே முரண்பாடாகும். பெரியாரின் நிர்வாண கொள்கையினை அவர்கள் மதிப்பவர்களானால், அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

27-05-2019

EVR acting as an atheist prohit for marriage

[1] http://www.periyarwritings.org/index.php/about-us/2-uncategorised/30418-2015-10-08-13-10-00

[2] எஸ். கருணானந்தம், தந்தை பெரியார் முழு முதல் வாழ்க்கை வரலாறு, மூவேந்தர் அச்சகம், சென்னை, 1979, ப.88.

[3] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கங்கள். 41-42.

[4] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கங்கள்- 38, 43-44,

[5] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார  நிறுவன வெளியீடு, சென்னை, 1938/1997, பக்கம்.53.

“சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து…. பெரியாரை வெளிக்காட்டும் கட்டுரை – உபயம் – திருவாளர் வீரமணி!

மார்ச் 20, 2016

சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”  1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து…. பெரியாரை வெளிக்காட்டும் கட்டுரை உபயம் – திருவாளர் வீரமணி!

EVR-karu-atheist-path-of-jihadi

பால் குத்திக் கொள்ளுதலும், கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதும்: பூசாரி, மாரியம்மனை உதைத்ததால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க மறு தினம் பிராமண குருக்களைக் கொண்டு பிராயச்சித்தம் செய்யப்பட்டது.

பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனமும், கஞ்சி காய்ச்சியும் கரகமெடுத்தும் ஊரைப் புழுதி பண்ணிய பக்த சிகாமணிகளின் லீலைகளும் எப்படியாவது போகட்டும். அதைப் பற்றி நாம் கவலைகொள்ளவுமில்லை. வைசூரி நோய் அபிவிர்த்தியானால் பால் குத்திக் கொண்டால் பரவிக் கொண்டிருக்கும் நோயானது தடைப்பட்டு விடுமென்பது சுகாதார முறை.

“பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனம்” எனும் போது, ஈவேராவுக்கே உண்மை தெரிந்திருந்திருக்கிறது. பிறகு, ஏன் இவ்வாறான மோசமான, வக்கிரமான கட்டுரை எழுத வேண்டும்? அங்குதன் அவரது அசிங்கமான மனோநிலை வெளிப்படுகிறது. மக்களின் நம்பிக்கையை மதிக்காத குணமும் வெளிப்படுகிறது.

இதைப்பின்பற்றாமல் கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதுமான காரியமுமெல்லாம் வைசூரி நோயுடன், காலரா நோயும் சேர்த்துக்கொள்ளச் செய்யும் முட்டாள்தனமென்பதை புத்திசாலிகள் உணர்ந்த உண்மை. இதுவும் ஒரு பக்கமிருக்கட்டும்.

How EVR regarded pulaichi - low caste woman

மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்ப வேண்டாம்: சித்தர்க்காடு மாரியம்மன் கோவிலில் நடந்த பிரஸ்தாப நிகழ்ச்சியைக் கொண்டு குறிப்பாக சித்தர்க்காடு வாசிகளுக்கும் ஒரு வார்த்தை சொல்லவிரும்புகிறேன். அதாவது:-

பொதுவாக மக்களுக்கும், சிறப்பாக பெண்களுக்கும் மாரியம்மன் என்ற ஒரு தேவதையிடத்திலிருக்கும் மூட பக்தி அளவு கடந்ததாகும். மாரி, காளி, பிடாரி போன்ற தெய்வங்களிடத்தில் பெண்கள் கொள்ளும் மூட பக்தியை தணிக்க வேண்டுவது அந்தந்த ஆண் மகனின் கடமையில் முக்கியமானதாகும். ஏனென்றால், பெண்களுக்கிருக்கும் பக்தியை ஒரு கருவியாக கோயில் பூசாரிகள் உபயோகப்படுத்திக் கொண்டு, பெண்களை வசப்படுத்தி கற்பழிக்கவும் எத்தனிக்கிறார்கள். கற்பழித்துமிருக்கிறார்கள்.

பூசாரி மட்டுமல்ல, டாக்டரும், இஞ்சினியரும், ஏன் எத்தகைய ஆளானாலும், போதை வெறி, போக்கிரித்தனம் முதலியவை இருந்தால், அயோக்கியத் தனங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். இப்பொழுதே பப்புக்குச் செல்வது, குடிப்பது, கூத்தாடுவது எல்லாம் எங்கள் உரிமை என்று சொல்லும் அளவிற்கு, பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். கற்ப்பைப் பற்றி கவ்லை இல்லை என்ற அளவுக்கு, மனியம்மையாக நடித்த நாத்திக நடிகை குஷ்புவே விளக்கம் கொடுத்துள்ளது, அவரது ஆவிக்குத் தெரிந்தால் சரிதான்!

கோயில் பூசாரியை பக்தி சம்பாதித்துக் கொடுக்கும் பக்தன் என்ற பேதை எண்ணத்தால் எத்தனையோ பெண்கள் பூசாரியின் வலையில் சிக்கிவிடுகிறார்கள். முடிவாக மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்பிவைக்கும் ஆண் மக்கள் கவனித்து தக்கபடி நடந்து கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன், என்று அக்கட்டுரை முடிந்து விடுகிறது.

ஆரிய-திராவிட கூட்டணி

கடவுளை எதிர்க்கும் பக்தனும், ஆத்திகனும், நாத்திகனும்: கடவுள்-மறுப்பு, நாத்திகம், முதலியவற்றைப் பற்றி பேசும் சித்தாந்திகள் இந்த வித்தியாசத்தை அறிந்தும் அறியாத மாதிரி நடிப்பது தான், நிதர்சனமாக இருக்க்கிறது, அவர்களது போலி சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. கடவுள் பக்தி கொண்டுள்ளவர்களிலும் பலநிலைகளில் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்.

  1. சுகம்-துக்கம், இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு என்ற எல்லா நிலைகளிலும் சமமாக பாவிக்கும் கடவுள்-நம்பிக்கையாளர்கள் எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
    1. உயர்ந்த நிலையில், இவர்களும் கடவுள் இல்லை என்று சொல்லலாம்.
    2. கடவுளுக்கு உருவம் இல்லை, அதனால் விக்கிரகம் வேண்டாம் என்ரு சொல்லலாம்.
    3. பூசை-புனஸ்காரம் தேவையில்லை, மனிதன்–மனிதனாக, ஒழுக்கமாக இருந்தாலே போதும் எனலாம்.
  2. அவ்வாறு பாவிக்கத் தெரியாதவர்கள் தான் வேண்டியபடி / விரும்பியபடி நடந்தால் கடவுளுக்கு நன்றி சொல்வான்.
    1. எதிர்பார்த்து செய்யும் பூசை-புனஸ்காரங்கள் முதலியவை – அத்தகைய வகையறாக்கள்.
    2. எல்லாவற்றிற்கும் பரிகாரங்கள் செய்பவர்கள்.
  3. அவ்வாறு நடக்காவிட்டால், ஐயோ நான் ஏதோ தவறு செய்து விட்டேன், என்று மறுபடியும் வேண்டிக் கொள்வான்.
  4. அதில் இன்னொரு வகை, நடக்காதலால், கடவுளைக் கோபித்துக் கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
    1. அதிக எதிர்பார்ப்பு, நடக்காவிட்டால் தெய்வ-நிந்தனை.
    2. விரக்தியினால் நடந்து கொள்ளும் வகையறாக்கள்.
  5. அப்படியே நடக்காவிட்டாலோ, தொடர்ந்து வேண்டிக்கொண்டு நடக்காவிட்டாலும், கடவுளே இல்லை, நீ கல் தான் என்று வெறுத்துப்போய் ஒரு நிலைக்கு வந்துவிடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
  6. ஆனால், இவர்கள் எல்லோருமே கடவுள் இருக்கிறார் என்று தான் நம்பிக்க்கொண்டு இருக்கிறார்கள்.
  7. திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன், சமூக-விரோதி, அரசியல்வாதி, முதலியோர்களும் கடவுளை வேண்டிக் கொள்கிறார்கள். இது சமூகத்தில் தனது நிலையைக் காட்டிக் கொள்வதற்காகவோ, அல்லது வேண்டியது கிடைத்தது என்ற நிலையிலோ இருக்கும்.
    1. இங்கு பூசாரி இவ்வகையில் தான் வருகிறான்.
    2. திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
    3. இதில் அரசியல்வாதி, ஒட்டுமொத்த குற்றங்களையும் செய்பவனாக இருக்கிறான்.
  8. திராவிட நாத்திகம் வளர்ந்த நிலையில், திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவதும், மனைவி-மக்கள்-சுற்றத்தாரை வைத்து சாமி கும்பிடும் நிலையும் இருந்து வருகிறது. இதில் பெரியாரே விலக்கல்ல.
    1. இறைன்றைய நிலையில் திராவிட-நாத்திகர்களில் 90% இப்படித்தான் இருக்கிறார்கள்.
    2. வீடுகளில் சாமிபடங்களை வைத்துக் கொண்டு பூசை செய்து வருகிறர்கள்.
  9. வெளியில் சாமியில்லை என்பது, உள்ளே சாமி குடும்பிடுவது என்ற போலி நாத்திகனும் இருக்கிறான்.
    1. இவன் போலி நாத்திகன்.
    2. இவனால் பெரிய அளவில் பாதிப்பில்லை.
  10. வெளியில் கடவுள் இருக்கிறார் என்று அறிவித்து, சாமி குடும்பிடுவது, உள்ளே ஆனால் உள்ளே சாமியில்லை என்ற போலி ஆத்திகனும் இருக்கிறான்.
    1. இவன் போலி ஆத்திகன்.
    2. ஆனால், இவனால் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
  11. இதையெல்லாம் மீறி, உண்மையான நாத்திகன் இருக்கிறான். ஆனால், அவன் ஆத்திகன் போலத்தான், மனிதனுக்கு எந்த விதத்திலும் தீங்கு நினைக்க மாட்டான்.
    1. வேற்றுமை வளர்க்க மாட்டான்.
    2. மனிதர்களை சித்தாந்தம் மூலம் பிரித்து வைக்க மாட்டான்.
    3. மனிதர்களுக்குள் துவேசத்தை, வெறுப்பை வித்திட மாட்டான், வளர்க்க மாட்டான்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஈவேரா அல்லது பெரியர் அந்த அளவுக்கு சிந்தனையாளன் அல்ல.

EVR listening to Rajaji with due respect and attention

ஈவேரா அல்லது பெரியாரின் குணாதிசயங்கள்: ஈவேராவுக்கு அகந்தை, ஆணவம், அகம்பாவம், மமதை முதலியவை அதிகமாகவே இருந்தது. தன்னை யாரும் குறைக்கூறக்கூடாது என்ற மனப்பாங்கும் இருந்தது. தான் பெரிய பணக்காரன் என்பதனால் –

  1. பணத்தை வைத்து எல்லோரையும் பணிய வைத்து விடலாம் என்ற யதேச்சதிகாரமான போக்கு;
  2. முதலில் உதவுவது போல காட்டிக் கொண்டு, ஒருவரை தன்னிடம் பணிய வைப்பது;
  3. எல்லோருமே தான் நினைத்தப்படி / சொல்லியபடி செய்ய வேண்டும், இல்லையென்றால், அவனுக்கு பலவகைகளில் துன்பம் கொடுப்பது;
  4. அதிகமான பேராசைக் கொண்டு, அது நடக்காவிட்டால் எல்லாமே மோசடி என்று கற்பனை-விரோதியை உண்டாக்கி அவனுடன் போராடிக் கொண்டிருப்பது;
  5. ஜாதியத்தை வளர்ப்பதற்காக, ஜாதியத்தை எதிர்ப்பது போலக் காட்டிக் கொள்வது;
  6. தீண்டாமை எதிர்ப்பு, பெண்கள் விடுதலை முதலியவை அத்தகைய எதிர்மறை பிரச்சாரங்களில் உருவானது;
  7. தொடந்து தோல்விகளை சந்தித்தப் பிறகு, விரக்தியாகி எல்லாவற்றையும் எதிர்ப்பது;
  8. முடிந்த வரை ஒருவருக்கு அதிக அளவில் எப்படி தொல்லை-தொந்தரவு-பாதிப்பு கொடுக்கலாம்-ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு வேலைசெய்வது;
  9. குடும்பப் பிரச்சினை, குழந்தை இறந்தது, விரக்தியான வாழ்க்கை, கூடாத உறவுகள்-சகவாசங்கள், தனிமனித தோல்வி, முதலியவை அரசியல்-அதிகார ஆசைகள் கூடாததனால், இரண்டும் சேர்ந்து உதுக்கிவிட்ட நிலை உருவானது;
  10. விகல்பமான மனப்பாங்கு, வக்கிரமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை, விரச வார்த்தைப் பிரயோகம், முதலியவற்றை பயன்படுத்தி, தனது விரோதிகளைத் தாக்குவது;

இவையெல்லாம் தான் ஈவேரா அல்லது பெரியார் என்ற மனிதனின் குணாதிசயக்களாக இருந்தன. சமீப காலத்தைய ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மைகளில் பலவற்றை மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது தான் பெரியாரின் கதை!

 

© வேதபிரகாஷ்

20-03-2016

பெரியார் ஆவி, நாகம்மை ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

மார்ச் 17, 2016

பெரியார் ஆவி, நாகம்மை ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

oct25

oct25

 

பெரியாருக்கு ஆவி உண்டா?[1]: வருடாவருடம், பெரியார் சமாதியில், இந்த பகுத்தறிவாளிகள் கும்பிட்டு வருகின்றன. பாருங்கள் பகுத்தறிவு சூன்யங்களின் உன்மத்தமான நிலையை! கைகளை கூப்பிக் கொண்டு மார்பைத் துட்டுக் கொண்டு, அபரிதமான மயக்கநிலையில் உள்ளது போல இருக்கிறார்கள்! சில சூன்யங்கள் கைகூப்பி வணங்கலாமா, வேண்டாமா என்ற நிலையில் நின்றுள்ளன. இதுதான் இன்றைய திராவிடத்தின் போலித்தனம். செத்த மனிதனுக்கு எதற்கு வணக்கம், மரியாதை, மாலை எல்லாம்? அப்படியென்றால், அந்த செத்த மனிதருடைய  ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதானே அவ்வாறு வணங்கி மரியாதை செய்கின்றனர்? இல்லையென்றால், மலர்கள் தூவுவதற்கு பதிலாக கற்களால் அடிக்கலாமே, பூமாலைக்கு பதிலாக செருப்பு மாலை போடலாமே?  இப்பொழுது பெரியாருடன், அவரது மனை அம்மையாரையும் சேர்த்துள்ளார்கள்.

திகவின்மாதா கி ஜேதிருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி!: “பாரத் மாதா கி ஜே” என்று சொல்ல மாட்டேன் என்று துலுக்கர்கள் மறுபடியும் ஓலமிட ஆரம்பித்த அதே நாளில், திகவின் “மாதா கி ஜே” திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி முதலியவை நடந்துள்ளதும் சரித்திரத்தின் நியதி போலும். அண்ணாதுரை அன்று “இனம் இனத்தோடு சேரும்”, என்று இதனால் தான் சொன்னார் போலும்! அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (16.3.2016) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் என்று “விடுதலை” அறிவிக்கிறது[2]. அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் தொழிலாளரணி, திராவிடன் நலநிதி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது என்று தொடர்கிறது. அதுதான் பிறந்த நாள், இறந்த / மறைந்த நாள், எல்லாம் ஒரு கேடா என்று கேள்வி கேட்கும் பட்சத்தில் இதெல்லாம் முதலில் பகுத்தறிவுகளுக்கு இதெல்லாம் தேவையா என்று யாரும் கேட்டுக் கொள்ளவில்லையே? மேலும், பெரியாருக்கு இரண்டு மனைவிகள் இருந்த போது முதல் மனைவி நாகம்மையை விட்டுவிட்டு, மணியம்மை மட்டும் ஏன் பிடித்துக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. நாகம்மைௐகு சமாதி இருக்கிறதா, அது எங்கு இருக்கிறது, அவரது நினைவு நளை ஏன் திவினர் கடைப்பிடிப்பதில்லை என்றும் தெரியவில்லை.

திகவின் மாதா கி ஜே திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி-மார்ச்.17, 2016மணியம்மையாரை  அன்னை எனப்    புகழலாமா, கூடாதா?: திகவில் ஷிர்க் இல்லையா என்றால், இல்லை என்று நியாயப்படுத்த இன்னொரு கட்டுரை வேறு, “அன்னை மணியம்மையார் நினைவுநாள் ‘அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? என்ற 10.5.1960 குயில் ஏட்டில் தலையங்கம், மூன்றாவது பக்கத்தில். திரு குயில்   ஆசிரியர்  பாவேந்தர்க்கு,  மணச்சநல்லூர் அம்பட்டன் வணக்கமாகத்   தெரிவித்துக்   கொள்வது. புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப்    புகழ்ந்தும்   புகழத்தக்க  விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்களை இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வருகின்றீர் இது சரியா? என்ற கேட்டதற்கு பதிலாக வெளி வந்ததை வெளியிட்டுள்ளார்கள்[3]. போதாகுறைக்கு அதில் பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல. குருசாமி, குஞ்சிதம் அம்மையார், அண்ணாதுரை, பொன்னம்பலனார்[4] என்றேல்லாம் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதவது, அவருக்கு அந்த அளவுக்கு எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால், இப்பொழுது அவ்வாறு உரிமைகளைக் கொடுப்பார்களா? திராவிட அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் எவ்வாறு வசைப் பாடியுள்ளனர் என்பதனை, அவர்கள் மறைத்தாலும், அவ்வபோது, சில உண்மைகள் வெளிவந்து விடுகின்றன.

மணியம்மை நினைவு நாள்- கும்பிட்டார்களா-சமாளித்ட்யார்களா

பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்[5]: பெரியார்  திசம்பர் 24, 1973 அன்று காலமானார். பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல. குருசாமி[6], குஞ்சிதம் அம்மையார், அண்ணாதுரை, பொன்னம்பலனார். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு, மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும் காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது, அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது; பெரியார் சாகட்டும் என்று தவங்கிடக்கும் அண்ணாதுரை, குருசாமி, குஞ்சிதம் அம்மையார், பொன்னம்பலனார்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டு – பெரியார் வாழட்டும் என்று, தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை, அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? அதாவது, பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல.

  1. குத்தூசி குருசாமி [1906-1965],
  2. குஞ்சிதம் அம்மையார் [1909-1961][7],
  3. அண்ணாதுரை [1909-1969][8],
  4. பொன்னம்பலனார் [1904-1973][9].

 பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு:

  1. அவரின் பெருந்தொண்டு
  2. சிறுநீர் கலம்.

பெரியவர் ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மூக்குக் கண்ணாடி போட்ட போது, கலாட்டா செய்தவர்கள், இதைப் பற்றி யோசித்து பார்க்கவில்லையா? இறப்பு என்றபோது, ஒப்பாரி வைக்கும் சித்தாந்தம் வந்து விடிகிறதே? “கண்ணிர் துளிகளும்”, “கட்டு விரியன் பாம்புகளும்” இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

திகவின் மாதா கி ஜே திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி-மார்ச்.17, 2016.2© வேதபிரகாஷ்

17-03-2016

[1]https://dravidianatheism2.wordpress.com/2010/01/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/

[2] http://viduthalai.in/page1/118919.html

[3] http://tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=230&pno=215

[4] தந்தை பெரியார் அவர்களால் தமிழ்மறவர் என்று போற்றப்பட்ட புலவர் வை.பொன்னம்பலனார்

[5] விடுதலை,  ‘அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?, மார்ச்.16, 2016, மூன்றாவது பக்கம்;  10.5.1960 குயில் ஏட்டில் தலையங்கம்.

[6] விடுதலை ஆசிரியர் குருசாமி. சென்ற   பொதுத்  தேர்தலில் காஞ்சிப் பகுதியில் அண்ணாத்துரையை எதிர்த்தும்   பார்ப்பனர்  ஒருவரை ஆதரித்தும் கூட்டத்திற் பேச அனுப்பப் பட்டவர்   குருசாமி.   குருசாமியுடன்   சென்றவர்   குஞ்சிதம்,  குஞ்சிதம்  அம்மையாரை   கூட்டத்   தொடக்கத்தில்   பேச அழைத்தார்கள் காஞ்சித் திராவிட கழக்கதார்.

[7] ‘ரிவோல்ட்’ எனும் ஆங்கில இதழின் இதழாசிரியராக இருந்த குருசாமி என்பவரை 08.12.1929 இல் பெரியார் – நாகம்மையார் முன்னிலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்

[8] தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன்,  1949ல், பெரியாரை விட்டு விலகி,  தி.மு.க என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.

[9] இயற்பெயரான கனகசபை என்பதைத் தூய தமிழில் பொன்னம்பலம் என்று மாற்றிக் கொண்டார். மொழிக் கொள்கையில் தமக்கும் பெரியார் ஈ வெ இரா வுக்கும் கருத்து முரண் உண்டு என்று பெரியாருக்கு முன்னிலையில் துணிச்சலுடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

மார்ச் 17, 2016

பெரியார் ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

பெரியார் அழைக்கிறார் - மார்ச்.17, 201616-03-2016 அன்று செய்திகளை கவனித்து வாசித்து, பார்த்துக் கொண்டிருக்கு வேளையில் போது சில விசயங்கள் பொருந்தி போகும் போது எனக்கு வியப்பாக இருந்தது. குறிப்பாக “விடுதலை”யில் இருந்தவை மிக்க சிந்திக்க வேண்டிய செய்திகளாக இருந்தன.

  1. ஒவைசி “என் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினாலும்,பாரத் மாதா ஜி ஜே” என்று சொல்லமாட்டேன் என்று கூறியது[1].
  1. ”பாரத் மாதா கி ஜே” என முழக்கமிடுவது எனது உரிமை என காங்., எம்.பி.,யும், பிரபல இந்தி சினிமா பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் ராஜ்யசபாவில் பேசியது[2].
  1. மஹாராஷ்ட்ரா எம்.எல்.ஏ, வரீஸ் பதான் “பாரத் மாதா ஜி ஜே” என்று சொல்லமாட்டேன் என்றதால் சஸ்பென்ட் செய்யப்பட்டது[3].
  1. மணியம்மையின் நினைவு தினம் என்று திகவின் “மாதா கி ஜே” திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி முதலியவை நடந்துள்ளது.
  1. திகவினரின் சித்தாந்த குக்குரல்கள் / கோஷங்கள்:
    1. தந்தை பெரியார் அழைக்கிறார் வாரீர்!”,
    2. “பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்”,
    3. பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார்.
    4. பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது?
    5. அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி, போன்ற வாதங்கள்!
  1. பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல என்று குறிப்பிட்டது.
  2. குருசாமி,
  3. குஞ்சிதம் அம்மையார்,
  4. அண்ணாதுரை,
  5. பொன்னம்பலனார்.
  1. பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு:
  2. அவரின் பெருந்தொண்டு
  3. சிறுநீர் கலம்.

இவையெல்லாம் வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், செய்திகளாக வெளியிட்டாலும், அவற்றிற்கு சம்பதம், இணைப்பு, சம்பந்தம் முதலிய இருப்பது தெரிகிறது. இனி விசயங்களைப் பார்ப்போம்.

பெரியாரின் மனைவிகள்ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவற்றைப் பற்றி பெரியார்நாத்திகர்களின் நிலை: 16-03-2016 தேதியிட்ட “விடுதலை” நாளிதழில் அத்தகைய செய்திகள் வெளிவந்துள்ளன. பெரியார் முதல் அவரது சீடர்கள் வரை ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவை எல்லாம் இல்லை என்று இன்று வரை பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், “பேய் படங்கள்” ஹிட் ஆவது பற்றி, மு.வி.சோமசுந்தரம் “பெரியார் மண்ணில் பேயாட மேடை போடலாமா?”, என்று கேட்டு “விடுதலை”யில் எழுதியுள்ளார்[4]. அதில், “பேய் பற்றி இங்கர்சால்”, இந்தப் பேய், பிசாசு பற்றி ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் விளக்கமும் சம்மட்டி அடியும் சிந்திக்கத்தக்கவை, என்று அவரது கருத்துகளைக் கொடுத்துள்ளார்.

  • “அந்தக் காலத்தில் (பூமி தட்டை என்று கூறிவந்த காலத்தில்) அறியாமை அரியாசனத்தில் இருந்தது; அறிவியல் ஒதுக்கப்பட்டது.’’ (In those days Gnorance was a king; and science was an outcast).
  • “பேய், பிசாசு என்ற பெயரில் அவற்றின் ஆணை என்ற பெயரில், மனிதர்கள், தங்களின் சக மனிதர்களை அடிமைப்படுத்தினர்’’ (In the name and by the authority of the ghosts men inslaved their fellowmen);
  • “கற்பனையில் உருவெடுக்கும் அரக்கர்களையும், ஆவி உருவங்களையும் நான் தாக்குகிறேன். காரணம், அவை உலகை ஆள்கின்றன. பேய், பிசாசுகள் தொலையட்டும், நாம் இனிமேல் அவற்றைத் துதிக்க மாட்டோம். அவை தங்களின் சதை இல்லாத கைகளால், கண் இல்லாத குழியை மூடிக் கொண்டு, மனிதர்களின் கற்பனையிலிருந்து நிலையாக மறைந்து போகட்டும் (I attack the monsters, the phantorms of imagination that have ruled the world. Let the Ghosts go We will worship them no more let them cover their less pockets with their fleshless hands and faste forever from the imagination of men).

 மு.வி.சோமசுந்தரம் தொடர்கிறார். ஆனால், இடைக்கால ஐரோப்பிய நிலை, இடைக்கால இந்தியாவோடு ஒப்பிடமுடியாது.

பெரியார் ஆவி கோவிலைக் கண்டு பயப்படுகிறதா 17-03-2016பெரியாரைப் பார்த்து பேய்கள் ஓடுமா, ஓடாதா?: “ஆத்திகர் -நாத்திகர் என சகலரும் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கிறார்களே, என்பதற்கு, “இந்த உளவியலை புரிந்து கொள்வது கடினம்” என்று, நாத்திகர், கடவுள் தத்துவத்தையே ஏற்காதவர்கள். பேய் பிசாசுகளையா ஏற்றுக் கொள்வார்கள்? திரைப்படங்களுக்குச் செல்வது பொழுது போக்குவ தற்காக. நாத்திகர்கள் அங்கு செல்கிறார்கள் என்றால், ஆய்வுக் கண்ணோடு பார்க்கச் செல்கிறார்கள் என்பது தான் சரியானது….. பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார். பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது? அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி. என்று மு.வி.சோமசுந்தரம் முடிக்கிறார்[5]. ஆனால், அதன் கீழேயே, தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திலே கோவிலா? என்று திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் தந்தை பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக ஒரு கோவிலின் புகைப்படத்தைப் போட்டு, அது அகற்றப்படுமா, என்று கேட்டிருக்கிறது வியப்பாக இருக்கிறது[6]. மேலும், “குறிப்பு: பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித வழிபாட்டு நிலையங்களுக்கும் இடம் இல்லை என்பது அரசாணை அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டுதான் ஒவ்வொருவரும் அங்குக் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது”, என்று கூறுகிறது!. பெரியாரைக் கண்டதும், இந்த சாமிகள், சிலைகள், கற்கள் ஏல்லாம் ஓடிப்போக வேண்டாமா, ஏன் போகவில்லை. மேலும், அந்த கற்களைக் கட்டு பயப்படுவானேன்? பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார். பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது? அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி. என்றவர்கள், இதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஆத்திகர் –நாத்திகர் ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவற்றை நம்புகிறார்களா இல்லையா என்பது தான் பிரச்சினை.

பெரியாரும், ஆவியும், ஆத்மாவும்ஆத்மா பற்றி பெரியாரின் கருத்து[7]: ஆத்மா பற்றி பெரியார் சொன்னதாக உள்ளது, “ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை.” ஆத்மா உணர்ச்சி, அது அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும், என்றால், ஆத்மா-சரீரம் தொடர்பு தெரிந்துள்ளது. உடல் இருக்கும் வரை ஆத்மா இருக்கும் என்பதும் தெரிந்துள்ளது. பிறகு, ஆத்மா இல்லை என்றெல்லாம் பேசுவது, விதண்டாவாதம் என்று நன்றாகவே விளங்குகிறது.

பெரியாரின் மனைவி.1பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்[8]: தந்தை பெரியார் அழைக்கிறார் வாரீர்!” – என்று தலைப்பிட்டு, இன்னொரு கட்டுரை[9]. பெரியார் தான் இறந்து விட்டாரே, அவர் எப்படி கூப்பிடுவார் என்று பகுத்தறிவும் யோசிக்கவில்லை போலும். ஏசு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற பாணியில் அழைக்கும் போக்கு ஏன் பகுத்தறிவுகளுக்கு வர வேண்டும்? பகுத்தறிவி பேசி முதலியார், பிள்ளை, கவுண்டர், நாடார், வாண்டையார், மூப்பனார், என்று ஜாதிகளை வளர்த்ததே திராவிடக் கூட்டதினர் தானே? பிறகு எப்படி பெரியார் பிறந்த மண், ஜாதி ஒழிப்பு மண் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்கிறது. “சமூகநீதி” என்று பேசி மக்களை புதுவகையில் திசைத் திருப்ப முடியுமா? “பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்” என்று சொல்லிக் கொள்வதில் வேடிக்கையாக இல்லையா என்று யோசிக்க வேண்டும். தத்துவ ரீதியில், கொள்கை ரீதியில், சித்தாந்த ரீதியில் பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார் என்று வாதிக்கலாம். ஆனால், பெரியாருக்கு என்ன இருந்தது, அவரிடத்திலிருந்து இவர்களுக்கு என்ன வந்தது என்பதையும் சொல்லியாக வேண்டுமே? அதுவும் உணர்ச்சியா, உடல் இருக்கும் வரை உணர்ச்சியா அல்லது உடல் இல்லாவிட்டாலும் தொடரும் உணர்ச்சியா என்று விளக்க வேண்டும். உடல் இல்லாவிட்டாலும் தொடரும் உணர்ச்சி என்றால், அவர்களது வாதம் அடிபட்டு போகிறாது. அதனால், பெரியார் ஆவியைக் கண்டு பயப்படத் தேவையில்லை!!

© வேதபிரகாஷ்

17-03-2016

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1478578

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1479789&Print=1

[3] http://www.dailythanthi.com/News/Districts/Mumbai/2016/03/17023007/Maharashtra-AssemblyMajlis-MLA-Pathan-varis-suspensionBharat.vpf

[4] http://viduthalai.in/page2/118626.html

[5] மு.வி.சோமசுந்தரம் “பெரியார் மண்ணில் பேயாட மேடை போடலாமா?”, 12-03-2016 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2.

[6] http://viduthalai.in/page2/118627.html

[7] http://viduthalai.periyar.org.in/20101023/snews04.html; http://naathigam.blogspot.in/2010/10/blog-post_1684.html

[8] http://viduthalai.in/page1/118898.html

[9] விடுதலை, முதல் பக்கம்; http://viduthalai.in/page1/118898.html

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

திகவினரின் குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்காமல் இருப்பதே, திராவிட ஆராய்ச்சியில் பெரிய குறை மட்டுமல்லாது, மிக்கத்தவறான ஆய்வு நெறிமுறை எனலாம். மேலும், திகவினர் தாங்கள் எதனை சிறு-குறும் புத்தகங்களில் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றை ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் போல குறிப்பிட்டு ஆய்வுகட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. ருதலைப் பட்சமாக அவர்கள் எழுதி பதிப்பித்து வருவதை நம்பவேண்டிய நிலையுள்ளது. இது ஏதோ எசுவைட் / கிருத்துவ மிஷினரிகளின் எழுத்துகளளை அப்படியே எடுத்துக் கொள்வதை போலவுள்ளது. இதனால், பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், முடிந்த வரையில் இருக்கும் விவரங்களை இங்கு தர முயன்றுள்ளேன். தயவு செய்து படிப்பவர்கள், மற்ற விவரங்களைக் கொடுத்தால், உரிய ஒப்புதலோடு, அவர்கள் பெயர்கள் குறிப்பிட்டு, சேர்த்துக் கொள்ளப்படும்.

குடி அரசு ஜனவரி 3 1926

குடி அரசு ஜனவரி 3 1926

1960 முதல் 1980 வரை திகவினரின் இந்துவிரோத செயல்கள்: 1960களில் நிச்சயமாக, யாதாவது எதிர்த்து கேட்டால் அடிப்பார்கள் என்று எல்லோருமே திகவினருக்கு பயந்துதான் இருந்தனர். எனவே பிராமணர்களைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. திகவினர் 1971ல் சேலத்தில் ராமர்-லட்சுமணன்–சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். துக்ளக்கில் ஊர்வல படங்கள் வெளியிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்டது. இப்பொழுது அப்படங்கள் கிடைப்பதில்லை. அக்டோபர் 1973ல் மதுரையில் இ.வே.ராவின் 95வது பிறந்த நாள் என்று இந்து மதம்-கடவுளர்களை தூஷிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தின் முன்னால், ஒரு வேலைத் தூக்கிச் சென்று, அதனை செருப்பால் அடித்தவாறு சென்றனர். அதேபோல விநாயகர் விக்கிரகத்திற்கும் செய்தனர். கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலத்தில் எடுத்துச் என்றனர். ஆனால், அப்பொழுது முதலமைச்சராக இருந்த காமராஜர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1973ல் பெரியார் இறந்தார், ஆனால், இத்தகைய காரியங்கள் தொடர்ந்து நடந்தன[1]. 1974ல் “ராவண லீலா” அடத்தி, ராமர்-லட்சுமணன்–சீதை பொம்மைகளை எரித்தனர். எம்ஜியார் ஆட்சிக்கு வந்த பிறகு 1980-87 ஆண்டுகளில் நிலமை கொஞ்சம் மாறியது எனலாம்.

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

1980 முதல் 2006 வரை நடந்துள்ள தாக்குதல்: 1980களில் “தி இந்து” நிருபர் கணபதி என்பவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது திகவினர் அவரை நிறுத்தி, சட்டை-பனியனைக் கிழித்து, பூணூலை அறுத்தனர். அன்று 1983ம் ஆண்டு ஆலய மறியல் போராட்டம் என திராவிடர் கழகம் ஸ்ரீரங்கத்தில் அறிவித்திருந்தது. அப்போது பூஜ்யஸ்ரீ திரிதண்டி நாராயண ஜீயரும் ஹிந்து முன்னணியின் குழுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். சுமார் 500 பக்தர்கள் அனைவரும் சுவாமிகளின் தலைமையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், பிரபந்தம் ஜெபித்துக்கொண்டு நான்கு சித்திரை வீதி வழியாக ஊர்வலம் வந்து “ரங்கா ரங்கா” கோபுர வாசலில் சிதறு தேங்காய் நூற்றுக்கணக்கில் உடைத்து ஆலயப் பிரவேசம் செய்தனர். ஆலய மறியல் போராட்டத்துக்கு வந்திருந்த சுமார் 10 கருப்பு சட்டைகளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தி க தோற்றுப் போய்விட்ட ஆத்திரத்தில் இரண்டு நாள் சென்று ஆலயப் பிரகாரத்தில் அப்பிராணியாய் கிடந்த ஒரு நோஞ்சான் கிழவரின் பூணலை அறுத்து மூக்கை உடைத்து விட்டு தப்பி ஓடியது.

2006ல் பெரியார் சிலை உடைப்பு, பூணூல் அறுப்பு, கோவில்கள் தாக்கப்படுதல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது முதலியன: ஶ்ரீரங்கத்தில் திகவினர் விசமத்தனமாக, ஶ்ரீரங்கநாதர் கோவில் எதிரில், ஶ்ரீசைத்தன்யர் பாதக்கோவிலின் அருகில் பெரியார் சிலையை வைத்தனர். அப்போதே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது, ஆனால், ஆட்சியுள்ளவர்களின் ஆதரவால் அச்செயல் நிறைவேரியது. டிசம்பர் 2006ல் அச்சிலை சேதப்படுத்தப் பட்டது. இதனால், திகவினர் மற்றும் கருப்புப் பரிவார் கோஷ்டிகள் கோவில்களைத் தாக்குதல், விக்கிரங்களை உடைத்தல், மடங்களில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தல், பூணூல்களை அறுத்தல் என்று தமிழகத்தில் பல இடங்களில் குற்றங்களில் ஈடுபட்டனர்.

சங்கராபுரத்தில் இரண்டு கோவில்கள் தாக்கப்படுதல், விநாயகர் சிலைகள் உடைக்கப்படுதல்: விழுப்புரத்தில் சங்கராபுரம் கோவிலில் கருங்கல் விநாயகர் விக்கிரகம் பெர்த்தெடுக்கப்பட்டு, உடைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, வாகனம் மூஞ்சூறு மற்றும் பீடமும் உடைக்கப்படிருந்தன. கோவில் சுற்றுப்புறச் சுவர்களில் இருந்த சிற்பங்களும் உடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, கோபுரத்தில் இருந்த சிலைகளும் உடைக்கப்பட்டன[2]. அதேபோல, சங்கரபுரம்-கல்லக்குறிச்சி சாலையில், விவசாய சந்தை கமிட்டி அருகில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த விநாயகர் விக்கிரகமும், அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருந்தது[3]. இத்தாக்குதல்களுக்காக,

  1. வி. நாகராஜன் (29), நெடுமண்ணூர்.
  2. எஸ். நாகப்பிள்ளை (20), நெடுமண்ணூர்.
  3. ஏ. துரை (24), வனப்புரம்.
  4. எஸ். சாமித்துரை (25), கடவூர்.

இந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இதிய குற்றவியல் சட்டப்பிரிவு 153 (a) (1)ன் கீழ் மதச்சின்னங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை உடைத்தல் என்ற குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது[4].

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம், sakarapuram templ

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம், sakarapuram templ

சேலம் சங்கர மடத்தில் நுழைந்து தாக்குதல்: 2006ல் திகவினர் சேலத்தில் உள்ள சங்கரமடத்தில் நுழைந்து, எல்லா படங்களையும் அடித்து உடைத்தனர். அப்பொழுது மற்றவர்களின் உரிமைகள் பற்றி பேசும் செக்யூலரிஸப் பழங்கள் இந்துக்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

Salem Sankara mutt attacked by DK - December 2006

Salem Sankara mutt attacked by DK – December 2006

ஈரோடு ராகவேந்திர மடம் தாக்கப்படல், ராமர் சிலை பெயர்த்துத் தூக்கியெறியப்படல்: அதேபோல, சம்பந்தமே இல்லாமல், ஈரோட்டில், அக்ரஹாரத் தெருவில் உள்ள ராகவேந்திர பிருந்தாவனத்தில் புகுந்து, ராமர் விக்கிரகத்தைப் பெயர்த்து எறிந்தனர்[5]. அப்பொழுதும் செக்யூலரிஸவாதிகள் மூச்சுக்கூட விடவில்லை.

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்படல்: சென்னையில், பழைய மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. “தி இந்து” இதனை சூஜகமாக அமிலம் மற்றும் பெட்ரோல் கலந்த பாட்டில்கள் வீசப்பட்டன என்று குறிப்பிட்டது[6]. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போது, சுவாமி தயானந்த சரஸ்வதியின் மீது, ஶ்ரீரங்கத்த்ல் கோவிலுக்கு எதிராக உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக, முதல் குற்ரப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல சுப்பிரமணியன் சுவாமி, அது சட்டப்படி தவறு என்ரு சுட்டிக் காட்டினார்[7]. ஆக இது நாத்திகமும் இல்லை, நாத்திகவெறியும் இல்லை ஆனால், இனவெறியே ஆகும்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

ஏப்ரல் 1929 அம்பேத்கர் முன்னர் பூணூல்-அணிவிப்பு, ஏப்ரல் 2015 ச்ஏப்ரல் மதத்தில் அம்பேத்கர் ஜெயந்திற்குப் பிறகு அம்பேத்கர் முன்னிலையில் வேதகோஷங்களோடு 6,000 பேருக்கு பூணூல் அணிவிக்கப்படலும், அம்பேத்கர் பெயரில் பெரியார் தொண்டர்கள் பூணூல்-அறுப்பு தாக்குதலில் ஈடுபடுவதும் நோக்கத்தக்கது. அம்பேத்கரின் நண்பர் பெரியாரின் தொண்டர்கள், இவ்வாறு அம்பேத்கர் பெயரில், அம்பேத்கர் ஜெயந்திக்குப் பிறகு ஏப்ரலில் இவ்வாறு தாலி-அறுப்பு நிகழ்சிக்குப் பிறகு, பூணூல்- அறுப்பு செய்திருக்கிறார்கள்! ஆனால், இதே ஏப்ரல் மாதத்தில் 86 ஆண்டுகளுக்கு முன்னர் 1929ல், அம்பேத்கர் தலைமையில், சிப்லுன் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் 6,000 பேருக்கு பூணூல் அளிக்கப்பட்டது. அம்பேத்கரின் பிராமண நண்பர், தியோராவ் நாயக் புரோகிதராக இருந்து, வேதமந்திரங்கள் முழங்க அவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்! அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது – எல்லாம் ஒன்றா என்று விடுதலை கேட்கிறது[8]: இன்றைய தி இந்து (தமிழ்) ஏட்டில் பக்கம் 7 இல் போலீசார் கடும் எச்சரிக்கை என்ற தலைப்பில் கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது. சென்னை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்துவதாக இருந்த பெண்களுக்கு தாலி தேவையா என்ற விவாத நிகழ்ச்சியை மய்யமாக வைத்து இந்து அமைப்புகள் பிரச்சினை செய்தன. அதைத் தொடர்ந்து இந்து அமைப்பினரும், பெரியாரின் பெயரில் இயங்கும் அமைப்பினரும் பல்வேறு வகைகளில் சென்னை நகரின் சட்டம் – ஒழுங்கை கெடுக்கின்றனர். வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என பொதுமக்களின் அமைதியை தொடர்ந்து கெடுக்கின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இனிமேல் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் அனைவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். – இவ்வாறு அந்த ஏட்டில் செய்தி வெளிவந்துள்ளது. பொத்தாம் பொதுவாக இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுத்த காவல்துறை அதிகாரி யார்? என்பதை தி இந்து (தமிழ்) ஏடு தெரிவிக்கவில்லை. இதில் வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என்று எல்லாவற்றையும் ஒன்றுபோல் காட்டுவது அசல் விஷமத்தனமாகும்[9]. வெடிகுண்டு வீசுவதையும், தாலி அகற்றிக் கொள்வதையும் ஒரே நிலையில் சம தட்டில் வைத்துப் பார்க்கிறதா காவல்துறை? தாலியை அகற்றிக் கொள்வது திராவிடர் கழகத்தின் கொள்கை சார்ந்தது – சட்டப்படியானதும்கூட! வெடிகுண்டு வீசுவது சட்டப்படியானதா? இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்புவது கண்டிக்கத்தக்கது! விஷமத்தனமானது!!

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] After his demise in 1973 the Movement was being ably guided by the new President Annai E.V.R. Mani Ammaiyar. A notable event since her assuming the presidentship was the celebration of “Ravana Leela” in December, 1974, when the effigies of Rama, Sita and Lakshmana were burnt down. This event which rocked the entire orthodoxy all over India was no mean achievement of the movement today. A case was filed against Mrs.Maniammai and others including me. We were all acquitted.

http://www.modernrationalist.com/2011/march/page04.html

[2] The granite Vinayaka idol of a temple at Sankarapuram in Villupuram was found removed and broken. Devotees found that the `Moonjuru’ (mouse vahanam) and the pedestal of the idol had been destroyed. Cement decorative works that formed part of the temple compound were found broken. Images of the Hindu pantheon made of concrete and erected on the gopuram were damaged beyond recognition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[3] The granite Vinayaka idol of the Selva Vinayaka temple near Agriculture Market Committee on the Sankarapuram-Kallakurichi road was also found uprooted and broken into pieces. The idol was found near the bus stand, about 200 feet away.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[4] The police have arrested four activists of the Thanthai Periyar Dravidar Iyakkam V. Natarajan (29) and S. Nagapillai (20) of Nedumanur, A. Durai (24) of Vanapuram and S. Samithurai (25) of Kaduvanur in connection with the Sankarapuram incident. They have been booked under Section 153 (a) (1) of Indian Penal Code (fanning communal tension by damaging religious symbols or religious places).

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[5] In Erode, a Ramar idol was found damaged. The police said around 5.15 p.m., a group of Dravidar Kazhagam volunteers, shouting slogans, entered the Raghavendraswamy temple, situated in Agrahara Street, went to the sanctum sanctorum and removed the deity. On hearing the news, hundreds of devotees rushed to the spot, and demanded the police take action against the persons responsible for the act. RSS and Hindu Munnani volunteers protested against the damage to the idol.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[6] In Chennai, some miscreants hurled a few bottles of acid and petrol at the Ayodhya Mandapam, West Mambalam.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[7] Janata Party president Subramanian Swamy condemned the police for registering a first information report (FIR) against Swami Dayanand Saraswati in the case related to damage caused to the statue in Srirangam. In a statement here, Dr. Swamy said by registering an FIR against Dayanand Saraswati merely for issuing a statement against the installation of the statue, the police had violated several Supreme Court judgments, including the one in the Bhajan Lal case in 1992.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[8] விடுதலை, வெடிகுண்டு வீசுவதும்தாலி அகற்றிக் கொள்வதும் ஒன்றா?, புதன், 22 ஏப்ரல் 2015 17:01

[9] Read more: http://www.viduthalai.in/component/content/article/72-2010-12-27-13-06-34/100150-2015-04-22-11-38-12.html#ixzz3Y5rhjTVv

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

நாடார்கள் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார்களா அல்லது அரசியல் லாபத்திற்காக பேசுகிறார்களா?; தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது[1]: “நேற்று மாலை 7மணி அளவில் மயிலாப்பூர் கோவிலில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய பெரியவரான விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலையும் அறுத்தெறிந்து பெரியார் வாழ்க என்று கோஷமிட்டவாறே அராஜகம் செய்துள்ளனர். கொளத்தூர் மணியை தலைவராக கொண்டுள்ள திராவிட விடுதலை கழகத்தினர் இச்செயல் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்கவியலாது. தமிழக பாரதிய ஜனதா கட்சி இதை மிக வன்மையாக கண்டிக்கிறது. அவரவர் கொள்கைகளை ஓங்கிப்பிடித்து கருத்துக்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்காக ஏதுமறியாத அப்பாவி பெரியவரை அவரது வீட்டிற்கு அருகிலேயே, நடுத்தெருவில் தாக்கியது மிகக் கொடூரமான செயல் என்பதோடு, அனைத்து தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். விஸ்வநாத குருக்கள், பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை கலை மற்றும் கலாச்சாரப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் மங்கலநாதனின் தகப்பனார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்திற்குப் பிறகு, அப்பெரியவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

 

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

பிரதான கட்சிகள் அமைகாக்கும் போதது, உள்ளூர் பிஜேபி மட்டும் கண்டிக்கிறது: கருத்துச் சுதந்திரமும், கொள்கைப்பிடிப்பும் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளும் அவரவரின் விருப்பு, வெறுப்புக்களைப் பொறுத்தது. இதில் மற்றவர் தலையீடு என்பது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும். திராவிடக் கழகத்தினர் இம்மாதிரியான கோழைத்தனமான செயல்களை அரங்கேற்றுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுடனும் உரிமைகளுடனும், விளையாடுவதை இனியும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் இதே மாதிரியான பிறிதொரு நிகழ்வு, நேற்று, மேற்கு மாம்பலம் சத்திய நாராயணா கோவில் அருகிலும் நடந்தேறியுள்ளது என்பதை நோக்குகையில், திராவிடக் கழகத்தினர் திட்டமிட்ட முறையில் இம்மாதிரியான நாகரீகமற்ற செயல்களை நடத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது. திராவிட விடுதலைக் கழகத்தினர் தமது கருத்துக்களை மற்றவர்கள் மீது நேரடியாகத் திணிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்து குழப்பத்தையும், வேறுபாடுகளையும் தோற்றுவிக்கும் இம்மாதிரியான அராஜக செயல்களை இனியும் அவர்கள் தொடராத வண்ணம் இந்நிகழ்வினை அனைத்துக் கட்சியினரும் வன்மையாகக் கண்டிக்க முன் வர வேண்டும். வன்முறையில் ஈடுபட்டுள்ள திராவிட விடுதலைக் கழகத்தின் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பினும் தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து இம்மாதிரியான அராஜகங்கள் தமிழ்நாட்டில் தொடராத வண்ணம் சட்டம் ஒழுங்கினைப் பேண வேண்டும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[2]. இருப்பினும் மற்ற பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருக்கின்றன[3].

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

தாக்கப்பட்டது எத்தனை பிராமணர், அறுக்கப்பட்டது எத்தனை பூணூல்: பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமல்ல, மற்ற சமூகத்தினருக்கும் புனிதமாக உள்ளது, எனவே, அதனை அவமதித்தல், அவற்றை அணிந்தவர்களைத் தாக்குதல் முதலியன குற்றம் ஆகும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது[4]. இருப்பினும் பிராமணர்களிடையே இது ஒரு பீதியினையும், பயத்தையும் கிளப்பிவிட்டுள்ளது என்றும் அறியப்படுகிறது[5]. 80லிருந்து 12 வயதுள்ள நான்கு பிராமணர்கள் தாக்கப்பட்டனர் என்று “தி டெலிகிராப்” தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. மேலே குறிப்பிட்ட இருவரைத் தவிர, திருவல்லிக்கேணியில் ஒரு வயதானவர் மற்றும் 12 வயது பையன் கோவிலுக்குச் சென்று வரும்போது தாக்கப்பட்டு, பூணூல் அறுக்கப்பட்டுள்ளது[7]. அப்படியென்றால், இவர்கள் இருவரும் பயந்துகொண்டு புகார் கொடுக்கவில்லை என்றாகிறது. இத்தகைய நிகழ்சிகள் 1960களிலிருந்தே நடந்து வருகின்றன. பூணூல் அறுப்புகளில் பலியான பிராமணர்கள் நிறைய பேர்கள் உள்ளனர். பொதுவாக பிராமணர்களை பயமுறுத்த அவர்களை “ஏய் பாப்பான்” என்று விளித்து ஏளனம் செய்வது, “என்ன ஐயரே?” என்று அடையாளங்காட்டி பேசுவது, “ஏ குடுமி, பார்த்து போ”, “ஐயரே வீட்ல அம்மா சௌக்கியமா?” என்ற பல தொணியில் கத்திப் பேசி அவர்களை கிண்டல் செய்வது என்பதைவிட, தாக்குதலில் ஈடுபடுவர். ஆனால், 90% பேர் அவற்றை வெளியில் சொல்வதில்லை. செய்திகள் வழியாகத்தான் இப்பொழுது விசயங்களை அறிய வேண்டிய நிலயுள்ளது. ஆனால், சாதாரண மக்கள் இருக்கும் செய்திகளைத் தேடி பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் செய்திகளை காலந்தாழ்த்தி வெளியிடுவது, முன்னும்-பின்னுமாக வெளியிடுவது, நடந்த கண்டனத்திற்குரிய குற்றத்தை முதலில் வெளியிடாமல், அதனை கண்டித்த செய்தியை முதலில் போடுவது போன்ற யுக்திகளை சித்தாந்த, பாரபட்ச மற்றும் வியாபார பலன்களை எதிர்பார்க்கும் ஊடகங்கள் கையாளுகின்றன.

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதாகிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்ச்சாரி படம் போட்டு விடுதலை திரிபுவாதம்: முன்பு பேஸ்புக்கில், ஒரு படத்தில் சங்கராச்சாரிரியார் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், அவருக்கெதிரே, கீழே பொன்.ராதாகிருஷ்ணன், உட்கார்ந்திருப்பது போலவும், இன்னொரு படத்தில் சுப்ரமணியன் சுவாமி அவருக்கிணையாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும் காட்டி, இப்படித்தான் நாடார்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது போல விவாதித்திருந்தார்கள். இப்பொழுது, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் பூணூல்-அறுப்பு விசயத்தில் கண்டித்து பேசியிருந்ததால், வீரமணி உடனே அப்படத்தைப் போட்டு, திரிபுவாதம் செய்திருக்கிறார்[8].  “கருங்சட்டை” என்ற பெயரில் பேஸ்புக்கில், சில இந்துக்கள் ஜாதி ரீதியில் விவாதித்தை இங்கு உபயோகப்படுத்தி விமர்சிக்கப்பட்டுள்ளது[9]. இந்துக்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். ஏனெனில், அது எதிரிகளுக்கு உபயோகமாகி விடும்.

Attack on temples racial in US and Tamilnadu also

Attack on temples racial in US and Tamilnadu also

இனவெறி குற்றங்கள் இந்தியாவில் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை?: சமீபத்தில், வெளியில் நடந்த ஒரு நிகழ்சியில், மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர் என்பவர், “ராஜிவ் காந்தி ஒரு நைஜீரிய நாட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், காங்கிரஸ் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா?”, என்று பேசினார். அதனை, காங்கிரஸ் ஊடகங்களின் உதவியோடு, ஊதி பெரிதாக்கி, அமைச்சர் உடல்-நிறம் பற்றி பேசி, இனரீதியில், பாரபட்சமாக தாக்கியுள்ளார், அதனால், பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். அவரும் அவ்வாறே, வெளியே-உள்ளே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதேபோல, தமிழகத்திலும், திராவிடக்கழகம் மற்றும் கருப்புப் பரிவார் கூட்டங்கள், மேலே எடுத்துக் காட்டியபடி, பலவிதங்களில் பிராமணர்களைத் தாக்கி வருகிறார்கள். அது இனரீதியில், இனவெறி மனப்பாங்கில் தான் உள்ளது. அத்தகைய இனவெறி மனப்பாங்கை, வார்த்தை தீவிரவாதம் முறையில் பேசி-எழுதுவதை விட, இவ்வாறான “கொலைவெறி” தாக்கிதல்களிலும் வெளிப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இப்பொழுது இந்து கோவில்கள் தாக்கப்பட்டு வருவதை, “இனவெறி தாக்குதல்” என்றே அடையாளம் கண்டுள்ளனர். அதேபோல, நாத்திகத்தால் இந்து மதத்தை மட்டும் தாக்கி, பிராமணர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப் பட்டுவருவதால், இவர்கள் அத்தகய குற்றங்களை செய்து வருவது கவனிக்கத்தக்கது. நாகரிகத்தில் சிறந்த, வளர்ச்சியில் உயர்ந்த, அதிக முன்னேற்றம் கண்ட ‪அமெரிக்கர் ‪ இனவெறி ரீதியில் இந்து கோவில்களைத் தாக்கி வருகின்றனர்! இங்கு ‪திகவினரும், கடந்த 60 ஆண்டுகளாக அதே குற்றங்களை செய்து வருகின்றனர்! பிறகு எப்படி இவ்விரு கூட்டத்தினரும் ஒரே குற்றங்களை செய்து வருகின்றனர்?

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] http://www.maalaimalar.com/2015/04/21133515/Thamizhisai-condemns-Traditiou.html

[2] மாலைமலர், பூசாரிகள் பூணூல் அறுப்பு: தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் , பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 1:35 PM IST

[3] The Bharatiya Janata Party’s Tamil Nadu unit president Tamizhisai Soundararajan said she was shocked and condemned the attacks. However, major political parties in the state were silent on the issue.

http://www.business-standard.com/article/news-ians/six-held-for-attacks-on-brahmins-in-chennai-115042101166_1.html

[4] http://newstodaynet.com/chennai/brahmins-attacked-poonool-cut-city

[5] G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015. http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[6]  Four Brahmins, including an 80-year-old and a 12-year-old, were attacked here by suspected activists of a fringe group who snapped their holy threads, the first such assaults in over two decades.

http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[7] A third elderly man and a 12-year old boy were attacked at Triplicane today while on way to a temple. G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015.

[8] http://www.viduthalai.in/page-8/100141.html

[9] கருங்சட்டை, வன்முறையைத் தூண்டுகிறார் மத்திய அமைச்சர்?, http://www.viduthalai.in/page-8/100141.html