“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – வாத-விவாதங்கள் ஏற்பட்டுவிட்டதால் திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும் வெளிப்படுகின்றன!
‘திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்களே‘[1]: “திராவிட கட்சிகளுக்கு மாற்று” என்று பிஜேபிகாரர்கள் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் பேசியுள்ளனர். மொடக்குறிச்சி தொகுதி நாம் கட்சி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, மொடக்குறிச்சி நால்ரோட்டில் அக்கட்சி தலைவர் சீமான், நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: “கடந்த, 50 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் நாட்டை சீரழித்து விட்டன.
- எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது. தமிழகத்தில் லஞ்சம், ஊழல்களை ஒழிக்க போராடி வருகிறோம்.
- ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழக மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர்.
- குடிக்க குடிநீர், படிக்க பள்ளி, இருக்க வீடு என அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது.
- திராவிட கட்சிகள் இரண்டுமே, சாராய ஆலை வைத்துள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், விவசாயம், மும்முனை மின்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்போம். திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி நாங்கள்தான், “இவ்வாறு அவர் பேசினார். ஓரளவுக்கு திராவிடகட்சிகளின் ஆட்சியின் விளைவால் ஏற்பட்ட நிலையை, இப்பேச்சில் கண்டுகொள்ளலாம்.
2014லிருந்து ஆரம்பித்துள்ள கருத்து – திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்பது: ஜி.கே. வாசன்[2], அன்புமணி ராமதாஸ் என்ற மற்ற கட்சியினரும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்[3]. ஜி.கே வாசன் தனது கட்சியைத் துவங்கும் போது நவம்பர் 2014 அத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது நோக்கத்தக்கது[4]. காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரத்தின் மீது இவ்வாறு பேசியுள்ளார்கள். அப்படியென்றால், எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுடன் மற்றும் கருணாநிதி காலத்தில் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது காங்கிரசுக்கு தெரியாதா என்ன? கூட்டினால் யார்-யார் எப்படி ஆதாயம் பெற்றார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். “ஆரிய-திராவிட” கூட்டு என்பதும், நன்றாக தெரிந்த விசயமே. இருந்தும் வைத்துக் கொண்டார்கள். அப்பொழுது, பெரியாரே புலம்பவில்லை. கருணாநிதி-இந்திரா கூட்டை அவர் சுட்டிக்க்காட்டி, இன்னொரு முறை “கண்ணிர் துளிகள்” என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்கவில்லை. ஆகவே வீரமணியின் “இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தைப்பற்றி குறை கூறுவது என்பது ஒரு வகையான ஃபேஷனாகப் போய் விட்டது” முதல் வாக்கியமும் பொய்யாகிறது! ஏனெனில், வாசனை எதிர்த்து ஒன்றும் கூறவில்லை. அப்துல் ஹமீது ஷேக் மொஹம்மது என்கின்ற மனுஷ்யபுத்திரனின் எதிர்வாதத்தை இங்கு காணலாம்[5]. மத்திய அரசில் பங்கு கொண்டு, கோடிகளில் ஊழல் செய்தத்தை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இன்று கோடி கணக்கில் “ஓட்டுக்கு ஆயிரம்” என்று விநியோகம் நடக்கிறது என்று செய்திகள் வந்தபோது, எந்த திராவிடக்கட்சி கொடுக்காதே என்று போதித்தது?
திராவிட இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு சமுதாயப் பணியாற்ற முடியாது[6]: கருணாநிதி அத்தகைய வாதம் ஏற்புடையதல்ல என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்[7]. திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற முன்னெடுப்பு என்ற வாதம் குறித்த உங்கள் கருத்து? கருணாநிதியின் பதில்: “திராவிட இயக்கங்களின் மீது அலுப்பு வருவது நியாயமே இல்லை. ஏனென்றால், திராவிட இயக்கம் ஒரு சமுதாய இயக்கம் என்ற வகையில் தொடர்ந்து சமுதாயத்துக்காக பாடுபடுகிறது, பணியாற்றுகிறது. சமுதாயப் பணிக்கு என்றும் முடிவில்லை, சமுதாயப் பணி என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாங்கள் அரசியலிலே ஈடுபட்டிருந்தாலும், அரசியல் மூலமாக சமுதாயப் பணி ஆற்றத்தான் தயாராக இருக்கிறோம். முழுநேரமும் அதைத்தான் எங்களின் கடமையாகக் கருதுகிறோம்.எங்களுடைய சமுதாயப் பணிதான் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்திருப்பது திராவிட இயக்கத்தின் சமுதாயப் பணியின் பெருங்கட்டமாக கருதுகிறேன். திராவிட இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு சமுதாயப் பணியாற்ற முடியாது”. ஆக, “திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற முன்னெடுப்பு என்ற வாதம்” கருணாநிதியையும் பாதித்துள்ளது என்று தெரிகிறது. சமுதாயப்பணி, இடவொதிக்கீடு என்றெல்லாம் பேசினாலும், ஆசிரியர், டிரைவர், கன்டெக்டர், எஞ்சினியர் …….வேலைகளுக்கு இரண்டு கட்சிகளும் லட்சங்கள் வாங்கிக் கொள்கின்றான என்று ஊடகங்களில் எடுத்துக் காட்டப்படுகிறதே, அதை ஏன் மறுப்பதில்லை?
பெரியார் லஞ்சம் வாங்கச் சொன்னாரா?: மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளிலிருந்து, வீரமணி அப்பட்டமான பொய் சொல்கிறார் என்று தெரிகிறது.
- “திராவிட தமிழர்கள்” என்ற போதே, தெலுங்கர்கள், கன்னடகாரர்கள், மலையாளிகள் முதலியோர் அந்த “திராவிட சித்தாந்தத்தை”த் தூக்கியெரிந்து விட்டார்கள் என்பதை ஒப்புக்க்கொண்டது தெரிகிறது.
- “அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்” என்று வீரமணி குறிப்பிடுவதிலிருந்தே, அத்தகைய நிலையை உணர்ந்த நிலை ஏற்பட்டுவிட்டது.
- இதுவரை “அப்பழுக்கற்ற தந்தை பெரியார்” என்று யாராவது குறிப்பிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
- ஆனால், வீரமணி அவ்வாறு குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, சந்தேகம் வந்து விட்டது என்று தெரிகிறது. அதாவது, மற்றவர்கள் “அழுக்காறு / அப்பழுக்கு” என்ன என்று சோதிக்க ஆரம்பித்து விட்டனர்.
- ஜாதியத்தை முதலியார்கள், செட்டியார்கள், ரெட்டியார்கள், கவுண்டர்கள்……..என்றெல்லாம் வளர்த்தது திராவிட இயக்கம் மற்றும் பெரியார் போன்ற ஜாதியத்துவ தலைவர்கள்தாம்.
- பிறகு அவர்கள் ஏதோ, ஜாதியத்தை எதிர்த்தது போல சித்தரிக்கப் பட்டு, ஏமாற்றப்பட்டனர்.
- பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி…..என்று அவரவர் ஆட்சி காலத்தில், அவர்களது ஜாதியினர் உயர்பதிவிகளை அடைந்தனர், அவர்களது வாரிசுகள் எல்லாவற்றையும் குத்தகை எடுத்துக் கொண்டன.
- லஞ்சம் வாங்காதே, ஊழல் புரியாதே என்று பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ போதித்ததாகத் தெரியவில்லை.
- அவர்களது தாசர்களாக, தொண்டர்களாக, ஏன் பக்தர்களாக இருந்து வந்தவர்கள், அதெல்லாம் தவறு, குற்றம்…….என்றெல்லாம் உணரவில்லை.
- திமுக அல்லது அதிமுக மாறி-மாறி ஆட்சி செய்தால், இருகட்சிகளிலிருந்தும் ஆதாயம் பெற்றது திராவிடகழகமும், வீரமணியும் தான்.
ஆகவே, கடந்த ஆண்டுகளில் அவதி, கஷ்டம், துன்பம் மற்ற கொடுமைகளை அனுபவித்த மக்களுக்கு, திராவிடத்தின் பாதிப்பு தெரிந்துள்ளது. இது நீடித்தால், சாவைவிட கொடுமையான நிலை ஏற்படும் என்ற நிலையும் உணரப்பட்டது. திமுக-அதிமுக ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டாலும், உள்ளவர்கள் தீராவிடர்கள், தமிழர்கள், தமிழ் திராவிடர்கள், திராவிட தமிழர்கள் தாம்! பிறாகு அவர்கள் எப்படி அவர்கள் மீதே அத்தகைய கொடுமைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
© வேதபிரகாஷ்
19-05-2016
[1] தினமலர், ‘திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்களே‘, மே.4, 2016, 05.30.
[2] http://www.vikatan.com/news/article.php?module=news&aid=34576&r_frm=news_related
[3]http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2016/05/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article3424636.ece
[4] விகடன், திராவிட கட்சிகளுக்கு மாற்று எங்கள் இயக்கம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை!, Posted Date : 11:05 (09/11/2014).
[5] https://www.facebook.com/manushya.puthiran/posts/1009326045759973?fref=nf
[6] புதியதலைமுறை, திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற வாதம்?: ஏற்புடையதல்ல என்கிறார் கருணாநிதி, பதிவு செய்த நாள் : April 30, 2016 – 11:50 AM; மாற்றம் செய்த நாள் : April 30, 2016 – 01:17 PM.
[7] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/21895/karunanidhi-exclusive-3