குண்டலினி யோகாசனத்தில் துள்ளி துள்ளி குதித்தபடி ரஞ்சிதா நடனம் ஆடியதை நித்யானந்தா பார்த்து ரசித்தார் அல்லது லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது
குண்டலினி பெயரில் நித்யானந்தா நடத்திய கூத்து: இந்திய / பாரத மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட யோகா என்ற அற்புதமான கலை இன்று, உலகம் முழுவதும் யார்-யாராலோ கொச்சைப் படுத்தப் பட்டு வருகிறது. தேனாம் பேட்டையில் பிஷப் இல்லத்திற்குப் பின்பக்கம் உள்ள சொகுசு குடியிருப்புகளில் செக்ஸ்-யோகா நடத்திய அந்நிய பார்ட்டிகள் நடத்திய கூத்து வெளிவந்து, உடனடியாக மறக்க / மறைக்க(?)ப்பட்டு விட்டது. ஆனால் அதற்குள் இந்த “குண்டலினி கூத்து” அரங்கேறியுள்ளது. நடிகை ரஞ்சிதா நடனத்தை ரசித்த நித்யானந்தா (சனி, 16 ஜூலை 2011): கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். பட்டுப்புடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்யானந்தா, பின்னர் பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து அவருக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
குண்டலினி சக்தியை எழுப்புவது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல: பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்த நித்யானந்தா முன்பு நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார்[1]. அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர்[2]. சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்யானந்தா கூறுகையில், ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
இரட்டை வேடம் போடும் நக்கீரன் கோபால் முதலியோர்: நக்கீரன் பத்திரிக்கை மற்றும் அதனை நடத்தி வருபவர்களுக்கு வியாபாரம் தான் முக்கியம் என்பதனால், அவ்விஷயத்தில் இருகூட்டாத்தார்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை எனலாம். குங்குமம் வைப்பதையே அவதூறு பேசிய கருணாநிதியுடன் சேர்ந்து கொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு கோபால், மறுபக்கம் “ஓம்” என்ற பத்திரிக்கை நடத்துவது, தாமிடர தகடுகளை எந்திரம் என்று சொல்லி விர்ப்பது முதலியனவும் கேட்கெட்ட செயல்கள் தாம்..
தோல்வியில்முடிந்தநித்யானந்தாவின்நிகழ்ச்சி! (Nakkiran version): இவ்வாறு தலைப்பு கொடுத்து நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.
நித்யானந்தாவை எதிர்க்கும் சாக்கில், ந்தியானந்தாவைப் போலவே நக்கீரன், கோபால், மற்ற ஊடகங்கள் யோகாவை அவதூறு செய்கின்றன என்பதை இந்தியர்கள் கவனிக்க வேண்டும். தாக்கப்படுவது இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியன. |
ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை ‘குண்டலினி சக்தி’யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது[3].
நித்யானந்தாவின் வேஷமும், ஆடம்பரமும்: பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார். இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
அந்தரத்தில் மிதப்பது என்பது சினிமா கூத்தோ, வித்தையோ இல்லை: சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பியெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்[4]. வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது[5].
லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது: லெவிட்டேஷன் பெயரில் இந்திய / இந்து குருக்கள் / யோகா ஆசிரியர்கள் சந்நியாசிகள் உலகம் முழுவதும் தாக்கப்படுவது சாதாரணமான விஷயமாகி விட்டது. முன்பு அமெரிக்காவில் மஹரிஷி மஹேஷ் யோகி மீது ஒரு அமெரிக்கர் தனக்கு “லெவிட்டேஷன்” சொல்லித் தருகிறேன் என்று ஏமாற்றி விட்டார் என்று வழக்குப் போட்டு பிரச்சினை செய்தார். அதே முறைதான், இங்கேயும் கையாளப்படுகிறது. எல்லோரும் நினைப்பது போல, லெவிட்டேஷன் என்ற பூமியிலிருந்து மேலே மனித உடலை எழுப்புவது வேடிக்கையோ, வித்தையோ இல்லை. அதற்கு நெடுங்கால பயிற்சி தேவை. பகுத்தறிவால் வாதம் புரிவதோ, நாத்திகம் பெயரால் கேலி பேசுவதோ அல்ல. உண்மையில் குண்டலினி வேறு லெவிட்டேஷன் என்ற பூமியிலிருந்து மேலே மனித உடலை எழுப்புவது வேறு. சித்தர்கள் என்று தமிழகத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் கூட அத்தகைய பயிற்சி இல்லாமல் இதனை செய்ய முடியாது. இருப்பினும் சித்தர்களைப் பற்றி நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், திகவினர், செக்யூலரிஸவாதிகள் அளந்து கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களாலும் இதைச் செய்ய முடியாது.
[2] கிருத்துவர்கள் பேயோட்டும் கூட்டங்களை விட, இது ஒன்றும் பெரிய தமாஷாக இருந்துவிடவில்லை. கிருத்துவர்கள் நிகழ்ச்சிகளில் பெண்கள் இஷ்டத்திற்கும் ஆடுவார்கள், குதிப்பார்கள், கத்துவார்கள். பாதிரிகள் / பாஸ்டர்கள் அப்பெண்களை கண்டபடி பிடித்துக் கொண்டு, பிறகு நெற்றியில் கையை வைத்து அழுத்தித் தள்ளிவிடுவார்கள். அப்பெண்களும் ஏதோ தங்களைப் பிடித்த பேய் போய்விட்டது போல கீழே விழுவார்கள். சிலர் கீழே விழுந்த பிறகு கூட புரண்டு ஆடி, உருண்டு அடங்கிவிடுவார்கள்.
[4] உண்மையில் இந்த ஆளும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு, கண்களை முடிக்கொண்டு கோமளித்தனமாக குதித்துக் கொண்டிருந்தது வேடிக்கையகத்தான் இருந்தது.
[5] “சமய்” என்ற ஹிந்தி செனல் இதனை தொடர்ச்சியாக, மறுபடி-மறுபடி ஒலி-ஒளிபரப்பு செய்த்து கிண்டலடித்துக் கொண்டிருந்தது. நித்யானந்தா அதில் “பெரட்-ரூம் சாமி” என்றே விளிக்கப்பட்டார்.