ராமர் படம் அவமதிப்பு: 1971 முதல் 2018 வரை – செக்யூலரிஸ இந்தியாவில், இந்து–விரோத நாத்திக சக்திகளின் தூஷண வெறிச்செயல்கள் (3)
ராமர் படத்தை செருப்பால் அடித்ததை போலீஸார் தடுக்காமல் இருந்தது: திகவினர் மற்ற இந்து-விரோத ஆட்ககள் பத்து பேர் தான் கலாட்டா செய்து கொண்டு நடந்து சென்றனர். அவ்வாறு தெருக்களில் ஊர்வலமாக சென்ற போது, போலீஸார் தடுக்காமல், கூடவே சென்று கொண்டிருந்தது, வீடியோக்களில் அப்பட்டமாகவே தெரிந்தது. அதாவது, அதற்கு அவர்களும் துணை போனார்கள் என்றாகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ராமர் படத்தை அவமதிப்பு செய்ததாக அவர்கள் அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்[1]. இதைத்தொடர்ந்து, கைதான மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு. மகேசு, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இளையராஜா, தெ. மகேசு, தில்லைநாதன் உள்ளிட்ட 14 பேரும் 20-03-2018 செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், மயிலாடுதுறை நீதிமன்றம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி செல்லப்பாண்டியன் உத்தரவின்பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்[2]. பெரியார் சிலை சேதப்படுத்தியதை கண்டித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் தலைமையில் மறியல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
செக்யூலரிஸ ஆங்கில ஊடகங்களின் குறுகியத் தன்மை: “ராமர் படத்தை அவமதித்த 14 பேர் சிறையில் அடைப்பு” என்ற செய்தி பி.டி.ஐ [Press Trust of India, PTI] செய்தியாக வெளிவந்ததால், ஆங்கில ஊடகங்களிலும், சுருக்கமாக செய்தி வந்துள்ளது[3]. இந்துக்களின் மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டது பற்றி மூச்சுவிடவில்லை. மாறாக பெரியார் சிலையுடைப்புடன் முடிச்சுப் போட்டன. ஆனால், இதைப் பற்றி யாருமே கண்டுகொண்டதாக தெரியவில்லை[4]. ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறவில்லை[5]. செக்யூலரிஸ இந்தியாவில், இந்துக்களின் உரிமைகள் பற்றும் மூச்சு விடவில்லை[6]. இதே, வேறு மத கடவுளை செருப்பால் அடித்திருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும் போலிருக்கிறது. அண்ணாவின் மகேசன், தேவன் யார் என்பது மக்கள் மறுபடியும் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பெரியார் சிலையுடைப்புடன், இதனை முடிச்சுப் போடுவதும், விசமத்தனமாக உள்ளது[7]. ஏனெனில், ஒரு இந்து-விரோத நாத்திகனையும், ராமரையும் ஒப்பீடு செய்வதே மிக்கத் தவறாகும்[8]. இது எல்லாவித சித்தாந்தங்களுக்கும் ஒவ்வாத, போலித்தனமானது. ஆகவே, இதெல்லாம், வேண்டுமென்றே, திராவிடத்துவவாதிகள் திசைத் திருப்பும் போக்காக உள்ளது. ஆனால், ஆங்கில ஊடகங்களே அவ்வாறு செய்வது, பின்னணியில் ஒரு விதமான “செக்யூலரிஸ திட்டம்” இருப்பதை அறிந்து கொள்ளலாம்[9]. 23-03-2018 அன்று மயிலாடுதுறையில் கடைகள் அடைபட்டிருந்த செய்தியும் அவ்வாறே பி.டி.ஐ செய்தியாக வெளியிடப்பட்டது. இந்து அமைப்புகள் கண்டன ஆர்பாட்டம் அறிவித்திருந்ததால், 2000 கடைகள் மூட்டப்பட்டதாம்.
ராமர் படத்தை செருப்பால் அடித்த நிகழ்ச்சியை அடக்கி வாசிப்பது ஏன்?: போராட்டத்தின் போது ராமர் படத்தை அவமதித்த பேராசியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கண்டித்து இந்து கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் 23-03-2018 அன்று, கடையடைப்பு போராட்டம் நடந்தது[10]. மயிலாடுதுறை பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கச்சேரி சாலை, கும்பகோணம் ரோடு, மகாத்மா காந்தி சாலை, பட்டமங்கலம் சாலை, பெரிய கடை வீதி, பெரிய கண்ணார வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மயிலாடுதுறை பகுதியில் சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[11]. ஆக, இதனை, உள்ளூர் பிரச்சினை போன்று சித்தரிக்கப் படுகிறது. செய்தி பரவாமல், அமுக்கப் படுகிறது என்பது தெரிகிறது.
“இராமாயணம் – இராமன் – இராம ராஜ்ஜியம்” பெயரில் கலாட்டா, கலவரம்: 23-03-2018 அன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் “இராமாயணம் – இராமன் – இராம ராஜ்ஜியம்” என்னும் தலைப்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இராமராஜ்ஜியம் என்று சொன்னால் சம்பூகனுக்கு ஏற்பட்ட கெதிதான் சூத்திரர்களாகிய நமக்கெல்லாம் ஏற்படும் என்று விளக்கியது வேடிக்கையாக இருந்தது[12]. மேலும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கவனித்தால், யார் என்று கண்டு கொள்ளலாம். வால்மீகி ராமாயணத்தில் இல்லாததை சொல்லி, பிரச்சாரம் செய்து, கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று தெரிகிறது[13]. இப்பொழுது மறுபடியும் ராமரை வைத்து அரசியல் செய்வது திகவினர் மற்ற இந்துவிரோதிகள் என்று தெறிகிறது. இப்பொழுதுள்ள ராம-ராஜ்ஜிய ரதம் ஒன்றும் “அத்வானி ரதம்” போன்றது இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பு இருந்திருக்கும், கலாட்டா செய்தவர்கள், கைது செய்யப் பட்டு, இத்தகைய “ராமர் படத்தை செருப்பால் அடித்தவர்கள்” சிறையில் அடைபட்டிருப்பர். ஆகவே, இல்லாத பிரச்சினையை, பிரச்சினையாக்கி, பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக்க சதி நடந்து கொண்டிருப்பது தெரிகிறது.
© வேதபிரகாஷ்
24-03-2018
[1] தினமணி, ராமர் படத்தை அவமதித்த 14 பேர் சிறையில் அடைப்பு, By DIN | Published on : 22nd March 2018 09:49 AM.
[2] http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/22/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2885493.html
[3] மின்முரசு, ராமர் படத்தை அவமதித்த 14 பேர் சிறையில் அடைப்பு, மார்ச்.21, 2018.
[4]https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/232211/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-14-%E0%AE%AA%E0%AF%87/
[5] The First Post, Tamil Nadu: 14 arrested for desecrating Lord Ram’s portrait while protesting over Periyar statue vandalism, India PTI Mar 21, 2018 22:30:39 IST
[6] http://www.firstpost.com/india/tamil-nadu-14-arrested-for-desecrating-lord-rams-portrait-while-protesting-over-periyar-statue-vandalism-4400183.html
[7] Indian Express, 14 arrested for allegedly desecrating Lord Ram portrait in Tamil Nadu, By PTI | Published: 21st March 2018 11:34 PM ; Last Updated: 21st March 2018 11:34 PM.
[8] http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/mar/21/14-arrested-for-allegedly-desecrating-lord-ram-portrait-in-tamil-nadu-1790591.html
[9] Business Standard, 14 arrested for desecrating Lord Ram portrait in TN, Press Trust of India | Mayiladuthurai (TN), Last Updated at March 21, 2018 21:35 IST.
[10] மாலைமலர், பேராசிரியர் ஜெயராமனை கண்டித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு, பதிவு: மார்ச் 23, 2018 09:58.
[11] https://www.maalaimalar.com/News/District/2018/03/23095842/1152646/bandh-in-mayiladuthurai-Condemning-professor-jayaraman.vpf
[12] விடுதலை, இராமாயணம் – இராமன் இராமராஜ்ஜியம், 23-03-2018.