Posts Tagged ‘கடவுள்’

குங்குமத்தை அழித்து, பெண்மையை பழித்த ஸ்டாலினுக்கு நாட்டை ஆள அருகதை உண்டா – தமிழக பெண்கள் இத்தகைய அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

மே 13, 2016

குங்குமத்தை அழித்து, பெண்மையை பழித்த ஸ்டாலினுக்கு நாட்டை ஆள அருகதை உண்டா – தமிழக பெண்கள் இத்தகைய அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஸ்டாலின் மூஞ்சில் குங்குமம் வைத்தது.வாக்காளர் ஒருவர் நெற்றியில் வைத்த குங்குமத்தை வேண்டுமென்றே உடனேயே அழித்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது[1], பரபரப்பு ஏற்பட்டது, சர்ச்சை என்றெல்லாம் நான்கு வரிகளில் விழயத்தை முடித்துக் கொண்டாலும், உடகங்கள் சரியா-தவறா என்று விவாதிக்கவில்லை. சென்னையில், எழும்பூர், தி.நகர், துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் மே 12.2016 அன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்[2]. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று கை குலுக்கி, செல்போனில் செல்ஃபிகள் எடுக்க அனுமதித்தார்[3]. எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆதரித்து, கே.வி.கார்டனில் ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது, அங்குள்ள கோவிலை கடந்து சென்றார். அப்போது, ஸ்டாலின் நெற்றியில், ஒருவர் குங்குமம் வைத்து விட்டார். உடனே கும்பிட்டு, திரும்பி, நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டார்[4].

ஸ்டாலின் உம்பிட்டு திரும்பியதுவைத்த குங்குமத்தை அழித்த ஸ்டாலின்: அந்த இடத்தை கடந்ததும், ஸ்டாலின் தனது கைக்குட்டையால் குங்குமத்தை அழிக்க தொடங்கினார். முழுமையாக அழியும்வரை மீண்டும் மீண்டும் கர்ஃசீப்பால் அதை துடைத்தார். நான்கு-ஐந்து தடவை துடைத்து, அழித்து, நடந்து சென்றது வீடியோவில் நன்றாகவே பதிவாகியுள்ளது[5].

  1. முதலில் குங்குமம் வைக்கப்படுகிறது.
  2. குங்கும் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்கிறார்.
  3. கைக்குட்டையை எடுக்கிறார்.
  4. கையில் ஓட்டிக்கொண்டிருந்த குங்குமத்தைத் தட்டித் துடைத்துக் கொள்கிறார்.
  5. பிறகு, நான்கு-ஐந்து தடவை துடைத்து, முழுவதுமாக அழிக்கிறார்.

இது அங்கிருந்த டிவி சேனல் வீடியோ கேமராவில் பதிவானது[6]. இதைக் கண்ட பொது மக்கள். என்னடா கோவில் குங்குமத்தை இப்படி உடனடியாக அழிக்கிறாரே என்றூ பெண்கள் முணுமுணுத்தனர். ஸ்டாலினுக்கு அவரது தாயார் குங்குமம் வைப்பது போன்றபுகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், அவர் இவ்வாறு நடந்து கொண்டது, மக்களின் னமனத்தைப் புண்படுத்துவதாக தெரிந்தது.

ஸ்டாலின் குங்குமத்துடன்குங்குமம் இல்லை என்றால் என்ன அர்த்தம்?: நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து ரத்தம் வழிகிறதா என்று கருணாநிதி கேலி செய்ததாக கூறப்படுவதுண்டு, என்று தமிழ்.ஒன்.இந்தியா குறிப்பிட்டு நிறுத்தியுள்ளது[7]. இப்போது அதே குங்குமம் சர்ச்சையில் ஸ்டாலினும் சிக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் செயலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன[8]. தாய், சகோதரி, மைத்துனி, மனைவி, என்று எல்லோருமே மதம் கிடையாது, கடவுள் கிடையாது என்று பகுத்தறிவு பேசும் திமுக சமீபகாலமாக ஒழுங்காக குங்குமம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குங்கும் வைத்துக் கொள்ளவில்லை, குங்குமம் இல்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிந்த விசயம் தான். அதன் கொள்கைகளை மறந்து மதம் போன்ற வழிபாடுகளில் கவனம் செலுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது[9] என்று வெப்துனியா சேர்த்துள்ளது.

ஸ்டாலின் கும்பிட்டு திரும்பி தொட்டட்ப் பார்த்துக் கொண்டதுநெற்றியில் குங்கும் என்றால் ரத்தமா?: கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது, “என்ன நெற்றியில் ரத்தம் ஒழுகுகிறதா”, என்று ஹனக்கேயுரிய நக்கலாக கேட்டார். பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். ‘உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் எப்போதும் குங்குமத்துடன்தானே காட்சி தருகிறார்?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ”அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு!” என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. பயந்து போன அவர், குங்குமத்தை அழித்து விட்டாராம். அதே நேரத்தில், அவரது மனைவி, துணைவி இத்யாதிகள் அப்படி வைத்துக் கொள்வது பற்றி நக்கல், கிண்டல் இல்லை. ஆனால், முன்பு, இந்திராகாந்தியை தாக்கியபோது, நெற்றியில் ரத்தம் வந்தபோது, மிகக்கேவலமாக விமர்சித்தத்தும் தெரிந்த விசயமே.

ஸ்டாலின் குங்குமத்தை அழித்ததுகுங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்[10]: “மத்திய அமைச்சர் சிதம்பரம், தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்றார். அதனால், என்னை பெண் வீட்டுக்காரனாக ஆக்கி, இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்துவோம். பெரியகருப்பனின் பணிகள் என்னை மாத்திரமல்ல, ஆன்மிகவாதிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன். பெயராலும், மீசையாலும் பெரியகருப்பன் அச்சுறுத்தல் தரக் கூடியவர்; ஆனால், உள்ளத்தால் நம் அன்பையெல்லாம் கவர்ந்தவர். அவர் கொண்டிருக்கும் தெய்வ நம்பிக்கையைக் கூட, என் மீது கொண்டிருக்கும் மரியாதையால், அதை கொஞ்சம் மறைத்து திறம்பட பணி புரிகிறார்”. இப்பொழுது அந்த ஆளும் வீடியோ விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த மூஞ்சிகளுக்கு தேவைப்பட்டதோதமிழக பெண்கள் இவர்களது அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்; குங்குமம் அழித்தல் என்பதே அபசகுனமாகக் கருதப்படுகிறது. பெண்களைப் பொறுத்த வரையில், அது அமங்கலமமாகக் கருதப் படுகிறது. தாலியறுத்த கையறுநிலையைக் குறிக்கிறது. அதனால் தான் போலும், தாலியறுக்கும் விழாவிலிஉம் ஈடுபட்டுள்ளனர். இப்படி பெண்களுக்கு, பெண்மைக்கு, பெண்ணின் பாரம்பரியத்திற்கு, தமிழக கலாச்சாரத்திற்கு, மங்கலநாண், மங்க நிலை என்று அனைவற்றிற்கும் எதிராக செயல்படும் இவர்களை தமிழக மக்கள் ஒதுக்க வேண்டும். நாத்திகம், சுயமரியாதை என்றெல்லாம் பேசி, ஏமாற்றி வருவதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இப்பொழுது தேர்தல் காலம் என்பதாலும், 60 வருட இந்த திராவிட ஆட்சியில், நன்றாக கஷ்ட பட்டு, மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளதாலும், மக்கள் இவர்களுக்கு, உரிய பாடத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். குறிப்பாக தமிழக பெண்கள் இவர்களது அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தாரா ஸ்டாலின்? சென்னை பிரசாரத்தில் சர்ச்சை, By: Veera Kumar, Updated: Thursday, May 12, 2016, 15:50 [IST].

[2] நியூஸ்.7.டிவி, வாக்கு சேகரிப்பின் போது நெற்றியில் இடப்பட்ட குங்குமத்தை அழித்த மு.. ஸ்டாலின், May 12, 2016

[3] வெப்துனியா, நெற்றியில் இட்ட கோயில் குங்குமத்தை உடனடியாக அழித்த மு..ஸ்டாலின் (வீடியோ இணைப்பு), வியாழன், 12 மே 2016 (15:07 IST).

[4] விவேகம்.நியூஸ், ஸ்டாலின் குங்குமத்தை அழித்ததால் பரபரப்பு, மஹா 12/05/2016 02:45 PM; http://www.vivegamnews.com/Page.aspx?id=22581

[5] http://ns7.tv/ta/mk-stalin-destroyed-vermilion-forehead-during-collection-ballot-cast.html

[6] https://www.youtube.com/watch?v=VflEJXwRjJg&sns=fb&app=desktop

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-vanish-kungumam-which-was-applied-a-voter-his-forehead-253467.html

[8] பிபிசி.தமிழ், தேர்தல் பரப்புரையின் போது நெற்றியில் இடப்பட்ட குங்குமத்தை அழித்த மு.க. ஸ்டாலின், பதிவு செய்த நாள்: 12 May 2016 2:02 pm, By : Amuthan.

[9] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-destruction-vermilion-in-his-forehead-116051200042_1.html

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=173030

19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாரா – பெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!

ஏப்ரல் 2, 2016

19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!

Usman Road Siva-Vishnu temple and EVR statue

சிவவிஷ்ணு கோவில் அருகில் பெரியார் பேசிய பொதுகூட்டம் (19-12-1973): தியாகராய நகர், சிவ-விஷ்ணு கோவில் அருகில் திகவினர், 19-12-1973 அன்றைய பெரியாரின் கூட்டம் ஏற்பாடு செய்ய நினைத்த போது, அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. உள்ளூர் திமுகவினரே அதனை எதிர்த்தனர். உண்மையில் திகவினர்களில் சிலரே அக்கூட்டம் தேவையில்லை என்று இரண்டு காரணங்களை வைத்தனர், 1. பெரியாருக்கு உடம்பு அசௌகரியமாக இருந்தது மற்றும் 2. சிவ-விஷ்ணு கோவில் அருகில் இருப்பதாலும், கூட்டம் இருக்கும் என்பதினாலும், இந்துக்கள் அவர்கள் பேச்சைக் கேட்டால் “அசிங்கமாக” இருக்கும் என்று சங்கடப்பட்டனர். மணியம்மை கூட வேண்டாம் என்றுதான் கூறி பார்த்தார். ஆனால், வீரமணி பிடிவாதமாக இருந்தார். போலீஸ் ஸ்டேசனுக்கு பக்கத்தில் உள்ள தெருவில் வைத்துக் கொள்ளல்லாம் என்று கூறி பார்த்தனர், ஆனால், ஒப்புக் கொள்ளவில்லை. தியாகராய நகர் பேரூந்து நிலைய ஜங்ஷனில் தான் வைப்போம் என்று வீரமணி பிடிவாதமாக இருந்தார். அப்பொழுது ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அங்கு வந்தாரா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியாது. அக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டு, பெரியார் பேசியதைக் கேட்டேன்.

19-12-1973 பெரியார் தி.நகர் கூட்டம்வழக்கமான தெவிடியா பையன் பேச்சும், இந்துமத தூஷணமும்: பேச்சு ஒன்றும் புதியதாக இல்லை, ஏற்கெனவே பேசியதை திரும்ப-திரும்ப பேசினார். வழக்கமாக இந்துமதத்தைத் தாக்கி கண்டபடி உடம்பு சரியில்லை என்றதால் முக்கவும்-முனகவும் செய்தார். ஒரு நிலையில் “அம்மா, அம்மா” என்று கத்தவும் செய்தார். ஆனால், பிடிவாதமாக பேச்சைத் தொடர்ந்தார். இஸ்லாம் என்ற விசயத்தால், இங்கு முக்கியமாக சொல்ல வேண்டியுள்ளது. “தெவிடியா பையன்” என்று பேசுவது அவருக்கு வழக்கமாக இருந்தது, “உலகத்திலே, தமிழர் இருக்கிறதைப் போல எத்தனையோ பங்கு முஸ்லிம் இருக்கான்; அவர்களுக்குள்ளே தெவிடியாள் மகனே கிடையாது, ஈனசாதியே கிடையாது. எல்லோருமே சகோதரர்கள், ஒருவனுக்குகொருவன் தொட்டுக்கொள்ளுவாங்கோ, ஒருவன் சாப்பிட்டதை இன்னொருவன் சாப்பிடுவாங்கோ, ஒருவன் இலையிலே இன்னொருவன் சாப்பிடிவான், எச்சில் கூட பார்க்க மாட்டான். அதாவது என்ன? அவ்வளவு சகோதரத்துவம் அந்த மதத்தின் தன்மை! அதே மாதிரி பார்ப்பான்……….பார்ப்பானும் அதேமாதிரி தங்களுகுள்ளே மேல், கீழ் சாதி கிடையாது; எல்லோரும் ஒஸ்தி. நாம் எல்லாம் அவனுக்குத் தெவிடியாள் மக்கன், இப்படி இருக்க காரணம் என்ன?”, என்று பெரியார் பேசியுள்ளார்[1].

19-12-1973 பெரியார் தி.நகர் கூட்டம்.2ஷேசாசல முதலியார் 19-12-1973 அன்று இருந்தாரா, இல்லையா?: ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அங்கிருந்திருந்தால், இதையும் கேட்டிருக்க வேண்டுமே? முதலியார் அப்பொழுது பக்திமானாக இருந்திருந்தால், சிவன், பார்வதி, முருகன், நாயன்மார்கள் பற்றியெல்லாம் ஆபாசமாகப் பேசியதற்கு கோபம் வந்திருக்க வேண்டும். அல்லது “உம்…..அம்மா,……அம்மா”, என்று முனகியபோது, கலிமா சொன்னால் பிழைப்பார் என்று ஞானதிருஷ்டியோடு சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஷேசாசல முதலியார் அதாவது பெரியார் தாசன் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், பெரியார் தாசன் ஆகி, அப்துல்லாவாகியப் பிறகு, “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது[2].

abdullah-in-different-poses17/18-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா பெரியாருக்கு சுன்னத் செய்தது எப்படி?: சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்! 11-03-2010 முதல் 17/18-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்? இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா? நாத்திகன் சேஷாசலம் இறந்தாரா? பெரியார்தாசன்  இறந்தாரா? “……….” –இறந்தாரா? சித்தார்த்தா என்ற பௌத்தர் – இறந்தாரா? அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா? யார் இறந்தது என்ற குழப்பம் இருக்கத்தான் செய்தது[3]. ஒரு நிலையில் முகமதியரே இவரது மதமாற்ரத்தில் குழம்பியதால், கண்காணிக்க ஆரம்பித்தனர்[4]. இக்குழப்பத்தில் “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை விட்டுள்ளதால், பெரியாருக்கு என்னவாயிற்று என்று ஆராய வேண்டியுள்ளது! ஒருவேளை இறந்தவர்களுக்குக் கூட “சுன்னத்” செய்யும் வித்தை இஸ்லாத்தில் உள்ளதா? இல்லை, மோடி மஸ்தான் வித்தை செய்து கலிமா சொல்லவைத்து, சுன்னத செய்யும் வித்தையும் உள்ளதா? அப்துல்லாஹ் தான், சமாதியிலிருந்து வெளியே வந்து உண்மையினை கூற வேண்டும்[5].

பெரியார் தாசன் கண்காணிக்கப்படுதல்உலகத்திலே, தமிழர் இருக்கிறதைப் போல எத்தனையோ பங்கு முஸ்லிம் இருக்கான்; அவர்களுக்குள்ளே தெவிடியாள் மகனே கிடையாது: பெரியார் இப்படி பேசியதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை? “அதே மாதிரி பார்ப்பான்……….” என்று பார்ப்பனை முஸ்லிமோடு, ஒப்பிட்டு பேசியதை ஏன் எந்த முசல்மானும் கண்டுகொள்ளவில்லை? ஒரு வேளை, பெரியாரே இப்படி பேசியதால், சந்தோஷமாகி விட்டு விட்டார்களா, மறந்து விட்டார்களா? “, ஈனசாதியே கிடையாது. எல்லோருமே சகோதரர்கள், ஒருவனுக்குகொருவன் தொட்டுக்கொள்ளுவாங்கோ, ஒருவன் சாப்பிட்டதை இன்னொருவன் சாப்பிடுவாங்கோ, ஒருவன் இலையிலே இன்னொருவன் சாப்பிடிவான், எச்சில் கூட பார்க்க மாட்டான். அதாவது என்ன? அவ்வளவு சகோதரத்துவம் அந்த மதத்தின் தன்மை!” என்றதை தவறு என்று சொல்ல தயக்கமா? இன்று இஸ்லாத்திக் ஜாதிகள் உண்டு என்கிறார்கள், “தலித்” என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி அவையெல்லாம் உண்மையாகும்? பெரியார் பொய் சொன்னாரா அல்லது முஸ்லிம்கள் பொய் சொல்கிறார்களா?

பெரியார் முஸ்லிம்19-12-1973 முதல் 24-12-1973 வரை: 20-12-1973 அன்றே இரனியா நோய் காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலனில்லாததால், 21-12-1973 அன்று வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 24-12-1973 அன்று காலை 7.22க்கு காலமானார். அவரது உடல் பிற்பகல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. உடலை தரிசிக்க வந்தவர்கள், மாலை போட்டு மரியாதை செய்தவர்கள், காலைத் தொட்டு வணங்கியவர்கள், கைக்கூப்பி வணங்கியவர்கள் முதலியவற்றை அவரது உடல் வைத்த இடம் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்[6]. 25-12-1973 பிற்பகல் மூன்று மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து உடல்  இறுதி ஊர்வலமாக பெரியார் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 4.15க்கு உடல் வந்தடைய, அங்கு மாலை 4.57க்கு தேக்கு மரப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது[7]. ஆனால், ஷேசாசல முதலியார் இங்கு எங்குமே இருந்ததாக தகவல் இல்லை!

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைதியாகராய நகரில் நிலவரம்: அதே நேரத்தில் அப்பகுதியில் அடுத்த நாள், அப்படியொரு கூட்டம் நடந்தது, பெரியார் அப்படியெல்லாம் பேசினார் என்று மக்கள் பிறகு கேள்வி பட்டனர். நிச்சயமாக இந்துக்கள் வருந்தத்தான் செய்தனர். அசிங்கமாக-ஆபாசமாக பேசியதை அறிந்தவர்கள் சிலர் கோபத்துடன் பேசினர். இருப்பினும் அவர்களது வருத்தங்களோ, கோபங்களோ பதிவாகவில்லை. உண்மையில் 24-12-1973 அன்று பல இந்துக்கள் பயத்துடன் இருந்தனர், வெளியே வந்தால் அடிப்பார்களோ என்ற அச்சம் இருந்தது. இது நிச்சயமாக அண்ணா மற்றும் பெரியார் இருவர்களுக்கிடையே இருந்த வேறுபாடு வெளிப்பட்டது. கோடிக்கணக்கில் மக்கள் தெருக்களில் வந்து, நடந்து, மெரினா கடற்கரைக்குச் சென்றதை அண்ணா இறுதி ஊர்வலத்தில் கண்டது. ஆனால், பெரியார் இறந்த தினத்தன்று மக்கள் அவ்வாறு, அதாவது, அத்தகைய திரண்ட கூட்டமாக, கோடிக்கணக்கில் வரவில்லை.

அண்ணா, பெரியார் இறுதி ஊர்வலங்கள்பெரியாருக்கு அரசு சார்பில் அடக்கம், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்தது: இந்திய விடுதலை நாளை துக்கதினமாகக் “கொண்டாடிய”, ஜின்னாவுடன் கூட்டு வைத்துக் கொண்ட, “திராவிட நாடு” கேட்டு பிரிவினைவாதம் பேசி, போராட்டங்கள் நடத்திய, பெரியார் இறப்பிற்கு, தமிழக அரசு விடுமுறை அளித்ததோடல்லாமல், “தேசிய கொடி இன்றும் (24-12-1973), நாளையும் (25-12-1973) அரைக்கம்பத்தில் பறக்கும்,” என்று அறிவித்தது. அத்தகைய மரியாதைகளை வீரமணியோ, திராவிட கழகமோ மற்ற பகுத்தறிவுகளோ எதிர்க்கவில்லை.

© வேதபிரகாஷ்

02-04-2016

[1] https://www.youtube.com/watch?v=o3OC3Jf-_-c, இந்த ஆடியோவில் குறிப்பிட்ட பேச்சைக் கேட்கலாம்.

[2] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013,  http://bushracare.blogspot.in/2013/09/5.html

[3] https://dravidianatheism.wordpress.com/2013/08/19/seshachala-mudaliar-seshachalam-periyardasan-siddhartha-abdullah-who-died/

[4]https://dravidianatheism2.wordpress.com/2010/04/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/

[5] https://dravidianatheism2.wordpress.com/2013/08/19/seshachalam-periyardasan-siddharth-abdullah-passed-way/

[6] https://www.youtube.com/watch?v=5jEzaWFuHGk – இந்த வீடியோவிலும் சிலவற்றை காணலாம்.

[7] சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர் – பெரியார் ஈ.வே.ரா வாழ்க்கை வரலாறு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, வேப்பேரி, சென்னை, 1997, பக்கம்.271.

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

ஏப்ரல் 2, 2016

நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்புதிய கட்டுக்கதைகளை உருவாக்கும் முகமதியர்கள்: பெரியாரின் பேச்சு, எழுத்து, ஏற்கெனவே அச்சில் வந்துள்ளவை முதலியவை இவைதான் என்று அதிகாரப்பூர்வமாக தொகுத்து, ஆதாரங்களுடன் வெளியிடாததால், குழப்பங்கள், திரிபுகள் மற்றும் கட்டுக்கதைகள் பெருகி வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணமாக “ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்”, என்று துலுக்கர்கள் இப்பொழுது இன்னொருக் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்[1]. பெரியாரின் ஒலிப்பதிவு பேச்சிற்கும், அச்சில் உள்ள பேச்சுகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு பெரியார் இஸ்லாம் பற்றி பேசியதாக இணைதளங்களில் வரும் பேச்சுகள்[2]. எப்படி பல வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன, விடுபட்டுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம். பெரியாருடைய பேச்சு, சுத்தமான தமிழாக இல்லை என்பது தெரிந்த விசயம், அப்பொழுது வழக்கில் உள்ள சமஸ்கிருதம் கலந்த சொற்களும் அவரது சொற்பிரயோகத்தில் இருந்தது[3]. அதனால், ஒலிநாடா பேச்சைக் கேட்டு, அச்சில் உள்ளதைப் படித்துப் பார்த்தால் வித்தியாசங்களை அறிந்து-புரிந்து கொள்ளலாம். இதனால், பெரியாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அவ்வாறுதான் அவர் பேசினாரா, எழுதினாரா என்று சரிபார்க்க, அதிகாரப்பூர்வமான புத்தகம் (edited from the original manuscripts) இல்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டைமுகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[4]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்.  “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார். இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[5]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[6]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா, எதிர்த்தாராஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929). ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை.  ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[7].

EVR listening to Rajaji with due respect and attention

இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்றது (20-10-1935): இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:  தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார். (குடியரசு 20-10-1935), அதாவது, இக்கணக்கை வைத்துப் பார்த்தால், 1926லேயே அப்படி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மாதிரியெல்லாம் பேசுவது வழக்கமாதலால், அதனை பெரிதாகவோ, முக்கிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

பெரியார் தாசன் புத்தகம்இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற அம்பேத்கர் தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய .வே. ரா (குடியரசு 20-12-1935): தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’, என்று கூறுகிறார். (குடியரசு 20-12-1935). உண்மையில், அம்பேத்கரது திட்டம் முதலியன இவருக்குத் தெரியாது.

பெரியார் தாசன் புத்தகம்.2இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று சபதம் செய்த ஈவேரா (குடியரசு 31-05-1936): மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார். (குடியரசு 31-05-1936) அதாவது, இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்று தெரிகிறது. ஆனால் அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்! “நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்”. (விடுதலை 09-02-1950).

பெரியார் முஸ்லிம்சட்டநுணுக்கங்கள் அறிந்த அம்பேத்கரும், இடத்திற்கு ஏற்றப்படி பேசும் ஈவேராவும்: அம்பேத்கர் மதம் மாறியபோது, சட்டப்படி “இந்துவாக” இருக்கும் நிலையில், இடவொதிக்கீடு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற முறையில், அவர் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். பெரியாரும், வலிய வந்து, பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு, பௌத்தத்தைத் தழுவுகிறேன் என்ற போது, அம்பேத்கர் விசயங்களை எடுத்துக் காட்டினார். பெரியார் ஒரு அவசரக்குடுக்கைகாரர் என்பது அம்பேத்கர்க்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், பெரியார் இந்துவாகவே இருக்க தீர்மானம் செய்து கொண்டார். டிசம்பர் 24, 1973ல் இறந்தபோது, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார்.

© வேதபிரகாஷ்

02-04-2016

[1] http://bushracare.blogspot.in/2013/09/5.html

[2] https://www.youtube.com/watch?v=2Ie5DrlDN3M

[3] ஒலி மற்றும் குடி அரசு முதலியவற்றில் கேட்டும், படித்தும் புரிந்து கொள்ளலாம், “ஆமா…..வெங்காயம்”!

[4] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[5] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[6] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[7] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013,  http://bushracare.blogspot.in/2013/09/5.html

கருப்பு, கருப்புச் சட்டை, பாசிஸ பின்னணி, அவற்றை விரும்பும் திகவினர் – ஆனால், பழி போடுவது மற்றவர்கள் மேல்!

மார்ச் 25, 2016

கருப்பு, கருப்புச் சட்டை, பாசிஸ பின்னணி, அவற்றை விரும்பும் திகவினர் – ஆனால், பழி போடுவது மற்றவர்கள் மேல்!

விடுதலை, ஞாயிறு மலர், முதல் பக்கம், 19-03-2016

My Dream Store  (எனது கனவு வணிக நிறுவனம்) என்ற நிறுவனம் பற்றிய செய்தி: திராவிடகழகத்தின் விடுதகை, ஞாயிறு மலர் 19-03-2016 இதழின் முதல் பக்கத்தில், “பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களாம் – நம்பித் தொலையுங்கள்!”, என்ற தலைப்பில், ஒரு செய்தி, இப்படி ஆரம்பக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது[1], “அய்தராபாத்தைச் சேர்ந்த    நிறுவனத்தின் தலைவர் கார்த்திக் வெங்கட் டைம்ஸ் ஆப் இந்தியா விற்கு அளித்த நேர்காணலில் எங்களின் நிறுவனத்திற்கு முக்கிய தொழிலதிபர்கள் ரூ.1.8 கோடி  முதலீடு செய்துள்ளனர். எங்களது    My Dream Store  (எனது கனவு வணிக நிறுவனம்) என்ற நிறுவும் சிறிய தொழில் முனைவோர் களின் தேவைக்கு இணையத்தில் விற்பனைத் தளங்கள் அமைத்துக் கொடுக்கும், மேலும் நாங்கள் வணிகர்களுக்கு புதிய புதிய யோசனைகளைக் கொடுத்து வணிகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்று கூறி அவர்களுக்கு வழிகாட்டும் ஆலோசனை நிறுவனமாகவும் இதை நடத்தி வருகிறோம்.எங்களுடைய நிறுவனத்தின் முக்கிய வியாபாரப் பொருளாக டி சர்ட்டுகள், கீ செயின்கள், மற்றும் விளம்பர பெயர்களைத் தாங்கி வரும் பரிசுப் பொருட்களை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்து வழங்குகிறோம். தற்போது புதிய வடிவத்தில் டிசர்ட்டுகள் தயாரித்து வெளியிட்டுள்ளோம் என்று கூறினார்”. பிறகு, கீழ்கண்டமுறையில், செய்தி தொடர்ந்துள்ளது.

பிராமண டி-சர்டுகள்- வீரமணி எதிர்ர்ப்புப் பிரச்சாரம்

பார்ப்பனர்களுக்கான டிசர்டும், அதில் உள்ள வாசகங்களும்[2]: “அதில் பார்ப்பனர்களுக்கு மட்டும் இந்த டி-சர்ட் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். மிகவும் குறைந்த அளவே ஸ்டாக் உள்ளது. 100% பருத்தி ஆடை, உயர்தர அச்சு, எளிதில் எழுத்துக்கள் மங்காது, உங்களுக்கு இந்த டி-சர்ட் பிடிக்கவில்லை என்றால் 15 நாட்களுக்குள் நாங்களே நேரில் வந்து வாங்கிக் கொள்வோம்!” என்று போட்டு விட்டு, சம்பந்தமே இல்லாமல், “(அய்தராபாத்தில் இப்படி ஒரு விளம்பரம்)” என்று ஒரு படத்டைப் போட்டுள்ளது. பிறகு, ஒரு குறிப்பிட டி-சர்டின் படத்தைப் போட்டு, அதிலுள்ள ஹிந்தி வார்த்தைகளை, தனக்கேயுரிய பாணியில், கீழ்கண்டவாறு மொழி பெயர்துள்ளது:

“பார்ப்பான் விரதமிருப்பான் சுதாமாவைப் போல்

பார்ப்பானுடைய சிந்தனை சாணக்கியனைப் போல்

பார்ப்பானுடைய கோபம் பரசுராமனைப்போல்”,

 அதற்கும் பிறகு, ‘இப்பொழுதெல்லாம் பிராமணன் எங்கப்பா?’ மாறி விட்டார்கள் எனும் ‘மாமேதைகள்’ மண்டையில் பார்ப்பான் அடித்துள்ள செருப்பு ஆணிகள் இவை, என்று முடித்துள்ளது[3].

Blackshirts facism. Italian and Dravidian

கருப்பு நிறம் யாருக்கு பிடிக்கும், சொந்தம், அதில் விவகாரம் என்ன?: இது என்ன, ஏதோ இந்த கம்பெனி பிராமணர்களுக்கு மட்டும் என்றா டி-சர்டு விற்கிறது, அதிலும் கருப்பு கலரில் இப்படி விற்கிறது என்று வியப்பாக இருந்தது. பொதுவாக, பிராமணர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கருப்பு நிறம் துக்கம், தீமை, ஒவ்வாதது, கெட்டது போன்றவற்றுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளதால், அதனை தேர்ந்தெடுப்பது, விரும்புவது கிடையாது. துக்கம் அனுஷ்டிக்க, இறப்பு முதலியவற்றைக் கடைபிடிக்க, எதையாவது எதிர்க்க வேண்டும் என்று தெரிவுக்க கருப்பு சர்ட், கருப்பு துணி, கருப்பு நிறத்தில் பேட்ஜ் முதலியவற்றை அணிவது வழக்கமாக இருக்கிறது.  மேலும் இந்த திகவினர்கள் “கருப்புச் சட்டைகள்” பற்றி பெருமைப்பட்டுக் கொள்வது தெரிந்த விசயமே[4]. “கருப்புச் சட்டை இயக்கம்” 1948ல் அரசால் தடை செய்யப்பட்டது[5]. எனவே, பிராமணர்களுக்கு மட்டும் அந்த டி-சர்ட் என்று கூறுவது, அறிவிப்பது, விற்பனைக்கு என்று விளம்பரப்படுத்துவது சரியில்லை என்று தெரிகிறது. இருப்பினும், உண்மை அறிய, அக்கம்பெனியைப் பற்றி தேடிப் பார்க்கப்பட்டது.

Brahmin T-shirts with extreme depictionsMy Dream Store  (எனது கனவு வணிக நிறுவனம்) என்ற நிறுவனம் பற்றிய விவரங்கள்: “எனது கனவு வணிக நிறுவனம்” என்றதன் இணைதளத்தில், அதைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இணைதளத்திலேயே, தயாராக ஒரு “அமைப்பு உதவி ஸ்ட்டுடியோ”, அமைப்பு உருவாக்கும் தயாரான வடிவமைப்பு முறை உள்ளது, அதைக் கொண்டு, ஒருவர் தாங்கள் விரும்பியபடி, நிறம், எழுத்துகள், வாசகங்கள், வடிவங்கள், படங்கள் என்று எதை வேண்டுமானாலும், பலவித பொருட்கள் (tees, hoodies, phone-cases, coffee mugs, tote bags and manymore) மீது உருவாக்கலாம்[6]. அப்படி செய்யும் போது அப்பொருளை வியாபார ரீதியில் விற்பதற்கு தூண்டுவதாக, ஊக்குவிப்பதாக ஆகிறது[7]. அவ்வாறு அப்பொருட்கள் விற்கப்படும் போது, வடிவமைத்தவர்களுக்கு, பணம் கிடைக்கிறது என்று சொல்கிறது[8]. அதைபற்றி விவரித்து ஒரு விளக்கும் படமும் போட்டுள்ளது[9]. அதாவது, கலைநயம், ஓவியத் திறமை, நுண்கலை ஆர்வம் முதலியவை உள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையாக இதுவுள்ளது. ஆனால், அதைத்தான் அப்படி திரித்து வெளியிட்டுள்ளது.

இது எப்படி வேலை செய்கிறது.

மாமேதைகள்மண்டையில் பார்ப்பான் அடித்துள்ள செருப்பு ஆணிகள் இவை: மேலும் இணைதளங்களைத் தேடிப் பார்த்த போது, இத்தகைய “பிராமின் டி-சர்ட்” வியாபாரத்தை வெளிநாட்டு கம்பெனிகள் அமோகமாக நடத்தி வருவது தெரிகிறது[10]. திக குறிப்பிட்ட ஒன்றல்ல, பலவகையான டி-சர்டுகள் காணப்படுகின்றன[11]. ஆகவே, பிராமணர்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. முன்பு “பிராமணர்களால் தயாரிக்கப்பட்டது” என்று போட்டு பொருட்களை விற்று வந்தார்கள். அதுபோலத்தான், இதுவும். வீரமணிக்கு இவ்விசயம் நிச்சயம் தெரிந்திருக்கிறது, இல்லையென்றால், “மணீச் கபே”யை மூடு என்று ஶ்ரீரங்கத்திற்குச் சென்றது போல, சென்றிருப்பார்களே? அமெரிக்காவுக்குச் சென்றால், உதை கொடுத்து, சிறையில்தான் போடுவார்கள்!

பிராமண டி-சர்டுகள்

பொய்களைப் பரப்பும் சித்தாந்த கூட்டங்கள்: ஆரிய-திராவிட இனவாதத்தை ஆங்கிலேய இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்றாலும், இவர்களுக்கு எங்கு புத்தி போயிற்று என்பது கவனிக்க வேண்டும். உண்மையில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விடும், கொள்ளையடித்த ஆங்கிலேயர்கள் சென்று விடுவர், அப்பொழுது அதிகாரத்தை எப்படி பெறுவது என்ற நிலையில் தான், பொய்யான சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு தங்களது தலைவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை உருவாக்கினர். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பொய்யையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, மக்களிடம் துவேசத்தைம் வெறுப்பை, காழ்ப்பை உண்டாக்கி, மக்களைப் பிரித்து, சித்தாந்த ரீதியில் வியாபாரம் செய்ய முடியும் என்பதனை திராவிட சித்தாந்திகளிடமிருந்து தான் அறிந்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றே பொய்களை வைத்துக் கொண்டு செய்திகளை உருவாக்குவது, விவரங்களைத் திரித்து செய்திகளை உருவாக்குவது, பாதி உண்மை – பாதி பொய், அரைகுறை விசயங்கள், சரிபார்க்காமல் முடிவுக்கு வருவது அல்லது முடிவைக்கொள்வது போன்ற முறைகளில் செய்திகளை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது முதலியவற்றை அவர்களது பிரச்சார பீரங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். அதிலும் சரித்திர ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை உருவாக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தாம் எனலாம்.

Many t-shirts for Brahmins

விவரங்களை சரிபார்த்து சோதனை, பரிசோதனை செய்யும் போது உண்மை வெளிப்பட்டு விடுகிறது: சமீபத்தைய நிகழ்வுகளில் தான் அவர்களது வரலாறே இருக்கிறது. ஆனால், அதிலேயே ஏகப்பட்ட பொய்மாலங்கள், அசத்தியங்கள், திரிபுகள் முதலியவற்றைக் காணலாம். எப்படியே பணம், அதிகாரம், பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் முதலியவை இருப்பதனால் எப்படியோ 60 வருடங்களைக் கழித்து விட்டனர். ஆனால், இப்பொழுதெல்லாம் விசயங்கள், அறிவார்ந்த தகவல்கள், சரித்திரக்குறிப்புகள் முதலியவற்றை பலரும், பல இடங்களிலிருந்து பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஒருவர் சொல்வது உண்மையா-பொய்யா, எந்த அளவுக்கு உண்மை-பொய், அவ்வாறு சொல்லவேண்டிய அவசியம் என்ன, அப்படி சொல்பவர்களின் பின்னணி என்ன என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம், விசயங்களை சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படி சரிபார்த்து சோதனை, பரிசோதனை செய்யும் போது அவர்களது நிலை தெரிந்து விடுகிறது. பிறகு அவர்களைப் பற்றிய நம்புகின்ற தன்மை முதலியவையும் போய் விடுகிறது.

© வேதபிரகாஷ்

25-03-2016

[1] விடுதலை, ஞாயிறு மலர், பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களாம்நம்பித் தொலையுங்கள்!, 19-03-2016, பக்கம்.1.

[2] “விடுதலை” நாளிதழ், திகவின் அதிகாரப்பூர்வமான நாளேடு, இதன் ஆசிரியர் கே. வீரமணி, பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைகழகத்தின் வேந்தர். அதனால், மிகவும் பொறுப்பானவர். ஆனால், அந்த நாளிதழில் இத்தகைய பொய்யான, திரிபுவாத செய்திகள் வந்துக் கொண்டிருப்பதனால், அதனை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.

[3]  http://viduthalai.in/page-1.html

[4] ஆனால், பெரியார் அந்த நிறத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்து கொண்டால், அவர்களது பாசிஸ்ட் குணாதிசங்களையும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இவர்கள் மற்றவர்களை “பாசிஸ்டுகள்” என்று சொல்லி ஏமாற்றி வர்கிறார்கள். Blackshirt, Italian Camicia Nera, plural Camicie Nere, member of any of the armed squads of Italian Fascists under Benito Mussolini, who wore black shirts as part of their uniform. The first squads—each of which was called Squadre d’Azione (“Action Squad”)—were organized in March 1919 to destroy the political and economic organizations of socialists. By the end of 1920 the Blackshirts were attacking and destroying the organizations not only of socialists but also of communists, republicans, Catholics, trade unionists, and those in cooperatives, and hundreds of people were killed as the Fascist squads expanded in number. http://www.britannica.com/topic/Blackshirt

[5] On 15 August 1947, Periyar wanted Indian Independence Day as a day of mourning, by way of wearing black shirts. The Congress Government of Madras Province banned the Black Shirt Volunteer Corps created by Periyar in March 1948.

[6] https://mydreamstore.in/active_campaigns; https://mydreamstore.in/design

[7] All you have to do is create the Products using our Design Studio or upload your own Unique artwork and promote the Product, the best you can within your social network (Remember, the more you promote, the better are the chances that your one-of-a-kind product will sell like hotcakes!). https://mydreamstore.in/about-us

[8] Buyers pre-order the products. We will take care of manufacturing, delivering, as well as customer support while you make money! If you are a designer/artist/marketer/student/social media page owner/hobby group member or belong to any fan club or music band – here is your chance to sell amazing products to your community. Increase the bonding or make money via products. We make – ‘Selling Easy!’ https://mydreamstore.in/about-us

[9] https://mydreamstore.in/cms/t-faq

[10]  http://www.freshmonk.com/brahminr?utm_source=shop

[11] http://www.freecultr.com/base-product.html?design=50352 – men

“சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து…. பெரியாரை வெளிக்காட்டும் கட்டுரை – உபயம் – திருவாளர் வீரமணி!

மார்ச் 20, 2016

சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”  1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து…. பெரியாரை வெளிக்காட்டும் கட்டுரை உபயம் – திருவாளர் வீரமணி!

EVR-karu-atheist-path-of-jihadi

பால் குத்திக் கொள்ளுதலும், கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதும்: பூசாரி, மாரியம்மனை உதைத்ததால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க மறு தினம் பிராமண குருக்களைக் கொண்டு பிராயச்சித்தம் செய்யப்பட்டது.

பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனமும், கஞ்சி காய்ச்சியும் கரகமெடுத்தும் ஊரைப் புழுதி பண்ணிய பக்த சிகாமணிகளின் லீலைகளும் எப்படியாவது போகட்டும். அதைப் பற்றி நாம் கவலைகொள்ளவுமில்லை. வைசூரி நோய் அபிவிர்த்தியானால் பால் குத்திக் கொண்டால் பரவிக் கொண்டிருக்கும் நோயானது தடைப்பட்டு விடுமென்பது சுகாதார முறை.

“பூசாரி போதை வெறியால் செய்த போக்கிரித்தனம்” எனும் போது, ஈவேராவுக்கே உண்மை தெரிந்திருந்திருக்கிறது. பிறகு, ஏன் இவ்வாறான மோசமான, வக்கிரமான கட்டுரை எழுத வேண்டும்? அங்குதன் அவரது அசிங்கமான மனோநிலை வெளிப்படுகிறது. மக்களின் நம்பிக்கையை மதிக்காத குணமும் வெளிப்படுகிறது.

இதைப்பின்பற்றாமல் கரகம்கட்டுவதும், கண்முழிப்பதும், துள்ளுமாவு இடித்து தின்பதும், கஞ்சி குடிப்பதுமான காரியமுமெல்லாம் வைசூரி நோயுடன், காலரா நோயும் சேர்த்துக்கொள்ளச் செய்யும் முட்டாள்தனமென்பதை புத்திசாலிகள் உணர்ந்த உண்மை. இதுவும் ஒரு பக்கமிருக்கட்டும்.

How EVR regarded pulaichi - low caste woman

மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்ப வேண்டாம்: சித்தர்க்காடு மாரியம்மன் கோவிலில் நடந்த பிரஸ்தாப நிகழ்ச்சியைக் கொண்டு குறிப்பாக சித்தர்க்காடு வாசிகளுக்கும் ஒரு வார்த்தை சொல்லவிரும்புகிறேன். அதாவது:-

பொதுவாக மக்களுக்கும், சிறப்பாக பெண்களுக்கும் மாரியம்மன் என்ற ஒரு தேவதையிடத்திலிருக்கும் மூட பக்தி அளவு கடந்ததாகும். மாரி, காளி, பிடாரி போன்ற தெய்வங்களிடத்தில் பெண்கள் கொள்ளும் மூட பக்தியை தணிக்க வேண்டுவது அந்தந்த ஆண் மகனின் கடமையில் முக்கியமானதாகும். ஏனென்றால், பெண்களுக்கிருக்கும் பக்தியை ஒரு கருவியாக கோயில் பூசாரிகள் உபயோகப்படுத்திக் கொண்டு, பெண்களை வசப்படுத்தி கற்பழிக்கவும் எத்தனிக்கிறார்கள். கற்பழித்துமிருக்கிறார்கள்.

பூசாரி மட்டுமல்ல, டாக்டரும், இஞ்சினியரும், ஏன் எத்தகைய ஆளானாலும், போதை வெறி, போக்கிரித்தனம் முதலியவை இருந்தால், அயோக்கியத் தனங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். இப்பொழுதே பப்புக்குச் செல்வது, குடிப்பது, கூத்தாடுவது எல்லாம் எங்கள் உரிமை என்று சொல்லும் அளவிற்கு, பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். கற்ப்பைப் பற்றி கவ்லை இல்லை என்ற அளவுக்கு, மனியம்மையாக நடித்த நாத்திக நடிகை குஷ்புவே விளக்கம் கொடுத்துள்ளது, அவரது ஆவிக்குத் தெரிந்தால் சரிதான்!

கோயில் பூசாரியை பக்தி சம்பாதித்துக் கொடுக்கும் பக்தன் என்ற பேதை எண்ணத்தால் எத்தனையோ பெண்கள் பூசாரியின் வலையில் சிக்கிவிடுகிறார்கள். முடிவாக மாரியம்மன் தரிசனத்துக்கு தங்கள் தங்கள் வீட்டு பெண்மணிகளை தனியாக அனுப்பிவைக்கும் ஆண் மக்கள் கவனித்து தக்கபடி நடந்து கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன், என்று அக்கட்டுரை முடிந்து விடுகிறது.

ஆரிய-திராவிட கூட்டணி

கடவுளை எதிர்க்கும் பக்தனும், ஆத்திகனும், நாத்திகனும்: கடவுள்-மறுப்பு, நாத்திகம், முதலியவற்றைப் பற்றி பேசும் சித்தாந்திகள் இந்த வித்தியாசத்தை அறிந்தும் அறியாத மாதிரி நடிப்பது தான், நிதர்சனமாக இருக்க்கிறது, அவர்களது போலி சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. கடவுள் பக்தி கொண்டுள்ளவர்களிலும் பலநிலைகளில் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்.

  1. சுகம்-துக்கம், இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு என்ற எல்லா நிலைகளிலும் சமமாக பாவிக்கும் கடவுள்-நம்பிக்கையாளர்கள் எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
    1. உயர்ந்த நிலையில், இவர்களும் கடவுள் இல்லை என்று சொல்லலாம்.
    2. கடவுளுக்கு உருவம் இல்லை, அதனால் விக்கிரகம் வேண்டாம் என்ரு சொல்லலாம்.
    3. பூசை-புனஸ்காரம் தேவையில்லை, மனிதன்–மனிதனாக, ஒழுக்கமாக இருந்தாலே போதும் எனலாம்.
  2. அவ்வாறு பாவிக்கத் தெரியாதவர்கள் தான் வேண்டியபடி / விரும்பியபடி நடந்தால் கடவுளுக்கு நன்றி சொல்வான்.
    1. எதிர்பார்த்து செய்யும் பூசை-புனஸ்காரங்கள் முதலியவை – அத்தகைய வகையறாக்கள்.
    2. எல்லாவற்றிற்கும் பரிகாரங்கள் செய்பவர்கள்.
  3. அவ்வாறு நடக்காவிட்டால், ஐயோ நான் ஏதோ தவறு செய்து விட்டேன், என்று மறுபடியும் வேண்டிக் கொள்வான்.
  4. அதில் இன்னொரு வகை, நடக்காதலால், கடவுளைக் கோபித்துக் கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
    1. அதிக எதிர்பார்ப்பு, நடக்காவிட்டால் தெய்வ-நிந்தனை.
    2. விரக்தியினால் நடந்து கொள்ளும் வகையறாக்கள்.
  5. அப்படியே நடக்காவிட்டாலோ, தொடர்ந்து வேண்டிக்கொண்டு நடக்காவிட்டாலும், கடவுளே இல்லை, நீ கல் தான் என்று வெறுத்துப்போய் ஒரு நிலைக்கு வந்துவிடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
  6. ஆனால், இவர்கள் எல்லோருமே கடவுள் இருக்கிறார் என்று தான் நம்பிக்க்கொண்டு இருக்கிறார்கள்.
  7. திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன், சமூக-விரோதி, அரசியல்வாதி, முதலியோர்களும் கடவுளை வேண்டிக் கொள்கிறார்கள். இது சமூகத்தில் தனது நிலையைக் காட்டிக் கொள்வதற்காகவோ, அல்லது வேண்டியது கிடைத்தது என்ற நிலையிலோ இருக்கும்.
    1. இங்கு பூசாரி இவ்வகையில் தான் வருகிறான்.
    2. திருடன், கொள்ளைக்காரன், கொலைக்காரன் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
    3. இதில் அரசியல்வாதி, ஒட்டுமொத்த குற்றங்களையும் செய்பவனாக இருக்கிறான்.
  8. திராவிட நாத்திகம் வளர்ந்த நிலையில், திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவதும், மனைவி-மக்கள்-சுற்றத்தாரை வைத்து சாமி கும்பிடும் நிலையும் இருந்து வருகிறது. இதில் பெரியாரே விலக்கல்ல.
    1. இறைன்றைய நிலையில் திராவிட-நாத்திகர்களில் 90% இப்படித்தான் இருக்கிறார்கள்.
    2. வீடுகளில் சாமிபடங்களை வைத்துக் கொண்டு பூசை செய்து வருகிறர்கள்.
  9. வெளியில் சாமியில்லை என்பது, உள்ளே சாமி குடும்பிடுவது என்ற போலி நாத்திகனும் இருக்கிறான்.
    1. இவன் போலி நாத்திகன்.
    2. இவனால் பெரிய அளவில் பாதிப்பில்லை.
  10. வெளியில் கடவுள் இருக்கிறார் என்று அறிவித்து, சாமி குடும்பிடுவது, உள்ளே ஆனால் உள்ளே சாமியில்லை என்ற போலி ஆத்திகனும் இருக்கிறான்.
    1. இவன் போலி ஆத்திகன்.
    2. ஆனால், இவனால் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
  11. இதையெல்லாம் மீறி, உண்மையான நாத்திகன் இருக்கிறான். ஆனால், அவன் ஆத்திகன் போலத்தான், மனிதனுக்கு எந்த விதத்திலும் தீங்கு நினைக்க மாட்டான்.
    1. வேற்றுமை வளர்க்க மாட்டான்.
    2. மனிதர்களை சித்தாந்தம் மூலம் பிரித்து வைக்க மாட்டான்.
    3. மனிதர்களுக்குள் துவேசத்தை, வெறுப்பை வித்திட மாட்டான், வளர்க்க மாட்டான்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஈவேரா அல்லது பெரியர் அந்த அளவுக்கு சிந்தனையாளன் அல்ல.

EVR listening to Rajaji with due respect and attention

ஈவேரா அல்லது பெரியாரின் குணாதிசயங்கள்: ஈவேராவுக்கு அகந்தை, ஆணவம், அகம்பாவம், மமதை முதலியவை அதிகமாகவே இருந்தது. தன்னை யாரும் குறைக்கூறக்கூடாது என்ற மனப்பாங்கும் இருந்தது. தான் பெரிய பணக்காரன் என்பதனால் –

  1. பணத்தை வைத்து எல்லோரையும் பணிய வைத்து விடலாம் என்ற யதேச்சதிகாரமான போக்கு;
  2. முதலில் உதவுவது போல காட்டிக் கொண்டு, ஒருவரை தன்னிடம் பணிய வைப்பது;
  3. எல்லோருமே தான் நினைத்தப்படி / சொல்லியபடி செய்ய வேண்டும், இல்லையென்றால், அவனுக்கு பலவகைகளில் துன்பம் கொடுப்பது;
  4. அதிகமான பேராசைக் கொண்டு, அது நடக்காவிட்டால் எல்லாமே மோசடி என்று கற்பனை-விரோதியை உண்டாக்கி அவனுடன் போராடிக் கொண்டிருப்பது;
  5. ஜாதியத்தை வளர்ப்பதற்காக, ஜாதியத்தை எதிர்ப்பது போலக் காட்டிக் கொள்வது;
  6. தீண்டாமை எதிர்ப்பு, பெண்கள் விடுதலை முதலியவை அத்தகைய எதிர்மறை பிரச்சாரங்களில் உருவானது;
  7. தொடந்து தோல்விகளை சந்தித்தப் பிறகு, விரக்தியாகி எல்லாவற்றையும் எதிர்ப்பது;
  8. முடிந்த வரை ஒருவருக்கு அதிக அளவில் எப்படி தொல்லை-தொந்தரவு-பாதிப்பு கொடுக்கலாம்-ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு வேலைசெய்வது;
  9. குடும்பப் பிரச்சினை, குழந்தை இறந்தது, விரக்தியான வாழ்க்கை, கூடாத உறவுகள்-சகவாசங்கள், தனிமனித தோல்வி, முதலியவை அரசியல்-அதிகார ஆசைகள் கூடாததனால், இரண்டும் சேர்ந்து உதுக்கிவிட்ட நிலை உருவானது;
  10. விகல்பமான மனப்பாங்கு, வக்கிரமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை, விரச வார்த்தைப் பிரயோகம், முதலியவற்றை பயன்படுத்தி, தனது விரோதிகளைத் தாக்குவது;

இவையெல்லாம் தான் ஈவேரா அல்லது பெரியார் என்ற மனிதனின் குணாதிசயக்களாக இருந்தன. சமீப காலத்தைய ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மைகளில் பலவற்றை மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது தான் பெரியாரின் கதை!

 

© வேதபிரகாஷ்

20-03-2016

பெரியாரின் வக்கிர எழுத்துகள் – “சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை” – 1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….- உபயம் – திருவாளர் வீரமணி!

மார்ச் 20, 2016

பெரியாரின் வக்கிர எழுத்துகள் – சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”  1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….- உபயம் – திருவாளர் வீரமணி!

 சித்தர்காடு மாரியாத்தாளுக்கு உதை 1934 - 2016 மார்ச் விடுதலை

பெரியாரின் வக்கிர மனத்தை அறிந்து கொள்ளுங்கள்: பெரியார் எழுதியுள்ளதாக, “விடுதலையில் வழக்கம் போல, சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதைஒரு கட்டுரை வெளியாகியுள்ளது[1]. தலைப்பிலேயே, விகல்பமான மனப்பாங்கு, வக்கிரமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை, விரச வார்த்தைப் பிரயோகம், என்று அனைத்தையும் பார்க்க முடிந்தது.  1934ல் இதை இவர் எழுதிய போது, யார் படித்தார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் படித்திருந்தால், அப்பொழுதே, இவரது யோக்கியதை எல்லோராலும் அறியப்பட்டிருக்கும். தமிழில் அந்நேரத்தில் சுதந்திரம், பக்தி, நாட்டுப்பற்று முதலிய விசயங்களில் பாடல்கள், நாட்டியங்கள், தெருகூத்துகள் முதலியவை நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய மோசமான தமிழில் எழுதியுள்ளதை யாரும் படித்திருக்க மாட்டார்கள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் சுமார் 50-100 பேர் படித்திருக்கலாம். அப்படி படித்திருந்தாலும், இவரது யோக்கியதையை தெரிந்து கொண்டவர்கள் மனதிற்குள் வைது, அமைதியாகத்தான் இருந்திருப்பார்கள். இப்பொழுது 2016ல், அதை “விடுதலை”யில் மறுபடியும் பதிப்பித்து, ஈ.வே.ராவின் தன்மையினை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்துள்ளது திருவாளர் வீரமணிதான். வழக்கம் போல அக்கட்டுரையை அப்படியே போடு, வேண்டிய இடத்தில், எனது விமர்சனத்தை வலது பக்கத்தில் குறிப்பிட்ட இடங்களில் கொடுத்திருக்கிறேன்.

 EVR at Kasi - unveriafiable mythical stories floated

சித்தர்க்காடு மாரியம்மன் கோவில், வைசூரி வியாதி, கஞ்சி ஊற்றல், கரகாட்டம்[2]: சித்தர்க்காடு என்ற ஊர் மாயவரம் முனிசிபாலிட்டியின் ஒரு பாகம். அதாவது டவுனின்மேல் கோடியைச் சேர்ந்தது, மாயவரம் ஜங்ஷனும் இந்த சித்தர்க்காட்டில் தான் இருக்கிறது. இந்த ஊரில் பிரபலமான மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தப் பக்கத்து ஜனங்களுக்கு இந்த மாரியம்மன் தான் பிரபலமான தெய்வம்.

அந்த மாரியம்மா இடத்தில் ஜனங்களுக்கு இருக்கும் பக்தி மேலீட்டிலேயே மிக க்ஷீண திசையுடனிருந்த கோவில் இப்போது பலமாகக் கட்டப் பட்டிருக்கிறது.இம்மாதிரியான ஒரு மாரியம்மா இருந்தும் சித்தர்க் காட்டைச் சுற்றிலும் சில காலமாய் வைசூரிநோய் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்த நோயால் சிலர் இறந்து விட்டார்கள். சிலர் இறக்கும் தருவாயை எதிர்பார்த்துக் கொண்டு மிருக்கிறார்கள். வைசூரி வியாதியால் ஏற்படும் இந்த மோசமான நிலையில் பாமர மக்கள் பீதிகொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லை. இக்காலத்திலும் புதிய-புதிய நோய்கள் வரத்தான் செய்கின்றன, மக்கள் இறக்கத்தான் செய்கின்றனர். மருத்துவத் துறை, மருந்துகள், சிகிச்சை முறைகள் எலாம் அபாரமாக முன்னேறியிருந்தாலும், அத்தகைய இறப்புகளைத் தடுக்கமுடிவதில்லை. இதனால், விஞ்ஞானத்தைக் குறைகூற முடியாது. மருந்தால் குஅப்படுத்த முடியாத நிலையில், மருத்துவர்களே, இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று விட்டு விடுகிறார்கள். அத்தகைய நிலையில் தப்பித்து குணமானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதனால் சித்தர்க்காடு மாரியம்மாவின் மனதைக் குளிர வைக்க அந்தப்பக்கத்து வாசிகள் நினைத்தார்கள். மாரியாத்தாளின் மனது குளிர்ந்துவிட்டால் வைசூரி நோய் பறந்துவிடுமென்று மனப்பால் குடித்த சித்தர்க்காடுவாசிகள், தங்கள் நிறைந்த பக்தியை பூர்த்திசெய்ய வேண்டி சென்ற 1.4.1934 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பகலில் கஞ்சி காய்ச்சி ஊற்றினார்கள். இரவில் கரகம் கட்டி வீதி வலம் வந்தார்கள்.

பெரியார் ஜி டி நாயுடுக்கு வாழ்த்து கடவுளின் பெயரால் 1932. with English

நிவேத்தியம் செய்ய வந்த பெண்ணிடம் தவறாகப் பேசிய பூசாரி[3]: வழக்கம்போல் கோவில் பூசாரி கரகத்தை எடுத்து வீதிவலம் வந்துகொண்டிருந்தான்.

ஊர் ஜனங்களும் கரகத்தைக் சூழ்ந்து கொண்டு ஆரோக்கியசாமி ஆசாரி பட்டறையின் மேல் பக்கத்துச் சந்தில் கரகம் வந்து கொண்டிருந்தது. இந்தத் தெருவிலுள்ள ஒரு யவனப் பெண்மணி கரகத்திற்குத் தீபாராதனை எடுக்க நிவேத்திய சாமான்களுடன் முன்வந்து நின்றாள், நிவேத்தியத் தட்டை நிவேத்தியம் புரியும் தனி பூசாரியிடம் கொடுத்துவிட்டு பிரசாதம் பெற்றுப்போக பிரஸ்தாபப் பெண்மணி நின்று கொண்டிருந்தாள். கரகம் தூக்கிக் கொண்டிருந்த கோவில் பூசாரியான வன் தன் எதிரில் நிற்கும் பெண்மணியின் கையைக் கெட்டியாகப் பிடித்து பிசைந்துகொண்டு பின்வருமாறு சம்பாஷிக்கலானான்: பூசாரி ஒரு பெண்ணுடன் கையைப் பிடித்து தவறாக நடந்து கொண்டான் என்பது இங்கு பிரச்சினை. அது தவறுதான். தட்டிக் கேட்க வேண்டியதுதான், நன்றாக உதைக்க வேண்டியதுதான். ஆனால், ஏதோ சினிமா “டையலாக்” மாதிரி எழுதுவதில் அல்லது கதை எழுதுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் முதலிய நற்பண்புகள் இல்லையென்றல், சமூகத்தில் இத்தகைய சீர்கேடுகள் நடக்கும். அதனால், நற்பண்புகளைப் பேண வேண்டிய அவசியம் உள்ளது. அதை விட்டுவிட்டு, விரசமாக எழுதுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்! உனக்கு எவரும் லட்சியமில்லை. நான் இருக்கிற வரையில் உனக்கென்ன பயம் சொல்லு. உன்னை நான் வைத்து காப்பாற்றுகிறேன். உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன். நான் சொல்லுகிறபடி கேட்கிறயா?” என்பது போன்ற வார்த்தைகளே நடந்தது. மேற்படி சம்பாஷணை பெண்ணின் கையைப்பிடித்து பிசைந்து கொண்டபடியே முக்கால் மணிநேரம் நடைபெற்றது.

Periyar statue damged December 2006

கரகம் முடிந்த பிறகு காளாஞ்சி கொடுக்கும் சம்பிரதாயம் ஆரம்பமானது[4]: கரகம் தூக்கிய பூசாரியானவன் வாலிப வர்க்கத்தைச் சார்ந்தவன். கரகத்துக்கு நிவேத்தியம் செய்து போக வந்த பெண்மணியும் இளம் வயதைச் சேர்ந்தவள், என்றாலும் கரகத்தை சூழ்ந்து கொண்டிருக்கும் பக்த சிகாமணிகளெல்லாம் பிரஸ்தாப சம்பாஷணையை மாரியம்மன் சன்னதியின் பேரிலேயே நடப்பதாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இது எத்தனையோ இடத்தில் நடத்தும் வழக்கத்தை ஒட்டியதால் இதைப்பற்றி ஆச்சரியப்பட வேண்டிய தில்லை. இந்த சம்பவம் முடிந்து கரகம் கோயிலுக்குப் போய் இறங்கியது. இறக்கும்படி சடங்குகள் முறையே முடிந்ததும் வந்திருக்கும் பக்தர்களுக்கு காளாஞ்சி கொடுக்கும் சம்பிரதாயம் ஆரம்பமாயிற்று, கரகம் தூக்கிய பூசாரி ஒரு தட்டில் தேங்காய் மூடி, பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் உள்பட விபூதி பிரசாதங்களுடன் மகா மண்டபத்தில் நிற்கும் பக்த கோடிகளான பொது ஜனங்கள் முன் தோன்றினான்.

சுயமரியாதை திருமணம் பெரியார் முன்னிலையில்

போதையில் இருந்த பூசாரி பக்தர்கள் மரியாதை செய்த பணத்தைத் தூக்கியெரிந்தது: நின்ற மகாஜனங்களில் முக்கியமானவர்களிடத்தில் காளாஞ்சி தட்டை சமர்ப்பித்தான், பெற்றுக்கொண்ட முக்கியஸ்தர்கள் பூசாரிக்கும் மரியாதை செய்வான் வேண்டி ரூபாய் 1.7.0 கொடுத்தார்கள்.

இந்தத் தொகை வழக்கத்துக்கு மீறியதாகவும், மிக கொஞ்சமாகவுமிருந்ததாக பூசாரி கருதினான். இது சமயமும் பிரஸ்தாப பூசாரியானவன் கரகமெடுத்து வீதிவலம் வருகிற போதும், லேகிய உருண்டையை அளவுக்கு மீறி தின்றிருந்த தால் அவன் வீதி வலத்தில் வரும் போதும், கோயிலில் இறங்கியதும் தன் நிலை தடுமாறி எல்லா காரியத்திலும் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதாய் சொல்லப்படுகிறது. இது எப்படியாவது இருக்கட்டும். பக்தர்கள் மரியாதை செய்த ரூ.1-7-0 பெற்றுக்கொள்ளாமல் தூக்கி எறிந்து விட்டான். ஈவேராவுக்கு வீட்டு வாடகை குறைவாக இருந்தாலே, வழக்குப் போட்டு, இடைஞ்சல் கொடுத்து, வெளியேற்றிய மனிதர். நன்கொடை விசயத்திலும் ஈவேரா கடுமையாகத்தான் நடந்து கொண்டார். ஆகவே, இவரும் பூசாரியை விட எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. உண்மையினை சொல்வதானால், மோசமாகவே எல்லோரிடத்திலும் நடந்து கொண்டார். அப்படியிருக்கும் போது, போதையுடன், பூசாரி இருந்திருக்கிறான் என்றால், அவனை அவ்வாறு அனுமதித்தது தவறாகும்.

வந்திருந்த பக்த கோடிகளை லேகிய உருண்டை வெறியால் வாயில் வந்தபடி திட்டினதோடு கர்ப்பகிரகத்தில் அலங்காரத்துடனிருக்கும் மாரியம்மனை நோக்கினான்.

12 வயதில் தாம் விரும்பிய தந்தை பெரியாரை மணந்த நாகம்மை 48 வயதில் மறைந்தார்.

ஆத்தாள் மகமாயியை நோக்கி 5,6 உதை காலாலேயே கொடுத்தது: இவ்வளவு நாள் உனக்கு உழைத்தும் நீ எனக்கு ஒன்றும் செய்யவில்லை என்றான். நீ இருந்துதான் என்ன? தொலைந்து தான் என்ன?

என்று பலவாறு சொல்லிக்கொண்டே ஆத்தாள் மகமாயியை நோக்கி 5,6 உதை காலாலேயே கொடுத்தான். மகமாயிக்கு செய்திருந்த அலங்கார புஷ்பங்களை எல்லாம் பிய்த்து நாலா பக்கமும் எறிந்தான். பூசாரியின் போக்கிரித் தனத்தை கண்ட பக்த கோடிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தங்கள் தங்கள் வீடு திரும்பினார்கள். “பூசாரியின் போக்கிரித் தனத்தை கண்ட பக்த கோடிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தங்கள் வீடு திரும்பினார்கள்” என்பதிலிருந்தே, அவன் பெரிய ரௌடியாக இருந்திருப்பான் என்று தெரிகிறது. அதாவது, கடவுள் மீது நம்பிக்கையில்லாதவன், பூசாரியானால், அத்தகைய நிலை தான் ஏற்படும்[5].

மறுதினம் தெருக் கூட்டம் போட்டு பூசாரியின் நடத்தையைக் கண்டிக்கப்பட்டது. கரகம் வீதி வலம் வரும்போது நிவேத்திய மெடுத்து வந்த பெண்மணியின் கையைப் பிடித்து பிசைந்ததற்கும், மாரியம் மனை காலால் உதைத்து பக்த கோடிகளை அவமானப் படுத்தியதற்கும் ரூபாய் 25 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட தொகையும் வசூலாகிவிட்டது.

© வேதபிரகாஷ்

20-03-2016

[1] .வே.ரா, சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை”  1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து….,, குடியரசு, 1934.

[2] http://viduthalai.in/page-7.html

[3] .வே.ரா, சித்தர்க்காடு மாரியாத்தாளுக்கு உதை, விடுதலை / குடியரசு, 1934.

[4] http://viduthalai.in/page-7/119051.html

[5] இன்று ஏதோ டிப்ளாமோ / பயிற்சி வகுப்பு முடித்து விட்டு, பூசாரி வேலை வேண்டும் என்று கிளம்பி விட்டார்கள். பெரியார் சிலைக்கு மாலை போட்டு, நாத்திக வாதம் பேசிக்கொண்டு, ஆர்பாட்டம்-போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பூசாரி பதவிக்கு வந்தால் என்னாகும் என்று மக்கள் நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

பெரியார் ஆவி, நாகம்மை ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

மார்ச் 17, 2016

பெரியார் ஆவி, நாகம்மை ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

oct25

oct25

 

பெரியாருக்கு ஆவி உண்டா?[1]: வருடாவருடம், பெரியார் சமாதியில், இந்த பகுத்தறிவாளிகள் கும்பிட்டு வருகின்றன. பாருங்கள் பகுத்தறிவு சூன்யங்களின் உன்மத்தமான நிலையை! கைகளை கூப்பிக் கொண்டு மார்பைத் துட்டுக் கொண்டு, அபரிதமான மயக்கநிலையில் உள்ளது போல இருக்கிறார்கள்! சில சூன்யங்கள் கைகூப்பி வணங்கலாமா, வேண்டாமா என்ற நிலையில் நின்றுள்ளன. இதுதான் இன்றைய திராவிடத்தின் போலித்தனம். செத்த மனிதனுக்கு எதற்கு வணக்கம், மரியாதை, மாலை எல்லாம்? அப்படியென்றால், அந்த செத்த மனிதருடைய  ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதானே அவ்வாறு வணங்கி மரியாதை செய்கின்றனர்? இல்லையென்றால், மலர்கள் தூவுவதற்கு பதிலாக கற்களால் அடிக்கலாமே, பூமாலைக்கு பதிலாக செருப்பு மாலை போடலாமே?  இப்பொழுது பெரியாருடன், அவரது மனை அம்மையாரையும் சேர்த்துள்ளார்கள்.

திகவின்மாதா கி ஜேதிருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி!: “பாரத் மாதா கி ஜே” என்று சொல்ல மாட்டேன் என்று துலுக்கர்கள் மறுபடியும் ஓலமிட ஆரம்பித்த அதே நாளில், திகவின் “மாதா கி ஜே” திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி முதலியவை நடந்துள்ளதும் சரித்திரத்தின் நியதி போலும். அண்ணாதுரை அன்று “இனம் இனத்தோடு சேரும்”, என்று இதனால் தான் சொன்னார் போலும்! அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (16.3.2016) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் என்று “விடுதலை” அறிவிக்கிறது[2]. அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் தொழிலாளரணி, திராவிடன் நலநிதி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது என்று தொடர்கிறது. அதுதான் பிறந்த நாள், இறந்த / மறைந்த நாள், எல்லாம் ஒரு கேடா என்று கேள்வி கேட்கும் பட்சத்தில் இதெல்லாம் முதலில் பகுத்தறிவுகளுக்கு இதெல்லாம் தேவையா என்று யாரும் கேட்டுக் கொள்ளவில்லையே? மேலும், பெரியாருக்கு இரண்டு மனைவிகள் இருந்த போது முதல் மனைவி நாகம்மையை விட்டுவிட்டு, மணியம்மை மட்டும் ஏன் பிடித்துக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. நாகம்மைௐகு சமாதி இருக்கிறதா, அது எங்கு இருக்கிறது, அவரது நினைவு நளை ஏன் திவினர் கடைப்பிடிப்பதில்லை என்றும் தெரியவில்லை.

திகவின் மாதா கி ஜே திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி-மார்ச்.17, 2016மணியம்மையாரை  அன்னை எனப்    புகழலாமா, கூடாதா?: திகவில் ஷிர்க் இல்லையா என்றால், இல்லை என்று நியாயப்படுத்த இன்னொரு கட்டுரை வேறு, “அன்னை மணியம்மையார் நினைவுநாள் ‘அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? என்ற 10.5.1960 குயில் ஏட்டில் தலையங்கம், மூன்றாவது பக்கத்தில். திரு குயில்   ஆசிரியர்  பாவேந்தர்க்கு,  மணச்சநல்லூர் அம்பட்டன் வணக்கமாகத்   தெரிவித்துக்   கொள்வது. புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப்    புகழ்ந்தும்   புகழத்தக்க  விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்களை இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வருகின்றீர் இது சரியா? என்ற கேட்டதற்கு பதிலாக வெளி வந்ததை வெளியிட்டுள்ளார்கள்[3]. போதாகுறைக்கு அதில் பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல. குருசாமி, குஞ்சிதம் அம்மையார், அண்ணாதுரை, பொன்னம்பலனார்[4] என்றேல்லாம் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதவது, அவருக்கு அந்த அளவுக்கு எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால், இப்பொழுது அவ்வாறு உரிமைகளைக் கொடுப்பார்களா? திராவிட அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் எவ்வாறு வசைப் பாடியுள்ளனர் என்பதனை, அவர்கள் மறைத்தாலும், அவ்வபோது, சில உண்மைகள் வெளிவந்து விடுகின்றன.

மணியம்மை நினைவு நாள்- கும்பிட்டார்களா-சமாளித்ட்யார்களா

பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்[5]: பெரியார்  திசம்பர் 24, 1973 அன்று காலமானார். பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல. குருசாமி[6], குஞ்சிதம் அம்மையார், அண்ணாதுரை, பொன்னம்பலனார். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு, மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும் காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது, அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது; பெரியார் சாகட்டும் என்று தவங்கிடக்கும் அண்ணாதுரை, குருசாமி, குஞ்சிதம் அம்மையார், பொன்னம்பலனார்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டு – பெரியார் வாழட்டும் என்று, தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை, அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? அதாவது, பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல.

  1. குத்தூசி குருசாமி [1906-1965],
  2. குஞ்சிதம் அம்மையார் [1909-1961][7],
  3. அண்ணாதுரை [1909-1969][8],
  4. பொன்னம்பலனார் [1904-1973][9].

 பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு:

  1. அவரின் பெருந்தொண்டு
  2. சிறுநீர் கலம்.

பெரியவர் ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மூக்குக் கண்ணாடி போட்ட போது, கலாட்டா செய்தவர்கள், இதைப் பற்றி யோசித்து பார்க்கவில்லையா? இறப்பு என்றபோது, ஒப்பாரி வைக்கும் சித்தாந்தம் வந்து விடிகிறதே? “கண்ணிர் துளிகளும்”, “கட்டு விரியன் பாம்புகளும்” இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

திகவின் மாதா கி ஜே திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி-மார்ச்.17, 2016.2© வேதபிரகாஷ்

17-03-2016

[1]https://dravidianatheism2.wordpress.com/2010/01/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/

[2] http://viduthalai.in/page1/118919.html

[3] http://tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=230&pno=215

[4] தந்தை பெரியார் அவர்களால் தமிழ்மறவர் என்று போற்றப்பட்ட புலவர் வை.பொன்னம்பலனார்

[5] விடுதலை,  ‘அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?, மார்ச்.16, 2016, மூன்றாவது பக்கம்;  10.5.1960 குயில் ஏட்டில் தலையங்கம்.

[6] விடுதலை ஆசிரியர் குருசாமி. சென்ற   பொதுத்  தேர்தலில் காஞ்சிப் பகுதியில் அண்ணாத்துரையை எதிர்த்தும்   பார்ப்பனர்  ஒருவரை ஆதரித்தும் கூட்டத்திற் பேச அனுப்பப் பட்டவர்   குருசாமி.   குருசாமியுடன்   சென்றவர்   குஞ்சிதம்,  குஞ்சிதம்  அம்மையாரை   கூட்டத்   தொடக்கத்தில்   பேச அழைத்தார்கள் காஞ்சித் திராவிட கழக்கதார்.

[7] ‘ரிவோல்ட்’ எனும் ஆங்கில இதழின் இதழாசிரியராக இருந்த குருசாமி என்பவரை 08.12.1929 இல் பெரியார் – நாகம்மையார் முன்னிலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்

[8] தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன்,  1949ல், பெரியாரை விட்டு விலகி,  தி.மு.க என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.

[9] இயற்பெயரான கனகசபை என்பதைத் தூய தமிழில் பொன்னம்பலம் என்று மாற்றிக் கொண்டார். மொழிக் கொள்கையில் தமக்கும் பெரியார் ஈ வெ இரா வுக்கும் கருத்து முரண் உண்டு என்று பெரியாருக்கு முன்னிலையில் துணிச்சலுடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

மார்ச் 17, 2016

பெரியார் ஆவி, மணியம்மை ஆவி, பெரியார் சாகவேண்டும் என்று நினைத்தர்களும், சாகத் தடுத்தவையும்!

பெரியார் அழைக்கிறார் - மார்ச்.17, 201616-03-2016 அன்று செய்திகளை கவனித்து வாசித்து, பார்த்துக் கொண்டிருக்கு வேளையில் போது சில விசயங்கள் பொருந்தி போகும் போது எனக்கு வியப்பாக இருந்தது. குறிப்பாக “விடுதலை”யில் இருந்தவை மிக்க சிந்திக்க வேண்டிய செய்திகளாக இருந்தன.

  1. ஒவைசி “என் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினாலும்,பாரத் மாதா ஜி ஜே” என்று சொல்லமாட்டேன் என்று கூறியது[1].
  1. ”பாரத் மாதா கி ஜே” என முழக்கமிடுவது எனது உரிமை என காங்., எம்.பி.,யும், பிரபல இந்தி சினிமா பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் ராஜ்யசபாவில் பேசியது[2].
  1. மஹாராஷ்ட்ரா எம்.எல்.ஏ, வரீஸ் பதான் “பாரத் மாதா ஜி ஜே” என்று சொல்லமாட்டேன் என்றதால் சஸ்பென்ட் செய்யப்பட்டது[3].
  1. மணியம்மையின் நினைவு தினம் என்று திகவின் “மாதா கி ஜே” திருவிழா, சமாதி வழிபாடு இத்யாதி முதலியவை நடந்துள்ளது.
  1. திகவினரின் சித்தாந்த குக்குரல்கள் / கோஷங்கள்:
    1. தந்தை பெரியார் அழைக்கிறார் வாரீர்!”,
    2. “பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்”,
    3. பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார்.
    4. பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது?
    5. அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி, போன்ற வாதங்கள்!
  1. பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்; அவர் முதுமை அல்ல; அவருடைய பிணிகள் அல்ல என்று குறிப்பிட்டது.
  2. குருசாமி,
  3. குஞ்சிதம் அம்மையார்,
  4. அண்ணாதுரை,
  5. பொன்னம்பலனார்.
  1. பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு:
  2. அவரின் பெருந்தொண்டு
  3. சிறுநீர் கலம்.

இவையெல்லாம் வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், செய்திகளாக வெளியிட்டாலும், அவற்றிற்கு சம்பதம், இணைப்பு, சம்பந்தம் முதலிய இருப்பது தெரிகிறது. இனி விசயங்களைப் பார்ப்போம்.

பெரியாரின் மனைவிகள்ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவற்றைப் பற்றி பெரியார்நாத்திகர்களின் நிலை: 16-03-2016 தேதியிட்ட “விடுதலை” நாளிதழில் அத்தகைய செய்திகள் வெளிவந்துள்ளன. பெரியார் முதல் அவரது சீடர்கள் வரை ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவை எல்லாம் இல்லை என்று இன்று வரை பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், “பேய் படங்கள்” ஹிட் ஆவது பற்றி, மு.வி.சோமசுந்தரம் “பெரியார் மண்ணில் பேயாட மேடை போடலாமா?”, என்று கேட்டு “விடுதலை”யில் எழுதியுள்ளார்[4]. அதில், “பேய் பற்றி இங்கர்சால்”, இந்தப் பேய், பிசாசு பற்றி ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் விளக்கமும் சம்மட்டி அடியும் சிந்திக்கத்தக்கவை, என்று அவரது கருத்துகளைக் கொடுத்துள்ளார்.

  • “அந்தக் காலத்தில் (பூமி தட்டை என்று கூறிவந்த காலத்தில்) அறியாமை அரியாசனத்தில் இருந்தது; அறிவியல் ஒதுக்கப்பட்டது.’’ (In those days Gnorance was a king; and science was an outcast).
  • “பேய், பிசாசு என்ற பெயரில் அவற்றின் ஆணை என்ற பெயரில், மனிதர்கள், தங்களின் சக மனிதர்களை அடிமைப்படுத்தினர்’’ (In the name and by the authority of the ghosts men inslaved their fellowmen);
  • “கற்பனையில் உருவெடுக்கும் அரக்கர்களையும், ஆவி உருவங்களையும் நான் தாக்குகிறேன். காரணம், அவை உலகை ஆள்கின்றன. பேய், பிசாசுகள் தொலையட்டும், நாம் இனிமேல் அவற்றைத் துதிக்க மாட்டோம். அவை தங்களின் சதை இல்லாத கைகளால், கண் இல்லாத குழியை மூடிக் கொண்டு, மனிதர்களின் கற்பனையிலிருந்து நிலையாக மறைந்து போகட்டும் (I attack the monsters, the phantorms of imagination that have ruled the world. Let the Ghosts go We will worship them no more let them cover their less pockets with their fleshless hands and faste forever from the imagination of men).

 மு.வி.சோமசுந்தரம் தொடர்கிறார். ஆனால், இடைக்கால ஐரோப்பிய நிலை, இடைக்கால இந்தியாவோடு ஒப்பிடமுடியாது.

பெரியார் ஆவி கோவிலைக் கண்டு பயப்படுகிறதா 17-03-2016பெரியாரைப் பார்த்து பேய்கள் ஓடுமா, ஓடாதா?: “ஆத்திகர் -நாத்திகர் என சகலரும் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கிறார்களே, என்பதற்கு, “இந்த உளவியலை புரிந்து கொள்வது கடினம்” என்று, நாத்திகர், கடவுள் தத்துவத்தையே ஏற்காதவர்கள். பேய் பிசாசுகளையா ஏற்றுக் கொள்வார்கள்? திரைப்படங்களுக்குச் செல்வது பொழுது போக்குவ தற்காக. நாத்திகர்கள் அங்கு செல்கிறார்கள் என்றால், ஆய்வுக் கண்ணோடு பார்க்கச் செல்கிறார்கள் என்பது தான் சரியானது….. பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார். பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது? அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி. என்று மு.வி.சோமசுந்தரம் முடிக்கிறார்[5]. ஆனால், அதன் கீழேயே, தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திலே கோவிலா? என்று திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் தந்தை பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக ஒரு கோவிலின் புகைப்படத்தைப் போட்டு, அது அகற்றப்படுமா, என்று கேட்டிருக்கிறது வியப்பாக இருக்கிறது[6]. மேலும், “குறிப்பு: பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித வழிபாட்டு நிலையங்களுக்கும் இடம் இல்லை என்பது அரசாணை அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டுதான் ஒவ்வொருவரும் அங்குக் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது”, என்று கூறுகிறது!. பெரியாரைக் கண்டதும், இந்த சாமிகள், சிலைகள், கற்கள் ஏல்லாம் ஓடிப்போக வேண்டாமா, ஏன் போகவில்லை. மேலும், அந்த கற்களைக் கட்டு பயப்படுவானேன்? பெரியாரோ பிடிக்க வரும் பேயைத் தன் தடியால் துரத்தியே விடுவார். பெரியார் மண்ணில் பேயேது பிசாசேது? அழைத்து மேடை ஏற்றாமலிருந்தால் சரி. என்றவர்கள், இதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஆத்திகர் –நாத்திகர் ஆவி, பேய், பிசாசி, பூதம் முதலியவற்றை நம்புகிறார்களா இல்லையா என்பது தான் பிரச்சினை.

பெரியாரும், ஆவியும், ஆத்மாவும்ஆத்மா பற்றி பெரியாரின் கருத்து[7]: ஆத்மா பற்றி பெரியார் சொன்னதாக உள்ளது, “ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை.” ஆத்மா உணர்ச்சி, அது அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும், என்றால், ஆத்மா-சரீரம் தொடர்பு தெரிந்துள்ளது. உடல் இருக்கும் வரை ஆத்மா இருக்கும் என்பதும் தெரிந்துள்ளது. பிறகு, ஆத்மா இல்லை என்றெல்லாம் பேசுவது, விதண்டாவாதம் என்று நன்றாகவே விளங்குகிறது.

பெரியாரின் மனைவி.1பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்[8]: தந்தை பெரியார் அழைக்கிறார் வாரீர்!” – என்று தலைப்பிட்டு, இன்னொரு கட்டுரை[9]. பெரியார் தான் இறந்து விட்டாரே, அவர் எப்படி கூப்பிடுவார் என்று பகுத்தறிவும் யோசிக்கவில்லை போலும். ஏசு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற பாணியில் அழைக்கும் போக்கு ஏன் பகுத்தறிவுகளுக்கு வர வேண்டும்? பகுத்தறிவி பேசி முதலியார், பிள்ளை, கவுண்டர், நாடார், வாண்டையார், மூப்பனார், என்று ஜாதிகளை வளர்த்ததே திராவிடக் கூட்டதினர் தானே? பிறகு எப்படி பெரியார் பிறந்த மண், ஜாதி ஒழிப்பு மண் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்கிறது. “சமூகநீதி” என்று பேசி மக்களை புதுவகையில் திசைத் திருப்ப முடியுமா? “பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார்” என்று சொல்லிக் கொள்வதில் வேடிக்கையாக இல்லையா என்று யோசிக்க வேண்டும். தத்துவ ரீதியில், கொள்கை ரீதியில், சித்தாந்த ரீதியில் பெரியார் மறையவில்லை; எங்களில் நிறைந்துள்ளார் என்று வாதிக்கலாம். ஆனால், பெரியாருக்கு என்ன இருந்தது, அவரிடத்திலிருந்து இவர்களுக்கு என்ன வந்தது என்பதையும் சொல்லியாக வேண்டுமே? அதுவும் உணர்ச்சியா, உடல் இருக்கும் வரை உணர்ச்சியா அல்லது உடல் இல்லாவிட்டாலும் தொடரும் உணர்ச்சியா என்று விளக்க வேண்டும். உடல் இல்லாவிட்டாலும் தொடரும் உணர்ச்சி என்றால், அவர்களது வாதம் அடிபட்டு போகிறாது. அதனால், பெரியார் ஆவியைக் கண்டு பயப்படத் தேவையில்லை!!

© வேதபிரகாஷ்

17-03-2016

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1478578

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1479789&Print=1

[3] http://www.dailythanthi.com/News/Districts/Mumbai/2016/03/17023007/Maharashtra-AssemblyMajlis-MLA-Pathan-varis-suspensionBharat.vpf

[4] http://viduthalai.in/page2/118626.html

[5] மு.வி.சோமசுந்தரம் “பெரியார் மண்ணில் பேயாட மேடை போடலாமா?”, 12-03-2016 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2.

[6] http://viduthalai.in/page2/118627.html

[7] http://viduthalai.periyar.org.in/20101023/snews04.html; http://naathigam.blogspot.in/2010/10/blog-post_1684.html

[8] http://viduthalai.in/page1/118898.html

[9] விடுதலை, முதல் பக்கம்; http://viduthalai.in/page1/118898.html

சிலை, உருவசிலை, திருவுருவ சிலை, பெரியாரின் திருவுருவசிலை – துணி போட்டு மூடுலாமா, கூடாதா – இதில் உள்ளது அரசியலா, பகுத்தறிவா, செக்யூலரிஸமா, எது?

மார்ச் 12, 2016

சிலை, உருவசிலை, திருவுருவ சிலை, பெரியாரின் திருவுருவசிலை துணி போட்டு மூடுலாமா, கூடாதா இதில் உள்ளது அரசியலா, பகுத்தறிவா, செக்யூலரிஸமா, எது?

Statues of Anna and Periyar near Tirupur railway station spotted with garlands put by Dravidar Viduthalai Kazhagam 15-03-2014தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. தேர்தலில் ஓட்டுகள் சின்னங்கள், உருவங்கள், அடையாளங்கள், குறியீடுகள் முதலியவற்றை மக்களின் மனங்களில் பதிய வைத்து, அதன் மூலம் தமக்கு சாதகமாக ஓட்டுகளைப் பெறுவது வழக்கமாக அரசியல்வாதிகள் கொண்டுள்ளனர். படிக்காதவர்கள் சின்னங்களை வைத்துக் கொண்டுதான், ஓட்டுகளைப் போடுவார்கள் என்பதனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிடக் கட்சிகள் எல்லாமே அத்தகைய விளம்பரங்களில், பிரச்சாரங்களில், ஓட்டுக் கேட்கும் வித்தைகளில் வித்தகர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் விதிமுறை என்று கூறி, கோயம்புத்தூர் முதலிய பல இடங்களில் பெரியார் சிலைகளை மறைத்தும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளையும் தேர்தல் ஆணையம் அகற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது[1]. திராவிடர் விடுதலை கழகம் என்பது திராவிட கழகத்தின் உதிரிகளில் ஒன்றாகும்.  இவையெல்லாம் தாமும் இருக்கிறோம் என்பதனை எடுத்துக் காட்டுவதற்காக, அவ்வப்போழுது, ஏதாவது ஒரு கலாட்டா, ஆர்பாட்டம், எதிர்ப்பு, வழக்கு என்று ஈடுபடுவர்.

DVK petioned before Tiruppur collector, 12-03-2014பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது என்று தொடுத்த மனு: திராவிடர் விடுதலை கழகத்தின் [Dravidar Viduthalai Kazhagam (DVK)] அமைப்பு செயலாளர் ரத்தினசாமி [Petitioner Rethinasamy, Organaisation Secretary, DVK] ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[2]: “சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டுள்ளனர்.  எங்களது இயக்கம், அரசியல் கட்சி கிடையாது. தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதேபோல, தந்தை பெரியார் அரசியல் தலைவர் இல்லை. அவர் சமூக சீர்திருத்தவாதி.கடந்த முறை தேர்தலின்போது, பெரியாரின் சிலைகள் இதுபோல் மூடவேண்டும் என்று அதிகாரிகள் கூறியபோது, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பெரியாரின் சிலையை மறைக்க தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு விவரங்களை, கோவை தேர்தல் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும், அவர்கள் பெரியாரின் சிலையை துணியால் கட்டி மறைத்துவிட்டனர். எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலையை மறைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது[3].

பெரியார் விக்கிரகம், பூசனிக்கய் சிலை இத்யாதிபெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை: இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா [Justices M M Sundaresh and S Vimala] ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது[4]. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் டி. அருண், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வக்கீல் நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[5]: “தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், தந்தை பெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்றார். இதற்கு அர்த்தம் என்ன அர்த்தம் என்றால், மாநிலம் முழுவதுமுள்ள பெரியாரின் சிலைகள் மறைக்கப்படாது என்பதாகும். மேலும், கொடியை பொருத்தவரை, தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். அந்த மனுவை தேர்தல் ஆணையம் விரைவாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்[6]. இந்த மனுவை முடித்துவைக்கிறோம்”, இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்[7].  ஆகையால், தேர்தல் ஆணையம் இது விசயமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை கவனிக்க வேண்டும்[8]. இது பி.டி.ஐ செய்தியாகி விட்டதால், அச்செய்தி அப்படியே ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டுள்ளது[9].

நாத்திகச் சின்னத்திற்கு மாலை, மரியாதை, பூஜை எல்லாம்கடந்த ஆண்டுகளில் நடத்தியுள்ள போரட்டங்கள், வழக்குகள்: கடந்த 2014ல் கூட திருப்பூரில் இவ்வ்வாறு இக்கட்சியினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர்[10]. அப்பொழுது திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[11]. திராவிடர் கழகம் 2011லேயே தேர்தல் நேரத்தில் பெரியார் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆணையிட்டதை சுட்டிக் காட்டினர். பிறகு தேர்தல் ஆணையம் அப்பொழுது உயிரோடுள்ள தலைவர்களின் சிலைகளைத் தான் மூட சொன்னதாக தெளிவு படுத்தியது[12]. அதாவது, இறந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என்றாகியது. உருவவழிபாட்டை மறுக்கும் நாத்திகக் கூட்டங்கள், இவ்வாறு சிலைகளை மூடக்கூடாது என்று நீதிமன்றங்களில் வாதிடுவது வியப்பாகத்தான் இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் உயிருள்ளவர்களின் சிலைகள் மற்றும் உயிரற்றவர்களின் சிலைகள் என்றெல்லாம் பிரித்து விளக்கம் அளித்தது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் போதே, சிலை வைத்துக் கொண்டது கருணாநிதி தான் என்று தெரிகிறது. 1987ல் எம்,ஜி.ஆர் இறந்தபோது, ரசிகர்கள் அச்சிலையை உடைத்தெறிந்தனர். அதற்குப் பிறகு, கருணாநிதியும் தனது சிலையிப் பற்றிக் கவலைப்படவில்லை, திமுகவினரும் கவலைப்படவில்லை.

நாத்திகச் சின்னத்திற்கு மாலை, மரியாதை, பூஜை எல்லாம் வீரமணி, ரங்கநாதன்பெரியார் சிலை அரசியல், சின்னம், வியாபாரம்: சிலை, உருவசிலை, திருவுருவசிலை, பெரியாரின் திருவுருவசிலை, பெரியாரின் திருவுருவ சிலை என்றெல்லாம் திக உதிரிகள் கூறி வருவது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியார்” ஒரு சின்னமாகி விட்டப் பிறகு, பல கட்சிகள் அவர் பெயர், உருவன் முதலியவற்றைப் போட்டு ஓட்டுகள் கேட்கும் போது, அவரை, அவரது சிலையை-உருவத்தை சின்னமாக உபயோகப்படுத்தப் படுகிறதா இல்லையா என்பதனை தெரிந்து கொல்ளலாம். மேலும் திராவிட கழகம், பெரியார் சிலையை வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறது. ஶ்ரீரங்கத்தில் கோவில் கோபுரத்தின் முன்பாக, சிலையை வைத்து, பிரச்சினைக் கிளப்பியதை தகிழக மக்கள் அறிவர். ஆட்சி அதிகாரம், போலீஸார் முதலியவற்றை வைத்துக் கொண்டு தான், அத்தகைய “செக்யூலரிஸ” வெறித்தனம் நடந்தேறியது. அர்ச்சகர் படிப்பு, படித்து விட்டப் பிறகு வேலை போன்ற சர்ச்சைகளிலும், பெரியார் சிலை உபயோகப்படுத்தப் பட்டு வந்துள்ளது. பூம்புகார் போன்ற அரசு-சார் நிறுவனஙள் பெரியார் சிலைகளை உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருக்கின்றன. உண்மையில் எதிர்கட்சிகள் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும், ஆனால், பெரியாரை சின்னமாகக் கொண்ட அவை எதிர்க்காது. பிறகு, பிஜெபி போன்ற கட்சிகள் நீதிமன்றங்களில் சட்டரீதியாகக் கேட்க வேண்டும். ஆனால், அப்படி செய்தால், கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட கிடைக்காமல் போய்விடும் என்று அமைதியாகத் தான் இருக்கும். அந்நிலையில், இத்தகைய வரைமீறல்கள் இருக்கத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

12-03-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் சிலைகளை மறைக்கும் திட்டம் எதுவும் இல்லை: தேர்தல் ஆணையம் உறுதி, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 3:18 [IST].

[2] http://www.dailythanthi.com/News/State/2016/03/12023419/No-intention-to-cover-Periyar-statues-CEO-tells-HC.vpf

[3] தினத்தந்தி, தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல், மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 2:34 AM IST.

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/does-not-plan-hide-the-periyar-statues-ec-confirmed-248804.html

[5] நியூஸ்.7, பெரியார் சிலைகளை மறைக்கும் எண்ணம் இல்லை: தேர்தல் ஆணையம், Updated on March 11, 2016.

[6] Disposing of the petition, a division bench, comprising Justices M M Sundaresh and S Vimala, said it was open to the petitioner to make a detailed representation to the respondent (EC) which should consider the same and take appropriate action.

http://www.business-standard.com/article/pti-stories/no-intention-to-cover-periyar-statues-ceo-tells-hc-116031101188_1.html

[7] http://ns7.tv/ta/no-intention-hiding-periyar-statues-ec.html

[8] Business Standard, No intention to cover Periyar statues, CEO tells HC, Press Trust of India ,  Chennai March 11, 2016 Last Updated at 20:14 IST.

[9] http://www.ptinews.com/news/7207976_No-intention-to-cover-Periyar-statues–CEO-tells-HC-

[10] http://www.thehindu.com/news/cities/Coimbatore/stir-against-covering-periyar-statue/article5776180.ece

[11] Dravidar Viduthalai Kazhagam members at the Tirupur Collectorate on Tuesday to petition election officials against the covering of Periyar’s statue with black cloth, soon after the election dates were announced. Photo: R. Vimal Kumar, The Hindu dated March.12, 2014.

[12] http://www.thehindu.com/news/cities/Coimbatore/veil-goes-off-statues-of-anna-periyar-in-tirupur/article5787646.ece

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (3)

திகவினரின் குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்காமல் இருப்பதே, திராவிட ஆராய்ச்சியில் பெரிய குறை மட்டுமல்லாது, மிக்கத்தவறான ஆய்வு நெறிமுறை எனலாம். மேலும், திகவினர் தாங்கள் எதனை சிறு-குறும் புத்தகங்களில் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றை ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் போல குறிப்பிட்டு ஆய்வுகட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. ருதலைப் பட்சமாக அவர்கள் எழுதி பதிப்பித்து வருவதை நம்பவேண்டிய நிலையுள்ளது. இது ஏதோ எசுவைட் / கிருத்துவ மிஷினரிகளின் எழுத்துகளளை அப்படியே எடுத்துக் கொள்வதை போலவுள்ளது. இதனால், பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், முடிந்த வரையில் இருக்கும் விவரங்களை இங்கு தர முயன்றுள்ளேன். தயவு செய்து படிப்பவர்கள், மற்ற விவரங்களைக் கொடுத்தால், உரிய ஒப்புதலோடு, அவர்கள் பெயர்கள் குறிப்பிட்டு, சேர்த்துக் கொள்ளப்படும்.

குடி அரசு ஜனவரி 3 1926

குடி அரசு ஜனவரி 3 1926

1960 முதல் 1980 வரை திகவினரின் இந்துவிரோத செயல்கள்: 1960களில் நிச்சயமாக, யாதாவது எதிர்த்து கேட்டால் அடிப்பார்கள் என்று எல்லோருமே திகவினருக்கு பயந்துதான் இருந்தனர். எனவே பிராமணர்களைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. திகவினர் 1971ல் சேலத்தில் ராமர்-லட்சுமணன்–சீதை படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். துக்ளக்கில் ஊர்வல படங்கள் வெளியிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்டது. இப்பொழுது அப்படங்கள் கிடைப்பதில்லை. அக்டோபர் 1973ல் மதுரையில் இ.வே.ராவின் 95வது பிறந்த நாள் என்று இந்து மதம்-கடவுளர்களை தூஷிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தின் முன்னால், ஒரு வேலைத் தூக்கிச் சென்று, அதனை செருப்பால் அடித்தவாறு சென்றனர். அதேபோல விநாயகர் விக்கிரகத்திற்கும் செய்தனர். கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலத்தில் எடுத்துச் என்றனர். ஆனால், அப்பொழுது முதலமைச்சராக இருந்த காமராஜர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1973ல் பெரியார் இறந்தார், ஆனால், இத்தகைய காரியங்கள் தொடர்ந்து நடந்தன[1]. 1974ல் “ராவண லீலா” அடத்தி, ராமர்-லட்சுமணன்–சீதை பொம்மைகளை எரித்தனர். எம்ஜியார் ஆட்சிக்கு வந்த பிறகு 1980-87 ஆண்டுகளில் நிலமை கொஞ்சம் மாறியது எனலாம்.

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

lord-sri-rama- 1971 DK chappal-garlanded

1980 முதல் 2006 வரை நடந்துள்ள தாக்குதல்: 1980களில் “தி இந்து” நிருபர் கணபதி என்பவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது திகவினர் அவரை நிறுத்தி, சட்டை-பனியனைக் கிழித்து, பூணூலை அறுத்தனர். அன்று 1983ம் ஆண்டு ஆலய மறியல் போராட்டம் என திராவிடர் கழகம் ஸ்ரீரங்கத்தில் அறிவித்திருந்தது. அப்போது பூஜ்யஸ்ரீ திரிதண்டி நாராயண ஜீயரும் ஹிந்து முன்னணியின் குழுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். சுமார் 500 பக்தர்கள் அனைவரும் சுவாமிகளின் தலைமையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், பிரபந்தம் ஜெபித்துக்கொண்டு நான்கு சித்திரை வீதி வழியாக ஊர்வலம் வந்து “ரங்கா ரங்கா” கோபுர வாசலில் சிதறு தேங்காய் நூற்றுக்கணக்கில் உடைத்து ஆலயப் பிரவேசம் செய்தனர். ஆலய மறியல் போராட்டத்துக்கு வந்திருந்த சுமார் 10 கருப்பு சட்டைகளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தி க தோற்றுப் போய்விட்ட ஆத்திரத்தில் இரண்டு நாள் சென்று ஆலயப் பிரகாரத்தில் அப்பிராணியாய் கிடந்த ஒரு நோஞ்சான் கிழவரின் பூணலை அறுத்து மூக்கை உடைத்து விட்டு தப்பி ஓடியது.

2006ல் பெரியார் சிலை உடைப்பு, பூணூல் அறுப்பு, கோவில்கள் தாக்கப்படுதல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது முதலியன: ஶ்ரீரங்கத்தில் திகவினர் விசமத்தனமாக, ஶ்ரீரங்கநாதர் கோவில் எதிரில், ஶ்ரீசைத்தன்யர் பாதக்கோவிலின் அருகில் பெரியார் சிலையை வைத்தனர். அப்போதே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது, ஆனால், ஆட்சியுள்ளவர்களின் ஆதரவால் அச்செயல் நிறைவேரியது. டிசம்பர் 2006ல் அச்சிலை சேதப்படுத்தப் பட்டது. இதனால், திகவினர் மற்றும் கருப்புப் பரிவார் கோஷ்டிகள் கோவில்களைத் தாக்குதல், விக்கிரங்களை உடைத்தல், மடங்களில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தல், பூணூல்களை அறுத்தல் என்று தமிழகத்தில் பல இடங்களில் குற்றங்களில் ஈடுபட்டனர்.

சங்கராபுரத்தில் இரண்டு கோவில்கள் தாக்கப்படுதல், விநாயகர் சிலைகள் உடைக்கப்படுதல்: விழுப்புரத்தில் சங்கராபுரம் கோவிலில் கருங்கல் விநாயகர் விக்கிரகம் பெர்த்தெடுக்கப்பட்டு, உடைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, வாகனம் மூஞ்சூறு மற்றும் பீடமும் உடைக்கப்படிருந்தன. கோவில் சுற்றுப்புறச் சுவர்களில் இருந்த சிற்பங்களும் உடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, கோபுரத்தில் இருந்த சிலைகளும் உடைக்கப்பட்டன[2]. அதேபோல, சங்கரபுரம்-கல்லக்குறிச்சி சாலையில், விவசாய சந்தை கமிட்டி அருகில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த விநாயகர் விக்கிரகமும், அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருந்தது[3]. இத்தாக்குதல்களுக்காக,

  1. வி. நாகராஜன் (29), நெடுமண்ணூர்.
  2. எஸ். நாகப்பிள்ளை (20), நெடுமண்ணூர்.
  3. ஏ. துரை (24), வனப்புரம்.
  4. எஸ். சாமித்துரை (25), கடவூர்.

இந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இதிய குற்றவியல் சட்டப்பிரிவு 153 (a) (1)ன் கீழ் மதச்சின்னங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை உடைத்தல் என்ற குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது[4].

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம், sakarapuram templ

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம், sakarapuram templ

சேலம் சங்கர மடத்தில் நுழைந்து தாக்குதல்: 2006ல் திகவினர் சேலத்தில் உள்ள சங்கரமடத்தில் நுழைந்து, எல்லா படங்களையும் அடித்து உடைத்தனர். அப்பொழுது மற்றவர்களின் உரிமைகள் பற்றி பேசும் செக்யூலரிஸப் பழங்கள் இந்துக்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

Salem Sankara mutt attacked by DK - December 2006

Salem Sankara mutt attacked by DK – December 2006

ஈரோடு ராகவேந்திர மடம் தாக்கப்படல், ராமர் சிலை பெயர்த்துத் தூக்கியெறியப்படல்: அதேபோல, சம்பந்தமே இல்லாமல், ஈரோட்டில், அக்ரஹாரத் தெருவில் உள்ள ராகவேந்திர பிருந்தாவனத்தில் புகுந்து, ராமர் விக்கிரகத்தைப் பெயர்த்து எறிந்தனர்[5]. அப்பொழுதும் செக்யூலரிஸவாதிகள் மூச்சுக்கூட விடவில்லை.

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

erode Raghavendra mutt attacked, Vishnu idol uprooted and thrown by DK Dec.2006

சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்படல்: சென்னையில், பழைய மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. “தி இந்து” இதனை சூஜகமாக அமிலம் மற்றும் பெட்ரோல் கலந்த பாட்டில்கள் வீசப்பட்டன என்று குறிப்பிட்டது[6]. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போது, சுவாமி தயானந்த சரஸ்வதியின் மீது, ஶ்ரீரங்கத்த்ல் கோவிலுக்கு எதிராக உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக, முதல் குற்ரப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல சுப்பிரமணியன் சுவாமி, அது சட்டப்படி தவறு என்ரு சுட்டிக் காட்டினார்[7]. ஆக இது நாத்திகமும் இல்லை, நாத்திகவெறியும் இல்லை ஆனால், இனவெறியே ஆகும்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun

ஏப்ரல் 1929 அம்பேத்கர் முன்னர் பூணூல்-அணிவிப்பு, ஏப்ரல் 2015 ச்ஏப்ரல் மதத்தில் அம்பேத்கர் ஜெயந்திற்குப் பிறகு அம்பேத்கர் முன்னிலையில் வேதகோஷங்களோடு 6,000 பேருக்கு பூணூல் அணிவிக்கப்படலும், அம்பேத்கர் பெயரில் பெரியார் தொண்டர்கள் பூணூல்-அறுப்பு தாக்குதலில் ஈடுபடுவதும் நோக்கத்தக்கது. அம்பேத்கரின் நண்பர் பெரியாரின் தொண்டர்கள், இவ்வாறு அம்பேத்கர் பெயரில், அம்பேத்கர் ஜெயந்திக்குப் பிறகு ஏப்ரலில் இவ்வாறு தாலி-அறுப்பு நிகழ்சிக்குப் பிறகு, பூணூல்- அறுப்பு செய்திருக்கிறார்கள்! ஆனால், இதே ஏப்ரல் மாதத்தில் 86 ஆண்டுகளுக்கு முன்னர் 1929ல், அம்பேத்கர் தலைமையில், சிப்லுன் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் 6,000 பேருக்கு பூணூல் அளிக்கப்பட்டது. அம்பேத்கரின் பிராமண நண்பர், தியோராவ் நாயக் புரோகிதராக இருந்து, வேதமந்திரங்கள் முழங்க அவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்! அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

April 1926, 6000 worn sacred thread in front of Ambedkar, Chiplun.Tamil

வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது – எல்லாம் ஒன்றா என்று விடுதலை கேட்கிறது[8]: இன்றைய தி இந்து (தமிழ்) ஏட்டில் பக்கம் 7 இல் போலீசார் கடும் எச்சரிக்கை என்ற தலைப்பில் கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது. சென்னை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்துவதாக இருந்த பெண்களுக்கு தாலி தேவையா என்ற விவாத நிகழ்ச்சியை மய்யமாக வைத்து இந்து அமைப்புகள் பிரச்சினை செய்தன. அதைத் தொடர்ந்து இந்து அமைப்பினரும், பெரியாரின் பெயரில் இயங்கும் அமைப்பினரும் பல்வேறு வகைகளில் சென்னை நகரின் சட்டம் – ஒழுங்கை கெடுக்கின்றனர். வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என பொதுமக்களின் அமைதியை தொடர்ந்து கெடுக்கின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இனிமேல் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் அனைவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். – இவ்வாறு அந்த ஏட்டில் செய்தி வெளிவந்துள்ளது. பொத்தாம் பொதுவாக இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுத்த காவல்துறை அதிகாரி யார்? என்பதை தி இந்து (தமிழ்) ஏடு தெரிவிக்கவில்லை. இதில் வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என்று எல்லாவற்றையும் ஒன்றுபோல் காட்டுவது அசல் விஷமத்தனமாகும்[9]. வெடிகுண்டு வீசுவதையும், தாலி அகற்றிக் கொள்வதையும் ஒரே நிலையில் சம தட்டில் வைத்துப் பார்க்கிறதா காவல்துறை? தாலியை அகற்றிக் கொள்வது திராவிடர் கழகத்தின் கொள்கை சார்ந்தது – சட்டப்படியானதும்கூட! வெடிகுண்டு வீசுவது சட்டப்படியானதா? இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்புவது கண்டிக்கத்தக்கது! விஷமத்தனமானது!!

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] After his demise in 1973 the Movement was being ably guided by the new President Annai E.V.R. Mani Ammaiyar. A notable event since her assuming the presidentship was the celebration of “Ravana Leela” in December, 1974, when the effigies of Rama, Sita and Lakshmana were burnt down. This event which rocked the entire orthodoxy all over India was no mean achievement of the movement today. A case was filed against Mrs.Maniammai and others including me. We were all acquitted.

http://www.modernrationalist.com/2011/march/page04.html

[2] The granite Vinayaka idol of a temple at Sankarapuram in Villupuram was found removed and broken. Devotees found that the `Moonjuru’ (mouse vahanam) and the pedestal of the idol had been destroyed. Cement decorative works that formed part of the temple compound were found broken. Images of the Hindu pantheon made of concrete and erected on the gopuram were damaged beyond recognition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[3] The granite Vinayaka idol of the Selva Vinayaka temple near Agriculture Market Committee on the Sankarapuram-Kallakurichi road was also found uprooted and broken into pieces. The idol was found near the bus stand, about 200 feet away.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[4] The police have arrested four activists of the Thanthai Periyar Dravidar Iyakkam V. Natarajan (29) and S. Nagapillai (20) of Nedumanur, A. Durai (24) of Vanapuram and S. Samithurai (25) of Kaduvanur in connection with the Sankarapuram incident. They have been booked under Section 153 (a) (1) of Indian Penal Code (fanning communal tension by damaging religious symbols or religious places).

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[5] In Erode, a Ramar idol was found damaged. The police said around 5.15 p.m., a group of Dravidar Kazhagam volunteers, shouting slogans, entered the Raghavendraswamy temple, situated in Agrahara Street, went to the sanctum sanctorum and removed the deity. On hearing the news, hundreds of devotees rushed to the spot, and demanded the police take action against the persons responsible for the act. RSS and Hindu Munnani volunteers protested against the damage to the idol.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[6] In Chennai, some miscreants hurled a few bottles of acid and petrol at the Ayodhya Mandapam, West Mambalam.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[7] Janata Party president Subramanian Swamy condemned the police for registering a first information report (FIR) against Swami Dayanand Saraswati in the case related to damage caused to the statue in Srirangam. In a statement here, Dr. Swamy said by registering an FIR against Dayanand Saraswati merely for issuing a statement against the installation of the statue, the police had violated several Supreme Court judgments, including the one in the Bhajan Lal case in 1992.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/places-of-worship-attacked-38-arrested-throughout-state/article3031473.ece

[8] விடுதலை, வெடிகுண்டு வீசுவதும்தாலி அகற்றிக் கொள்வதும் ஒன்றா?, புதன், 22 ஏப்ரல் 2015 17:01

[9] Read more: http://www.viduthalai.in/component/content/article/72-2010-12-27-13-06-34/100150-2015-04-22-11-38-12.html#ixzz3Y5rhjTVv