Posts Tagged ‘விளம்பர வியாபாரம்’

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2013

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

வயதாகியும் புத்தி மாறவில்லை என்பது கருணாநிதி விஷயத்தில் மெய்யாகிறது. நாத்திகம் என்ற “லைசென்ஸ்” இருந்தால் இந்துக்களைபற்றி எதுவேண்டுமானாலும் பேசலாம், இந்துமதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், இந்துமதநம்பிக்கைகளைப் பற்றி எப்படியும் விவாதிக்கலாம் என்ற எண்ணம், தைரியம் மிகவும் மோசமானது, கேவலமானது. ஏனெனில், “விஸ்வரூபம்” இவர்களின் போலித்தனத்தை முழுவதுமாகத் தோலுறுத்திக் காட்டி விட்டது. நாத்திக உடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி விட்டது. பகுத்தறிவை ரணகளமாக்கி விட்டது, இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சுரணை மேலாக “சுயமரியாதை” கூட இல்லாமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

அன்று மணல்மேடு என்று சொன்னவர்கள் இன்று ராமர் பாலம் என்று சொல்லுவதா? கலைஞரின் அறிவார்ந்த வினாவிடுதலை[1], திங்கள், 25 பிப்ரவரி 2013 15:52

சென்னை, பிப்.25-  அன்று வெறும் மணல் திட்டு என்று சொன்னவர் இன்று ராமர் பாலம் என்று முரண்படுவது ஏன் என்று அறிவார்ந்த வினாவை எழுப்பினர் தி.மு.க தலைவர் கலைஞர். முரசொலியில் இன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

உடன்பிறப்பே, இந்திய  உச்சநீதி மன்றம் 2007ஆம் ஆண்டு  செப்டம்பர் முதல் தேதியன்று சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்றுப் பாதை பற்றிப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசை அறிவுறுத்தியது.   அதன்படி 20.7.2008 அன்று  டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில்  வல்லுநர் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத் தது.   வல்லுநர் குழு 12-2-2012 அன்று தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 11 மாதங்கள் கழித்து, இப்போது மத்திய அரசு பச்சௌரி குழு வழங்கியுள்ள  அறிக்கையின் மீது  தனது  கருத்துக் களைத் தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் 23-2-2013 அன்று  பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.   அந்தப் பதிலில், ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமை யிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சௌரி  குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத் திடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன்  தாக்கல் செய்தார்.

அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச்சௌரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்தப் பதிலைப் பற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திரு. ரவிசங்கர் பிரசாத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எந்தவொரு சூழ்நிலையிலும் ராமர் பாலத்தை அழிக்கும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புக்களும்,  சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும், பா.ஜ.க.வைப் பின்பற்றி இதே கருத்தைத்தான்  உச்சநீதிமன்றத்திலே  வலியுறுத்தி இருக்கின்றது.

8.5.2002 அன்றே நான் அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களுக்கு  எழுதிய கடிதத்திலேயே  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவரங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.   23.7.1967 அன்று சேது சமுத்திரத்தின் ஒரு பிரி வாக உள்ள தூத்துக்குடித் துறைமுகத் திட்டம், சேலம் இரும் பாலைத் திட்டம்  ஆகியவற்றை நிறைவேற்றக் கோரி அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறி வித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 6 எண் பாதை முடிவு

இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால் வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பினைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் நீண்ட நாட்களாக கிடப்பிலே போடப்பட்டது.  மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு அமைந்ததும்,  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய சாத்தியக் கூற்றினை ஆராய  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  சேது சமுத்திரக் கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம்  மற்றும் அதற்கான விவரங்கள் பா.ஜ.க. பிரதமரான  திரு. வாஜ்பாய் அவர்கள் தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு ஆறாவது எண்  பாதை (ஆடம்ஸ் பாலம் அதாவது பாஜக தற்போது ஏற்க முடியாது என்று கூறுகின்ற  ராமர் பாலம்) முடிவு செய்யப் பட்டது.  இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் எந்தப் பாதையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதை மறந்து இன்றைக்கு  அது ராமர் பாலம் உள்ள இடம் என்றும், அங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் பா.ஜ.க. வினர் தற்போது கூறுவது எத்தகைய முரண்பாடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. மட்டுமல்ல;  இங்கே தமிழகத்தில்  ஆளு கின்ற அ.தி.மு.க. வின் சார்பில்  2001  தேர்தல் அறிக்கையில்;  இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொ டர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை.  மேற்கிலிருந்து கடல் வழி யாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால்,  இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற் குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம்.  இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று  ஆடம்ஸ் பாலம் அமைந்துள்ள பகுதியில்,  ராமர் பாலம்  என்று இப்போது சொல்கிறார்களே, அதே இடத்தில் அங்கே இருக்கும் மணல் மேடுகள், பாறைகள் ஆகியவற்றை அகற்றி விட்டு கால்வாய் அமைப்பதுதான் தலையாய நோக்கம் என்று சொன்னவர்கள், இன்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று சொன்னால்  அது எத்தகைய முரண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.   தி.மு. கழகத்தின் முயற்சி யினால் இந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்ற உள் நோக்கம் தானே காரணம்?

தேர்தல் அறிக்கையில் சொன்னது மாத்திரமல் லாமல், அ.தி.மு.க. தலைவி  ஜெயலலிதா  26.6.2005 அன்று விடுத்த நீண்ட அறிக்கை ஒன்றில் என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத் திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற் கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி;  தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது.  இந்நிறுவனத்தின் அறிக்கையும்,  1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது.  இவ்வாறாக, சேது சமுத் திரக் கால் வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்து வதற்கு நான் முக்கியக் காரண மாக இருந்திருக்கிறேன்” என்று அன்றைக்கு இத்திட்டத்திற்கே தான்தான் காரணம் என்பதைப் போலச் சொல்லிக் கொண்ட வரும் இதே ஜெயலலிதா தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சேது திட்டம்  நிறைவேற்றப் படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக் கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ்  மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் கடல் சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின்  பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும்; மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்;

இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறை முகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப் படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத் திரத் திட்டத் தின் மூலம் ஆண்டுக்கு  8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும்  மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும்;

ராமேஸ்வரம், மற்றும் நாகப்பட்டினம்  துறைமுகங்கள் மேம்படுத்தப் படுவதன் வாயிலாக  சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிட்டும்; சேது சமுத்திரக் கால்வாயை  பயன்படுத்து வதன்  மூலம்  இந்தியா வின் கிழக்கு மற்றும் மேற்கு  கடல் பகுதி களுக்கு  இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம்  சுமார் 424 மைல் அளவுக்கு குறையும்.  இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது.  கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி  சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை  மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளை கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத்திற்கென  ஒருங்கிணைப்புத் துறை முகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறை முகமாக பெருமளவில்  வளர்ச்சி அடை யும்; கடற் படை மற்றும் கடலோரப் படை கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு அதி விரைவில் செல்ல இயலும்.   இதன் மூலம் இந்தியப் படைத் திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமனாதபுரம், நாகப் பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் இத்தகைய  ஏராளமான பயன் களைக் கருத்திலே கொண்டுதான்,  அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உரு வானபோது அதன் குறைந்தபட்சச் செயல் திட்டத்தில் தி.மு. கழகத்தின் முயற்சியால்  சேது சமுத்திரத் திட்டம் இடம் பெற்றது மாத்திரமல்லாமல்,   அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு,  அதன் தொடக்க விழாவிற்கு  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர் களும்,  அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித்தலைவர்களும்  மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவிலே கலந்து கொண்டோம்.   சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,

தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு  மனுதாரர் நீதிமன்றத்துக்கு  விரைந்து வந்து  வழக்கு தொடுத்துள்ளார்.   சேது சமுத்திரத் திட்டம்  நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது  எல்லோருக்கும்  தெரிந்த ஒன்றாகும்.   ஏனென்றால்  தற்போது கப்பல்கள்  இலங்கை நாட்டைச் சுற்றி  வங்காள விரிகுடா  கட லுக்கு  வரவேண்டியுள்ளது.    பாக்  ஜலசந்தியிலே  குறுக்காக கப்பல்  கால்வாய்  அமைத்தால்  பெருமளவு  பணமும்,  நேரமும்  சேமிக்கப் பட ஏதுவாகும். இந்தக் கால் வாய்த் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு  தடை கிடையாது – என்று கூறி தீர்ப்பளித்தது. அவ்வாறு; தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுவின் நல்ல முயற்சி யின் காரண மாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.   உச்ச நீதி மன்றம் விரைவில் இதுகுறித்து நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழி வகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.

சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகங்களும், ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்களின் உளறல்களும்!சரித்திர ஆசிரியர்களின் போலித்தனம்[2]: சேதுசமுத்திர திட்டத்தை இந்துக்கள் சார்பாக எதிர்த்தபோது, பலர் அதற்கு எதிராகக் கிளம்பினர். அயோத்யாவை விட்டுவிட்டு, “ராமர் பாலம்” என்றதற்கு சீறி பாய்ந்து வந்தனர், புதிய சித்தாந்தத்தைத் திரித்தனர்[3]. ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள், ஏதோ தமக்குத்தாம் எல்லாமே தெரியும் என்பது போல பேசினர்[4]. மைக்கேல் விட்செல் போன்ற ஹார்வார்ட் பேராசிரியர்கள், பாகிஸ்தானிற்கு வக்காலத்து வாங்கினர்[5]. அதற்கு உடனே “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தன. கருணாநிதி வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியபோது, அந்த ஆளின் வக்கிரம் வெளிப்பட்டது[6]. ஆனால், திட்டமே கிடப்பில் போட்டவுடன், எல்லோரும் அடங்கிவிட்டனர். இருப்பினும் நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வரைச் சென்று வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது அவர்களின் உளரல்கள் அல்லது அதி மேதாவித்தனமான கேள்விகள், விமர்சனங்கள் முதலியன குப்பையிலே போடப்பட்டன. அதுபோலவே, இப்பொழுது, “சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகம் பழைய இரும்பு கடையில் விற்பனை” என்று செய்திகள் வருகின்றன.

2008ல் சொன்னது – நம்மால் (கருணாநிதியால்)கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது[7]பல  லட்சம் ஆண்டுகளுக்கு  முன்பு  பிறந்ததாக  கூறப்படும்  ராமரின் பிறந்த இடத்தைக் கண்டு பிடித்து  விட்டார்களாம்.  ஆனால்  ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்பு  தென்னகத்தையே  ஆட்சி  புரிந்து  வந்த  மாமன்னன் ராஜராஜ  சோழன்  மறைந்த  இடத்தையோ,  அவனது உடல்  புதைக்கப்பட்ட  இடத்தையோ,  அதன்   நினைவாக  அமைக்கப்பட்ட  நினைவிடத்தையோ  நம்மால்  கண்டுபிடிக்க முடியாதது  வேதனை தருகிறது  என்று  கூறியுள்ளார்  முதல்வர் கருணாநிதி.

தம்மை அறியாத “தமிழர்கள்”: தமிழர்கள் 100-150 ஆண்டுகளுக்கு முன்னர், ஆரியமாயையில் திளைத்து, திராவிட மாயையில் சிக்குண்டு, தமது அடையாளத்தைத் தொலைத்தனர். “தமிழர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய போலித்தனமான நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கூறுவதை, எழுதுவதை கவனித்து உண்மையறியாமல் இருந்து வந்தால், நிச்சயமாக அவர்கள் தங்களது மூலங்களை இழக்க நேரிடும், குறிப்பாக பத்துப்பாட்டு-எட்டுத்தொகை நூல்களையும், அவை காட்டும் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும் மறந்து விடுவர்.

© வேதபிரகாஷ்

28-02-2013


குண்டலினி யோகாசன‌த்‌தி‌ல் து‌ள்‌ளி து‌ள்‌ளி கு‌தி‌‌த்தபடி ர‌ஞ்‌சிதா நடன‌‌ம் ஆடியதை ‌நி‌த்யான‌ந்தா பா‌ர்‌த்து ர‌சி‌த்தா‌ர் அல்லது லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது

ஜூலை 17, 2011

குண்டலினி யோகாசன‌த்‌தி‌ல் து‌ள்‌ளி து‌ள்‌ளி கு‌தி‌‌த்தபடி ர‌ஞ்‌சிதா நடன‌‌ம் ஆடியதை ‌நி‌த்யான‌ந்தா பா‌ர்‌த்து ர‌சி‌த்தா‌ர் அல்லது லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது

குண்டலினி பெயரில் நித்யானந்தா நடத்திய கூத்து: இந்திய / பாரத மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட யோகா என்ற அற்புதமான கலை இன்று, உலகம் முழுவதும் யார்-யாராலோ கொச்சைப் படுத்தப் பட்டு வருகிறது. தேனாம் பேட்டையில் பிஷப் இல்லத்திற்குப் பின்பக்கம் உள்ள சொகுசு குடியிருப்புகளில் செக்ஸ்-யோகா நடத்திய அந்நிய பார்ட்டிகள் நடத்திய கூத்து வெளிவந்து, உடனடியாக மறக்க / மறைக்க(?)ப்பட்டு விட்டது. ஆனால் அதற்குள் இந்த “குண்டலினி கூத்து” அரங்கேறியுள்ளது. நடிகை ரஞ்சிதா நடன‌த்தை ர‌சி‌த்த நித்யானந்தா (சனி, 16 ஜூலை 2011): கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உ‌ள்ள நித்யானந்தா ஆசிரம‌த்‌தி‌ல் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம். அதேபோ‌ல் இந்தாண்டு‌ம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நே‌‌ற்று நட‌ந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். பட்டுப்புடவை அணிந்திருந்த ர‌ஞ்‌சிதா, நித்யானந்தாவு‌க்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய ‌நி‌த்யான‌ந்தா, ‌பி‌ன்ன‌ர் பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து அவரு‌க்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

குண்டலினி சக்தியை எழுப்புவது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல: பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்த ‌நித்யான‌ந்தா மு‌ன்பு நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார்[1]. அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர்[2]. சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்யானந்தா கூறுகை‌யி‌ல், ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

இரட்டை வேடம் போடும் நக்கீரன் கோபால் முதலியோர்:  நக்கீரன் பத்திரிக்கை மற்றும் அதனை நடத்தி வருபவர்களுக்கு வியாபாரம் தான் முக்கியம் என்பதனால், அவ்விஷயத்தில் இருகூட்டாத்தார்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை எனலாம். குங்குமம் வைப்பதையே அவதூறு பேசிய கருணாநிதியுடன் சேர்ந்து கொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு கோபால், மறுபக்கம் “ஓம்” என்ற பத்திரிக்கை நடத்துவது, தாமிடர தகடுகளை எந்திரம் என்று சொல்லி விர்ப்பது முதலியனவும் கேட்கெட்ட செயல்கள் தாம்..

தோல்வியில்முடிந்தநித்யானந்தாவின்நிகழ்ச்சி! (Nakkiran version): இவ்வாறு தலைப்பு கொடுத்து நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

நித்யானந்தாவை எதிர்க்கும் சாக்கில், ந்தியானந்தாவைப் போலவே நக்கீரன், கோபால், மற்ற ஊடகங்கள் யோகாவை அவதூறு செய்கின்றன என்பதை இந்தியர்கள் கவனிக்க வேண்டும். தாக்கப்படுவது இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியன.

ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை ‘குண்டலினி சக்தி’யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது[3].
நித்யானந்தாவின் வேஷமும், ஆடம்பரமும்: பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார். இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அந்தரத்தில் மிதப்பது என்பது சினிமா கூத்தோ, வித்தையோ இல்லை: சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பியெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்[4]. வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது[5].

லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது: லெவிட்டேஷன் பெயரில் இந்திய / இந்து குருக்கள் / யோகா ஆசிரியர்கள் சந்நியாசிகள் உலகம் முழுவதும் தாக்கப்படுவது சாதாரணமான விஷயமாகி விட்டது. முன்பு அமெரிக்காவில் மஹரிஷி மஹேஷ் யோகி மீது ஒரு அமெரிக்கர் தனக்கு “லெவிட்டேஷன்” சொல்லித் தருகிறேன் என்று ஏமாற்றி விட்டார் என்று வழக்குப் போட்டு பிரச்சினை செய்தார். அதே முறைதான், இங்கேயும் கையாளப்படுகிறது. எல்லோரும் நினைப்பது போல, லெவிட்டேஷன் என்ற பூமியிலிருந்து மேலே மனித உடலை எழுப்புவது வேடிக்கையோ, வித்தையோ இல்லை. அதற்கு நெடுங்கால பயிற்சி தேவை. பகுத்தறிவால் வாதம் புரிவதோ, நாத்திகம் பெயரால் கேலி பேசுவதோ அல்ல. உண்மையில் குண்டலினி வேறு லெவிட்டேஷன் என்ற பூமியிலிருந்து மேலே மனித உடலை எழுப்புவது வேறு. சித்தர்கள் என்று தமிழகத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் கூட அத்தகைய பயிற்சி இல்லாமல் இதனை செய்ய முடியாது. இருப்பினும் சித்தர்களைப் பற்றி நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், திகவினர், செக்யூலரிஸவாதிகள் அளந்து கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களாலும் இதைச் செய்ய முடியாது.


[2] கிருத்துவர்கள் பேயோட்டும் கூட்டங்களை விட, இது ஒன்றும் பெரிய தமாஷாக இருந்துவிடவில்லை. கிருத்துவர்கள் நிகழ்ச்சிகளில் பெண்கள் இஷ்டத்திற்கும் ஆடுவார்கள், குதிப்பார்கள், கத்துவார்கள். பாதிரிகள் / பாஸ்டர்கள் அப்பெண்களை கண்டபடி பிடித்துக் கொண்டு, பிறகு நெற்றியில் கையை வைத்து அழுத்தித் தள்ளிவிடுவார்கள். அப்பெண்களும் ஏதோ தங்களைப் பிடித்த பேய் போய்விட்டது போல கீழே விழுவார்கள். சிலர் கீழே விழுந்த பிறகு கூட புரண்டு ஆடி, உருண்டு அடங்கிவிடுவார்கள்.

[4] உண்மையில் இந்த ஆளும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு, கண்களை முடிக்கொண்டு கோமளித்தனமாக குதித்துக் கொண்டிருந்தது வேடிக்கையகத்தான் இருந்தது.

[5] “சமய்” என்ற ஹிந்தி செனல் இதனை தொடர்ச்சியாக, மறுபடி-மறுபடி ஒலி-ஒளிபரப்பு செய்த்து கிண்டலடித்துக் கொண்டிருந்தது. நித்யானந்தா அதில் “பெரட்-ரூம் சாமி” என்றே விளிக்கப்பட்டார்.

டெல்லியில் பத்திரிகையாளரை ராஜா தாக்கியதாக தா. பாண்டியன் கூறி பதவி நீக்க வேண்டும் என்கிறார்!

மே 9, 2010

ராசாவை பதவி நீக்க வேண்டும்: தா. பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்
செ‌ன்னை, ஞாயிறு, 9 மே 2010( 08:57 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1005/09/1100509001_1.htm

டெல்லியில் பத்திரிகையாளரை தாக்கியதாகக் கூறப்படும் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் கூறினார்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌் அம்பாசமுத்திரத்தில் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், டெல்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை மத்திய அமைச்சர் ஆ. ராசா தாக்கியதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கண்ணியம் காக்க தவறிவிட்டார் என ராசாவை அமைச்சர் பதவியில் இருந்து கருணாநிதி விலகச் சொல்ல வேண்டும்.

தமிழ் ஊடகங்களின் போலித்தனம்: கருணாநிதி ராஜாவைக் காக்கும் பின்னணி என்ன?

மே 9, 2010

தமிழ் ஊடகங்களின் போலித்தனம்: கருணாநிதி ராஜாவைக் காக்கும் பின்னணி என்ன?

சென்னை விமானநிலையத்தில் அத்தகைய விவகாரங்கள் நடந்த பிறகும், தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீட்டுத் தன்மையின் போக்கு வினோதமாகத்தான் இருக்கிறது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் மத்திய மந்திரி ஆ.ராசா

தினத் தந்தி – ‎3 மணிநேரம் முன்பு‎ ராசா ஆலோசனை நடத்தினார். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா நேற்று கோவை வந்தார். பின்னர் அவர் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.

தினத்தந்தி சொல்வது இப்படி……………………

அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரம் இல்லை

தினமணி – ‎5 மணிநேரம் முன்பு‎
ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். ராசா மீது குற்றச்சாட்டு கூறும் கட்சிகள், அதற்குரிய

அபிஷேக் மனு சிங்வி சாதாரண நேரத்தில் சட்ட நுணுக்கங்களைப் பற்றி அதிகமாகவேப் பேசக்கூடியவர், ஆனால், இப்பொழுது சொல்வதோ இப்படி……….ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை“!

அதாவது, காங்கிரஸ் ஆன மனு, சூத்திரராகிய திமுகவைக் காப்பாற்றக் கிளம்பிவிட்டது என்றும் நாளைக்கு திராவிட எழித்தாளர்கள் விளக்கம் கொடுக்கலாம்!

காங்கிரஸின் திருவிளையாடல்

ஆனால் மணீஸ் திவாரி, ராஜா ஏதோ கம்பெனிகளின் போராட்டத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார், இல்லை மாட்டிவிடப் பட்டுள்ளார், பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளார், என்றேல்லாம் விளக்கம் அளித்தது ஏன் என்று தெரியவில்லை.

ஏனெனில் பிரச்சினையே அங்குதான் ஆரம்பித்துள்ளது. கோடிகளில் பனம் கிடைக்கும் என்றுதான் அத்துறை விலைக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

கொடுத்த கோடிகளை அதிகமாக அள்ள வேண்டும் என்பதினால்தான், கம்பெனிகளே முளைத்துள்ளன, அதில் சம்பந்தப் பட்டவர்களின் பங்கு உள்ளன.

பிறகு எதற்கு அத்தகைய போரில் சிக்கப் போகிறார்?

சரியான வேடிக்கைத்தான்!

அரசியல் அரங்கம்: ராசா பதவி விலக வேண்டுமா?

தினமணி – ‎7 மே, 2010‎

ஓரு லட்சம் கோடியா? அம்மாடியோ! என்று அதிர்ச்சியில் சாமானியன் ஆடிப்போய் இருக்க, அரசியல் கட்சிகளோ வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. ஆம், ஸ்பெக்ட்ரம் ஊழல்

தினமணி மட்டும் இப்படிஇப்பிரச்சினைப் பற்றி செய்திகள் வெளியிட்டிருப்பதால், உடனே திராவிட / தமிழ் சித்தாந்திகள் “வைத்தியநாத ஐயர்” / பார்ப்பனப் பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடுவர்!

ஆ. ராசா தலித் எனக் கூறி ஸ்பெக்ட்ரம் பிரச்னையை

தினமணி – ‎6 மே, 2010‎
சென்னை, மே 6: மத்திய அமைச்சர் ஆ. ராசா தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர் என்று கூறி, அவருக்கு எதிரான ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையை

ஆமாம், அந்த “பாப்பாத்தி” அப்படித்தான் சொல்வார். இதோ தெரிகிறதே “பார்ப்பனீயம்” என்று ஊளையிட ஆரம்பித்து விடுவர்!

‘தலித்’: கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் தாக்கு!

வியாழக்கிழமை, மே 6, 2010, 17:11[IST]

Jayalalitha

சென்னை: தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கு காரணம், தொலைதொடர்புத் துறை அமைச்சரான ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பது தான் என்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார் கருணாநிதி!

தன்னுடைய கட்சிக்காரரால் நிகழ்த்தப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை எந்த அளவுக்கு முக்கியத்துவமில்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக ஒரு முடிவு எடுப்பதற்கு முன் தன்னிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் பிரத்யேக அறிவுரையை மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராசா முற்றிலுமாக அவமதித்தது,

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை முதலில் வருபவருக்கு முதலில் அளிப்பது என்ற கோட்பாட்டிற்கு இந்திய தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளை புறக்கணித்தது,

சினிமா டிக்கெட்டை விற்பனை செய்வது போல், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்பனை செய்யும் முடிவை ராசா எடுத்திருக்கிறார் என்று டெல்லி உயர் நீதிமன்றம் [^] கருத்து தெரிவித்தது,

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத் தேதியினை முன் தேதியிட்டு ராசா மாற்றியமைத்தது தவறு என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ராசா எடுத்த முடிவின் காரணமாக குறைந்தபட்சம் ரூ. 26,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர் கோடிட்டுக் காட்டியது,

ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் கோரியது போன்ற பிரச்சனைகள் எதற்கும் கருணாநிதி பதில் அளிக்கவில்லை.
மாறாக, ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இது போன்ற பதிலின் மூலம், நாடாளுமன்றத்தில் ராசாவின் ராஜினாமாவைக் கோரும் தலித் தலைவர்களின் வாயை அடைத்துவிடலாம் என்று நினைக்கிறார்.

தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி.

ஆனால், தன்னுடைய முந்தைய அமைச்சரவை சகாவான திமுக தலித் தலைவர் ஓ.பி.ராமனின் மைத்துனியை அழகிரி திருமணம் செய்தபோது, கருணாநிதி நிலைகுலைந்து போனதையும், அழகிரியை மதுரைக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டதையும் மூடி மறைத்துவிட்டார்.

இதன் காரணமாகத்தான், திமுகவில் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அழகிரி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தன்னுடைய இனத்திலேயே பெண் எடுத்த இளைய மகன் ஸ்டாலினை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.

இது போன்ற தவறான எண்ணத்தையும், அறுவெறுப்பையும் தலித் இனத்தவர் மீது கொண்டுள்ள அதே கருணாநிதி தான், ஊழல் கறை படிந்துள்ள ராசாவை எதிர்த்து குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள் மீது, அவர் தலித் என்பதாலேயே அவருக்கு எதிராக குரல் எழுப்புவதாக குற்றம் சுமத்துகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தன் குடும்ப கருவூலத்தில் சென்றடைந்துள்ளதை மூடி மறைத்து பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே தலித் என்ற ஆயுதத்தை கருணாநிதி பயன்படுத்துகிறார்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் அதிமுக வெளிநடப்பு: இந் நிலையில் அமைச்சர் ராசாவைப் பதவி நீக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் இன்று அதிமுக எம்பிக்கள் கோஷமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை கூடியதும், அமைச்சர் ராசா, நிரா ராடியா ஆகியோரின் உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்ட சிடிக்களையும், அதுதொடர்பாக வெளிவந்த செய்தித் தாள்களையும் அதிமுக எம்பிக்கள் காட்டி கோஷமிட்டனர்.  அப்போது பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன், ராசா உரையாடலை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதுதொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றப நோட்டீஸ் தந்துள்ளேன் என்றார்.  இதையடுத்து, அவையில் செய்தித் தாள்களையோ, சிடிக்களையோ காட்டக்கூடாது என்று அவைத் தலைவர் அன்சாரி அதிமுகவினருக்கு நினைவூட்டினார்.

எம்பிக்கள் அவரவர் இருக்கைகளில் அமர வேண்டும் என்று பலமுறை அன்சாரி கேட்டுக் கொண்டும் அதை அதிமுகவினர் ஏற்கவில்லை.  ராசாவை பதவி நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் அவை கூடியபோதும் அதிமுக எம்பிக்கள் அதே கோரி்க்கையை மீண்டும் வலியுறுத்தி கோஷமிடவே, இது பொறுப்பற்ற செயல் என்று எச்சரித்த அன்சாரி, அதிமுக எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இதையடுத்து அதிமுக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பியவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இவ்வாறு, இதனை ஏதோ ஜெயலலிதா-கருணாநிதி பிரச்சினை மாதிரி தமிழ் ஊடகங்கள் காட்ட முயல்கின்றன.

கருணாநிதி அதிகாரத்தில் இயங்கும் ஊடகங்கள், இதைப் பற்றி மூச்சுக் கூடவிடவில்லை!

சரி, “தலித்” என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓட்டுவங்கி அரசியல் மட்டும் தான் குறி என்றால் கோடிக் கணக்கில் ஊழல் செய்த் பணம் எங்கே?

மற்றவை……………..

பவர் புரோக்கர் நீரா ராடியா – ஜூவி ரிப்போர்ட் [ஜூனியர் விகடனில் இச்செய்தி வந்துள்ளது – நன்றியுடன் இங்கு சேர்த்துக் கொல்லப்படுகிறது]

”முதல்வரின் டெல்லி விசிட் ரொம்ப சூப்பரா போச்சு. தலைவர் சொன்னது எல்லாத்தையும் சோனியாம்மா ஏத்துக்கிட்டாங்க. இனி கனிதான் டெல்லிக்கு ராணி…” – இப்படியெல்லாம் உற்சாக பலத்துடன் இருந்த தி.மு.க. மேலிட தலைவர்கள், கடந்த புதன் இரவு வெளியாகத் தொடங்கிய தொலைபேசி டேப் செய்திகளைக் கண்டு ஆடித்தான் போனார்கள்.. நீரா ராடியா என்கிற பலம்வாய்ந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் பேசிய தொலைபேசிப் பேச்சின் சில பகுதிகள் என்று சொல்லி, அந்த டேப் விவரங்கள் செய்தியாகப் படிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்த கையோடு… தி.மு.க. தரப்பிலிருந்து யாருக்கு என்ன பதவி என்று மத்திய அரசோடு பேரங்கள் தொடங்கிய சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் அவை. மறுபடி தொலைதொடர்புத் துறை கிடைக்குமா?’ என்று ஆ.ராசாவுடனும்… ‘அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று குடும்பங்களுக்கும் மந்திரி பதவி வாங்கித் தருவதில் கருணாநிதி படும் சிரமங்கள்’ குறித்து கனிமொழியுடனும் நீரா ராடியா பேசியதாக விவரங்கள் அந்த டேப் தொகுப்பில் இருந்தன.

ஆ.ராசாவுக்கு தொலை தொடர்புத் துறை கிடைத்தால் தயாநிதி மாறன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றியும், டி.ஆர்.பாலுவின் மன ஓட்டங்கள் பற்றியும் இந்த நீரா ராடியாவுடன் ஆ.ராசாவும், கனிமொழியும் எதற்காக இத்தனை நம்பிக்கை வைத்து பேசவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் இயல்பாகவே இதனால் எழத்தான் செய்தது. மத்திய அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை ஒதுக்கும் விஷயங்கள் குறித்து அப்படியரு அதிகாரத் தொனி மிக்க வார்த்தைகளில் அந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி பேசுவதாகச் சொன்னது டேப் தொகுப்பு!

விவகாரம் அதுமட்டுமல்ல…. தொலைதொடர்புத் துறையின் சார்பாக அதற்கு முன்பும் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் இந்த நீரா ராடியாவும் பல மணி நேரங்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு, வருமான வரித்துறைக்கென்றே உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவின் வசம் இருப்பதாகவும் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கிவிட்டன தகவல்கள். வருமான வரித் துறை டேப் செய்திருந்த இந்த உரையாடல்களை, சி.பி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அளித்து உதவும்படி டெபுடி ஐ.ஜி-யான வினித் அகர்வால் வைத்த வேண்டுகோள் கடிதம் என்று ஒரு நகலும்…. ‘ஆமாம்… நிறைய விவகாரங்களை இது தொடர்பாக டேப் செய்திருக்கிறோம். உரியமுறையில் கேட்டு எங்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் வசம் ஏதேனும் தகவல் வைத்திருந்தால், அதை எங்கள் விசாரணைக்கு நீங்களும் கொடுத்து உதவுங்கள்’ என்று வருமான வரித்துறையின் இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால் என்பவர் பதில் எழுதியாக ஒரு நகலும் இப்போது டெல்லியில் கசிந்து… பெரும் புயலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் 2009 வருடம் நவம்பர் மாதத்தில் நடந்ததாக அந்த நகல்களில் உள்ள தேதி குறிப்பிடுகிறது.

அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புயலடிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, அது தொடர்பான ரகசிய விசாரணைகளில் வருமான வரித் துறைக்கென்று உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவு இறங்கிவிட்டதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வருமான வரி அதிகாரி அளித்த பதில் கடிதத்திலேயே இந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி நீரா நாடியா பற்றி அதிர்ச்சியும் பிரமிப்பும் கலந்த தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவி கார்ப்பரேட் கன்ஸல்டன்ட், நோயஸிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸ், விட்காம் மற்றும் நியூகாம் கன்சல்டன்ஸி என்று பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அச்சாணியாக இயங்கும் இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றே டேப் செய்து வந்ததாகக் கூறுகிறது வருமானவரி கடித நகல். விமானப் போக்குவரத்து மற்றும் பல துறைகளில் உள்ள பிரமாண்ட நிறுவனங்களுக்கு ‘ஆலோசகராக’ செயல்படும் நீரா ராடியாவின் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை தொடர்பான நிறுவனங்களுடன் இறுக்கமான நட்பில் இருப்பதையும் கடித நகல் கூறுகிறது. ‘தொலைதொடர்புத் துறை தொடர்பான லைசென்ஸ்கள் பெற்றுக் கொடுப்பதில் இந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கூடவே, முக்கிய மீடியாக்களையும் தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருக்கிறார். தொலைபேசி லைசென்ஸ் தொடர்பான சில நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டு வரும்படி இவர் அறிவுறுத்தும் சில தொலைபேசி உரையாடல்களும் எங்களிடம் உள்ளது. இல்லையென்றால், லைசென்ஸ் பெற்றதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றது தெரிந்துவிடும் என்றும் இவர் அறிவுரை கூறுகிறார்’ என்று சொல்லும் அந்த வருமான வரி கடிதம்…

‘தொலைதொடர்பு அமைச்சருடன் நேரடியாகவே இவர் பேசிய உரையாடல்களை நாங்கள் வைத்துள்ளோம். டெலிகாம் லைசென்ஸை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதில் தனக்குள்ள முக்கியப் பங்கு குறித்து இந்த நீரா ராடியா பெருமையோடு மத்திய அமைச்சரிடம் பகிர்ந்துகொள்கிறார்’ என்று கூறுகிறது. இது விவகாரமாக நீரா ராடியா தொடர்புகொண்டிருந்த மற்ற முக்கிய நபர் பற்றிய தகவல்களும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறது அந்தக் கடித நகல்.

மத்திய அமைச்சர் பதவியில் ஆ.ராசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது.

”தொலைதொடர்பு தொடர்பான ரகசிய புலனாய்வு ஆவணங்கள் பகிரங்கமாக வெளியானது மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!” என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்க… ”தொடர்ந்து பிரஷர் கொடுத்து வரும் தி.மு.க-வை பின்வாங்கச் செய்வதற்கு இந்த விவகாரமெல்லாம் உதவும். அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு இதில் நிம்மதிதான்!” என்று சொல்லி கண் சிமிட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

நமக்கும் அந்த ஆவண நகல்களில் சில கிடைத்தன. ‘டாப் சீக்ரெட்’, ‘கான்ஃபிடன்ஷியல்’ என குறியிடப்பட்ட அவையெல்லாம் யாரோ ஒரு உயர் அதிகாரிக்கு விசாரணை டீம் கொடுத்த தகவல் சுருக்கம் போலவே இருக்கிறது. அவை ஒரிஜினலான ஆவணங்கள்தானா… அதை வைத்து சி.பி.ஐ. தனது விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது.

நீரா ராடியாவை மையம் கொண்டு மொரீஷியஸ், ஆப்பிரிக்கா, கினியா என்று எல்லை தாண்டி நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் குறித்து ஒட்டுக் கேட்டதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

”இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற, மரியாதைக்குரிய ஒரு வடநாட்டுத் தொழிலதிபர், எக்காரணம் கொண்டும் தொலைதொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சராகிவிடக் கூடாது என்று நீரா ராடியாவிடம் கேட்டுக் கொள்ளும் உரையாடல் கிடைத்துள்ளது. அதையும் மீறி தயாநிதி மாறன் வந்துவிட்டால், தொலைதொடர்புத் துறையில் தான் செய்து வரும் பிசினஸ்களிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் தொழிலதிபர், நீரா ராடியாவிடம் கூறுகிறார்.

ஆ.ராசாவுக்கு குறிப்பிட்ட பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பெருந்தலைகளை பிரெயின்வாஷ் செய்யும் வேலையில் இந்தியாவின் பிரபல சேனல் முகங்கள் இருவர் செயல்பட்டனர். நீரா ராடியா மற்றும் அரசியல் பெண் வி.ஐ.பி. ஒருவருக்காகவே இவர்கள் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பவர்ஃபுல் பெண்மணி ஒருவருக்கு நீரா ராடியா மிக நெருக்கமானவர் போலவே போன் பேச்சுகளில் தொனிக்கிறது!” என்று கூறும் இந்த ஆவணங்கள், ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் சர்ச்சைப் புயலில் சிக்கிய ஸ்வான் டெலிகாமையும் இதில் தொடர்புபடுத்துகின்றன.

”ஜார்கண்ட் மாநிலத்தில் டாடாவின் சுரங்க உரிமத்தை நீட்டிக்க நீரா ராடியா அப்போதைய ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுடன் பேசிய உரையாடலில் மதுகோடா 180 கோடி ரூபாய் கேட்டது தெரிய வந்துள்ளது. அதே உரிமத்தை ஜார்கண்ட் ஆளுநரிடம் நீட்டித்து வாங்கியுள்ளார் இந்த ‘சேவைக்காக’ ஒரு கோடி ரூபாய் நீராவுக்கு வழங்கப்பட்டுள்ளது!” என்று வேறு மாநில விவகாரங்களையும் இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவண நகல்களில் காண முடிகிறது. மதுகோடா தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவணமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை!

தொலைதொடர்புத் துறையின் ‘கிங்’களில் ஒருவரான சுனில் மிட்டல்கூட நீராவின் ‘சேவை’யை நாடினார் என்று தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டுச் சொல்கிறது இந்த ஆவணம். இந்த ரேஞ்சில் படிக்கப் படிக்க தலை சுற்ற செய்யும் தகவல்கள் கொண்ட ஆவணங்களில் தொழில் அதிபர்களுக்கும், மிகப் பெரிய அதிகாரிகளும், அரசியலின் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கும் இடையே எத்தனை ‘சாலிட்’டான பேரங்களும், புரிந்துகொள்ளல்களும் இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து வைக்கும் வேலையில் நீரா ராடியா போன்ற இன்னும் எத்தனை மெகா ‘லாபியிஸ்ட்’கள் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கும்போது பயங்கரமாகத் தலை சுற்றுகிறது.

”குறிப்பிட்ட அந்த டேப் உரையாடல்களில் இருப்பது மத்திய அமைச்சர் ஆ.ராசா அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி ஆகியோரின் குரல்தானா என்பதற்கு என்ன ஆதாரம்? தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்கு டெல்லியில் நடக்கும் பயங்கரமான சதிவலையின் அங்கம்தான் இதெல்லாம்!” என்று மறுக்கும் தி.மு.க. தலைவர்கள்,

”அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல்… தலைவரின் குடும்பத்துக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டதாகச் சொல்லி, அதை வைத்து ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பேசிக்கொண்டதாக விவகாரத்தை நாடறியப் பரப்பினால், அதை வைத்து குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வரும் என்பதும் எங்கள் எதிரிகளின் திட்டம்!” என்று கூறுகிறார்கள் இந்த தி.மு.க. தலைகள்.

( நன்றி: ஜூவி )

பெண் நிருபர்களைத் தள்ளி, கெட்ட வார்த்தைகளால் திட்டிய ராஜா!

மே 8, 2010

பெண் நிருபர்களைத் தள்ளி, கெட்ட வார்த்தைகளால் திட்டிய ராஜா!

ஸ்ரீ ஆண்டிமுத்து ராஜா / Shri Andimuthu Raja

http://india.gov.in/govt/loksabhampdetail.php?mpcode=344

Details of Member
Particulars Description
Name Shri Andimuthu Raja / ஆண்டிமுத்து ராஜா
Constituency from which I am elected Nilgiris / நீலகிரி
State from which I am elected Tamil Nadu / தமிழ்நாடு
Politica party name Dravida Munnetra Kazhagam (DMK)
Present Address 2-A, Motilal Nehru Marg,New Delhi – 110 011,Tels. (011) 23010468, 23016553 (R), 23319696, 23739191, 24329191, 24369191 (O) 09868180390 (M) Fax. (011) 24362333 (O)23017146 (R)
Permanent Address Vill. Velur,Taluka and Distt. Perambalur – 621 212 ( Tamil Nadu ),Tels. (04328)277052,268255 Fax. (04328) 276376
Raja in trouble

Raja in trouble

Raja-faces-media-persons

Raja-facராesmediரa-prso

ராஜாவின் கோபம் நிச்சயமாக ஆச்சரியத்தை வரவழப்பைதாக உள்ளது.

The lady reporter questions Raja

The lady reporter questions Raj

Raja looses temper
Raja looses tem

விமானதிலிரிந்து இறங்கி காரில் ஏறி செல்லும் வரையில் ராஜா மற்றும் அவரது ஆட்கள், நடந்தகொண்டவிதம் சரியாக இல்லை. நிருபர்கள் ராஜாவை நெருங்கவிடாமல், அவர்களைத் தள்ளிக்கொண்டே சென்று வெளியே வந்தவிதம், அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல வேண்டிஉம் என்ற போக்குத்தான் தெரிந்தது. குறிப்பாக அந்த பெண் நிருபர் கேள்விகள் கேட்டதும், கொதிப்படைந்துதான் விட்டார் ராஜா!

ARaja-chennai-airport-ab

ARaja-chennai-airport-ab

விமான நிலையில் தள்ளு-முள்ளு

விமான நிலையில் தள்ளு-முள்ளு

சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்விகள் கேட்டபோது, ராஜா மிகவும் மோசமாக நடந்து கொண்டது அசிங்கமாக இருந்தது.

தள்ளு-முள்ளு

தள்ளு-முள்ளு

பெண் நிருபர் தள்ளப்படுவது

பெண் நிருபர் தள்ளப்படுவது

இரு பெண் நிருபர்களைத் தள்ளிவிட்டதாக “ஹெட்லைன்ஸ்” ப்ரியம்வதா என்ற நிருபர் கூறுகிறார்.

கோபத்தில் கத்தும் ராஜா

கோபத்தில் கத்தும் ராஜா

இதைத் தவிர, அந்த தள்ளூமுள்ளு வீடியோ காடிசிகளை பார்க்கும் போது, ராஜா நடுநடுவே சில தமிழில் கெட்டவார்த்கைகள் கூருவதும் கேட்கிறது.

கருணாநிதி, மன்மோஹன்சிங், சோனியா இவர்களை விடுத்து ஏதோ மூன்றாம் நபரிடம் போய் அமைச்சர் பதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை

கருணாநிதி, மன்மோஹன்சிங், சோனியா இவர்களை விடுத்து ஏதோ மூன்றாம் நபரிடம் போய் அமைச்சர் பதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை

கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், நிருபர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

நீரா ராடியாவைப் போய் கேள்

நீரா ராடியாவைப் போய் கேள்

இதைத் தவிர ராஜாவின் ஆதரவாளர்கள், நிருபர்களைப் பார்த்து கேலி செய்தது, சப்தமிட்டது, மிரட்டியது முதலியவை பார்ப்பவர்வகளுக்கு, தர்ம சங்கடமாகவும், வியப்பாகவும் இருந்தது…………

ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – III

மே 8, 2010

ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – III

ராஜாவின் பார்வை ராடியாவின் மேலே இருந்தாலும், கனிந்த கனிமொழியின் நெருக்கம்-ஆதரவு இருந்தாலும், மற்ற பெண்மனிகளிடம், குறிப்பாக, அந்த “ஹெட்லைன்ஸ்” பண் நிறுபர் மீது அசாத்யமான கோபமே வந்துவிட்டதாம்!

ஆமாம், எந்த தைரியம் இருந்தால், டிவியில் ஒளிபரப்புவார்கள்!

ராடியாவும் விடவில்லை, உடனடியாக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள்.

ஆனால், கோர்ட் தடை செய்யமுடியாது என்று சொல்லிவிட்டது!

ரவுடியிஸம் பண்ண வந்திருக்கிறீகளா?

ராஜாவிந்குணம்-வெளிப்படுகிறது

ராஜாவிந்குணம்-வெளிப்படுகிறது

நீங்கள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் மடையர்கள்

குற்றமுள்ள நெஞ்சு குருகுறுக்கும் என்பார்கள். மடியில் கனம் இருந்தால் தான், வழியில் பயம் இருக்கும் என்பார்கள். இல்லையென்றால், அந்த பெண் நிருபர் கேட்டவுடன், ஏன் ராஜாவிர்கு அந்த அளவிர்கு கோபம் வரவேண்டும்?

திராவிட அரசியல்வாதிகள் தாம் மாவீரர்கள் ஆயிற்றே? “நீதிமன்றத்தைச் சந்திக்கத் தயார்”, என்று பரையடித்து, ம்உழக்கமிடும் மறவர்கள் வழி வந்தவர்கள் ஆயிற்றே? பிரகு எதர்கு ஒரு பெண்ணைக் கண்டு அஞ்சவேண்டும்?

பிறகு எதற்கு அத்தகைய நாகரிகமற்றச் செயல்? – அந்த பெண் நிருபரைப் பிடித்துத் ட்ஹள்ளுவது……………………………..சரி ராஜா அமைச்சர் தான் இப்படியென்றால், அந்த ராடியாவும் சளைத்தப் பெண்மணியாகத் தெரியவில்லை!

நீரா ராடியா ‘ஹட்லைன்ஸ் டிவி” அந்த டேப்புகளை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படுவதைத் தடை செய்யவேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது!

அது பொய் என்றால், பயப்படவேண்டிய அவசியல் இல்லையே?

மேலும், ராஜா-கனிமொழி முதலியோருடன் பேசிய பேச்சுகள் சட்டத்திற்கு புரம்பாக ஒலிப்பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, என்று ராடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அப்படியென்றால், இவ்வாறெல்லாம் மந்திரி பதவிகளை வாங்கித்தரும் அளவில் கோடிகளை ஏமாற்றி, “அரசியல் விபச்சாரம்” செய்வது மட்டும் சட்டரீதியில் உள்ளதா என்பது அவர்கலுக்குத் தெரியவில்லை போலும்!

உமக்கெல்லாம் சந்தோஷம் கிடைக்கக்கூடிய மாதிரி, நான் ஒன்றும் செய்திகளைக் கொண்டு வரவில்லை என்றாரே, கருணாநிதி?

இந்த நிகழ்சிகள் எல்லாம் சந்தோஷம் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கின்றனவா?


கோபப்படும் ராஜாவின் முகங்களே பல கதைகள் சொல்கின்றன!

A-Raja-adamant-aggressive

A-Raja-adamant-aggressive

A.Raja-angry

A.Raja-angry

இத்தனை கோபம் தெவையா?

சாவிலும் லாபம் தேடும் அரசியல்வாதிகள்-நாட்டுப்பற்றாளர்கள்!

ஏப்ரல் 10, 2010

சாவிலும் லாபம் தேடும் அரசியல்வாதிகள்-நாட்டுப்பற்றாளர்கள்!

இந்தியர்களுக்கு எந்தெந்த அரசியல்வாதிக்கு எத்தனை கிலோ நாட்டுப் பற்று உள்ளது என்று தெரிய அதிக கடந்த ஆண்டுகளில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இன்னும் கூட “இந்தியர்” என்ற உணர்வு இல்லாமல், பேசும் பேச்சு, செய்யும் செயல்,……………..இவற்றின் முடிவுகள் முதலியவற்றை நன்றாக அறிந்தே செய்யப்படும் காரியங்கள்…………வேஷங்கள் தான் என்று நன்றாகவேத் தெரிகின்றது.

இந்திய வீரர்களின் வீரம், தியாகம்……….கணக்கில் அடங்காதது.

விலை மதிப்பற்றது, விலை பேச முடியாதது.

மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் சித்தாந்தவாதிகள், குறிப்பாக கம்யூனிஸ, கிருத்துவ, ஜிஹாதி தீவிரவாதிகள் கூட்டு வேஷம் போடுகிறது. அதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்கின்றன. தெலிங்கானா விஷயத்திலும் அதுதான் உள்ளது.

காங்கிரஸுக்கு, இதெல்லாம் அல்வா மாதிரி.

இந்நிலையில்தான் வருகிறது…………சிதம்பரத்தின் வீராப்புப் பேச்சுகள்,

“மாவோயிஸ்டுகள் கோழைகள்………………….”

“மாவோயிஸ்டுகள் பற்றிய ஒவ்வொரு விஷயமும் என்னுடைய மேஜைக்கு வந்துள்ளது……………..”

“ஏதோ நடந்திருக்கிறது. அது என்ன என்பது தான் ஆராய வேண்டியுள்ளது………………………….”

“அவர்களின் சாவிற்கு நான் பொறுப்பேற்கிறேன்………………………..”

ஆக, அந்த இரண்டு மணி நேரத்தில் முன்று முறை ஆடை-அலங்காரம் செய்து கொண்டு கேமரா முன்பு பேட்டி கொடுத்த சிவராஜ் பாட்டிலுக்கும், வேட்டிக் கட்டிக் கொண்டு, மணிக்கு மணி இப்படி உKஅறி கொட்டும் சிதம்பரத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

இதில் கேடுகெட்ட அந்த காங்கிரஸ் முதல் மந்திரி, இந்த உபயோகமற்ற சிதம்பரம்……………..இவர்கள் எல்லாம் ராணுவ அதிகாரிகளைக் குறை சொல்கின்றனர்……………….

இங்கு, கருணநிதியோ கேட்கவே வேண்டாம், பணம் கொடுத்து புகழ் தேட வசதியாகப் போய்விட்டது!

நக்சலைட்களுக்கு தகுந்த ‘பதிலடி’ : இறுதி மரியாதையில் ஐ.ஜி., உறுதி
ஏப்ரல் 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17678

Important incidents and happenings in and around the world

சென்னை : நக்சலைட்களுக்கு தகுந்த, ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று, பலியான கொளத்தூர் வீரரின் இறுதி மரியாதையில் சி.ஆர்.பி.எப்., போலீஸ் ஐ.ஜி., – எஸ்.ஏ., ஜப்பார் தெரிவித்தார். கடந்த 6ம் தேதி காலை சட்டீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டம் மக்ரானா கிராம காட்டுப் பகுதியில் நக்சலைட்களின் தாக்குதலில் 77  சி.ஆர்.பி.எப்., போலீசார் பலியாயினர். இதில், சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் மோகனரங்கத்தின் உடலுக்கு நேற்று காலை மத்திய, மாநில போலீசார் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த சேகர், மோகனரங்கன், விஜயகுமார் ஆகியோரின் உடல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் மூலம் சென்னை வந்தது. இதையடுத்து டி.ஜி.பி., லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சி.ஆர்.பி.எப்., போலீஸ் ஐ.ஜி., எஸ்.ஏ. ஜப்பார், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உட்பட முக்கிய அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

N†ˆÐLÖ¡¥ UÖÚYÖ›Í| RÖehR¦¥ T¦VÖ]
2 R–ZL ®WŸL¸Á EP¥L· «UÖ]†‡¥ ÙNÁÛ] Y‹R]
z.È.‘. X†‡LÖ NW AtN¦

சென்னை கொளத்தூரில் வைக்கப்பட்டிருந்த, போலீஸ்காரர் மோகனரங்கத்தின் உடலுக்கு நேற்று காலை எம்.எல்.ஏ.க்கள்., ரங்கநாதன், ஜெயக்குமார், சேகர்பாபு உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆவடி சி.ஆர்.பி.எப்., போலீஸ் அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் சரக போலீஸ் துணைக்கமிஷனர் சாரங்கன், வில்லிவாக்கம் உதவிக்கமிஷனர் நடராஜ், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சிங்கராஜா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மத சடங்குகள் முடிந்த பின், 10 மணி அளவில் ராணுவ வாகனம் மூலம் மோகனரங்கத்தின் உடல் கொளத்தூரின் முக்கிய சாலைகள் வழியாக, அப்பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மக்காராம் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. . பொதுமக்கள் சாலையோரம் நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். சுடுகாட்டில் மத்திய, மாநில போலீசார் 21 குண்டுகள் முழங்க வீரர் மோகனரங்கத்தின் உடலுக்கு மரியாதையும், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர். இதையடுத்து, தகன மேடையில் வைக்கப்பட்ட உடலுக்கு, 11 மணி அளவில் மோகனரங்கத்தின் இரண்டாவது அண்ணன் திருவேங்கடத்தின் மகன் பிரமேஷ்(21) எரியூட்டினார்.
வேலூர்: நக்சல்கள் தாக்குதலில் பலியானவர்களில், வேலூர் மாவட்டம், கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (36) என்பவரும் ஒருவர். சேகரின் மறைவு குறித்து தகவல் அறிந்த அக்கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். நேற்று அதிகாலை 12 மணிக்கு சேகரின் உடல் தோக்கியம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று (ஏப்., 9) சேகர் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
வேலூர் கலெக்டர் ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி., ராமசுப்பிரமணி, எஸ்.பி., அறிவுச்செல்வம், எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள், சேகர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க சேகர் உடல் அடக்கம்  செய்யப்பட்டது.

நித்யமும் நெருடும் நித்யானந்தா, நிர்வாணானந்தா:பாவம் தமிழர்கள்!

மார்ச் 15, 2010

நித்யமும் நெருடும் நித்யானந்தா:பாவம் தமிழர்கள்!

 

 இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும், நித்யானந்தா தமிழ் ஊடகங்களுக்கு உரம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களைப் பற்றி கேட்க வேண்டாமே, எந்த நடிகைக்கு என்ன ஆனாலும், அதைப் பற்றி பட்டி மன்றம் நடத்தி, திரைப்ப்டத்தில் ஜோக்காக்கி, பத்மஸ்ரீ பட்டங்களையும் பெற்று விடுவர். ஆகவே, மறுபடியும் வந்து விட்டார் நித்யானந்தா! இதோ இப்பொழுதைய ஊடகங்கள் சொல்வது –

  1. நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா வீடியோ 

    தினத் தந்தி – 1 நாளுக்கு முன்னர்
    நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா வீடியோ படக்காட்சி தொடர்பான வழக்கில் சரண் அடைந்த சீடர் லெனின் கருப்பன் சைதாப்பேட்டை கோர்ட்டில் 

    நித்யானந்தா – ரஞ்சிதா விவகாரம் ‎ தின பூமி
    நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ புகழ் ‎ வெப்துனியா
    நித்யானந்தாவிடம் ரூ.60 கோடி கேட்டு ‎ நெருடல் இணையம்
    Inneram.com
    எல்லா 13 செய்திக் கட்டுரைகளும் »


    வெப்துனியா
  2. நாத்திகமா? ஆத்திகமா? என்று கி 

    தினத் தந்தி – 1 நாளுக்கு முன்னர்
    நடிகை ரஞ்சிதா கூறியபோது, தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றுகொண்டுதான் இருக்கிறேன் என்றும் தொடர்ந்து 

    வீரமணிக்கு நித்யானந்தா சவால்‎ வெப்துனியா
    கி.வீரமணிக்கு நித்தியானந்தா அழைப்பு!‎ Inneram.com
    எல்லா 3 செய்திக் கட்டுரைகளும் »


    வெப்துனியா
  3. சன் டிவி வெளியிட்ட வீடியோ காட்சிகள் 

    தின பூமி – 1 நாளுக்கு முன்னர்
    தன்னிடம் தொடர்பு கொண்ட ஐயப்பன் மூலம் சக்சேனாவும், நக்கீரன் கோபாலும், காமராஜும் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ரஞ்சிதா 

நித்யானந்தா : மசாஜ் காட்சிகளுடன் மேலும் ஒரு சிடி!
Inneram.com – ‎10 மார்., 2010‎
நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளதை அடுத்து நித்யானந்தா விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. …

  • ஆஹா தமிழர்களின் தொழிற்நுட்பமே அலாதிதான்!
  • எப்பொழுதுமே பரபரப்புதான்!
  • “சின்ன ராஜாவே சிற்றெரும்பு அடிக்கடி கடித்தது” என்றால் ஒருத்தி!
  • ஓரகண்ணால் பார்த்தேலெ புள்ளத்தாச்சி என்றால் ஒருத்தி! அஹா வேகத்தில் மிஞ்சமுடியாது!

நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் …
தினகரன் – ‎10 மார்., 2010‎
சென்னை: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியாகியுள்ள சி.டி&யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர்களுக்கு …

ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
தினமலர் – ‎10 மார்., 2010‎
சேலம் : ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் …

  • பாவம், இந்த ஆளுக்கு “கலர் பிளைன்டு” என்ற வியாதி போலும்!
  • வெள்ளைக்கும், காவிக்கும் வித்தியாசம் தெரியாமல் துடிக்கிறன்!
  • வெள்ளை யென்றால் தெரியாமல் செய்வான், காவியென்றால் “காமி” என்றதால் காட்டிக்கொண்டேயிருப்பான் போலும்!

காவியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நித்யானந்தா
தினகரன் – ‎12 மார்., 2010‎
சென்னை :ஆசிரம அறைக்குள் நித்யானந்தா முழு நிர்வாணமாக இருப்பது போன்ற படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவரது ஆபாச காட்சிகள், படங்கள் வெளியாகிவருவது பரபரப்பை அதிகரித்துள்ளது …

  • அஹா, இனி நிர்வாணத்திலும் வென்றுவிட்டார்கள் போலும் தமிழர்கள்!
  • ஒருவேளை நித்யானந்தா பெரியாரைப் பின்பற்றுகிறாரோ?

நடிகை ரஞ்சிதா கடத்தலா?
தினகரன் – ‎12 மார்., 2010‎
சென்னை: நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியானதில் இருந்தே நடிகை ரஞ்சிதாவை காணவில்லை. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாததால் …

  • பாவம் போலீஸார்……………………….
  • இழவு, இந்த கேசையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது!

நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு, ஆதரவு தகவலை சேகரிப்பதில் அரசு …
தினமலர் – ‎12 மார்., 2010‎
விருதுநகர் : நித்யானந்தா ஆசிரமங்களில் உள்ள வழக்கு விவரங்கள், அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியது குறித்த விவரங்களைத் தருமாறு, மாவட்ட போலீஸ் …

  • பாவம் போலீஸார்……………………….
  • வேறு வேலையே இல்லை போலும்……………..
  • இதையெல்லா சேகரிக்க வேண்டியுள்ளது!

நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு?

மார்ச் 7, 2010

நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு?

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/03/06-ranjitha-refuses-go-against-nithyantha.html

இந்த செய்தியே வேடிக்கையாக இருக்கிறது. இதுவரைக்கும் அந்த சாமியாரைப் பற்றி பரபரப்பு ஏற்படுத்திவிட்டு, இப்போழுது ஏதோ அயல்நாட்டவர்களில் சதி என்பது போல குறிப்பிடுவது வியப்பாகவே உள்ளது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்!

நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் [^] அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது.

நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார்.

ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா.
32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம்.

அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள்.

இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.

ராசிக்கற்கள்: உண்மைகளும், பொய்களும்

நவம்பர் 24, 2009

ராசிக்கற்கள்: உண்மைகளும், பொய்களும்

பூதக்கண்ணாடி: கலைஞர்-டிவி-செய்திகளின் பிரச்சார பீரங்கி: சீனு. விஜயரங்கம் “சன்-செய்திகள்” டிவிக்கு தொகுத்தளிக்கும் “பூதக்கண்ணாடி” என்ற நிகழ்ச்சி, நாத்திகம்-பகுத்தறிவு போர்வையில் குறிப்பிட்ட மதத்தைத் தாக்குவது வெளிப்படையாகத் தெரிகின்றது[1]. பல பத்திரிக்கைகள் மற்றும் இணதளங்களில்[2] இப்படி ஒரு செய்தி! “நடந்தது என்ன‘, “நிஜம்‘, “நம்பினால் நம்புங்கள்உள்ளிட்ட இரவு நேர த்ரில்லர்களை அப்படியே காப்பிடியத்து கலைஞர் டி.வி. தொடங்கியபூதக்கண்ணாடிநிகழ்ச்சி, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனவே மற்ற தொலைக்காட்சிகளின் த்ரில்லர் தொடர்களை மிஞ்சும் அளவுக்குபூதக்கண்ணாடியை பரபரப்பாக்க ஆலோசித்து வருகிறதாம் கலைஞர் குழுமம்”. ஆகையால்தான், நாத்திக ஆயுதத்தை எடுத்துக் கொண்டு பகுத்தறிவு துணையுடன், சிறியதெல்லாவற்றையும் பெரிதாக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு “பூதக் கண்ணாடியுடன்” கிளம்பிவிட்டனர் போலும்!

 

ராசிக் கற்களைப் பற்றிய நிகழ்ச்சி: கரூர்[3], காங்கேயம் பகுதிகளில் பல நிறக் கற்கள் கிடைப்பது, வாங்குவது, விற்பது பற்றிய ஒரு தொகுப்பு 22-11-2009 அன்று ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியைக் கூர்மையாக பார்த்தேன். அதில் பற்பல பொய்கள், மாயைகள், முற்றிலும் பொருளேயற்ற பிதற்றல்களும் உள்ளதைக் கண்டேன். உடனே, புத்தகங்களைப் புரட்டி, இணைத்தளங்களிலும் பார்த்தால் ஒரே மாதிரியான போக்கு கண்பட்டது. அதாவது மூடநம்பிக்கை என்று எதிர்ப்பது, எதிர்ப்பது-ஆதரிப்பது என்ற குழப்பமான நிலைப்பாடு, முழுவதுமாக எதிர்ப்பது என்ற முறையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. எனவே இதைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.

 

முதலில் நிகழ்ச்சியில் கண்ட முக்கியமான குறிப்புகளைப் பார்ப்போம். இன்று அத்தகைய நிறக்கற்கள் வரவேற்ப்பறையில் உள்ள அலமாரிகள், மீன்-தொட்டிகள், முதலியவற்றை அழகு படுத்த பெரும்பாலும் உபயோகப் படுத்தப் படுகின்றன. பிறகு ராசிக்கற்கள் வியாபாரம் பெருகியதும் அதற்காகவும் இக்கற்கள் உபயோகப் படுத்தப்பட ஆரம்பித்தனர்.

.

வேலை செய்யும் பெண்கள்: கற்களைப் பொறுக்கியெடுக்கும் பெண்கள், நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள் முதலியோர் பேட்டிக் காணப்படுகின்றனர். அவர்கள் அத்தகைய கற்களைப் பொறிக்கி ஒரு படி ரூ.50/- அல்லது ஒரு மூட்டை ரூ.150/- வரை விற்பதாகக் கூறுகின்றனர். அவர்களுக்கு அந்த கற்களைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், தொடர்ந்து பொறுக்கிவருவதால் ஓரளவிற்கு கற்களின் அமைப்பு, நிறம், உருவம், அளவு, பக்கங்கள், பிளவுகள் முதலியவற்றைப் பொருத்து அதன் விலை / மதிப்பு உள்ளது என்று அறிந்துள்ளனர். உடனே பூ.க.வி [பூதக் கண்ணாடி விமர்சகர் என்று வாசிக்கவும்] தரகர், இடைத்தரகர், சிறிய வியாபாரி, பெரிய வியாபாரி, லாரட்ஜுகளில் தங்கியிருக்கும் வடநாட்டு வியாபாரிகள் என எல்லோரும் இவர்களை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதைப் போன்று விமர்சிக்கிறார்! நடுவில் ஒரு விவசாயைக் காண்பித்து, “எங்களுக்கு ஒன்னும் தெரியாதுங்க. எங்களிடம் கம்மியாக வாங்கிக் கொண்டு போய் நிறைய சம்பாதிக்கிறாங்க”, என்று அவர் சொல்லுவதைப் போலக் காட்டுகிறார்கள்! வேலைக்குக் காசு / கூலி / சம்பளம் என்றுதானே எல்லோரும் வேலை செய்கின்றனர். அதுமாதிரியே எல்லோரும் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிட்டால் என்னாவது?

 

பற்பல நிறக்கற்கள் ரத்தின வைடூரியங்கள் அல்ல: இக்கற்கள் பற்பல ரசாயன மூலங்களின் கலவைகள் செர்ந்து உருவாகியிருப்பதனால் அவ்வாறு பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் முதலிய நிறங்கள் மற்றும் மெல்லிய கோடுகள், பிளவுகள் முதலியவற்றைக் கொண்டுள்ளன. அவை தண்ணிரால் சுத்தப்படுத்தினாலே பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. இருப்பினும் அதற்கு பட்டைத்தீட்டி வைரம் போன்ற உருவத்தைக் கொடுக்கிறார்கள். இந்நிறக் கற்கள் சென்னை சரவணா ஸ்டோர்ஸிலேயேக் கிடைக்கின்றன. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10/-க்கு விற்றது, இப்பொழுது 20-30 வரை விற்க்கப்படுகின்றன. உருண்டை, கோளம், நீல்-உருண்டை, வளைந்த-நீள்-உருண்டை என பல உருவங்களில் கிடைக்கின்றன. ஒரு பாக்கெட்டில் 30 முதல் 38 வரை வண்ணக்கற்கள் இருக்கின்றன. ஆகவே பூகவி பேசுவதைப் போல இந்த “பற்பல நிறக்கற்கள் ரத்தின வைடூரியங்கள் அல்ல”, சாதாரண கற்களே! உண்மையான ரத்தின / வைரக் கற்களானால் அவை விலை லட்சக் கணக்கில் இருக்கும். போலி வைரகற்கள் போல, இவையும் போலியே!

 

வட-இந்தியர்களை இழிவு படுத்தும் போக்கு: பஸ்களில் பிரயாணம் செய்யவரும் வட இந்தியர் ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து பாக்கி சில்லறை வாங்காமலேயேச் சென்றுவிடுகின்றனர் என்ற புரிடா-ரீல் வேறு! ஆனால் கன்டெக்டர் சொல்லுவது என்னவென்றால் ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து டிக்கெட் வாங்கி ரூ.950/- அல்லது 990 வரை பெற்றுக் கொண்டு பாக்கி சில்லறை வாங்காமலேயேச் சென்றுவிடுகின்றனர் என்பதுதான்! அதுமட்டுமல்லாது, அவர்களுக்கு ஏதோ “சென்டிமென்டு” அதனால்தான் சில்லறையை வாங்குவதில்லை என்று வேற கூறுகிறார். ஆனால், இவரோ –பூகவி – எதோ அவர்கள் இங்கு வந்து லட்ச-லட்சமாகக் கொள்ளையடிப்பதால் பணம் கொழுத்துபோய் அப்படி செய்வதுபோலச் சித்தரிக்கிறார்.

 

ராசிக்கற்கள்: ஸ்படிகக் கற்கள், நவரத்தினங்கள் இவற்றைப் பற்றிய நம்பிக்கைகள், சாத்திரங்கள் இந்தியாவில் முன்னமே இருந்தன[4]. இப்பொழுதைய மேனாட்டு கலாச்சார பாதிப்பால் அது, மறுபடியும் வியாபாரமாகியுள்ளது! சினிமாக்காரர்கள், விளையாட்டுவீரர்கள், பிரபலங்கள் அணிந்தார்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற செய்துகள் வந்ததும், மக்கள் அதை வாங்க விரும்புவதில் ஒன்றும் ஆச்சரியமும் இல்லை. எல்லோரும் “பூஸ்ட்” குடிப்பதுபோலத்தான்! பெண்களுக்கே ஒன்றும் ஆகவில்லை, நாங்கள் செய்ததெல்லாம் வெறும் விளம்பரம்தான் என்று ஒப்புக்கொண்ட பின்னரும் “ஃபேர் & லவ்லி” போன்ற கிரீம்கள் விற்கப்படுகின்ரன. அதாவது, பத்தே நாட்களில் / ஒரு மாதத்தில் சிவப்பாகிவிடலாம் என்பதெல்லாம் பொய் என்று அந்த கம்பெனி ஒப்புக்குக் கொண்டுவிட்டது. அதுமட்டுமா, ஆண்களுக்கும் விற்க்க ஆரம்பித்துவிட்டனர். ஒன்றும் ஆகாது என்று கூறியபிறகும் மக்கள் ஆசைப்பட்டு வாங்கு பூசிக் கொள்கின்றனரே? இது என்ன நம்பிக்கை? மூடநம்பிக்கையா, பூதநம்பிக்கையா? பகுத்தறிவா? மூட-அறிவா? பொது அறிவா?

 

ஏற்கெனவே வந்துள்ள செய்திகளின் தொகுப்பு “பூதகண்ணாடி”: இந்நிகழ்ச்சியில், இவ்வாறான கிண்டல் அடிக்கும் மற்ற குறைகூறுவதைத் தவிர புதியதாக ஒன்றையும் காணோம். ஏற்கெனவே வந்துள்ள செய்திகளின் தொகுப்பு “பூதகண்ணாடி” அவ்வளவே. ஆனால், அதையும் கையில் எடுத்துக் கொண்டு அடிப்பத்ற்கு உபயோகப் படுத்தியுள்ளது தெரிகிறது. இனி பழைய செய்திகளௌஇப் பார்ப்போம்!

 

கரூர் அருகே பல கோடி மதிப்புள்ள பச்சைக்கல் புதையல்[5] !கரூர் அருகே ஒரு தோட்டத்தில் கிணறு வெட்டும் போது கோடிக்கணக்கான ரூபாய் பொறுமானமுள்ள அரிய பச்சைக் கல் கிடைத்தாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ளது மாணிக்கபுரம். இந்த பகுதியில் பூமிக்கு அடியில் அதிக அளவு பச்சைக்கல் கிடைப்பதால் கடந்த சில ஆண்டுகளாக கிணறு வெட்ட, மற்றும் குழி பறிக்க போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தன்னுடைய நிலத்தில் கிணறு வெட்ட முடிவு செய்தார் இதையடுத்து கூலி ஆட்கள் சிலர் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் அதிக அளவு பச்சைக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியே தெரிய வர அந்த பகுதி மக்கள் இரவு ரேத்தில் அங்கு சென்று பச்சைக் கல்லை தோண்ட முயற்சி செய்துள்ளனர். இதனால் உரிமையாளர் ஜெகநாதனுக்கும், கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் மண்டல துணை தாசில்தார், மாயனூர் இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் கிடைப்பது மரகத கல்லா? தரகர்கள் லட்சக்கணக்கில் லாபம்[6]: கரூர்:கரூரில் பச்சைக்கல் உள்ளிட்ட ஜாதிக்கல்லை கண்டெடுக்கும் மக்களை ஏமாற்றி, தரகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.மக்களிடையே ஆபரணத்துக்கு தங்கமும், வெள்ளியும் எந்த அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ, அதே அளவில் ஜாதி கற்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு, தங்கள் ராசிக்கு பொருத்தமான ஜாதி கல்லை அணிந்துகொண்டால், பிரச்னைக்கு தீர்வு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, மக்களிடையே உள்ளது.பூமியில் கிடைக்கும் மரகதக் கல், மேஷம் ராசிக்கும், புதன் கிரகத்துக்கும் ஏற்ற கல்லாக கூறப்படுகிறது. கிராமங்களில் இருந்து பச்சைக்கல் உள்ளிட்ட ஜாதிக்கல்லை கண்டெடுக்கும் மக்களில் பலருக்கு, அதன் உண்மையான மதிப்பு தெரிவதில்லை. இதை தரகர்கள் தங்களுக்கு சாதகமாக்கி, குறைந்த விலைக்கு வாங்கி, அதிக அளவில் லாபம் சம்பாதிக்கின்றனர்.  ஜாதிக்கல் விற்பனையில் ஈடுபட்டுள்ள தரகர் ஒருவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் தான், தென்னிந்தியாவிலேயே சிறந்த தரமான ஜாதிக்கல் கிடைக்கிறது. கடவூர் முதல் வெள்ளியணை வரையிலான பகுதியில் தான் ஜாதிக்கல் தோண்டி எடுக்கப்படுகிறது. இதற்காக பல ஏக்கர் கட்டாந்தரை காட்டை வாங்கும் மக்கள், இடைவெளி விடாமல் பல அடி ஆழத்துக்கு பரவலாக தோண்டி பார்க்கின்றனர். சில நேரங்களில் அருமையான கல் கிடைத்து, நிலம் வாங்கிய செலவை விட, பலமடங்கு லாபமும், பல நேரங்களில் ஒன்றுமே கிடைக்காமலும் போகும்.கரூரில் பெரும்பாலும், பச்சைக்கல், செவ்வந்தி, பொடிக்கல் தான் கிடைக்கின்றன. தற்போது, கல்லின் உள்ளே முடி உள்ளது போன்று ஒரு இழைக் காணப்படும், “மயிர் இழைக்கல்’ என்ற இனம், வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு கிடைக்கும் கற்களை, வியாபாரிகள் பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.  பல்வேறு மாநிலம் மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஹாங்காங் பகுதி வியாபாரிகளும் கல் வாங்குவதற்கு கரூர் வருகின்றனர். கரூரில், வெளியே தெரியாமல், விளம்பரமில்லாமல் லட்சக்கணக்கில் பணம் புழங்கும் தொழிலாக, ஜாதிக்கல் விற்பனை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

மாயைகள் வளர்கின்றன: அரேபியர்கள் (இஸ்லாத்திற்கு முன்பும் பின்னும்) இந்தியாவில் வந்து அதர்வண வேத ரகசியங்களைக் கற்றுச் சென்று வசியம் செய்தல், பூதங்களைக் கட்டுக்குள் கொண்டுவருதல் முதலிய வேலைகளை செய்து வந்தனர்[7]. ஆகவே அவர்கள் இத்தகைய “ராசிக் கற்கள்” விற்பதில் கைதேர்ந்து விளங்கினர்[8]. இன்றுகூட சாலையோரங்களில் ஒரு கண்ணாடி பெட்டி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவருவதைக் காணலாம். கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகியதும்தான் கடைகள் திறக்கப்பட்டு, டிவியில் விளம்பரங்கள் செய்யப்பட்டு மக்களின் “வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும்” என்ற ஆசையைத் தூண்டத்தூண்ட அவர்களுக்கு வியாபாரம் பெருகியது. குறிப்பிட்ட நிற-வடிவ-அமைப்பிலான கற்களை அணிந்தால் மன நிலையில் மாற்றம் ஏற்படும், வியாதி குணமடையும், வியாபாரம் பெருகும், தீய சக்திகள் அண்டாது, கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் என ஜோஸியமும் கூடியபிறகு ராசிக்கேற்றக் கல், மோதிரம் என்று வியாபாரமும் பெருகிவிட்டது. டிவி கம்பெனிகளுக்கும் னிளம்பரம் மூலம் நல்ல வருவாய்!

 

ஒரு நண்பர் விஞ்ஞானத்துடன் இவ்வ்வாறு எழுதியுள்ளார்[9]:

 

  • குரு என்ற கிரகத்திற்கு மஞ்சள் புஷ்பராகம் அணியுங்கள் பலன் கிடைக்கும் என்றால் குரு குறிக்கும் கொண்டைகடலையை உண்டாலும் அதே ஆற்றல் கிடைக்கவேண்டும்.
  • வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் சதாம் உசேன் தங்கத்தில் கழிவறை வைத்திருந்தாராம், நம் ஊரில் சாதம் சாப்பிடும் உலக நாதர்கள் ராசிக்கற்களை வாங்கிகொண்டிருக்கிறார்கள்.
  • நான் ஒரு முட்டாள் என்றால் நான் ராசிக்கற்களை வாங்கி என் முட்டாள் தனத்தை பன்மடங்காக பெருக்கி என்ன செய்ய போகிறேன்?
  • ஆற்றலே இல்லாத மனிதன் ராசிக்கல் அணிந்து எதை பெருக்க போகிறான்?

இன்னொரு நண்பரோ இப்படி[10]:
“நவரத்தின ராசிக்கற்கள் வியாபாரம் ஒரு பக்கம். பரமஹம்ச யோகானந்தர் என்ற மகான், தன்னுடைய ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலில் ரத்தினக் கற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்த கற்களின் அதிர்வு (vibration) நமக்குப் பலனளிக்க வேண்டுமானால் குறைந்தது ஒரு காரட் எடை இருக்க வேண்டும் என்கிறார். நம் மக்கள் பல பேருக்கு இதெல்லாம் இன்னும் தெரிய வரவில்லை. நகைக்கடை வியாபாரிகளுக்குத் தெரிய வந்தாலும் ஆகப்போவது என்ன? ஒரு காரட் வாங்கு என்றால் எவன் வாங்குவான்? சரி. அவன் வாங்குகிற அளவுக்கு, அதைக் கடுகளவு சிறிய அளவில் மோதிரத்தில் பதித்து ‘வீடு கட்ட, திருமணம் நடக்க’ என்று, விதவிதமாகச் சொல்லி விற்க வேண்டியதுதான்”.

 

மனோதத்துவத்தை நம்புகின்றவர்கள் மனோத்ததுவ ரீதியில் அணுகுவதில்லை: மனித உடல் மற்றும் மனம், மற்றும் அந்த மன-உடலான எண்ணங்கள், நோக்கங்கள், நிகழ்வுகள், செயல்பாடுகள் முதலியன அந்தந்த தனிப்பட்ட மனிதனுக்கேற்ற வரையில் வம்சாவளி மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை காரணிகளால் பிறப்பு முதல் இறப்புவரை கட்டுண்டுக் கிடக்கின்றன. தனி அறையில் தனியாக இருக்கும் மனிதன், வெளியே வரும்போது, அதனால்தான் மற்றவர் முன்பு வேறுமாதிரி நடக்கிறான், நடிக்கிறான். ஆகையால்தான் மனிதன் படுகையறையில் செய்வதை தெருவிலோ அல்லது அரங்கத்திலோ செய்ய, மற்றவர்கள் காண மறுக்கப்படுகிறது [இது ஒரு உதாரணம்தான், இதைபோல பல உதாரணங்கள் சொல்லமுடியும்].

 

ஆகவே விஞ்ஞான ரீதியில் பேசிவிட்டோம், உதாரணங்கள் கொடுத்துவிட்டோம் என்றே புதிய மாயைகளை, கட்டுக் கதைகளை சில விஷயம் தெரிந்தவர்களும் பரப்ப ஆரம்பிக்கின்றனர். மக்களை ஏமாற்றுவது என்றால் ஆத்திகம் அல்ல நாத்திகம் கூட உதவத்தான் செய்கிறது! அதுமாதிரியே விஞ்ஞானம் பேசும் ஊடகங்கள், M.B.A க்கள்,  C.A., I.C.W.A.I க்கள் மற்ற வல்லுனர்கள் கூட மாயைகளை உருவாக்குகிறார்கள்.

 

  • இயற்கையை முழுவதுமாக அறியமுடியாது என்றிருந்தும், அனைத்தையும் அறிந்து விட்டேன் என்று “வானிலை அறிக்கைகள்”  வெளிவருகின்றனவே, அது யேஸ்சியமா, ஜோஸ்யமா?
  • அரிசி விலை ஏறிக் கொண்டே போகிறதே அமெர்த்யா சென் என்னசெய்வார்? தனது பொருளாதார விஞ்ஞானத்தால் குறைத்துவிடுவாரா?
  • 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்றார் அப்துல்கலாம். ஆகாவிட்டால் என்னசெய்யமுடியும்?

 

வியாபாரத்தில் ஆன்மீகமும் இல்லை நாத்திகமும் இல்லை: பணம்தான் குறி: இன்றைய பிரபல முத்திரை-சின்னங்கள் வியாபாரத் தந்திரம், பிரச்சாரம், விளம்பரம் எல்லாமே பொய்யாக இருந்தாலும், தொடர்கின்றன. செலவுகள் எல்லாம் பொருளின் விலையில் ஏற்றிவைக்கும்போது பொருளின் செயல்திறனைப் பற்றி உற்பத்தி செய்கின்றவனோ விற்பனையாளனோ கவலைப் படுவதில்லை. இங்கிலீஸ் பேசினால் பொருள் விற்கும் என்றால் இங்கிலீஸ் பேசியே வியாபாரம் செய்கிறான்! பெண் அல்லது நடிகை படம் காட்டினால் கார் விற்க்கும் என்றால் பெண்னையேக் காட்டுகிறான். பெண்ணின் உருவ-அமைப்பை விவரித்து ஒப்புமையிடுகிறான்! நாளைக்கு பெண்ணை வேறுவிதமாகக் காட்ட்டினால்தான் கார் விற்கும் அல்லது வியாபாரம் பெருகும் என்றால் அவ்வாறே செய்யப்படும். நடிக்கும் நடிகைக்கும், காருக்கும், உற்பத்தியாளருக்கும், விளம்பர கம்பெனிக்கும் வருமானம். ஆகவே, இதற்கு “கடவுளே”த் தேவையென்றால், நாளைக்கு “கடவுள்” முத்திரைகள்-சின்னங்கள் உபயோகப் படுத்தப்படும்! முன்பு “கண்-திருஷ்டி பிள்ளையார்” விற்று லட்சாதிபதி ஆனவர் ஒரு முஸ்லீம், வாங்கி, மாட்டி இப்பொழுது மறந்து போனவர்கள் யார்?

 


[1] கருத்துக்களைத் தெரிவிக்க இந்த ஈ-மெயிலையும் கொடுத்துள்ளார்கள். ஆனால் பதில்தான் தருவதில்லை: bhoothakkannadi@kalaignartv.in

[2] தினமணி, நடந்தது என்ன!, First Published : 16 Nov 2009 10:42:00 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=155212&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

[3] வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.

[4] ஸ்படிகங்கள், ரசாயனக் கற்கள், கலவைகள் முதலியன உபொயோகப் பட்டதை சரக, சுஸ்ருத சமிதைகளிலேயேக் காணலாம். உதாரணத்திற்கு: Appendix-V of the following:

Priyavrat Sharma (Trans & Ed.), Caraka-Samhita, Chaukambha Orientalia, Varanasi, 1983, Vol.II, pp.754-756

[5] http://thatstamil.oneindia.in/news/2009/01/28/tn-rare-stones-found-near-karur.html

[6] தினமலர், கரூரில் கிடைப்பது மரகத கல்லா? தரகர்கள் லட்சக்கணக்கில் லாபம், நவம்பர் 12,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18733

 

[7] இன்றும் அத்தகைய மாந்திரிக, சித்து, வசியம், ஏவல் வேலைகளில் முஸ்லீம்கள் குறிப்பாக மலையாளத்தவர்  இருப்பதை, ஈடுபடுவதைக் காணலாம்.

[8] பிறகு வந்த ஐரோப்பியர்கள், குறிப்பாக ஜேசுவைட்டுகள் என்ற கத்தோலிக்க கிருத்துவ பாதிரி கூட்டங்கள், இந்திய விஞ்ஞானத்தை அறிந்து, இந்தியாவிலுள்ள கருவிகள், உபகரணங்கள் முதலியவற்றை எடுத்துச் செல்ல வந்தனர். படிகங்கள் (crystals), படிகாரங்கள் மற்றும் மலை உப்பு, வெடியுப்பு என பலவற்றை எடுத்துச் சென்று ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சியை பெருக்கினர்.

[9] http://tamilmanam.net/printer_friendly.php?id=409440

[10] http://www.tamilhindu.com/2009/01/jothida-mayakkam/