Posts Tagged ‘சிலை’

இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பதால் ஆரிய-திராவிட போர் நின்று விடுமா? மதராசி இந்தி மொழி பேசுபவரை சுகவாசி ஆக்குவார்களா? (3)

நவம்பர் 28, 2023

இந்தி எதிர்ப்பாளர்கள் இந்திக்காரர்களுக்கு, சிலை வைப்பதால் ஆரியதிராவிட போர் நின்று விடுமா? மதராசி இந்திமொழி பேசுபவரை சுகவாசி ஆக்குவார்களா? (3)

இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும்: பொய்களை விற்று அதில் கூலி பெற்று இளைஞர்களை ஏமாற்றும் கூட்டம் ஒரு புறம், வதந்திகளை பரப்பி – வன்முறையை விதைத்து தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடலாம் எனத் தப்புக் கணக்கு போடும் கூட்டம் மறுபுறம், தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்து விட்டுப் போன முதுகெலும்பற்ற கூட்டம் இன்னொரு புறம். இந்த மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொண்டு, மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் தி.மு.கழகமும் அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும். இளைஞரணி முன்னெடுத்துள்ள நீட் விலக்கு என்ற இலக்கினை வெற்றிகரமாக எட்ட முடியும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

தம்பி உதயநிதி அழைக்கிறார் என்று எழுதிய தந்தை: இவற்றை மனதில்கொண்டு, இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பதை நேற்றைய கூட்டத்தில் எடுத்துரைத்தேன். தேர்தல்களத்திற்கான பயிற்சிக்களமாக அமையவிருக்கும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார். கழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்துக் கிளைகளிலிருந்தும் தேர்தல் களத்திற்கான வீரர்களாக உடன்பிறப்புகள் திரளட்டும். கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும்.”. என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி தலைவர் இறந்த நாள், மகன் பிறந்த நாள், திராவிட ஆன்மீகத்தின் நிலை: சனாதன ஒழிப்புப் பேச்சினால் பாதிக்கப் பட்டுள்ள பிம்பத்தை மாற்ற இந்த அதிரடி யுக்திகள் செயல்படலாம். ஊடக பலம் இருப்பதனால், அவற்றை தொடர்ந்து மக்கள் மீது திணிக்கலாம். ஒரே நாளில் சிங்-நினைவு நாளில் சிலைதிறப்பு விழா மற்றும் மகன் பிறந்த நாள் என்றிருப்பதால், திராவிட ஆன்மீகம் உருத்துகிஅரது போலும். அதாவது, தன் மகன் பிறந்த நாளில், இந்த விழாவும் கொண்டாட வேண்டியுள்ளதே என்று நெருடலாக இருந்தது தெரிகிறது. அதனால், தான், தன் மனைவி, மகன் சகிதம், தனியாக இருந்து, இரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். மகன் பெற்றோரிடம் ஆசி பெற்றானாம், தாய் கன்னத்தில் முத்தமிட்டாளாம்! இதெல்லாம் திராவிட மாடலா, ஆரிய மாடலா, என்று தெரியவில்லை.

உபி அரசியலில் போட்டியாளர்-எதிரிகள் நண்பர்கள் ஆவது வினோதமே: ஏராத கட்சிகள் எல்லாம் ஒன்றாக கூட்டணியில் சேர்ந்தது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்றதால் தான். இதனால், துருவங்க/ல் பிஜேபி-கம்யூனிஸ்டுகள் ஒரே அணியில் இருந்து சிங்கை ஆதரித்தனர். அகிலேஷ் யாதவ் இதில் கலந்து கொண்டதே வேடிக்கையான விசயம் எனலாம். ஏனெனில், இவரது தந்தை முலாயம் சிங் 1990ல் வி.பி.சிங்கிற்கு எதிராக வாக்களித்து, சந்திரசேகருக்கு ஆதரவாக இருந்தார். அதனால், அவர் பிரதம மந்திரி ஆனார். வி.பி.சிங் காலத்தில் தான் ரூபையா சையத் கடத்தப் பட்டு, தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகமானது.

ரூபையா சையத் கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை: டிசம்பர் 8, 1989 அன்று ரூபையா சையது, இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப் பட்டனர். ஆனால், தினமும் அவளுக்கு வீட்டிலிருந்து உணவு சென்றது. டிசம்பர் 13, 1989 அன்று ரூபையா சையது விடுதலை செய்யப் பட்டாள். இந்திரகுமார் குஜரால், ஆரிப் முஹம்மது கான் மற்றும் பரூக் அப்துல்லா அங்கு சென்றனர். சிறைலிருந்து ஐந்து தீவிரவாதிகள் விடுவிக்கப் பட்டனர். காஷ்மீரில் தீவிரவாதம் பெருகியதற்கு, வி.பி.சி அரசு தான் என்று அப்துல்லா குற்றம் சாட்டியது, எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. அவளின் விடுதலைக்காக, தீவிரவாதிகள்  விடுதலை செய்யப் பட்டனர். இதுவமொரு “நாடகம்” என்று விமர்சிக்கப் பட்டது.

  1. செயிக் அப்துல் ஹமீது[Sheikh Abdul Hameed],
  2. குலாம் நபி பட் [a JKLF “area commander” Ghulam Nabi Butt, younger brother of the convicted and hanged rebel Maqbool Butt];
  3. நூர் மொஹம்மது கால்வால் [Noor Muhammad Kalwal];
  4. மொஹம்மது அட்லப்ஃ [Muhammed Altaf]; மற்றும்
  5. முஸ்டாக் அஹ்மத் ஜர்கர் [Mushtaq Ahmed Zargar.]

முதலிய தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொலை செய்யப் பட்டது, வெளியேறியது: வி.பி.சிங் 02-12-1989 முதல் 10-11-21990  December 1989 to 10 November 1990] வரை தான் பிரதம மந்திரியாக இருந்தார். ஆனால், அந்த குறுகிய காலத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகி, வன்முறை-கொலை என்று மாறியது. 19-01-1990 முதல் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகியது. ஜெ.கே.எல்.எப் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் காஷ்மீரில் இந்துக்களை மிரட்டி கொலை செய்தனர். பயந்தவர் காஷ்மீரத்திலிருந்து சுமார் 6 லட்சம் இந்துக்கள் வெளியேறி மற்ற இடங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். நீதி, சமூக நிதி, சமநீதி என்றெல்லாம் பேசும் நியாயவான்கள், தர்மவான்கள் வாய்களை மூடிக் கொண்டுதான் இருந்தார்கள். உரிமை, மனித உரிமை, பெண் உரிமை, பெண்ணிய உரிமை…….பேருபவும் மூடிக் கொண்டுதான் இருந்தார்கள்……..அக, இவையெல்லாமே இந்த சிங்க்ன் குறுகிய ஆட்சியில் நடந்து முடிந்தது.

ராமர் கோவில் விசயத்தில் முரண்பாட்டுடன் இருந்த சிங்: வி.பி.சிங் இந்தியில் சொன்னது இந்த திராவிடத்துவ வாதிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்! வி.பி.சிங்கிற்கு சிலை வைத்து, திறந்து விழா எடுத்திருக்கும் திராவிடத்துவ வாதிகளை நினைத்தால், படுகேவலமாக இருக்கிறது.  अरे भाई, वहां मस्जिद है ही कहाँ- ‘Arre bhai, wahan masjid hai hi kahan?‘  – Brother, is there a masjid there? – ‘ஏய் தம்பி, அங்கே மசூதி இருக்கிறதா? – என்றெல்லாம் பேசிய சிங், 15-08-1990 அன்று செங்கோட்டையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று பேசிய சிங் தான், ராமரத யாத்திரையின் போது முரண்பட்டார். இதனால், பிஜேபி ஆதரவை வாபஸ் வாங்கியதால், சிங் பதவி இழக்க நேர்ந்தது.

காஷ்மீர்-தமிழம் நிலை: காஷ்மீரத்தில் விபி சிங் ஆட்சியில் எப்படி இஸ்லாமிய தீவிரவாதம் வளர்க்கப்பட்டு இந்துக்கள் பாதிக்கப்பட்டனரோ, அதேபோலத்தான் இன்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதே போன்ற ஒரு நிலைமை உண்டாக்கி இங்கு தமிழகத்திலும் கையாளப்பட்டு வருகிறது. அடிக்கடி முஸ்லிம்கள் தங்களது சிறை-கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்து-பழிப்பு, இந்து-வெறுப்பு, இந்து-தூஷண காரியங்களும் அதிகமாகி கொண்டே வருகின்றன. முதலமைச்சர் முதல் மற்ற அமைச்சர்கள் தொடர்ந்து இந்து மதத்தினை, பலவழிகளில் விமர்சித்து, எதிர்த்து வருகின்றனர். சனாதன ஒழிப்பு என்பது சமீபத்தில் உண்டான சர்ச்சை, அது நீதிமன்றங்கள் வரை சென்றுள்ளது. எனவே முரண்பட்ட சித்தந்திகள் இவ்வாறு ஒன்றாக வருவது நிச்சயமாக ஒரு ஸ்திரமற்றத் தன்மையை தான் காட்டுகிறது. ஒற்றுமையை காட்டுவதாக இல்லை. விளம்பரத்திற்காக வேண்டுமானாலும் இவ்வாறு பணத்தை லட்சங்களில் செலவழித்து விழாக்கள் எடுக்கலாம், சம்பந்தமே இல்லாதபடி சிலைகள் வைக்கலாம், கொண்டாடலாம், ஆனால் பொது மக்களுக்கு இவை எல்லாம் நிச்சயமாக பெரிய விஷயங்களாக இருப்பதில்லை.

© வேதபிரகாஷ்

28-11-2023.

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

கருணாநிதி மதுரையில் சிலை வைத்தால், ஸ்டாலின் இங்கிலாந்தில் சிலை வைப்பார்: ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்[1]. அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15ஆம் நாளை தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்[2]. தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் தியாகப் பணிகளை நினைவுகூரும் வகையில் அவருடைய பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். மேலும், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்[3]. கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் மதுரை, தல்லாக்குளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அன்னாருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்[4]. தமிழக அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகரப் பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக்கின் பெயரைச் சூட்டியது[5].

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நீதிமன்றத்திற்குச் செல்வோம்: தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துகளைத் தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது[6]. தென் மாவட்ட மக்களின் நீண்டகாலத் தண்ணீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களைக் கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்...

ஆங்கிலேயர் காலத்திலேயே தெரிந்த உண்மைகளை மறைப்பது: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஏனெனில், ஆங்கிலேயர் ஒன்று தங்கள் பணத்தைப் போட்டு, எந்த நன்மையினையும் இங்கு செய்து விடவில்லை. பில்லியன்களில் இந்தியர்களிடம் வரிவசூல் மூலம் கொள்ளையடித்ததில்[7], கொஞ்சம் தங்களது போகுவரத்தி, வசதி போன்றவற்றிற்கு செலவிட்டனர். அணைக் கட்டும் விவகாரங்களிலும், தமது மிஷின்கள், பாகங்கள் முதலியவற்றை விற்பத்தில் கமிஷன் பெறலாம் என்ற நோக்கில் தான் செய்து வந்தனர். முன்னர் பழைய வீடுகளில் சாதாரண ஸ்விட்ச், காக்கடை மூடி / காஸ்ட் அயரன் மூடி முதலியவற்றில் “மேட் இன் இங்கிலாந்து,” என்றிருக்கும். அதனால் தான், அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று பொராட்டம் நடத்தினார். சுவதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார். ஏ.டி.மெகன்ஸி என்ற இஞ்சினியர், தமது நூலில் “பெரியாறு திட்டத்தைப் பற்றிய வரலாறு” பற்றி குறிப்பிட்டுள்ளார்[8].

2016 இக்கட்டுகதை எடுத்துக் காட்டப் பட்டது: ஆகஸ்ட் 2016லேயே, தீபா கந்தசாமி என்பவர், இதெல்லம் கட்டுக்கதை என்று எடுத்துக் காட்டியுள்ளார்[9]. சொத்தை விற்று அணை கட்டியது – அதெல்லாம் கட்டுக்கதை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், பென்னிகுவிக் பேரன் சொன்னதாக, குறிப்பிட்டார். ஆங்கிலேய கருவூல அதிகாரிகளுக்கு இவரது வேலை திருப்தி அளிக்கவில்லை, அதனால், மாவீரர் பட்டம் (knighthood) அந்தஸ்தும் கொடுக்கப் படவில்லை என்றும் பேரன் வருத்தப் பட்டுக் கொண்டார்[10]. ஏ.டி.மெகன்ஸியின் புத்தகத்தில் உள்ள விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜான் பென்னிகுவிக்கின் கல்லறை கல்லில் கூட அவர் கிரிக்கெட் ஆடினார் என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளதேயன்றி, அணைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்ப்டவில்லை. ஆகவே, இந்த அணைக்கும், இவருக்கும் ஏதோ பிரச்சினை உள்ளது என்று தான் தெரிகிறது.

2018 – எஸ்.ராமநாதன் பொறியாளர் எடுத்துக் காட்டியது: எஸ். ராமநாதன் FIE, பென்னிகுவிக்கை நினைவு கொள்வோம் என்ற கட்டுரையில், விவரமாக எழுதியுள்ளார்[11]. ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், “பெரியாறின் நீரை தடுத்து திசைத் திருப்ப வேண்டும் என்பது பழைய திட்டமே. (ஆங்கிலேயர்களால் முன்னர்) பல ஆய்வுகள் மேற்கொண்டு அது தேவையில்லை, நடைமுறையில் ஒத்துவராது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள்,”  என்றும் ராமநாத குறிப்பிட்டுள்ளார்[12]. அதாவது, பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இருப்பினும், வலுக்கட்டாயமாக,இதனைக் கட்டியது, இங்கிலாந்திலிருந்து மிஷின்களை வாங்கி இறக்குமதி செய்தது, முதலியன, வேறெதையோ சுட்டிக் காட்டுகிறது. ஒருவேள நிதி விவகாரங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான், கருவூல அதிகாரிகள் இவரது செயல்களில் திருப்தியடைவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

2022ல் வெண்ணிலா கூறுவது: அ. வெண்ணிலா என்பவர் விகடனுக்குக் கூறியது[13], “முதல்வரின் செய்திக் குறிப்பில்ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னி குக் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினார்என்றுள்ளது. பென்னி குக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது……[14] முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன்[15]. ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது[16]………. பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய ‘History of the periyar project’ நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார். சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம்”. இதை இவர் பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] NEWS18 TAMIL, தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலைமுதல்வர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published by: Karthick S, First published: January 15, 2022, 20:35 IST LAST UPDATED : JANUARY 15, 2022, 20:35 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-corporation-mayor-post-allocated-to-schedule-caste-woman-skd-667755.html

[3] தினகரன், தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, 12:07 pm Jan 15, 2022 | dotcom@dinakaran.com(Editor)

[4] https://m.dinakaran.com/article/news-detail/735010

[5] நக்கீரன், இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிக்குயிக் சிலை” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published on 15/01/2022 (12:30) | Edited on 15/01/2022 (12:33)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-government-will-be-set-penny-kwik-statue-england

[7]  தாதாபாய் நௌரோஜி, அம்பேத்கார் முதலியோர் எடுத்துக் காட்டியுள்ளனர். சமீபத்தில் சசிதரூரும் இதைப் பற்றி பேசி-எழுதியுள்ளார்.

[8] A.T.Mackenzie , Executive Engineer , who later wrote the book “ History of the Periyar Project “..

[9] Th Mint, John Pennycuick: The man who built the Mullaiperiyar dam, 11 min read . Updated: 28 Aug 2016, 12:04 AM IST. Deepa Kandaswamy.

 In the popular narrative, many claim that Pennycuick sold his property and his wife’s jewels to fund the dam’s construction. However, his great-grandson, Stuart Sampson, in an email said, “It is a myth. I have no evidence of this.” 

[10] Another common tale is that Pennycuick was subjected to an inquiry commission by the British government. To this, Sampson said, “I am not aware it. It seems clear that he did not make himself popular with the treasury officers of the Indian government. This is probably the reason why he did not receive a knighthood.” Deepa Kandaswamy is an award-winning freelance writer and author based in India.

https://www.livemint.com/Sundayapp/3PeedgK5bx4Z9uPKEE0KPL/John-Pennycuick-The-man-who-built-the-Mullaiperiyar-dam.html

[11] S. Ramanathan, Let us Remember Colonel John Pennycuick : Birthday Tributes , E-News: 31| January 2018, pp.3-5.

[12] He (Stuart Sampson) boldly uttered “ The idea of thus diverting the waters of the Periyar is probably very ancient. Surveys have been made in a some-what half- hearted manner, to condemn the idea as impracticable”.

http://ieimadurailc.org/images/newsletter/E-News__Jan_2018.pdf?fbclid=IwAR3WM28cWfM3wxS2n83UfehJGA6b5cdQmnP8dPctX5Z7076D_Y-UznIOKbA

[13] விகடன், சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குக்? முதல்வர் ஸ்டாலின் சொல்வது சரியா?, யுவநந்தினி சே, Published: 15th Jan, 2022 at 7:37 PM; Updated: 2 days ago.

[14] https://www.vikatan.com/amp/story/news/tamilnadu/article-about-stalins-announcement-on-john-pennycuick-birthday

[15] தமிழ்.ஏபிபி.லவ்,Writer Vennila on Pennycuick : ‘தன் சொத்தை விற்று முல்லை பெரியாறு அணைக் கட்டினாரா பென்னிகுயிக்?’ இல்லை என்கிறார் எழுத்தாளர் வெண்ணிலா..!, By: இராஜா சண்முகசுந்தரம் | Updated : 17 Jan 2022 12:45 PM (IST)

[16] https://tamil.abplive.com/news/tamil-nadu/did-john-pennycuick-sell-his-property-to-build-mullaperiyar-dam-here-is-writer-vennila-explanation-35663

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

இட்டுக்கதை, கட்டுக்கதை, மாயைகள் முதலியவற்றை உருவாக்குவதில் வல்லவர்கள் திராவிடத்துவ வாதிகள்: கட்டுக்கதைகளை உருவாக்குதில் திராவிடத்துவவாதிகள் கைத் தேர்ந்தவர்கள் ஆவர்.  அவற்றில் அரசியல் ஆதாயம், பணம், கான்ட்ராக்ட் கிடைக்கும் என்றால், பெரிதாக்கி ஊதுவார்கள்! சம்பந்தமே இல்லாத ஆட்கள் எல்லாம் திடீரென்று தோன்றி அதில் அதி-தீவிரமான விருப்பம் கொண்டிருப்பதைப் போலவும், அதற்கு உயிரையே கொடுப்பேன் என்ற ரீதியில் உழைப்பது போலவும் நாடகம் ஆடுவர். விவகாரங்கள் தெரிய வந்தால், சமாளித்துப் பார்ப்பார்கள், மாட்டிக் கொண்டால் அடங்கி விடுவார்கள், வழக்கு என்றெல்லாம் ஆகி விட்டால், எல்லாவற்றையும் அடியோடு மறைக்கப் பார்ப்பர்கள். திராவிடத்துவ சரித்திரம் என்றதே கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப் பட்டதே. எல்லாமே, ஒருதலைப் பட்ட கதைகள், அவர்களே வெளியிட்டுள்ள புத்தகங்கள், முதலியன…. அவற்றை சரிபார்க்க முடியாது, அவர்கள் சொல்லியுள்ளதை, எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தான் எழுது முறை ஆராய்ச்சி நெறிமுறை எல்லாமே நடந்து வருகிறது. சரித்திராசிரியர்கள் என்று பிரகடப் படுத்திக் கொள்பவர்களும், அவ்வாறே ஆதரித்து, விருதுகள், பட்டங்கள், நிதியுதவிகள் பெற்றுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். உண்மையுரைக்க அவர்களுக்கு திராணி இல்லை, மன்னசாட்சியும் கிடையாது. அப்படி செய்தால், தூக்கியெறியப் படுவர்.

திராவிடத்துவ வாதிகளின் பதினெண் புராணங்கள் உருவாக்கும் முறைகள்: பெரியார் புராணம், நாகம்மை புராணம், பெரியம்மை புராணம், பெஸ்கி புராணம், அண்ணா புராணம், கருணாநிதி புராணம், வீரமாமுனிவர் புராணம், தத்துவ போதகர் புராணம், எல்லீஸர் புராணம், ஜி.யு.போப் புராணம், வரிசையில் பென்னி குக் புராணமும் சேர்ந்துள்ளது. “நதிமூலம், ரிஷி மூலம் கேட்கக் கூடாது,” என்றால், இங்கும் மூலங்கள் கேட்கக் கூடாது, காண்பிக்கப் படாது. எழுதி வைத்ததைப் படி, ஒப்புக்கொள், பிரச்சரம் செய், கேள்விகள் கேட்காதே – என்பவை தான் ஆணைகள், ஏற்றுக் கொள்ளப் படவேண்டும். ஒருவர் முதலில் எழுதுவார், இன்னொருவர் விரிவாக்குவார், இன்னொமொருவர் இன்னும் கொஞ்சம் சேர்ப்பார், புத்தகங்கள் வெளிவரும், பிஎச்.டிக்களும் உருவாக்கப் படும், விழா எடுப்பர், விருதுகள்-பட்டகள் கொடுக்கப் படும், அவ்வளவு தான், பொற்றாமரைக் குளத்தில், பூமேடையில் வைத்து, தமிழ் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது போன்ற ரீதியில் அரங்கேற்றப் படும். கலைமாமணி, பெரியார் விருது என்றெல்லாமும் கொடுக்கப் படும்.

2018 – முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் பெயரால் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது:. முல்லைப்பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவப் பணிப் பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தவர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஒருபுறம் தென் மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் வாடுவதையும் மறுபுறம் பெரியாற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் பார்த்து, ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டலாம் என்று ஆங்கில அரசிடம் அனுமதி பெற்றார். பின் பாதி கட்டப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அணை உடைந்து ஆங்கில அரசு திட்டத்தை மூட்டை கட்டினாலும் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார். இன்றளவும் அவர் பெயரைச் சொல்லி பொங்கல் வைக்கும் அளவுக்கு அன்பும் நன்றியும் பாராட்டுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் பென்னி குக்கின் கொள்ளு பேரன் பேத்திகள் என டயானா ஸிப், ஸானி மற்றும் உறவினர்கள் என்று சிலர் தேனிக்கு வந்தனர்.ஆனால், இவர்கள் யாரும் பென்னி குக்கின் நேரடி வாரிசுகள் அல்ல என்பதும் இவர்களில் ஒருவர் மட்டும் பென்னிகுக்கிற்கு தூரத்து சொந்தம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

சந்தன பீர் ஓலி ஈடுபடுள்ளதாக, கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி குற்றம் சாட்டுகிறார்: கம்பம் அருகே உத்தமப்பாளையம் பகுதியைச் நேர்ந்த சந்தன பீர் ஓலி என்பவர், லண்டனைச்சேர்ந்த டயானா ஸிப் உள்ளிட்ட 3 பேரும் பென்னிகுக்கின் கொள்ளு பேத்திகள் என்று கூறி அறிமுகப்படுத்தி அழைத்து வந்ததோடு, லண்டனில் உள்ள பென்னிகுக் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையை சீர்செய்யவும் அங்கு பென்னிகுக்கிற்கு நினைவுச்சிலை எழுப்பவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள் கம்பம் பகுதி மக்கள். இந்நிலையில்  பென்னிகுக்கின் பேத்திகள் என்று நம்பி தாங்கள் உதவி செய்ததாக கூறுகிறார்கள் அந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தவர்கள்.  ஒரு பக்கம் பேரன், இன்னொரு பக்கம் பேத்திகள் என்று வருவதும் விசித்திரமாக இருக்கிறது.

கம்ப – கோவிந்தன் என்பவர் வழக்கு தொடர்வதாகக் கூறியது: இதனைதொடர்ந்து கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி தேனி கம்பம் பகுதியில் பென்னி குக்கின் பெயரில் நிதி வசூல் செய்தநிலையில், கொடைக்கானலில் பென்னிகுக் ட்ரஸ்ட் என்ற பெயரில் இதே சந்தன பீர் ஒலி என்பவர் பென்னிகுக்கின் நிலத்தை அபகரிக்க, முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்[1]. மேலும் 1‌980 வரை பென்னி குக் பெயரில் கொடைக்கானலில் இருந்த 21 ஏக்கருக்கும் அதிக நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார்[2]. இச்சுழலில் கம்பம் பகுதி மக்களின் புகார்கள் குறித்து லண்டனில் வசிக்கும் சந்தன பீர் ஒலியிடம் கேட்டபோது இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்தாலும், பென்னிகுக்கின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார் கோவிந்தன். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

ஜனவரி 2022 – ஸ்டாலின் – பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப் படும்: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தன்னிடம் இருந்த சொத்தை எல்லாம் விற்று அரும்பாடு பட்டு 1895-ம் ஆண்டு இந்த அணையை கட்டியவர் இங்கிலாந்தை சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுயிக். இந்த நிலையில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்[3]. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்[4], “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான இன்று (ஜனவரி 15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்[5].

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகரத்தில் அமைக்கப் படும்: கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்[6]. ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்[7]. அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்ங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன[8].

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] புதிய தலைமுறை, பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி: திடுக்கிடும் புகார் , NewsPT, Published :07,Dec 2018 08:14 AM.

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/39312/Fraud-in-the-name-of-PennyCuick-at-theni

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலை நிறுவப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, By Rayar A, Updated: Saturday, January 15, 2022, 13:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-statue-of-john-pennycuick-will-be-erected-in-england-on-behalf-of-the-government-of-tamil-nadu-say/articlecontent-pf640795-445443.html

[5] தினத்தந்தி, இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலைமுதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: ஜனவரி 15,  2022 12:25 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/15122526/Statue-of-Pennywick-in-the-UK–Announcement-by-Chief.vpf

[7] புதியதலைமுறை, இங்கிலாந்தில் பென்னிகுயிக்கிற்கு சிலை நிறுவப்படும்” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, தமிழ்நாடு,  கலிலுல்லா,  Published :15,Jan 2022 12:33 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/127124/John-Pennycuick-statue-will-be-installed-in-uk

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

செப்ரெம்பர் 22, 2021

பெரியார் பெயரில் சுற்றுலா தலத்தை அமைத்து வியாபாரம் செய்ய யுக்தி! விநாயகர் சிலையுடைத்தவனுக்கே சிலை வைப்பதே முரண்பாடு!! (2)

பெரியார் உலகம்சுற்றுலா தலம்நிச்சயமாக வியாபாரத்திற்கு வித்திட்டதே: பெரியார் பெயரைச் சொல்லி, திருச்சி-ஹைவேயில், இந்த பெரிய வணிக வளாகத்தைக் கட்டத் தீர்மானித்திருப்பது, நிச்சயமாக வியாபாரத்திற்குத் தான். ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது[1]. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன். இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம். இதனால், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டம் குறையும். அவர்கள் கவலைப் படுவார்கள். ஆக, பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இங்கு சென்றால், பலன் கிடைக்காது என்று யாராவது கிளப்பி விட்டால்[2], ஒருவேளை இந்த நாத்திக வளாகத்தின் முக்கியத்துவம் குறையலாம். ஆனால், மற்றவர்கள் வரத்தான் செய்வார்கள்.

நாத்திக ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!: புரட்டாசி மாதம் ஆரம்பித்தாகி விட்டது, சும்மா இருப்பார்களா, பெருமாள் கோவில் கொள்ளை நடந்துள்ளது! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் உள்ள கைகொடுக்கும் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் 18-09-2021 அன்று புரட்டாசி மாத முதல் சனி என்பதால் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில், இரவு கோவிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், மூன்றடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல் சிலையை திருடிச்சென்றுள்ளனர்[3]. 19-09-2021 அன்று பிற்பகலில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் மூலவர் சிலை மாயமாகி உள்ளதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக பெருமாள் விக்கிரகம் (மூன்றடி உயரம்), நகைகள் கொள்ளை,..எனும்பொழுது, திராவிட ஔரங்கசீப்புகள், மாலிகாபூர்கள் கிளம்பி விட்டனர்! ஒரு பக்கம் சிலை வைக்கிறோம் என்கிறார்கள், இன்னொரு பக்கம் சிலைகள் மாயமாகின்றன.

வெங்கடாஜலபதி விசயத்தில் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்துர்கா தம்பதியர்: 95 அடி உயரத்திற்கு சிலை உடைத்தவனுக்கு சிலை வைப்போம் என்கின்றனர், ஆனால், மூன்றடி வெங்கடாஜபதி சிலை திருடு போயுள்ளது. வேங்கட ராமசாமி நாயக்கருக்குக்கு சிலை வைக்கும் நாத்திக-இந்துவிரோதிகளுக்கு, வேங்கடாஜலபதி மீது ஏன் போர் என்று தெரியவில்லை! இந்த அழகில், மனைவி திருமலைக்கு சென்று கும்பிடு போடுவதும், திருமலை அர்ச்சகர்கள் கணவன் வீட்டிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்தி, மாலை போட்டு, கயிறு கட்டி விடுவதும் என்ன என்று தெரியவில்லை! இவற்றைப் பற்றி வீடியோ, புகைப் படங்கள் என்று அமர்க்களப் படுகின்றன. ஆனால், இத்தகைய விசயங்களில், ஸ்டாலின்-துர்கா தம்பதியர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றாகிறது. புருஷன்-நாத்திகன், பெண்டாட்டி-ஆத்திகன் என்று இருந்தால், அந்த திருமலை அர்ச்சகர்களை உள்ளே விட்டிருக்கக் கூடாது, மந்திரங்கள் சொல்ல அனுமதித்து இருக்கக் கூடாது, கயிறு கட்டுதல், போன்றவை நடந்திருக்கக் கூடாது. துர்கா, தனது கணவரிடம், “எதுக்குங்க இப்படியெல்லாம் நடக்கிறது, நீங்கள் கொஞ்சம் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?,” என்று கேட்கலாம், ஆனால், அவ்வாறு செய்வாரா என்று தெரியவில்லை.

ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழியில், இந்த பெரியார் உலகம் எழும்புகிறது:

  1. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்கப் படவு ள்ளது.
  2. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர்.
  3. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.
  4. ஶ்ரீரங்கத்திற்கு செல்லும் வழியில், திருப்பட்டூரில் உள்ள ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் சமீப ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக பிரசித்திப் பெற்று விட்டது. கரைவேட்டிகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது.
  5. முன்னமே, அவ்வாலயத்தில் உழவாரப் பணி செய்ததிலிருந்து, பிறகு பிரசித்திப் பெற்ற பிறகு, அவ்விடம் எவ்வாறு வணிகமயமாக்கப் பட்டுள்ளது என்பதனை விவரித்துள்ளேன்.
  6. இப்பொழுது, ஆயிரக்கணக்கில் கார்கள், பேருந்துகள் முதலியவை சென்று வரும் அந்த திருச்சி-ஹைவேயில், இந்த வளாகம் நிச்சயமாக, டிபன் சாப்பிட, சில நேரத்தை கழிக்க இங்கு வருவார்கள் என்பது திண்ணம்.
  7. ஶ்ரீரங்கம் போகும் வழியில், பல புராதன கோவில்கள் இருக்கும் வழி – மதுர காளியம்மன் கோவில், திருவாலீஸ்வரர் கோவில், / வாலி கண்டபுரம், ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் என்று பல கோவில்கள் உள்ளன.
  8. ஆக அந்த 27 ஏக்கர் நிலமும் கோவிலுடையதாக இருக்கலாம். பிறகு, அதில் “பெரியார் உலகம்” வருவது, சிலை வைப்பது??????

பெரியாருக்கு வியாபாரம் செய்ய, புதிய கதைகளை உருவாக்குகின்றனர்: ஈவேராவை ஊதிப் பெரிதாக்கியதால், அப்பிம்பம் ஏதோ பெரிதாகி விட்டது என்று நினைப்பது பெரியாரிஸ்டுகளின் நம்பிக்கை, மூட-நம்பிக்கை, முட-நம்பிக்கை, அது மடத்தனம் ஆகிறது! விடுதலை, முரசொலி, நக்கீரன், கலைஞர்-செய்தி, சன்-குழுமம் மற்ற திக-திமுகவினருக்கு ஜால்றா போடும் ஊடகங்கள், புதியா-புதிய புராணங்களை அவிழ்த்து விடுகின்றன. அஜிதன் சந்திரஜோதி உயிர் தொழில்நுட்பவியல் & மரபணு பொறியியல் ஆராய்ச்சி மாணவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரிதாக ரீல் விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4].   “நீங்கள் தமிழரா? அல்லது தமிழகத்தில் வசிக்கிறீர்களா? ஒருவேளை ஆம் என்றால்ஒன்று நீங்கள் பெரியாரை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்; இல்லையேல் எதிர்ப்பவராக இருக்க வேண்டும்;….” என்று ஆரம்பித்து, வக்காலத்து வாங்கிக் கொண்டு, புராணம் பாடுவது, ஏதோ, அரசவைப் புலவர், மேடைப் பேச்சாளி போன்றவதை விட தமாஷாக இருக்கிறது. ஏதோ 2021ல் இருப்பவர்கள் எல்லாம் இவர் சொல்லித் தான் மற்றவர்கள் நம்ப வேண்டும், ஈரோடு நாயக்கரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல எழுதியிருப்பது வேடிக்கைத் தான்.

ஈவேராவின் கதைகள் இருக்கும் பெரியார்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த குஞ்சுகள் சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை: இப்படி பொய்யான நம்பிக்கையினை உருவாக்கினால், அதனை அவர்கள் தாம், நம்ப வேண்டும்! 60/70/80 வயதானவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்! பவானி நதிக்கரை கூத்துகள் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகமே, ஆனால், இது போல, பொய்களை அள்ளிவிட கிளம்பியிருக்கிறார்கள். ஈவேராவைப் பார்த்து, பேசி, பழகியுள்ளவர்களுக்கு நாயக்கரைப் பற்றி நன்றாகவேத் தெரியும். மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாவம், நாத்திகர்களின் கடவுள் ஈவேராகி அவதாரம் மாறிய நிலை போலும்! தாம்பத்தியப் பிரச்சினை, பிறந்த குழந்தை இறந்தது, மனைவி இறந்தது, எல்லோருடனும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது, ……..பவனி ஆற்றங்கரை விவகாரங்கள், நாடகக் கம்பெனிகளுடன் சகவாசம், வீட்டை விட்டு ஓடினது, பணத்தால் அரசியலில் பெரிய ஆளாகி விடலாம் என்ற கனவு கனவானது, ஆங்கிலம் தெரியாதலால், எஸ்.ராமநாதன், அண்ணாவை நம்பி இருந்தது, ஐரோப்பிய சுற்றுலா பற்றிய ரகசியங்கள், அம்பேத்கர் இவரை நம்பாதது, ஜின்னா கழட்டி விட்டது, இப்படி ஏகபட்ட விவகாரங்கள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2021


[1] கார் வண்டிகள் நிறுத்த காசு, பூஜைப் பொருட்கள் விற்பனை, சிறப்பு தரிசனம், சுற்றிலும் ஏராளமான கடைகளும் முளைத்துள்ளன.முன்பு இவையெல்லாம் இல்லை.

[2]  அதாவது நாத்திகத்தை வைத்து ஆத்திகத்திற்கு எதிரான வியாபாரத்தை உரிய முறையில் அல்லது அதே மாதிரியான பிரச்சாரமுறையில் எதிர்க்கலாம்.

[3] இன்ஸ்டா.நியூஸ், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு, By A.Mahendran, Reporter 19 Sep 2021 6:00 PM.

https://www.instanews.city/tamil-nadu/chengalpattu/maduranthakam/temple-idol-theft-at-keelamoor-village-neat-melmaruvathur-1019243

[4] நக்கீரன், யார் அந்த பெரியார்? என்னதான் வேண்டுமாம் அவருக்கு?, Published on 18/09/2021 (06:06) | Edited on 18/09/2021 (09:36).

https://www.nakkheeran.in/nakkheeran/who-periyar-what-does-he-want/who-periyar-what-does-he-want

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும் – நஷ்டமடையப் போவது திமுக-தமிழக பிஜெபி தான் [2]

செப்ரெம்பர் 17, 2018

விநாயக சதுர்த்தியை கலவரமாக்கிய பெரியார் குஞ்சும், பிள்ளையார் பிறந்தநாளை அரசியலாக்கிய கருணாநிதி பிள்ளைகளும்நஷ்டமடையப் போவது திமுக-தமிழக பிஜெபி தான் [2]

பெரியார் ஜி டி நாயுடுக்கு வாழ்த்து கடவுளின் பெயரால் 1932. with English

பணசக்தியின் மகிமை, கலவரம் உண்டாக்கும்: வீரமணி தொடரும் கதை, வீரமணி தொடரும் கதை, “இப்போது செய்யப்படுவது தன்னிச்சையான பக்தியின் எழுச்சியால் அல்ல; பண சக்தியின் மகிமையே! அதுவும்கூட நாளுக்கு நாள் மங்கி குறைந்துதான் வரு கிறது! அறிவுபூர்வ பிரச்சாரத்திற்குப் பதில் இதை ஊடகங்கள் ஊதுவதால் அதற்குத் தனி மகிமைபோல சித்தரிக்கப்படுகிறது!

மூட நம்பிக்கையாளர்கள்அழுக்குருண்டைகணபதியை கம்ப்யூட்டர்மூலம் புகுத்தி, அறிவியலை மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுக்க வைப்பது அறியாமையின்அபத்தத்தின் வெளிப்பாடு! கோவில் திருவிழாக்களில்தானே பெரும் கலவரங்கள் வெடிக்கின்றன! தடையால் கோவில் கதவுகளுக்குப் பூட்டும் போடப்படுகிறதேபக்தியோ, மதமோ மக்களைப் பிளவுபடுத்துகிறதே தவிர, ஒன்றுபடுத்தப் பயன்படவில்லை என்பது உண்மை! இவைதான் இன்றைய பிள்ளையார்? என்பதைப் புரிந்துகொண்டு, மதவெறியை விரட்டி, மனிதநேயம் காக்க அணிவகுப்பீர் திராவிடர்களே!” தலைவர், திராவிடர் கழகம், சென்னை 13.9.2018”.

இப்படி அளந்து விட்ட உடனே, செங்கோட்டையில் துலுக்கர், விநாயக சிலையை உடைத்து, மாரியம்மன் கோவிலை சேதப் படுத்தி, கலவரத்தை உண்டாக்கியுள்ளனர்[1]. அப்படியென்றால், திக, வீரமணி முதலியோர் தான், துலுக்கரைத் தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றாகிறது. அதாவது 2018ல், தற்பொழுதைய நிலையில் கலவரங்கள் உண்டாகும் என்பது முன்னமே தெரிந்து, எழுத்துப் பூர்வமாக அறிக்கை விட்டுள்ளதிலிருந்து தெரிகிறது. மேலும், அதிலும் அந்த “அழுக்குருண்டைகணபதி” என்று தூஷித்திருப்பதை கவனிக்கலாம். அதாவது, இந்துவிரோதத் தனத்தை வெளிப்படுத்தும் போக்கு!

திக-திமுகவின் பிரச்சாரமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது[2]. தென் மாவட்டங்களில் – இப்பகுதிகளில் விநாயகர் கோவில் அவமதிப்பு, சிலைகளை உடைப்பது போன்றவை கடந்த ஆண்டுகளில் துலுக்க செய்து வந்துள்ளனர். 2009ல் நான்கு துலுக்கர் கைது செய்யப் பட்டனர்[3]. இந்தியாவில் துலுக்கர் என்றால், இலங்கையில் பௌத்தர்களே அந்த வேலையை செய்து வருகிறார்கள்.

Mohammedans, Buddhists attack Hindu temples-2018

விநாக சதுர்த்தியும், ஸ்டாலினும், தமிழிசையும்: நேற்று  [13-09-2018] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் அதுகுறித்து ஒரு ட்வீட்டை பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பதிவிட்டுள்ளார்[4]. அவர் அதில் சன் தொலைக்காட்சியையும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார். அதில், “திமுகவின் TV விடுமுறை தின நிகழ்ச்சி என விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். விநாயகர்தின வாழ்த்து சொல்ல மனமில்லாதவர்கள் வியாபாரத்திற்காக விநாயகரை விடுமுறைக்குள் அடைக்கிறார்கள்.விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது என்பதே உண்மை[5]. அதாவது, ஸ்டாலினின் இந்துவிரோதமும், வெளிப்படையாகி விட்டதால், மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

Vinayaka caturti politics-2018 - Tamilisai-Stalin

2014- ஸ்டாலின் விநாயக சதுர்த்தி வாழ்த்தும், மறுப்பும்[6]: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது. “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட விநாயகர் ஓவியத்துக்கு சுமார் 3,000 லைக்குகளும், 250-க்கும் மேற்பட்ட ஷேர்களும் கிடைத்தன. இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணையதளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

Stalin, Karunanidhi Caturthi politics 2014-18

மு.க.ஸ்டாலினின் இணையதளத்தை பராமரிக்கின்றவர்களில் சிலர் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[7]. இந்த பதிவு அப்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கருணாநிதி கடும் அதிருப்தி வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, ஸ்டாலின் மீதும், திமுக தலைமை மீதும் இந்துக்களில் சிலருக்கு அப்போது அதிருப்தி ஏற்பட்டிருந்தது[8]. சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி உட்பட இந்துக்கள் பண்டிகைகளுக்கு எப்போதும்போலவே, திமுகவோ, ஸ்டாலினோ வாழ்த்து கூறுவதை தவிர்த்து வருகிறார்கள்[9]. கருணாநிதியைப் பொறுத்த வரையில், இறக்கும் வரை இரட்டை வேடம் போட்டு, அனைவரும் ஏமாற்றியுள்ளார். அதற்கு கனிமொழி வக்காலத்து வாங்கிய முறைலேயே தெரிந்து விட்டது. இனி, தேர்தல் நேரத்தில் ஸ்டாலின், இத்தகைய இந்துவிரோத போக்கைக் காட்டினால், பிஜேபி கூட்டு வரும் போது, மறுபடியும் பிஜேபி ஓட்டுகள் சிதறும். பிஜேபி வேட்பாளர்கள் தமிழகத்தில் தோற்பர். அதனால், திராவிட அரசியல் வலுபெறும். இதனை தமிழ பிஜேபி புரிந்து கொள்ளாமல் இருக்கிறது.

Stalin greeted Vinayaka Caturthi and withdrawn in 2014

2018 – கருணாநிதிகளின் பிள்ளைகள் சண்டை: இந்த நிலையில்தான், மு.க.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு பூச்செண்டு எமோஜி போட்டுள்ளார். இதேபோல தயா அழகிரி நேற்று வெளியிட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியை அழகிரி ரீட்வீட் செய்துள்ளார். இந்துக்களை கவரும் நோக்கத்தில் அழகிரி இப்படி செய்து ஸ்டாலின் வாபஸ் பெற்ற அந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை நினைவுபடுத்தியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்வாதிகளை யாரும் நம்பப் போவதில்லை. இருப்பினும், “முஸ்லிம் ஓட்டு வங்கி” ரீதியில், ஜாதிகள் ஓட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், இந்துக்களும் பல கட்சிகள், பேனர்களின் கீழ் பிரிந்துள்ள நிலையில், குறிப்பிட்ட ஓட்டுகளை பெற அரசியல்வாதிகள், கூட்டு பேரத்தில் சரிகட்டலாம். இருப்பினும், நாத்திகர் / திராவிட கட்சியினரும் இந்துக்களை ஏமாற்றப் போகின்றனர்.

© வேதபிரகாஷ்

16-09-2018

Paki youth ebjoy Ganesh bhajan and pray for peace - Sept.2018

[1] நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று முன்தினம் [13-09-2018] விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக் கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக அங்கு பதற்றம் நீடித்தது. செங்கோட்டையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி, செங்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடை உத்தரவு நேற்று) முதல்  இன்று காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா கூறியுள்ளார். இந்தநிலையில்,  செங்கோட்டை, தென்காசி, ஆகிய வட்டங்களில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று நெல்லை எஸ்.பி அறிவித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி காலை வரை  அமலில் இருக்கும் எனக்கூறினார்.  விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான பிரச்சனையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி, செங்கோட்டை, தென்காசி, ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு, பதிவு: செப்டம்பர் 15,  2018 20:38 PM

https://www.dailythanthi.com/News/State/2018/09/15203805/144-prohibition-order-extension.vpf

[2] வேதபிரகாஷ், தி..காரர்களை விநாயகன் பார்த்துக் கொள்வான் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே?, செப்டம்பர் 9, 2010.

https://dravidianatheism.wordpress.com/2010/09/12/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

[3] தினமலர், முஸ்லிம்கள் கோவில் சிலை உடைப்பு: கைது செய்யப்பட்டனர்! கோயில் சிலையை உடைத்த கல்லூரி மாணவர்கள், டிசம்பர் 13, 2009.
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14670

[4] நக்கீரன், விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது… –தமிழிசை, கமல்குமார், Published on 14/09/2018 (10:42) | Edited on 14/09/2018 (11:09)

[5] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamizhisai-soundararajan-tweet-about-sun-tv-and-stalin

[6] தமிழ்.இந்து, மு..ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: திமுக விளக்கம், Published : 31 Aug 2014 14:37 IST; Updated : 31 Aug 2014 14:37 IST.

[7]https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6366910.ece

[8] தமிழ்.ஒன்.இந்தியா, விநாயகர் சதுர்த்தி.. ஸ்டாலினுக்கு செக் வைக்கும் அழகிரி, By Veerakumar Published: Thursday, September 13, 2018, 13:01 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-alagiri-extended-his-vinayagar-chaturthi-greeting-329659.html

சிலை, உருவசிலை, திருவுருவ சிலை, பெரியாரின் திருவுருவசிலை – துணி போட்டு மூடுலாமா, கூடாதா – இதில் உள்ளது அரசியலா, பகுத்தறிவா, செக்யூலரிஸமா, எது?

மார்ச் 12, 2016

சிலை, உருவசிலை, திருவுருவ சிலை, பெரியாரின் திருவுருவசிலை துணி போட்டு மூடுலாமா, கூடாதா இதில் உள்ளது அரசியலா, பகுத்தறிவா, செக்யூலரிஸமா, எது?

Statues of Anna and Periyar near Tirupur railway station spotted with garlands put by Dravidar Viduthalai Kazhagam 15-03-2014தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. தேர்தலில் ஓட்டுகள் சின்னங்கள், உருவங்கள், அடையாளங்கள், குறியீடுகள் முதலியவற்றை மக்களின் மனங்களில் பதிய வைத்து, அதன் மூலம் தமக்கு சாதகமாக ஓட்டுகளைப் பெறுவது வழக்கமாக அரசியல்வாதிகள் கொண்டுள்ளனர். படிக்காதவர்கள் சின்னங்களை வைத்துக் கொண்டுதான், ஓட்டுகளைப் போடுவார்கள் என்பதனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிடக் கட்சிகள் எல்லாமே அத்தகைய விளம்பரங்களில், பிரச்சாரங்களில், ஓட்டுக் கேட்கும் வித்தைகளில் வித்தகர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் விதிமுறை என்று கூறி, கோயம்புத்தூர் முதலிய பல இடங்களில் பெரியார் சிலைகளை மறைத்தும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளையும் தேர்தல் ஆணையம் அகற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது[1]. திராவிடர் விடுதலை கழகம் என்பது திராவிட கழகத்தின் உதிரிகளில் ஒன்றாகும்.  இவையெல்லாம் தாமும் இருக்கிறோம் என்பதனை எடுத்துக் காட்டுவதற்காக, அவ்வப்போழுது, ஏதாவது ஒரு கலாட்டா, ஆர்பாட்டம், எதிர்ப்பு, வழக்கு என்று ஈடுபடுவர்.

DVK petioned before Tiruppur collector, 12-03-2014பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது என்று தொடுத்த மனு: திராவிடர் விடுதலை கழகத்தின் [Dravidar Viduthalai Kazhagam (DVK)] அமைப்பு செயலாளர் ரத்தினசாமி [Petitioner Rethinasamy, Organaisation Secretary, DVK] ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[2]: “சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டுள்ளனர்.  எங்களது இயக்கம், அரசியல் கட்சி கிடையாது. தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதேபோல, தந்தை பெரியார் அரசியல் தலைவர் இல்லை. அவர் சமூக சீர்திருத்தவாதி.கடந்த முறை தேர்தலின்போது, பெரியாரின் சிலைகள் இதுபோல் மூடவேண்டும் என்று அதிகாரிகள் கூறியபோது, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பெரியாரின் சிலையை மறைக்க தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு விவரங்களை, கோவை தேர்தல் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும், அவர்கள் பெரியாரின் சிலையை துணியால் கட்டி மறைத்துவிட்டனர். எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலையை மறைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது[3].

பெரியார் விக்கிரகம், பூசனிக்கய் சிலை இத்யாதிபெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை: இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா [Justices M M Sundaresh and S Vimala] ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது[4]. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் டி. அருண், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வக்கீல் நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[5]: “தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், தந்தை பெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்றார். இதற்கு அர்த்தம் என்ன அர்த்தம் என்றால், மாநிலம் முழுவதுமுள்ள பெரியாரின் சிலைகள் மறைக்கப்படாது என்பதாகும். மேலும், கொடியை பொருத்தவரை, தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். அந்த மனுவை தேர்தல் ஆணையம் விரைவாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்[6]. இந்த மனுவை முடித்துவைக்கிறோம்”, இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்[7].  ஆகையால், தேர்தல் ஆணையம் இது விசயமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை கவனிக்க வேண்டும்[8]. இது பி.டி.ஐ செய்தியாகி விட்டதால், அச்செய்தி அப்படியே ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டுள்ளது[9].

நாத்திகச் சின்னத்திற்கு மாலை, மரியாதை, பூஜை எல்லாம்கடந்த ஆண்டுகளில் நடத்தியுள்ள போரட்டங்கள், வழக்குகள்: கடந்த 2014ல் கூட திருப்பூரில் இவ்வ்வாறு இக்கட்சியினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர்[10]. அப்பொழுது திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[11]. திராவிடர் கழகம் 2011லேயே தேர்தல் நேரத்தில் பெரியார் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆணையிட்டதை சுட்டிக் காட்டினர். பிறகு தேர்தல் ஆணையம் அப்பொழுது உயிரோடுள்ள தலைவர்களின் சிலைகளைத் தான் மூட சொன்னதாக தெளிவு படுத்தியது[12]. அதாவது, இறந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என்றாகியது. உருவவழிபாட்டை மறுக்கும் நாத்திகக் கூட்டங்கள், இவ்வாறு சிலைகளை மூடக்கூடாது என்று நீதிமன்றங்களில் வாதிடுவது வியப்பாகத்தான் இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் உயிருள்ளவர்களின் சிலைகள் மற்றும் உயிரற்றவர்களின் சிலைகள் என்றெல்லாம் பிரித்து விளக்கம் அளித்தது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் போதே, சிலை வைத்துக் கொண்டது கருணாநிதி தான் என்று தெரிகிறது. 1987ல் எம்,ஜி.ஆர் இறந்தபோது, ரசிகர்கள் அச்சிலையை உடைத்தெறிந்தனர். அதற்குப் பிறகு, கருணாநிதியும் தனது சிலையிப் பற்றிக் கவலைப்படவில்லை, திமுகவினரும் கவலைப்படவில்லை.

நாத்திகச் சின்னத்திற்கு மாலை, மரியாதை, பூஜை எல்லாம் வீரமணி, ரங்கநாதன்பெரியார் சிலை அரசியல், சின்னம், வியாபாரம்: சிலை, உருவசிலை, திருவுருவசிலை, பெரியாரின் திருவுருவசிலை, பெரியாரின் திருவுருவ சிலை என்றெல்லாம் திக உதிரிகள் கூறி வருவது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியார்” ஒரு சின்னமாகி விட்டப் பிறகு, பல கட்சிகள் அவர் பெயர், உருவன் முதலியவற்றைப் போட்டு ஓட்டுகள் கேட்கும் போது, அவரை, அவரது சிலையை-உருவத்தை சின்னமாக உபயோகப்படுத்தப் படுகிறதா இல்லையா என்பதனை தெரிந்து கொல்ளலாம். மேலும் திராவிட கழகம், பெரியார் சிலையை வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறது. ஶ்ரீரங்கத்தில் கோவில் கோபுரத்தின் முன்பாக, சிலையை வைத்து, பிரச்சினைக் கிளப்பியதை தகிழக மக்கள் அறிவர். ஆட்சி அதிகாரம், போலீஸார் முதலியவற்றை வைத்துக் கொண்டு தான், அத்தகைய “செக்யூலரிஸ” வெறித்தனம் நடந்தேறியது. அர்ச்சகர் படிப்பு, படித்து விட்டப் பிறகு வேலை போன்ற சர்ச்சைகளிலும், பெரியார் சிலை உபயோகப்படுத்தப் பட்டு வந்துள்ளது. பூம்புகார் போன்ற அரசு-சார் நிறுவனஙள் பெரியார் சிலைகளை உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருக்கின்றன. உண்மையில் எதிர்கட்சிகள் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும், ஆனால், பெரியாரை சின்னமாகக் கொண்ட அவை எதிர்க்காது. பிறகு, பிஜெபி போன்ற கட்சிகள் நீதிமன்றங்களில் சட்டரீதியாகக் கேட்க வேண்டும். ஆனால், அப்படி செய்தால், கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட கிடைக்காமல் போய்விடும் என்று அமைதியாகத் தான் இருக்கும். அந்நிலையில், இத்தகைய வரைமீறல்கள் இருக்கத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

12-03-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் சிலைகளை மறைக்கும் திட்டம் எதுவும் இல்லை: தேர்தல் ஆணையம் உறுதி, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 3:18 [IST].

[2] http://www.dailythanthi.com/News/State/2016/03/12023419/No-intention-to-cover-Periyar-statues-CEO-tells-HC.vpf

[3] தினத்தந்தி, தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல், மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 2:34 AM IST.

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/does-not-plan-hide-the-periyar-statues-ec-confirmed-248804.html

[5] நியூஸ்.7, பெரியார் சிலைகளை மறைக்கும் எண்ணம் இல்லை: தேர்தல் ஆணையம், Updated on March 11, 2016.

[6] Disposing of the petition, a division bench, comprising Justices M M Sundaresh and S Vimala, said it was open to the petitioner to make a detailed representation to the respondent (EC) which should consider the same and take appropriate action.

http://www.business-standard.com/article/pti-stories/no-intention-to-cover-periyar-statues-ceo-tells-hc-116031101188_1.html

[7] http://ns7.tv/ta/no-intention-hiding-periyar-statues-ec.html

[8] Business Standard, No intention to cover Periyar statues, CEO tells HC, Press Trust of India ,  Chennai March 11, 2016 Last Updated at 20:14 IST.

[9] http://www.ptinews.com/news/7207976_No-intention-to-cover-Periyar-statues–CEO-tells-HC-

[10] http://www.thehindu.com/news/cities/Coimbatore/stir-against-covering-periyar-statue/article5776180.ece

[11] Dravidar Viduthalai Kazhagam members at the Tirupur Collectorate on Tuesday to petition election officials against the covering of Periyar’s statue with black cloth, soon after the election dates were announced. Photo: R. Vimal Kumar, The Hindu dated March.12, 2014.

[12] http://www.thehindu.com/news/cities/Coimbatore/veil-goes-off-statues-of-anna-periyar-in-tirupur/article5787646.ece