Archive for the ‘அங்கீகரிக்கப் பட்ட பதிப்பு’ Category

சிசுபாலன் கிருஷ்ணரை தூஷித்ததை விடவா, அம்பேத்கர் தூஷித்து விட்டார்? அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்- 2

செப்ரெம்பர் 2, 2010

சிசுபாலன் கிருஷ்ணரை தூஷித்ததை விடவா, அம்பேத்கர் தூஷித்து விட்டார்? அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்- 2

சிசுபாலன் தூஷித்ததன் பின்னணி: தருமர் எல்லா நாட்டு அரசர்களையும் அழைத்து ராஜசூய யாகம் நடத்துகிறார். அப்பொழுது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்ய தருமர் தீர்மானித்தபோது, பீஷ்மர் ஆமோதிக்கிறார். இதனால் கோபமடைந்த சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் கோபம் கொள்கிறான்.

100 பிழைகளை பொறுத்த கிருஷ்ணர்: மஹாபாரதத்தில் சபா பருவத்தில், சிசுபால வத பர்வம் என்றதில் (அத்தியாயம் 63 முதல் 74 வரை), சிசுபாலன் எப்படி பீஷ்மரையும், கிருஷ்ணரையும் வாய்க்கு வந்தபடி கிண்டலாகத் திட்டுகிறான், வசைபாடுகிறன், தூஷிக்கிறான் என்றுள்ளது. அதில் 100 வகையான தூஷணங்கள் உள்ளன. அதையெல்லாம், இங்கு பட்டியல் இட்டுக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. கிருஷ்ணர், சிசுபாலனின் தாயாருக்கு கொடுத்த வாக்கின் படி, பொறுத்திருந்து, எல்லைகளைக் கடந்தபோது, அதாவது 100 பிழைகளை மீறிய போது, எல்லா அரசர்களின் முன்னாலேயே, சிசுபாலன் தனியாக போருக்கு அழைத்தபோது, கிருஷ்ணர் சக்கராயுதத்தால் சாகடிக்கிறார்.

இலக்கிய ரீதியில் இந்த தூஷணங்கள் எல்லாம் உயர்வு நவிர்ச்சி அணியில், இரட்டை அர்த்தங்களில் இருக்கும். எப்படி குறிப்பிட்ட செய்யுட்களை தமிழில் படித்தல்தான், அதனை ரசிக்க முடியுமோ, அதுபோல சமஸ்கிருத மொழியை அறிந்தால்தான், அதன் நெளிவு-சுளிவு, அதாவது வார்த்தை பிரயோக முறையை அறிந்து ரசிக்கலாம்.

ஆக அந்த 100 தூஷணங்களிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு,

  1. ஒன்றும் தெரியாதவன் (படிக்காதவன்) [பிரஹஸ்பதி என்றால் அதிமேதாவி என்ற பொருள், ஆனால் தமிழில் இப்பொழுது தூஷணமாக உபயோகிக்கப்படுகிறது]
  2. திருடன் (பால், தயிர் முதலியவற்றை) [கருணாநிதி சொன்னது போல “உள்ளங்கவர் திருடன்”]
  3. பறவையைக் கொன்றவன் [எறும்புகளைக் கொல்வது]
  4. குதிரையைக் கொன்றவன் (சண்டையை அறியாத மிருகம்)
  5. காளையைக் கொன்றவன்
  6. பெண்ணைக் கொன்றவன் (பூதனை)
  7. அசேதனமான சடகத்தைக் கொன்றவன் (உயிரற்ற ஜடம்).
  8. சின்ன மரங்களைத் தள்ளியவன் (உரலை இழுத்து).
  9. சின்ன எறும்புப் புற்றளவில் இருந்த மலையை ஏழு நாட்கள் தூக்கி வைத்திருந்தவன்

10.  மலைமேல் உட்கார்ந்து கொண்டு சாதம் சாப்பிட்டவன்.

11.  சாப்பிட்டுக் கொழுத்தவன் (கம்சனைக் கொன்று)

12.  எல்லாவற்றையும் அறிந்தவன்.

13.  மாடுகளை மேய்த்தவன்.

14.  பிராமண வேஷம் போட்டவன் (ஜராசந்தனை சந்திக்க).

15.  திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்தவன் (ஜராசந்தனின் அரண்மனைக்குள்).

16.  தாய் தந்தை இல்லாதவன்

17.  மதுசூதன் –மது என்ற அரக்கனைக் கொன்றவன்.

18.  போட்டியாக ருக்மணியை திருமணம் செய்துகொள்ள வந்தவன்.

19.  ஜனார்த்தனன் (மக்களை அறியாதவன்)

20.  கேசவன் (மனிதன் இல்லாதவன்)

……………………………………..

இதில் சில முன்னுக்கு முரணகவும் இருப்பதைக் காணலாம். ஏனெனில், ஒருவன் கோபத்துடன் மற்றவனைத் திட்டும் போது அப்படித்தான் இருக்கும்.

இதைத் தவிர, ஆயர்பாடி பெண்களே, கிருஷ்ணனை பலவாறுத் திட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, பிறகு ஒரு இடத்தில் பீஷ்மரைக் கொல்ல சக்கராயுதத்தைக் கொண்டு கொல்ல வரும் போதும், பீஷ்மர் நக்கலாக கிருஷ்ணரைப் பார்த்து கேட்கும்போதும், அத்தகைய வார்த்தைகள் உண்டு [கிருஷ்ணர் யுத்தத்தில் ஆயுதம் எடுத்து போராடக் கூடாது என்பது கண்டிஷன்].

மேலும் இங்கு சமஸ்கிருதத்தில் உள்ள கேசவா, ஜனார்த்தனா, முகுந்தா…..போன்ற வார்த்தைகளுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. சிசுபாலன் மற்றும் கிருஷ்ணருக்கு எதிராக பேசும் போது, புராணங்களில் அத்தகைய வார்த்தைகள்தான் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன. இதை, ஆபாசமாக, கொச்சையாக விளக்கம் அளித்து, எழுதியுள்ளதை, அம்பேத்கர் போன்றவர்கள் எடுத்தாண்டுள்ளனர். அதை மறுபடியும் எழுதி, இப்பொழுது அவதூறு பேசுகின்றனர்.

உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வது கேவலமானது: தமிழ் வார்த்தைகளுக்கு எப்படி அசிங்கமான, ஆபாசமான, கொச்சையான அர்த்ததைக் கொடுத்து இன்று பேசுகிறார்களோ, அதுபோலத் தான், கிருஷ்ணரை மஹாபாரத்ததில் மற்ற புராணங்களில், மற்றவர்கள் திட்டியதை வைத்துக் கொண்டு, கிருஷ்ணரை விமர்சிக்கும் சாக்கில் தூஷிக்கின்றனர் மதி கெட்டவர்கள். அம்பேதகாருக்கு, இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தபோது, விடாப்படியாக,, அவ்வாறானவற்றை வைத்துக் கொண்டு எழுதினார். ஆக, அதனை உண்மை என்று நினத்துக் கொண்டு, மடத்தனமாக சிலர் எழுதி பிரச்சாரம் செய்வது, மிகவும் கேவலமானது.

அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்!

செப்ரெம்பர் 1, 2010

அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்!

அம்பேத்கரின் ராமன் – கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்: சென்ற வருடம், இதைப் பற்றி ஏற்கெனெவே விவரமாக எழுதியுள்ளதை இங்கே பார்க்கவும்[1]. இதை சரித்திர நோக்குடனோ, ஆராய்ச்சி பார்வையிலோ யாரும் பார்ப்பதில்லை. இத்தகைய எழுத்துகளை, இந்துகளை அவதூறு பேச நாத்திக போர்வையில், இந்து விரோதிகள் உபயோகித்து வருகிறார்கள்.

இந்த வருடம், கிருஷ்ண ஜெயந்தி அன்று மதிகெட்டவன் எழுதுவது இப்படியுள்ளது: சங்கத் தமிழர்கள் ராமாயணத்தைப் பற்றியும், மஹாபாரதத்தைப் பற்றியும் எழுதியிருக்க மடையர்களா? செம்மொழியில் அத்தகைய காவியங்களைப் பற்றி ஏன் எழுதியிருக்க வேண்டும்? ஒன்று தமிழ் தெரிந்திருக்கும் போது, இந்த பகுத்தறிவுவாதிகள் பத்துப்பாட்டு-எட்டுத்தொகை நூல்களையாவது படித்திருக்க வேண்டும், இல்லை பெரிய ஆராய்ச்சியாளன் என்றால் மூலங்களைப் படித்து எழுத வேண்டும்[2]. இரண்டையும் விடுத்து, அம்பேத்கரின் உளறல்களை வைத்துக் கொண்டு எழுதினால் என்ன செய்வது? சாதாரண மக்களுக்கும் அக்காலத்தில் இத்தகைய மோசடிகளை அறிந்திருந்ததால் தான் அவர்களை “பாஷாண்டிகள்” (ஏமாற்றுப் பேர்வழிகள், மோசடிக் காரர்கள், துணுங்கர்) என்று அழைத்தனர். அவர்களது ராமாயணத்தை “கீமாயணம்” என்ரும் கேலிபேசினர்

.

அம்பேத்காரின் உளறல்கள் – கிறுக்கல்கள்: அம்பேத்கர் பெயரில் பொய்களை சொல்வதற்கு ஒரு எல்லை இல்லாமல் போய்விட்டது போல இருக்கிறது. 1987லேயே, பல ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியப் பிறகும், இத்தகைய புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டேயிருக்கிறார்கள் பொய்யர்கள். அம்பேத்கருடைய தொகுப்புகளை வெளியிடும் சரிபார்த்து அமைக்கும் குழு “ஹிந்துமதத்திலுள்ள புதிர்கள்” என்ற தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதாவது[3]:

The editorial committee has found a chapter on “Riddles of Rama and Krishna” which might have been intended for the volume “Riddles in Hinduism”. The 24 riddles as proposed in his original plan changed often in blue-prints. the seriatim of the contents and chapters and the arrangement of the file do not synchronize. The chapter on Rama and Krishna did not find a place in the listing of the contents of the book. However, we are including it in the volume on Riddles”

“ராமன் மற்றும் கிருஷ்ணனைப் பற்றியப்  புதிர்கள்” என்ற ஒரு அத்தியாயத்தை, இந்த தொகுப்பாசிரியக்குழு கண்டுபிடித்துள்ளது. இது ஒருவேளை “ஹிந்து மதத்திலுள்ள புதிர்கள்” என்ற தொகுப்பிற்கானது என்பது போலத் தோன்றுவதாக உள்ளது. அசல் மூலப்பிரதியில்  24-புதிர்களைப் பற்றிய திட்டம் பல முறை மாற்றப் பட்டிருப்பது தெரிகிறது. கோப்பில் இருக்கும் பிரதியின் உள்ளேயிருக்கும் விவரங்கள் மற்றும் அட்டவணையின் கிரமவரிசை-அமைப்பு ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை. அதுமட்டுமல்ல, “ராமன் மற்றும் கிருஷ்ணனைப் பற்றியப் புதிர்கள்”, என்ற அத்தியாயம் அந்த புத்தகத்தின் தொகுப்பிலேயே இல்லை. இருப்பினும் நாங்கள் இந்த புதிர்கள் பகுதியில் இணைக்கிறோம்”, என்று புதிரோடு குறிப்பிட்டு “புதிர்களில்” இணைத்துள்ளது தெரிகிறது. மேலும் அம்பேத்கரின் எழுத்துப் பிரதியின் நகல் 345-349 பக்கங்களில் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, பலவற்றை அடித்தும் திருத்தியும் எழுதியுள்ளது தெரிகிறது[4].

மறுபடியும் APPENDIX I என்று 323-343 பக்கங்களை இணைக்கும்போது, கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது!

Note: Government does not concur with the views expressed in this Chapter .

இதைத் தவிர, கீழ்கண்ட குறிப்பு, மறுபடியும் காணப்படுகிறது!

This is a 49-page typed copy placed in a well-bound file along with the MS of ‘Symbols of Hinduism’. This article does not find place in the original Table of Contents. Hence this is included as an Appendix to this part -Ed.

பௌத்த / ஜைன ராமாயணங்கள்: ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அரசாண்டபோது, தமது கருத்துக்களை ராமாயாணம் மூலம் மக்களிடையே பரப்ப, அவர்கள் தங்களுடைய ராமாயணங்களை எழுதி புழக்கத்தில் விட்டனர்[5]. “சீதைக்கு ராமன் சித்தப்பா” போன்ற ராமாயணங்அல் எழுதப் பட்டன[6]. இதைப் பற்றி ராமஜென்பபூமி விவகாரத்தின் மீது அதிகமாகவே விவாதிக்கப் பட்டன. ஆக, அம்பேத்கர் பௌத்த ராமாயணத்தையும், ஜைன ராமாயணத்தையும் வைத்துக் கொண்டு அம்பேத்கர் இப்படி செய்வதும் கேலிக்கூத்தாக உள்ளது. ஆகவே முதலில், மூலங்களை படிக்காமல், அரைத்தப் பொய்களையே அரைத்துக் கொண்டியிருக்கும் கபடர்களின் கள்ளத்தனம் வெளிப்படுகிறது.

மூலங்களைப் படிக்காமல் பொய்களை பரப்பும் மோசடி பேர்வழிகள்: ஜைன-பௌத்தர்கள் அப்படி “கீமாயணத்தை” எழுதியதனால்தான், அம்மதங்கள் முரண்பாடுகளினாலேயே மக்களல் புறக்கணிக்கப்பட்டன. அம்பேத்கர் இந்துமத துவேஷத்தில் எழுதியிருப்பது சரித்திரமாகாது. தனது ஜாதி எதிர்ப்பு எழுத்துகளில் அத்தகைய கீமாயணங்களை உபயோகப் படுத்திக் கொண்டார் அவ்வளவே.

* இந்திய மத இலக்கியங்கள் மற்றவற்றைப் போல “அங்கீகரிக்கப் பட்ட பதிப்பு”,

* “ஏற்றுக் கொள்ளப்பட்டப் பதிப்பு”,

* “ஒரு தேவதை” நேரிடையாக வந்து என்னிடம் சொல்லிய பதிப்பு” [அது எக்காலத்தில் யாரால், எத்தனை பேரால் எழுதப்  பட்டாலும் கவலை இல்லை]

* “ஜேம்ஸ் அதிகாரத்தின்படி வெளியிட்டப் பதிப்பு”,

*  “மறைத்து வைக்கப் பட்ட ஆகமங்கள்” [அதாவது ஏற்றுக் கொள்ளப் படாதது]  என்றெல்லாம் இல்லை.

சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அதற்குத்தான், ஒப்பிட்டுப் பார்த்து, இடைச்செறுகல்களை அடையாளங்கண்டு வெளியிடப்படும் (Critical edition) மூலங்களை தமது சாராய்ச்சிக் கட்டுரைகளில் குறிப்பிட வேண்டும் என்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு அந்த வரைமுறையெல்லாம் கிடையாது.


[1] வேதபிரகாஷ், ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன் ஏகப்பட்ட பத்தினிகள் விரதன்,

https://dravidianatheism.wordpress.com/2010/02/08/ ராமன்–ஏக-பத்தினி-விரதன்-அ-2/

[2] இவர்களுக்குப் படிக்கத் தெரியாது என்பது வேறு விஷயம், இருப்பினும் இவர்கள் எல்லோரும் ஏதோ மேதாவிகள் போல, அறிவிஜீவிகள் போல உலா வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

[3] B. R. Ambedkar,  Riddles in Hinduism, Vol.4, Introduction, p.xvi

[4] வேதபிரகாஷ், ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன் ஏகப்பட்ட பத்தினிகள் விரதன், https://dravidianatheism.wordpress.com/2010/02/07ராமன்–ஏக-பத்தினி-விரதன்-அ/

[5] இன்றும் கிருத்துவர்கள் தங்களது பைபிள்களையே, இந்துமதப் போர்வையில் பதிப்பித்து வெளியிடுவது போல. இல்லை, முன்னர் ஒரு மோசடி பேர்வழி “ஏசுர் வேதம்” கண்டு பிடித்ததை போல!

[6] ஜைன ராமாயணத்தில் ராமரின் சகோதரி சீதை என்றெல்லாம் எழுதி வைத்தார்கள். இன்றும் குழந்தைகள் எல்லாம் அத்தகைய காவியங்களை எழுதிதான் வருகின்றன. ஆனால், மக்களிடம் செல்லும்போது, குட்டு வெளிப்பட்டு அவற்றை ஒதுக்கிவிடுகிறார்கள்.