ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்?
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை[1]: கருணாநிதி சொல்கிறார், “பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது’ என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்? கருணாநிதி சொல்வதைப் பார்த்தால், ஏதோ பாவம், திராவிடர்கள் எல்லாம் அப்படியே ராஜராஜ சோழனைப் தேற்றியே சிந்தித்துக் கொண்டு, தெடியலைந்து ஓய்ந்துவிட்டது போல பேசியுள்ளது, இன்னொரு ஜோக் எனலாம். ஒருவேளை, அண்ணா நூலகத்தில் குண்டு வெடித்ததை மறைக்க[2], இப்படியொரு குண்டு விடுகிறாரா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்! திராவிடர்களுக்கு / தமிழர்களுக்கு தங்களது கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு பற்றி கவலையே இல்லை. திராவிட சித்தாந்தம், அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டது. எப்பொழுதும் இந்த பொய்யான ஆரிய-திராவிட இனவாதங்களை பேசியே காலந்தள்ளும் கோஷ்டியாக இருப்பதனால் தான், யாரும் இவர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், ராஜராஜ சோழன் மற்றும் மற்ற மன்னர்களைக் கண்டால் இவர்கள் “ஆரியர்”, ஆரியர் கைக்கூலி என்றெல்லாம் துவேஷம் பேசி வசவு பாடுவார்கள்[3]. ஆனால், இன்றைக்கு, தமக்கு விளம்பரம் கிடைக்குமே என்று வெட்கமில்லாமல், ராஜராஜ சோழன் பெயரில் வியாபாரம் நடத்துகிறார்கள்.
ராஜராஜ சோழனைப் பற்றி கருணாநிதி சொல்லித்தான் எல்லொருக்கும் தெரியுமாம்: அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அண்மையில் நடைபெற்ற இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளை இணைத்துப் பார்க்கும்போது எனக்கு ஒரு பக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது; இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் உள்ளது[4]. நாகர்கோவிலில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் அயோத்தி விவகாரத்தில் வழங்கபட்டுள்ள தீர்ப்பு நாட்டின் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும் திருப்தி அடைய கூடிய தீர்ப்பு அதிலே பேசும்போது, லெமூரியா கண்டம் இருந்த பகுதியில்தான் இப்போது கூடியுள்ளதாகவும், இது ஆதி தமிழன் தோன்றிய இடம் என்றும் தெரிவித்தேன்[5]. மூன்றாயிரம் ஆண்டுகள் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய[6] திராவிடப் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியையும் இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டு பேசினேன்.
அதைப் போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறை பற்றி தெரிவித்தேன். இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அதில் சோழர்களின் வெளிநாட்டு வணிகம், கடல் வணிகம் ஆகியவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்தேன்[7]. தென்னகத்தில் சோழப் பேரரசு 176 ஆண்டுகள் நீடித்திருந்தது என்பதற்கான ஆதாரங்களை நீலகண்ட சாஸ்திரி, காத்யாயனர்[8] போன்ற ஆய்வாளர்களின் கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் அறிமுகம் செய்து வைத்த நில அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறை ஆகியவற்றுக்கு தஞ்சை பெரிய கோயிலும், கல்வெட்டுகளும் ஆதாரங்களாக உள்ளன“[9].
அயோத்தி விவகாரத்தில் வழங்கபட்டுள்ள தீர்ப்பு நாட்டின் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும் திருப்தி அடைய கூடிய தீர்ப்பு என்று கூறியவர், இன்று கூறுவது: “அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு சொல்லப்பட்டது. நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், “சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை“.
கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது: “சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது“[10].
அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது எனும் கருணாநிதி தான் அகழ்வாய்வே வேண்டாம் என்று சொன்ன உத்தமரும் ஆவர்: “ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது[11] (முன்பு எஸ். ஆர். ராவ் என்பவர் பூம்புகாரில் கடலடி அகழ்வாய்வு செய்தால் ஆதாரங்கள் கிடைக்கும் என்றபோது, வேண்டாம் என்று மறுத்தார் கருணாநிதி). திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்“.
“திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாறு” என்று இன்றும் பேசும் அறிவிலிகள்: “இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் போதும்”, இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்[12].
கருணாநிதியும், சரித்திரமும், அகழ்வாய்வும்: முன்பு தேசிய கடலாய்வு மைத்தின் தலைவர் எஸ். ஆர். ராவ் என்பவர் பூம்புகாரில் கடலடி அகழ்வாய்வு செய்தால் ஆதாரங்கள் கிடைக்கும் என்றபோது, வேண்டாம் என்று மறுத்தார் கருணாநிதி. “அப்படி ஆராய்ச்சி செய்தால் என்ன கிடைக்கும்” என்றதற்கு, “சங்க இலக்கியத்தின் தொன்மைக்கு ஆதாரங்கள் கிடைக்கும்”, என்று பதில் சொன்னபோது, “அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே, அதற்கு எதற்கு ஆராய்ச்சி, அகழ்வாய்வு?” என்றார், தமக்கேயுரிய புன்சிரிப்பு- நக்கலுடன்[13]. பாவம், தமிழ்நாடு தொல்துறை பிரிவு இயக்குனர் மற்றவர், வாயைப் பொத்திக் கொண்டு வெளியே வர வேண்டியதாயிற்று. ஆனால், இவர் தாம் இன்று தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது என்று சோககீதம் பாடுகிறார்!
[1] தினமலர், ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010,23:55 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 04,2010,00:06 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=98615
[2] காங்கிரஸ் திடலில் (காமராஜர் அரங்கத்தின் பின்புறம்) முன்பு ஒரு பொது கூட்டத்தில் மூப்பனார், கருணாநிதி முதலியோர் பேசினார்கள். அப்பொழுது, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது பழி போடுகிறார்கள் என்று நக்கலாக பேசினார்கள். இப்பொழுது, அம்மாதிரி சொல்லலாமா?
[3] இவர்கள் பேசி-எழுதியுள்ளதை திரும்பச் சொல்வதே “வேஸ்ட்”, ஏனென்றால், பொய் சொல்வதிலும் இவர்களுக்கு வெட்கமே இல்லை.
[4] தினமணி, ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ராஜராஜன் மறைந்த இடத்தை அறியமுடியவில்லையே! – முதல்வர், First Published : 04 Oct 2010 01:01:45 AM IST; Last Updated : 04 Oct 2010 03:36:30 AM IST;
[5] ஏதோ, இவரே கண்டு பிடித்து சொன்னது போல பேசுவதைப் பாருங்கள்.
[6] “மூன்றாயிரம் ஆண்டுகள் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய” – இதென்னா காலக்கணக்கு? அதாவது 1000 அல்லது 3000 BCEக்கு முன்னால்தான் திராவிட பாரம்பரியம் தோன்றியது என்றால், லெமூரியாவின் கதை அடிபட்டுப் போகிறதே? பாவம், கருணாநிதிக்கு கணக்கை சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை போலும்!
[7] அதாவது, இப்பொழுது, இவர் இஞ்சினியர் ஆகிவிட்டார் போலும், எந்த காலேஜில் படித்தாய் என்று கேட்டுவிட முடியாது!
[8] யாரிந்த காத்யாயனர்? வந்தேரிகளில் ஒருவனா, ஆரியக்கைக்கூலியா? ஏன் சாஸ்திரியாரே ஒரு பார்ப்பனர் தானே, ஆரியர்தானே? அவர் சொல்வதை ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்?
[9] ஆனால் சட்டம், நீதுத்துறை முதலியற்றில் அவர்களுடைய யோக்கியதை முறை சொல்லப்பட்டிருப்பது பற்றி மூச்சு விடாததை கவனிக்க வேண்டும். அதை படித்தால், இவரது தண்டவாளம் வண்டவாளத்தில் ஏறிவிடும்!
[10] இல்லையென்றால், இதற்காக கருணாநிதி, வீரமணி, திருமா போன்றோர் மேல் முறையீட்டிற்கு போகலாமே?
[11] http://www.deccanchronicle.com/chennai/karuna-condemns-lack-info-chola-king-613
[12] http://timesofindia.indiatimes.com/india/Aryan-culture-is-planting-superstitions-Karunanidhi/articleshow/6680639.cms
[13] அதாவது, அதற்கென சில லட்சங்களை செல்வழிக்க மனமில்லை. ஆனால், இன்றோ கோடிகளை செலவழித்து, செந்தமிழ் மாநாடு நடத்தியுள்ளார்!